எதிர்வரும் டிசம்பர் 8 காலை திருச்சி கலைஅரங்கில் நண்பர் எஸ். ராமகிருஷ்ணனின் பத்து நூல்கள் வெளீயீட்டு விழா நடபெற உள்ளது. நண்பர்கள் திறளாக கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டப்படுகிறார்கள்
நிகழ்ச்சி ஏற்பாடு களம் மற்றும் உயிர்மை பதிப்பகம்
—————–
எதிர்வரும் டிசம்பர் 8 காலை திருச்சி கலைஅரங்கில் நண்பர் எஸ். ராமகிருஷ்ணனின் பத்து நூல்கள் வெளீயீட்டு விழா நடபெற உள்ளது. நண்பர்கள் திறளாக கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டப்படுகிறார்கள்
நிகழ்ச்சி ஏற்பாடு களம் மற்றும் உயிர்மை பதிப்பகம்
—————–
Posted in Uncategorized
தலைப்பு : கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?
1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.
2. 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக!
4. கடைசி நாள் : 31.12.2013.
5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி,
மின்னஞ்சல் (e-mail),
அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.
பரிசுத் தொகை
முதல் பரிசு உருவா 500
இரண்டாம் பரிசு உருவா 300
மூன்றாம் பரிசு உருவா 200
நான்காம் பரிசு உருவா 100
(5 நான்காம் பரிசுகள்)
பரிசுகள் நூல்களாக மட்டுமே வழங்கப்படும்
அனுப்பவேண்டிய முகவரி:
நாளை விடியும்
7ஆ,எறும்பீசுவரர் நகர்,
மலைக்கோயில் தெற்கு,
திருவெறும்பூர்,
திருச்சிராப்பள்ளி (மா) – 620013.
மின்னஞ்சல் : naalaividiyum@gmail.com
www.naalaividiyum.blogspot.com
www.ambethkariyam.blogspot.com
www.penniyakkural.blogspot.com
www.jothidamosadi.blogspot.com
www.saibabamosadigal.blogspot.com
Posted in Uncategorized
நண்பர் முனைவர் வெ.சுப்புராயநாயக்கரின் அறிமுகத்தால் வாய்த்த பேறு. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் குறித்த திறனாய்வு ஒன்றை செஞ்சியில் புதுவை சீனு தமிழ்மணியின் நண்பர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் பஞ்சாங்கம் நூலைக்குறித்து வைத்த கருத்துகள் அவருடன் நெருங்க வைத்தது. உலகில் மனிதமும் மனிதர்களும் அருகிவிட்டார்களோ என்ற அவ நம்பிக்கையில் வாழ்ந்தவன். அறுபது வயதில் உறவுகள், நண்பர்கள் கடந்தும் மறந்தும் வந்திருக்கிற பாதையைப் பார்க்கிறேன். இளமை வாழ்க்கை மிகக் கடினமானது. நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். கல்லூரி நாட்களில் தீக்கதிர் இதழ், மார்க்ஸியம், திராவிடக் கட்சிகளில் ஆர்வம் என்றிருந்தது. திராவிடக் கட்சிகளின் வேடதாரிகள் அதிகரித்த நிலையில் துக்ளக் சோ, ஸ்தாபன காங்கிரஸ் என்று ஒதுங்கினேன். இன்றைக்கு எந்த அரசியலும் உகந்ததாக இல்லை, எப்போதும் ஆளுகின்றவர்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பதும், பாதித்தவர் எவராயினும் அவர்பக்கம் துணை நிற்கும் உணர்ச்சிப்பிண்டமாகவும் உணருகிறேன். சட்டென்று கோபப்படவும் செய்வேன் மறுகணம் அதற்காக வருந்தி எதிர்தரப்பில் நியாயமிருப்பின் மன்னிப்புக்கேட்கவும் தயங்குவதில்லை. அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதுமில்லை. இந்த எனக்குள் ஒருவராக நான் கண்டெத்த நண்பர்தான் க.பஞ்சாங்கம். அவரது எழுத்துக்களை ஊடாக அறியவந்த நாள்முதல், அவருள் நானா என்னுள் அவரா என விளங்கிக்கொள்ள முடியாத குழப்பம். அவரது பாசாங்கற்ற மொழியும், நலிந்தோருக்கான குரலும் என்னை வசீகரிப்பவை. நண்பரின் நவீன இலக்கிய கோட்பாடுகளும், திறனாய்வு கட்டுரைகளும் கைக்கு கிடைத்துள்ளன வாசித்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும், தொல் இலக்கியங்களிலும் எனக்குப் போதாமைகள் உண்டு, அவை அடக்கமல்ல உண்மையும் அதுதான் என்பதால் அவருடைய நவீன இலக்கியங்கள் திற்னாய்வுகளை முன்வைத்தும், பிற ஆளுமைகள் குறித்தும் (நாவல், கவிதைகள்) ‘பஞ்சாங்கமென்ற பிரபஞ்சம் ‘ என்றொரு தொடரை ஜனவரியிலிருந்து எழுத இருக்கிறேன். வேறு நல்ல தலைப்பு கிடைத்தால் அது மாறவும் கூடும்.
—————————-
Posted in Uncategorized
கடந்த வாரம்?
கடந்த 3 ஆண்டுகளாக பாரீஸிலுள்ள ‘les comptoirs de l’Inde’ சங்கத்தினர் இந்திய புத்தக விழா என்ற ஒன்றை நடத்திவருகிறார்கள். இரண்டு நாட்கள் நிகழ்ச்சி. சனிக்கிழமை (16 நவம்பர்)அதில் கழிந்தது. மகன், மருமகள், பேரன் இளையமகள் என்று எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி பாரீஸில் இருக்கிறது. நவம்பர் மாதத்தில் குடும்பத்தில் மூவருக்குப் பிறந்த நாள் அதில் இருவருக்கு மாதத்தின் தொடக்கத்தில் வருகிறது. அதனை விமரிசையாக கடந்த ஞாயிறன்று பாரீஸில் கொண்டாடினோம். பேரன் உடல் நலம் சரியில்லாததால் கூடுதலாக இரண்டு நாட்கள் தங்க வேண்டியதாகிவிட்டது. எதிர்வரும் ஜனவரி 20, 21,22 தேதியில் கோவையில் தாயகம் கடந்த தமிழ் என்ற பெயரில் மாநாடொன்றை நடத்த இருக்கிறார்கள். நிகழ்ச்சிக் குழுவில் எனக்கும் இடம் அளித்திருக்கிறார்கள், கட்டுரை ஒன்றும் வாசிக்கிறேன். முதலில் எனக்கு ‘தாயகம் பெயர்தல் வலியும் வாழ்வும் ” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்க கூறினார்கள், ஆனால் அமெரிக்க ஐரோப்பிய தமிழிலக்கியம் குறித்து கட்டுரை வாசிக்க இருந்த நண்பர் அதனைத் தவிர்த்ததால், அத் தலைப்பில் எனக்கு வாசிக்க சாத்தியமாவென நண்பர் மாலன் கேட்க சம்மதித்துவிட்டேன். சிறுகதைகளின் அடிப்படையில் ஐரோப்பிய அமெரிக்க எழுத்தாளர்களை அணுகுவது படைப்பாளிகளின் ஆளுமையை கூடுதலாக புரிந்துகொள்ள உதவுமென நினைக்கிறேன். நாவல்களை வாசிக்கிறபோது எல்லோருடைய படைப்புகளும் உரிய நேரத்தில்கிடைப்பதில்லை பல எழுத்தாளர்களை தவறவிட சாத்தியமிருக்கிறது. இணையத்தில் முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் கிடைப்பது மற்றொரு அனுகூலம்.
—————————————————
The Lunch Box
ஏறக்குறைய ஐந்து நாட்களை முழுவதுமாக வீணடித்துவிட்டு (எழுதாமல்) செவ்வாய் இரவு கிட்டட்ட ஐந்து நாட்களும் 1000 கி.மீட்டருக்கு மேல் காரோட்டிய களைப்பில் படுக்கசென்றவனின் மறுநாளும் சோர்வில் கழிந்ததென்று சொல்ல வேண்டும், கடுமையான காய்ச்சல் மனைவியை காலையில் கடையில் விட்டுவிட்டு வீட்டுக்குத்திரும்பிய பிறகு, அவளிடமிருந்து தொலைபேசி அழைப்பு. வாடிக்கையாளர் ஒருவர் The Lunch Box திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிக்கு இரண்டு அனுமதி சீட்டுகள் இருக்கிறதென்கிறார், வேண்டுமா என்று கேட்டார். திரைப்பட அரங்கில் படம் பார்த்து ஒரு மாமாங்கம் இருக்கும். எனினும் பெயரைக்கேட்டவுடனேயே காய்ச்சல், களைப்பு போயே போய்விட்டது. 2013 கான் திரைப்படவிழாவில் கலந்துகொண்டு தீவிர விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுதலைப் பெற்றிருந்த படம். எனவே படத்தைப் பார்த்தே ஆகவேண்டும், அழைப்பிதழைக் கடையில் கொண்டுவந்து கொடுக்கச் சொல் என்றேன். நேற்று மாலை ஏழுமணிக்கு எங்கள் கடைக்குசென்று அழைப்பிதழை பார்த்தபோதுதான் டிசம்பர் 12ல் ஐரோப்பாவெங்கும் திரையிட இருக்கும் படத்தின் பிரத்தியேக காட்சி என்று புரிந்தது. படம் துவக்குவதற்கு முன்பாக படத்தின் மகாத்மியங்களை மிகையின்றி தெரிவித்த அறிவிப்பாளர் பெண்மணி, திரையிட்டு முடிந்ததும் படக் குழுவினருடன் உரையாடலாம் எனத் தெரிவித்தார். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. கையில் புகைப்பட கருவி இல்லாதது ஏமாற்றத்தை தந்தது ஒரு பக்க மெனில், கைத்தோலைபேசி காமெராவை சோதித்து பார்த்தபோது பாட்டரி காலி என்றது. நொடிந்து போய்விட்டேன்.
இனி படத்திற்கு வருகிறேன்:
பம்பாய் என்றவுடன் எது ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ டப்பா வாலாக்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். இவர்களைப்பற்றி முழுமையாக தெரியவந்தது, ஓர் பிரெஞ்சுக்காரர் தயாரித்திருந்த குறும்படத்தின் மூலமாக. ஒரு தேர்ந்த ராணுவப் படையைப்போல காலம் மற்றும் ஒழுங்கில் இம்மியும் பிசகாமல் இயங்கும் அம்மனித ரொபோக்களின் வினைத்திறன் கண்டு பிரம்மித்திருக்கிறேன். பம்பாய் நகரின் எஸ்தெட்டிக்கில் நீளமான சுமைகூடைகளில் பயணிக்கும் Lunch Box களும் ஓர் அங்கம். ஆனாலும் அதனை முதன் முறையாக ரித்தேஷ் பத்ரா என்ற இளைஞர் நன்றாக பயன்படுத்திக்கொண்டு தானொரு சிறந்த கலைஞர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார். வாழ்க்கை என்பது எதிர்பாராத சம்பவங்களால் முன் நகர்த்தப்படுவது. ஒழுங்குடனும் தவறுதலுக்கு வாய்ப்பே இல்லை என நம்பப்படுகிற டப்பாவாலாக்களின் செயல்பாட்டில் எங்கோ ஓரிடத்தில் தவறு நிகழ்ந்துவிடுகிறது, அப்படியான தவறு நிழ்வதற்கான சாத்தியத்தையும் நடந்தால் விளைவு என்னவாக இருக்குமெனவும் இளஞர் ரித்தேஷ் மித்ரா யோசித்ததின் பலன் இத்திரைப்படம். நல்ல சிறுகதைகளில் இடையில் திடீரென்று கதையோட்டத்திற்கு முரண்படுவதுபோல ஒரு பத்தி வரும், வாசகனுக்கு அவகாசம் கொடுக்க கதையாசிரியர் இந்த உத்தியைக் கையாண்டிருப்பதுபோல தோன்றினாலும், அச்சிறுகதைக்கான பொறியே அந்த விதிவிலக்கான பத்தியில் இருக்கிறதென்பது தெரியவரும். இந்தியாவின் கோடானுகோடி மத்திய வர்க்கப் பிரிவுக்குள் ஒர் இளம் பெண் – ‘இலா சிங்'(நிம்ரத் கௌர்)கிற்கு ஏழெட்டு வயதில் ஒரு மகளும் உண்டு. அவள் குடியிருப்புக்கு மேலே வசிக்கும் ஓர் வயதான ஆண்ட்டியின் சமையல் ஆலோசனையின்படி கணவனுக்கு அலுவலகத்திற்குக் கொடுத்தனுப்ப மதிய உணவு தயார் செய்கிறாள், டப்பாவாலா வருகிறார் ஒரு பெரிய சங்கிலித்தொடர்போல பயணித்த அந்த லன்ச் பாக்ஸ் அரசாங்க அலுவலகமொன்றை அடைகிறது, மனைவியை இழந்த வயதான அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருவர் சாப்பாட்டு அடுக்கைப் பிரித்து ருசித்து சாப்பிடுவதாக அடுத்த காட்சி. வீட்டிற்கு லன்ச் பாக்ஸ் மாலை திரும்ப வருகிறது. அது காலியாக இருப்பதைப்பார்த்து அவளுக்கு சந்தோஷம். முன்னிரவு அழைப்பு மணி கேட்டு, இளம்மனைவி கதவைத் திறக்கிறாள். உள்ளே நுழைய இருப்பவன் வயதான அரசு அலுவலன் என நாம் நினைக்க அவள் கணவனாக வேறொருவனை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர். இவள் தயாரித்து அனுப்பிய மதிய உணவை சாப்பிட்ட ஆசாமி (Irrfan Khan) வேறு ஆள் என நமக்குப் புரிகிறது. பிறழ்வதற்கு வாய்ப்பே இல்லையென நம்பப்படுகிற டப்பாவாலாக்கள் செயல்பாட்டில் தவறு நிகழ்ந்திருப்பதும் கணவனுக்குப் போகவேண்டிய லன்ச் பாக்ஸ் வேறொருவருக்குப் போய் சேர்ந்ததையும் எப்பொது அறிய வருகிறோமோ அப்போதே திரைப்படம் நம்மை அணைத்துக்கொள்கிறது. வீடு திரும்பிய கணவனிடம் மாடிவீட்டு ஆண்ட்டியின் யோசனையின்படி செய்த சமையல் நன்றாக இருந்ததா? எனகேட்கிறாள் அவள் செய்தனுப்பாத காய்கறியின் பெயரைக் கூறி நன்றக இருந்தது என போகிற போக்கில் கணவன் கூறுகிறான். இளம் மனவிக்கு என்ன நடந்திருக்கும் என்பது விளங்குகிறது. மறுநாளும் மேல் மாடி ஆண்ட்டியிடம் யோசனை. ஆண்ட்டி தனது சமையற் குறிப்பின் பலாபலனை தெரிந்துகொள்ளும் ஆவலில், லன்ச் பாக்ஸைப் பிரித்து உணவைச் சாப்பிட்டவனைத் துண்டுக் காகிதம் எழுதி விசாரிக்கத் தூண்டுகிறாள். முகம் தெரியாத ஆசாமியுடனான கடித உறவு லன்ச் பாக்ஸ் மூலமாக தொடருகிறது. தொடக்கத்தில் மேல் மாடி ஆண்ட்டி தூண்டுதலில் கடிதம் எழுதினாலும், பின்னர் இளம்பெண்ணுக்கும் சரி வயதான அலுவக ஊழியருக்கும் சரி அதைத் தொடர்வதற்குக் காரணங்கள் உள்ளன. மெல்ல இரு தரப்பிலும் காதற்கோட்டைவகையினாலான காதல் அரும்புகிறது. டப்பாவாலாக்கள் தவறை இருவருமே சுட்டிக்காட்டுவதில்லை. எத்தனை நாளைக்கு இப்படி எழுதிக்கொண்டிருப்பது சந்திக்கலாமே என்கிறாள். வயதான ஊழியரும் சம்மதிக்கிறார், சந்திக்க வந்த அரசு ஊழியர் தனது வயது உறைக்க, இளம்பெண்ணை சந்திக்காமலேயே, மாற்றல் கேட்டு பெற்று நாசிக் போய்விடுகிறார்
தமிழில் அடிக்கடி நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள் என்பார்கள். அப்படித்தான் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் இர்பான் கான், நிம்ரத் கௌர், இர்பான் கானிடம் பயிற்சி பெற வரும் சித்திக் என்ற நடிகர் எவரையும் நடிகர்களாகப் பார்க்க முடிவதில்லை. திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வே இல்லை. லன்ச் பாக்ஸ்யையும் நடிகர் பட்டியலில் சேர்க்கவேண்டும். மேல் மாடி ஆண்ட்டியின் முகத்தை கடைசிவரை இயக்குனர் காட்டவில்லை. பார்வையாளர் ஒருவர் கலந்துரையாடலில் ஆண்ட்டியாக நடித்தவரை ஏன் கடைசிவரை காட்டவில்லை எனக்கேட்டதற்கு. இயக்குனர், “பெண்கள் இருவருமே சிறையில் இருக்கிறார்கள் (மேல் மாடி ஆண்ட்டியின் கணவன் கோமாவில் இருக்கிறான், அவனைப் பராமரிப்பதன்றி அவருக்கு வேறுவேலைகள் இல்லை என இடையில் வசனம் வருகிறது) பக்கத்து சிறைவாசியுடன் பேசுகிறபொழுது ஒரு முகம் போதும்”, என்றார். இன்னொரு ரசிகர் டப்பாவாலாக்கள் மெல்ல எண்ணிக்கையில் குறைத்துவருவதாகக் கேள்விபட்டேன், அதுவும் தவிர நவீனமயமாகிறது என நம்பப்படும் நகரத்தில் டப்பாவாலாக்கள் தொழில் நீடிக்க முடியுமா எனக்கேட்டதற்கு, இயக்குனர் கூறிய பதில்: “டப்பா வாலாக்கள் பம்பாய் வாழ்க்கையின் ஓர் அங்கம், மரபாக ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எங்களுக்குப் பழகிவிட்டது, இன்னொரு நூறாண்டுக்குப் பிறகும் எங்கேனும் ஒரு டப்பாவாலாவை நீங்கள் பம்பாயில் எதிர்கொள்ள நேரும் அதுதான் இந்தியா என்றார். படம் முடிந்த போது பார்வையாளர்கள் வெகு நேரம் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். நடிகை படத்தில் தோன்றியதைவிட மிகவும் இளபெண்ணாக இருந்தார். நல்ல ஆங்கிலத்தில் உரையாடினார். முதல் நாள் சென்ற லியொன் (Lyon) நகரைவிட இந்த நகரில் (Strasbourg) குளிர் அதிகம் நல்ல வேளை ஒயின் என்னைக் காப்பாற்றியது எனச்சொல்லி சிரித்தார்.
—————————————————————-
L’Association les comptoirs de l’Inde organise son 3ème salon de livres à Paris le 16 et le 17 novembre 2013 à la Marie du 20ème ,6 – Place de Gambetta
Pour tout renseignement complémentaire, visitez leur site
http://www.comptoirs.inde.org Tél. : 0146590212
Posted in Uncategorized
1. வ.ஐ.ச.ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ -இந்திரன்
தீராநதி அக்டோபர் இதழில் க்ரியா வெளியீடாக வந்துள்ள கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் ‘குறுந்தொகை’ கவிதைத் தொகுப்புக் குறித்து இந்திரன் நூல் மதிப்புரை எழுதியுள்ளார். இன்று தமிழ்க் கவிதை வெளியில் இயங்குகிறவர்களுள் வ.ஐ.ச. ஜெயபாலன் எனக்கும் மிகச மிக மிக முக்கியமான கவிஞர். ‘இந்த வாரத்திற்கு ஒன்று, அந்த இதழுக்காக ஒன்று’ என எழுதும் படைப்பிலக்கியவாதியல்ல. ஓர் அசலானக் கவிஞர்.
சிலவற்றை சிலர்தான் மதிப்பிடவேண்டும். தங்கத்தை உரசிப்பாரென்று இரும்பு அடிக்கும் கொல்லனிடம் கேட்கமுடியாது, பொற்கொல்லனைத்தான் அனுகவேண்டும். வ.ஐ.ச. ஜெயபாலன் குறித்தும் அவர் கவிதை நரம்புகளைச் சுண்டி அவற்றின் உறுதிப்பாட்டையும் நெகிழ்ச்சியையும் பேசவல்லவர் இந்திரன். மதிப்புரையில் ஜெயபாலன் கவிதைக்குறித்து சற்று கூடுதலாக எழுதியிருக்கலாம் என்கிற மனக்குறை எனக்கு இருந்தபோதிலும், அக்கவிதை தொகுப்பைக் குறித்து முன்வைத்திருக்கும் கருத்து புறம் தள்ளக்கூடியது அல்ல. தமிழகத்து எழுத்தாளர்களின் புனைவுகளோடு ஒப்பிடுகிறபோது அண்மைக்காலங்களில், கவிதைகளில் நமது எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்டுகிறது என்பது உண்மை. எனது மனநிலைக்கு இசைவாக நண்பர் இந்திரன் கருத்து இருப்பதால் அதனை நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி:
“தற்கால தமிழகத்துக் கவிஞர்களுக்கு வாழ்க்கையிலிருந்து சவால்கள் ஏதுமில்லை. எனவே அவர்கள் மொழிக்குள் சவால்களை உருவாக்கிக்கொண்டு கவிதைகளைப் புனைகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஈழத்துக் கவிஞர்களின் முன்னால் வாழ்க்கை பல்வேறு சவால்களை முன்வைத்திருக்கிறது. எனவே ஈழத்துக் கவிஞர்கள் தாங்கள் பாடுபொருள்களை அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்கிறார்கள். அடுத்ததாக வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற கவிஞர்கள் நார்வே போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறபோது தான் ஒரு தமிழன் என்று சொல்லவேண்டிய கட்டாயம் அவர்கள் வாழ்தலுக்கு அத்தியாவசியமாகிறது. ஆனால் தமிழகத்துக் கவிஞனுக்கு தமிழ் அடையாளம் பேசவேண்டிய கட்டாயமில்லை. அவன் தன்னை ஒரு சர்வதேசக் கவிஞனாகக் கருதிக்கொள்வதற்கான உல்லாசமும், தான் தமிழனல்ல இந்தியன் என்று பேசக்கூடிய ஒரு மருட்சியும் வாய்த்திருக்கிறது. அடுத்ததாக தமிழகத்தில் தோன்றிய புதுக்கவிதையின் பிறப்பே மரபுக் கவிதையை மறுதலித்து அதற்குப் பதிலியாக வேறொரு கவிநடையை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருந்திருக்கிறது எனவேதான் சங்கக் கவிதை நோக்கி புதுக்கவிதை நகரவேண்டும் எனப் பல தமிழகத்து நவீன கவிகள் பேசிய போதிலும் வ.ஐ.ச. ஜெயபாலனைப்போல சங்கத் தமிழின் மரபார்ந்த மொழி வெளிப்பாட்டை அவர்கள் கைக்கொள்ளவில்லை” (தீராநதி இதழ் அக்டோபர் 2013 பக்கம் 47)
இது துறைசார்ந்த நண்பர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய ஒன்று. இந்த இடத்தில் புலம்பெயர்ந்து தமிழ் படைப்பிலக்கியத்தில் ஆர்வம்காட்டுகிறவன் என்ற வகையில் எனக்கும் ஒன்றைச் சொல்லவேண்டும். சிறு புரட்சி என்று ஒன்றிருக்கிறது. ஆங்கிலத்தில் அதனை தற்போது Micro Revolution’ என்கிறார்கள். இது வேறொன்றுமல்ல தனிமனிதனின் மறுதலிப்பு, கலகக் குரல், உடன்பாடில்லை என்கிறபோது ‘இல்லை’ சரியல்ல எனும் குணம். ஆரோக்கியமான சமூகத்திற்கு இணக்கமாக இருப்பது எத்துணை அவசியமோ, மறுதலிப்பும் அவசியம். பிறரைக் காட்டிலும் அறிவையும் உணர்ச்சியையும் சமமாகப் பாவிக்கிற கலை இலக்கிய படைப்பிலக்கியவாதிகளுக்கு இப்பொறுப்புக் கூடுதலாக இருக்கிறது. தமிழ் நாட்டிலும் சவால்கள் இல்லாமலில்லை, ஆனால் அங்குள்ள பிரச்சினை அவர்கள் அதனைக் கணக்கில் கொள்வதில்லை. வெளிநாட்டில் வாழும் படைப்பாளிகள் வ.ஐ.ச. ஜெயபாலன்போன்றவர்கள் செயல்படுகிறபொழுது படைப்பு மட்டுமே அவர்கள் சிந்தனையில் குறுக்கிடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் எழுதுகிற பலருக்கும் வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் கவனமெல்லாம் சக கவிஞனை, சக படைப்பாளியை, சக மொழிபெயர்ப்பாளனை, எப்படி வீழ்த்துவதென்ற சிந்தனைக்கு நேரத்தை அதிகம் செலவிடுகிறபோது எங்கிருந்து அதில் படைப்பு பிறக்கும்? இந்திரன் கருத்து போய்ச்சேரவேண்டியவர்களிடம் போய்ச்சேரவேண்டும்.
2. பிரான்சில் என்ன நடக்கிறது.
கொன்க்கூர் இலக்கிய பரிசு 2013.
கடந்த நவம்பர் 4ந்தேதி அன்று பிரெஞ்சு புத்திலக்கிய உலகு 2013ம் ஆண்டுக்கான கொங்க்கூர் இலக்கிய பரிசை (Le prix Goncourt ) அறிவித்திருக்கிறது. பரிசுபெற்ற நாவலின் பெயர் ‘Au Revoir Lதூ-Haut’ நாவலாசிரியர் Pierre Lematre. தேர்வு அனைத்தும் வெளிப்படை. பன்னிரண்டு சுற்றுகள் தேர்வு நடைபெற்றது இறுதிச்சுற்றில் பத்து நடுவர்களில் ஆறுவாக்குகள் மேற்கண்ட நாவலுக்கும், நான்கு வாக்குகள் Frederic Verger எழுதிய ‘Arden’ நாவலுக்கும் கிடைத்தன. இங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசை இம்முறை ஓர் குற்ற புனைவு நாவலுக்கு முதன்முறையாக வழங்கியிருக்கிறார்கள்.
————————-
Posted in மொழிவது சுகம், Uncategorized
குறிச்சொல்லிடப்பட்டது இந்திரன், குறுந்தொகை, தமிழ் அடையாளம், வ.ஐ.ச.ஜெயபாலன்
1. பிரான்சில் என்ன நடக்கிறது
பிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி. வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் கணக்கியல் துறையும், ஐரோப்பிய நிதி நிர்வாகத் துறையும், கண்டிப்பான சில வழிமுறைகளைப் பிரெஞ்சு அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கமும் நிதி வருவாயைப் பெருக்கிக்கொள்ள சிக்கன நடவடிக்கைகள் மட்டுமே போதாதென்ற நிலையில் நாள்தோறும் புதிய புதிய வரிகளை விதித்துவருகிறார்கள். ஏற்கனவே அன்றாட உபயோகத்துகான மின் சக்தியும், எரிவாயுவும் கடுமையான உயர்வை சந்தித்து உள்ளன. காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடந்த சில வருடங்களைக் காட்டிலும் பன் மடங்கு அதிகரித்துள்ளன. தற்போதையை கருத்துகணிப்புகள் அதிபர் பிரான்சுவா ஒலாந்துக்கு எதிராக இருக்கின்றன. நாட்டில் அறுபது சதவீத்தினருக்குமேல் அதிபர் மீது அவநம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இனவாதக் கட்சி, நிலவும் அவநம்பிக்கையைக்கொண்டு தன்னை ஊட்டப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இரண்டு இடைத்தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் வென்றிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆப்ரிக்க நாடுகளில் பணயக் கைதிகளாக இருப்பவர்களில் நால்வரை இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து நைஜீரிய நாட்டின் தலையீட்டினால் மீட்டிருப்பினும் தீவிரவாதிகள் கேட்டப் பணயத் தொகையைக் கொடுத்தே மீட்டிருப்பதாக ஒரு குற்றசாட்டு. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல் பிரெஞ்சு அரசாங்கம் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், தங்கள் கூட்டணி அரசாங்கத்தில் பங்கேற்று இருக்கிற பசுமைவாதிகளை சமாதானப்படுத்தவென சுற்றுப்புற சூழலை மேம்படுத்த அறிமுகமான வரிக்கு எதிராக கடும் எதிர்ப்புகிளம்ப, அதனையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று. இப்போது வேறொரு பூதம் கிளம்புஇருக்கிறது. இனி நட்சத்திர விளையாட்டுவீரர்கள் தங்கள் வருவாயில் 75 சதவீதத்தை வரியாகச் செலுத்தவேண்டும். நாட்டின் பெரும் நகரங்களில் உள்ள காற்பந்தாட்டக் குழுமங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. நட்சத்திர விளையாட்டுவீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவேன் என அச்சுறுத்துகிறார்கள்.
2. மொழிபெயர்ப்பு குறித்து:
அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் தனது முக நூலில் இப்படியொரு அறிவிப்பை செய்துள்ளது இந்திய மற்றும் உலகமொழிகளிலிருந்து தமிழ்ப்படுத்துவதற்கான மொழிபெயர்ப்பாளர்களைத் தேடும் முகமாக வந்துள்ள அறிவிப்பு அது.
« Kalachuvadu Publications wishes to establish contact with translators from Indian and world languages to Tamil. We are keen to translate literature directly from Marathi and Punjabi to Tamil. We are also looking to work with translators from world languages. Friends with command of foreign languages can either translate a work or be a ‘mentor’ i.e. oversea and edit a translated text. We are particularly looking for Tamils with a working knowledge of Korean, Swedish, German, Arabic, Spanish, Norwegian and Danish.”
தமிழ் நாட்டில் சில விதிமுறைகள் வைத்திருக்கிறார்கள்; எழுத்தில் ஏது சீனியர் ஜூனியர் என்பவர்கள் கூட என்னிடத்திலா இலக்கிய சர்ச்சை என்ற முகத்தோடு நம்மை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. எதைப்பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்துக்கள் வைக்கலாம், வெறும் கையை முழம்போடலாம், மணலை கயிறாகத்திரிக்கலாம். அவர்கள் கருத்துக்களை மேற்கோள்காட்டி சொல்பவர்கள் கூட ‘சொன்னவர் யாரோ எவரோ அல்ல‘ தமிழில் பன்னிரண்டு கதைகளை தழுவல் செய்தவர், பரமார்த்த குருவின் சீடர்களில் ஒருவர் அவரே சொல்லியிருக்கிறார் எனவே நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது எனக் கட்டுரை எழுதுவார். இந்த மனைநிலைதான் நம்மை பிள்ளையார் சதுர்த்தி, களிமண் பிள்ளையார்களை ஆயிரக்கணக்கில் நகலெடுத்து கடலிலும் கரைக்க முடியாமல், கரையொதுங்கினாலும் தப்பில்லையென்று பெருமூச்சு விடுகிறோம்.
மொழிபெயர்ப்புக்கு இதுதான் இலக்கணம் என சொல்ல ஒன்றுமில்லை. ஒரு வாசகனாக படைப்போ மொழிபெயர்ப்போ என்னை எப்படி உள்வாங்கிகொள்கிறதோ அதைப்பொறுத்தே உகந்ததா இல்லையா எனத் தீர்மானிக்கிறேன். எனக்கு உகந்ததாக இருப்பது உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை, அதுபோலவேதான் இல்லாததுகுறித்து முரண்படவும் என்னைப்போலவே உங்களுக்கும் உரிமையுண்டு. மொழிபெயர்ப்பு படைப்பைப்போலவே அனுபவம் சார்ந்தது, எழுத எழுத மேம்படுவது. ஒருகட்டத்தில் ஓரளவு புரிந்துகொண்டு நல்லதொரு மொழிபெயர்ப்பை எந்த மொழிபெயர்ப்பாளனாலும் தர முடியும்.
காலச்சுவடு பதிப்பக அறிவிப்பினை வைத்து இங்கே சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள்வேண்டும். இதொரு நல்ல முயற்சி. நவீன இலக்கியங்களின் தீவிர வாசகன் என்ற அடிப்படையில் காலச்சுவடு இதழின் முயற்சி பெரிதும் வரவேற்க தக்கது. தமிழில் எத்தனை பதிப்பகங்கள் காப்புரிமை பெற்று பதிப்பிகின்றனவென்று தெரியாது. காலச்சுவடு அவ்விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தற்போது மூல மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்கிற இப்புதிய முயற்சியும் வரவேற்கதக்கது.
இந்த ஆண்டு ‘Livres Hebdo’ என்ற பிரெஞ்சு சஞ்சிகையின்படி 554 நாவல்கள் பிரெஞ்சில் வந்துள்ளன. அவ்வளவா என வியக்க வேண்டாம், பிரெஞ்சு பதிப்புலகம் இந்த எண்ணிக்கைக்கே மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக எண்ணிக்கை குறைந்துவருகிறதாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு (2007ல்) மொழிர்ப்புகளையும் சேர்த்து 727 படைப்புகள் வந்திருக்கின்றன, சென்றவருடம் 646. இவ்வருட 554படைப்புகளில் 356 நாவல்கள் நேரடியாக பிரெஞ்சில் எழுதப்பட்டவை, 198 மொழிபெயர்ப்புகள்.
முக்கிய பிரெஞ்சு பதிப்பகங்கள் அனைத்துமே இரண்டு விஷயங்களில் கறாராக இருக்கிறார்கள். பிறமொழிக்கு பிரெஞ்சு படைப்பை கொண்டு செல்வதென்றாலும், பிறமொழியிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவருவதென்றாலும்: 1. மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்படவேண்டும், 2. கொண்டு செல்லப்படும் மொழியைத் தாய்மொழியாக மொழி பெயர்ப்பாளர் கொண்டிருக்கவேண்டும். பொதுவில் எந்த மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல. மூலத்தை நூறு சதவீதம் மொழிபெயர்த்திருக்கிறேன் என்பதெல்லாம் ஓர் ஏமாற்று வேலை, மொழிபெயர்ப்பாளன் மூல ஆசிரியனல்ல, ஓர் உரை ஆசிரியன் அவ்வளவுதான், அவன் விளங்கிக்கொண்டதை அவனுடைய மொழியில் சொல்கிறான். பிரெஞ்சில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கிறபோதெல்லாம், நான் கையாளும் உபாயம், முழுவதுமாக பிரெஞ்சிலிருந்து தமிழுக்குக்கொண்டுவந்ததும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு ஒத்திட்டு பார்ப்பது. ஒவ்வொரு முறையும் எங்கேனும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தவறுதலாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கும், வாக்கியங்கள் விடுபட்டிருக்கும். இக்குறை நேரடியாக மொழிபெயர்க்கிற எனக்கும் நேர்கிறது. பிரெஞ்சு நண்பர்களுடன் விவாதித்தே முடிவுக்கு வருகிறேன். ஒரு உதாரணம் Le Procès verbal என்ற Le Clèzio எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதில் ஓரிடத்தில் sous-verre என்றொரு சொல் வரும் அது வேறொன்றுமில்லை கண்ணாடி டம்ளரின் கீழ்வைக்கிற சிறு தட்டு அல்லது குறுவட்டு என்று கொள்ளலாம். மேற்குலகில் வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, தண்ணீர், குளிர்பானங்கள், மது என எதைவழங்கினாலும் மேசையில் அந்தக் சிறுதட்டைவைத்து அதன்மீதே பானமுள்ள கண்ணாடிக்குவளையை வைப்பார்கள். இந்த sous-verre ஐ ஆங்கில மொழிபெயர்ப்பாளர் (அமெரிக்கர்) (cup and) Saucer என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்த saucerக்கு பிரெஞ்சில் sous coupe என்று பெயர். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பிரெஞ்சு தெரியாத இந்திய நண்பர் மொழிபெயர்க்கிறார் எனில், (அமெரிக்கரெடுத்த நகலை xerox எடுப்பவர்) நிச்சயமாக கிளேஸியோ சொல்கிற சிறுதட்டு அல்லது குறுவட்டு அந்த ஆங்கில வழி தமிழ்படுத்தும் நண்பருக்கு கண்ணிற்படாமலேயே போகும் ஆபத்திருக்கிறது. தவிர இந்திய நண்பர் அந்த ‘Saucer’ ஐ ‘Soccer’ என்று பொருள்கொண்டு காற்பந்து என மொழிபெயர்க்க அதற்காகவே காத்திருக்கும் புண்ணியவான்கள் தீவிரமாக கட்டுரை ஒன்று எழுதி இலங்கைத் தோழர்கள் ‘உதைப்பந்து‘ எனச்சொல்வதை‘ எப்படிக் காற்பந்து என மொழி பெயர்க்கலாம் இதில் ஏதோ சதி இருக்கிறது, மேகத்திய நாடுகளுக்கு பங்கிருக்கிறது எனக் கட்டுரை எழுதும் ஆசாமிகளும் இருக்கிறார்கள். இதை உதாரணத்திற்குத்தான் சொன்னேன். மொழி பெயர்ப்பு என்பது இரு மொழிகளிலுள்ள ஆளுமை சார்ந்த தொழில் நுணுக்கமல்ல, கலாசாரம் பண்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் அதில் அடங்கிக்கிடக்கின்றன. இணைய தளங்களில் இன்று பல குழுமங்கள் இருக்கின்றன. மேற்கத்திய மொழி பெயர்ப்பாளர்களே பலரும் விவாதித்துப் பொருள்கொள்வதை இன்று பார்க்கிறோம், அப்படியான ஆரோக்கியமான சூழல் பிற இந்திய மொழிகளில் நிலவுகிறதா எனத் தெரியவில்லை, ஆனால் நமது தமிழில் இல்லை. தமிழில் ஆயிரத்தெட்டுவகை மொழியாடல்கள் இருக்கின்றன.முறையான அகராதிகள் இல்லை, அப்படியொரு மரம், ஒருவகைப் பிரபந்தம் எனச்சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் “கால்வினோ‘ தப்பு “கல்வினோதான்” சரி என விவாதிப்பவர்கள், செஞ்சிக்குப்பக்கத்திலிருக்கிற தீவனூர் பள்ளி மாணவர்கள் செஞ்சியை Gingee எனப்படிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இப்போதெல்லாம் பிரெஞ்சு பெயர்களை மிகச்சரியாக எழுதவேண்டுமென கிரிவலம் வருகிறவர்களையெல்லாம் தமிழில் பார்க்கிறேன். ஆங்கிலத்தில் பீட்டர் என்ற பெயரைத்தான் பிரெஞ்சில் பியெர் என்கிறார்கள், ஸ்பானிஷ் மொழியில் ‘பெட்ரோ‘ என்கிறார்கள். மொழிபெயர்ப்பாளன் அக்கறைகாட்ட வேண்டிய வெளிகள் வேறு. அம்பையின் சிறுகதைகளைப் பிரெஞ்சு பதிப்பகத்திற்காக பிரெஞ்சு பெண்மணி ஒருவருடன் மொழி பெயர்த்துகொண்டிருக்கிறேன். இந்தியாவிலிருந்து வந்தவன் என்றாலும் ‘Tiffin’ என்ற சொல் என்னைப்பாடாய் படுத்துகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தவர் Tiffin என்ற சொல்லைப்போட்டு வெகு சுலபமாக இக்கட்டிலிருந்து தப்பித்திருக்கிறார் ( ஆனால் ஆங்கிலேயேரிடம் கொஞ்சம் விசாரித்துப்பாருங்கள் அப்படியொரு சொல் எங்களிடத்திலில்லையென்று சத்தியம் செய்வார்கள். ஆனால் இந்திய வழக்கில் காலையில் tiffin சாப்பிடுகிறோம், ஆபீஸ¤க்குப் போகிறபோது tiffin கட்டியாச்சா என்று கேட்கிறோம், மனைவியும் tiffin boxல் போட்டுத் தருகிறாள். மாலை ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வந்ததும் மீண்டும் இன்றைக்கு என்ன tiffin என்று கேள்வி. பிரெஞ்சில் அப்படி Tiffin என்ற ஒற்றை சொல்லை கூறித் தப்பிக்க எனக்கு விருப்பமில்லை. இப்படி நிறையச்சொல்லிக்கொண்டு போகலாம், வாசகனுக்கு வேண்டுமானால் ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதியவனை மறந்து வாசிப்பது உகந்தது, ஆனால் மொழிபெயர்ப்பாளன் மொழிபெயர்க்கிறபோது ஆசிரியனையும் வாசிக்க இருப்பவனையும் மனதில் நிறுத்தி மொழிபெயர்த்தாலே ஐம்பது சதவீதம் மொழிபெயர்ப்பு தேறிவிடும்.
——————————
Posted in Uncategorized
குறிச்சொல்லிடப்பட்டது காலச்சுவடு பதிப்பகம், மொழிபெயர்ப்பு
சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை
மற்றும்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை
கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு
காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்
நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
தலைமை: பேராசிரியர் மாண்பமை இரா.தாண்டவன் அவர்கள்
துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்
நூல் : அத்திப்பாக்கம் வேங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு
(ஆதிக்க சாதிகள் – இந்து மதம்: ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு)
வெளியிடுபவர் : தோழர் ஆர்.நல்லக்கண்ணு
பெறுபவர் : பேராசிரியர் கோ.இரவீந்திரன்
தலைவர் – இதழியல் துறை – சென்னைப் பல்கலைக்கழகம்
நூல் : சென்னை இலௌகிக சங்கம்
(தத்துவவிவேசினி – THINKER இதழ்க் கட்டுரைகளின் பதிப்பு – 6 தொகுதிகள்)
வெளியிடுபவர் : நீதியரசர் கே.சந்துரு அவர்கள்
பெறுபவர் : பேராசிரியர் இரா.மணிவண்ணன்
தலைவர் – அரசியல் மற்றும் பொது வாழ்வியல் – சென்னைப் பல்கலைக்கழகம்
இடம் : பவள விழாக் கலையரங்கம்
மெரினா வளாகம் – சென்னைப் பல்கலைக்கழகம்
(கடற்கரை – திருவள்ளுவர் சிலை எதிர்)
28.10.2013 மாலை 4.00
கருத்தரங்கம்
காலனியக்காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிக சங்கமும்
29.10.2013 காலை 10.00 – 1.00
முதல் அமர்வு
தோழர் எஸ்.வி.இராஜதுரை
பத்தொன்பதாம் நூற்றாண்டு அறிவொளி இயக்கம்
ஆளிணிவாளர் க.திருநாவுக்கரசு
தத்துவவிவேசினியில் காலனியம் குறித்த பதிவுகள்
தோழர் ஜி.இராமகிருஷ்ணன்
சென்னை இலௌகிக சங்கத்தினரின் அறிவியல் கண்ணோட்டம்
தோழர் ஆ.சிவசுப்பிரமணியன்
காலனிய பொருளாதாரமும் சென்னை இலௌகிக சங்கமும்
இரண்டாம் அமர்வு
29.10.2013 பிற்பகல் 2.30 – 5.00
ஆளிணிவாளர் வ.கீதா
தத்துவவிவேசினி முதல் குடியரசு வரை : தொடர்ச்சியும் மாற்றமும்
தோழர் கொளத்தூர் மணி
பெரியாரும் சென்னை இலௌகிக சங்கமும்
தோழர் பெ.மணியரசன்
பத்தொன்பதாம் நூற்றாண்டு மறுமலர்ச்சியும் சென்னை இலௌகிக சங்கமும்
ஆளிணிவாளர் ரவிக்குமார்
சென்னை இலௌகீக சங்கம் : பார்ப்பனீய எதிர்ப்பும் சாதி மறுப்பும்
மூன்றாம் அமர்வு
30.10.2013 காலை 10.00 – 1.00
பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்
ஐரோப்பிய புத்தொளி மரபும் சென்னை இலௌகிக சங்கமும்
பேராசிரியர் தமிழவன்
சென்னை இலௌகிக சங்கம் : சில அவதானிப்புகள்
பேராசிரியர் சுந்தர் காளி
ஆடியும் லிங்கமும்: தொன்மங்களை வாசிப்பதில் தத்துவவிவேசினியின் இருவேறு வழிமுறைகள்
ஆளிணிவாளர் ஸ்டாலின் இராஜாங்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி : ம.மாசிலாமணி
நான்காம் அமர்வு
30.10.2013 பிற்பகல் 2.30 – 5.00
பேராசிரியர் ந.முத்துமோகன்
தத்துவவிவேசினி முன்னெடுக்கும் மெளிணியியல் விவாதம்
ஆளிணிவாளர் ஞான. அலாளிணிசியஸ்
அகில இந்தியச் சமூக மாறுதலுக்கான பின்னணியில் சென்னை இலௌகிக சங்கம்
தோழர் விடுதலை இராசேந்திரன்
இலௌகிக சங்கத்தினரின் பெண் சார்ந்த கண்ணோட்டம்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
இலௌகிக சங்கத்தினரின் மூடநம்பிக்கை குறித்த பரப்புரைகள்
பேராசிரியர் தொ.பரமசிவன்
தமிழக நாத்திக மரபும் சென்னை இலௌகிக சங்கமும்
குறிப்பு : பேராசிரியர் வீ.அரசு பதிப்பித்துள்ள சென்னை இலௌகிக சங்கம்
(ஆறு தொகுதிகள் : 3330 பக்கங்கள்) என்னும் ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு
இக்கருத்தரங்கம் நிகழ உள்ளது. இத்தொகுதிகளை நியு செஞ்சுரி புத்தக நிறுவனம்
அண்மையில் வெளியிட்டுள்ளது.
அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
Posted in Uncategorized
குறிச்சொல்லிடப்பட்டது அத்திப்பாக்கம் வேங்கடாசலனார், எம்.எஸ்.எஸ். பாண்டியன், எஸ்.வி.இராஜதுரை, கொளத்தூர் மணி, சுந்தர் காளி, சுப.வீரபாண்டியன், சென்னைப் பல்கலைக்கழகம், ஜி.இராமகிருஷ்ணன், தமிழவன், தமிழ் இலக்கியத் துறை, தொ.பரமசிவன், தோழர் ஆர்.நல்லக்கண்ணு, ந.முத்துமோகன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், பெ.மணியரசன், பெரியாரும் சென்னை இலௌகிக சங்கமும், பேராசிரியர் வீ.அரசு, ரவிக்குமார், வ.கீதா, ஸ்டாலின் இராஜாங்கம்
ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun)
ஜார்ஜ் சேம்ப்ர் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) பிறந்து பாரீஸில் (பிரான்சு) மறைந்தவர். மேட்டுக்குடியில் பிறந்த பொதுவுடமைவாதி, ஸ்பெயின் மார்க்கோ முதல் ஜெர்மன் இட்லர்வரை இவரை பிடித்து சிறையிலடைக்க அல்லது கொல்ல காத்திருந்தார்கள். அரசியலோடு எழுத்திலும் தீவிர பங்களிப்பு. பிரெஞ்சு -ஸ்பானிஷ் இரண்டிலும் எழுதுவார். எழுத்தோடு தத்துவம் பேசியவர்.
சூழலைக் காட்டிலும் அக புறவய அனுபவங்களை தமது எழுத்தில் கொண்டுவரவும் அதனூடாக வாசிப்பை புதிய தளத்தில் நிறுத்தி அவ்வனுபவத்தை வாசகரையும் உணரச்செய்வதில் தேர்ந்தவர் ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun). ஒரு ஞாயிற்றுக்கிழமை, பூஷன்வால்ட் (‘Quel beau dimanche!) என ஆரம்பித்து வாசகரை வழிமறித்து தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் அவர் எழுத்துக்கு நிறையவே உண்டு. நளனுக்கு வாய்த்ததுபோல ‘தீவினைக் கொடுமை’யைக் காலமும், சரித்திரமும் அவருக்கு சோதனையாக அறிமுகப்படுத்துகிறது, புலிவாலைப்பிடித்த போதை அனுபவம். அதனை மயக்கத்தின்வழிநின்றே ஒரு போர்வீரனின் தீரத்துடன் எதிர்கொள்ளவும், ஒரு கலைஞனின் திறத்துடன் பகிர்ந்துகொள்ளவும் அவருக்கு முடிந்தது. நாஜிகளின் வதைமுகாமில் உள்ளத்தாலும் உடலாலும் தேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணெதிரே நிகழ்ந்த, சக மனிதகூட்டத்தின் தினசரிகள் மீதான தாக்குதலைத் (கடுங்குளிர், பசிக்கு உணவின்மை, கொடுமைகள், ஈவிரக்கமற்ற கொலைகள், முகவாட்டங்கள், சோர்வுகள், கடுந்துன்பத்தின் முக்கல்கள் முனகல்கள் இன்னும் இதுபோன்றவற்றையெல்லாம் புறச் சம்பவங்களக் கணக்கில் கொள்ளாது) தவிர்த்து – முகாமில் தமமக்குள் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களை சொல்லவேண்டியது அவசியம் என்கிறார். நாஜிகளுடைய வதை முகாம்களைப் பற்றிய கட்டுரைகள், வரலாறுகள், புனைவுகள் ஏராளமாக வந்துள்ளனவென்றாலும், அதனை இலக்கியமாக்க இவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது. முகாம் வாழ்வை ஓர் யோகிபோல கடந்து வந்திருக்கிறார். அதற்கு ஒருவேளை அவரது தத்துவ அறிவு காரணமாக இருக்கலாம்.
ஜார்ஜ் சேம்பர் ஒரு ரிபப்ளிகன், எதேச்சதிகாரத்தின் எந்தவடிவமும் மக்களுக்கு எதிரானது என்கிற உண்ர்வுபூர்வமான குரல்களுக்கிடையில் அவர் குரலும் இடம்பெற்றது. ஸ்பெயின் நாட்டில் பிராங்க்கோ என்கிற கொடுங்கோலனின் ஆட்சி காலத்தில் தொடங்கிய தலைமறைவு வாழ்க்கை பிரான்சு நாட்டை நாஜிகள் ஆக்ரமித்திருந்தபோதும் நீடித்தது. பொதுவுடமைக் கொள்கையில் தீவிர ஆர்வலர், கட்சியில் அக்கறையுடன் வினையாற்றியவர் எனினும் ஸ்டாலினிஸத்துடன் உடன்பட மறுத்து விலகிக்கொண்டார். தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளுக்காக எழுத்தை ஒருபோதும் மறந்ததோ, தியாகம் செய்யவோ இல்லை, அவ்வெழுத்தை அவர் சார்ந்த அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல.
ஜார்ஜ் சேம்ப்ர் அரசியல் எழுத்து என்ற இரு குதிரை சாரட்டில் பயணித்தவர் என்பதால், அவர் அரசியல் வழித்தடத்தையும் நாம் இங்கே பேசியாகவேண்டும். உண்மையைச் சொல்வதெனில் இளம்வயதில் நானும் ஒரு பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக, திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவனாக இருந்திருக்கிறேன், அதுகூட சரியான வார்த்தை அல்ல. ஏனெனில் எனது அந்த வயதில் அரசியல் சார்பென்பது எனது தகப்பனாருக்கு எதிரான மன நிலையில் உருவானது, பெரியார் அல்லது கார்ல் மார்க்ஸ் மீதுள்ள பிடிப்பினால் உருவானதல்ல. எனது தகப்பனாருக்கு எதெல்லாம் பிடித்ததோ அதெல்லாம் எனக்கு பிடிக்காதது, உணவு உட்பட. அப்படியொரு மனநிலையில் இருந்தேன். கிராமத்தில் நாடகம் எழுதி நடிப்பது, பாலம் என்ற இயக்கம், இதே மன நிலையில்தான் இளங்கலைப் படிப்பை சென்னையில் இராயபுரத்தில் தங்கித் தொடர்ந்தேன் ( துறைமுகத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதி) சர் தியாகராயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது பீடி சுற்றும் தொழிலாளர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, தீக்கதிர் பத்திரிகையை விரும்பி வாசித்ததுண்டு, ஆனாலும் என்னை உறுப்பினராக வேண்டுமென்று படிவத்தை நீட்டிய பொழுது மறுத்தேன். அதே நேரத்தில் பழைய காங்கிரசு நடத்தும் கூட்டங்களிலும் கலந்துகொண்டதுண்டு. சோ நடத்திய துக்ளக் இதழை விரும்பிப் படிப்பேன். கட்சிபேதமின்றி அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறவர்கள் பக்கம் இருப்பதை இப்போதும் உணர்கிறேன். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பிடிக்காமல் போய்விடுகின்றன. இதற்கு உளவியல் ரீதியில் ஏதேனும் காரணம் இருக்குமா எனத் தேடவேண்டும். பொதுவுடமைக் கட்சியில் என் அனுபவத்தில் உணர்ந்தது, அக்கட்சியின் தொண்டர்கள் பிறரை நம்புவதில்லை, தலைவர்களை தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை. பொதுவில் இருதரப்பும் எதார்த்த உலகோடு சம்பந்தப்பட்டவர்களல்ல. ஆனாலும் ஒன்றை உறுதியாக நம்பலாம். அரசியலில் பிறகட்சிகளைக் காட்டிலும் ஒன்றிரண்டு யோக்கியவான்களைப் பெற்றிருக்கிற கட்சியும் அதுவாகத்தான் இருக்க முடியும்.
ஜார்ஜ் சேம்ப்ரின் ‘Quel beau dimanche!’ (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு!) என்ற அவரது சுய வரலாறு அல்லது புனைவு தற்செயலாக போலந்து நாட்டில் ‘Solidarnose’ பிறந்த அன்று வெளிவந்தது. அதாவது 1980ம் ஆண்டு ஜனவரிமாதம். ஜார்ஜ் சேம்பரின் வாழ்க்கையை அறிந்தவர்கள் வியப்படைவார்கள். நாஜிகளின் கொலை முகாமில் அடைபட்டிருந்த காலத்தில் நெஞ்சில் ஊறிய துன்ப உணர்வுகளை ஐந்து நாவல்களில் எழுதியிருந்தார். அவை 1963க்கும் 2001க் கும் இடைப்பட்டகாலத்தில் அவை வெளிவந்தன. அவற்றுள் இப்படைப்பை நடுவில் வைக்கலாம். இந்நூலுக்கு முன்பு வந்த le Grand voyage, l’Evanouissement என்ற இரண்டு நாவல்களிலும் தந்து கடந்த காலத்தை எட்டநின்று அதனுடன் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்திருக்கிறார் எனில் பின்னர் எழுதிய இரண்டிலும் ( L’Ecriture ou la Vie, Le mort qu’il fait) தமது எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனத்தை எடுத்துரைக்கிறார். ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டதின் விளைவாக இருபதாண்டுகாலம் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்குமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. அவர் வாழ்க்கையை மாற்றியது சொலிஜெட்சினா ( Solijenitsyne) நூலொன்று எனச் சொல்கிறார்கள் “எனது நினைவுகளை பரிசீலிக்கவும், விமர்சன உணர்வுக்குறிய எல்லா உரிமைகளும் மடை திறந்து, என்னைத் தனகெதிராகத் மாற்றும் திறனை தன்னிடம் வளர்த்தெடுத்ததென அவரே பின் நாளில் எழுதுகிறார்.
அவரது முக்கிய படைப்புகள்:
1. Le grand voyage (The Long Voyage) Gallimard, 1963
2. L’Ecriture ou la Vie (Writing or Life) Gallimard, 1994
3. Quel beau dimanche! ( What a beautiful sunday)
————————————————–
வெ.சுப நாயகரின் மொழிபெயர்ப்பு ‘அப்பாவின் துப்பாக்கி’ நூல் அறிமுகவிழா படங்கள்
வெ.சுப. நாயகரின் ‘அப்பாவின் துப்பாக்கி’ சென்னையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. முக்கிய பல ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு:நூலை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.
நா.கிருஷ்ணா
Posted in Uncategorized