Monthly Archives: ஒக்ரோபர் 2016

எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மரணம்

RK

அடுத்தடுத்து சில பணிகள் காரணமாக முக நூல்பக்கம் அதிக வர இயல்வதில்லை. எனவே ‘எப்படி நடந்தது, என்று நடந்தது என்பதை உணரப்படாமலேயே அந்தி சாய்வதுபோல தினசரி நிகழ்வுகளில் ஒன்றாக அதிகம் கவனத்திற்கு வராமலேயே   ரெ. காரத்திகேசுவின் மரணம் நிகழ்ந்துவிட்டது..

எனக்கு அவருக்குமான தொடர்பு என்பதைவிட  அறிமுகம் ராயர் காப்பிக் கிளப்  மூலமாக ஏற்பட்ட து. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை  இணைய இதழில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது, அவற்றில் சிலவ்ற்றை வாசித்து என்பீது அன்புகொண்டு, நான்  வெளி உலகிற்கு வரவேண்டும் என ஆசைப் பட்டவர்கள் பட்டியலைக் கவிஞர்  சதாரா மாலதியிடமிருந்து தொடங்கவேண்டும்.  மிகச்சிறந்த ஆர்ப்பாட்டமற்ற கவிஞர். இரண்டு  கிழமைக்கு ஒரு முறையாவது மின்ன ஞ்சல் எழுதுவார். பெரியவர் கி.அ. சச்சித்தானந்த த்தை  இலண்டன் வந்திருந்தபோது, அவரைப் பிரான்சுக்கு அனுப்பிவைத்து, ஸ்ட்ராஸ்பூர்வரை  அவரும் வந்து மூன்று நாட்கள் தங்கிச்சென்று எனது படைப்புகளைப் பற்றி சந்தியா நடராஜனிடம் கூறி பதிப்பிக்கவைத்தவர். மாத்தாஹரி  நாவல் வெளிவந்தபோது எனி இந்தியன் பதிப்பகத்திற்குச் சென்று கையோடு நாவலைக்கொண்டுபோய் அதற்கு கி.அ சச்சிதானந்தம் எழுதிய மதிப்புரை சம்பிரதாய விமர்சனமல்ல. இன்றளவும் அந்த அன்பு நீடிக்கிறது. அவர் வரிசையில் தான் அமர ர்கள் வே.சபாநாயகம், ரெ.கார்த்திகேசு போன்றவர்களையும் நிறுத்தவேண்டும். இவர்கள் இழப்பு எனது சொந்த இழப்புபோல. ரெ. கார்த்திகேசு கதைகள் எளிமையானவை, பன்முக ஆளுமை கொண்டவர். ஆனாலும் பிறர் எழுத்துக்களை பிடித்திருந்தாமல் மனமுவந்து பாராட்டுவார். பாரீஸில் ஒரு தமிழ் மாநாட்டைக்கூட்டினார்கள். தமக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் ‘நாகி’ உங்களைப் பார்ப்பதற்காக க் கலந்துகொள்ளப் போகிறேன். என எழுதினார். நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லையென நினைக்கிறேன். ஆனால் வெளியில் எங்கேனும் சந்திக்கலாமென எழுதினேன்.  ரெ.கா. பிரான்சு வரவில்லை, அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கு அமையவில்லை. அக்குறை  பின்னர் கோவையில் ‘தாயகம் கடந்த தமிழ்’ நிகழ்வில்  தீர்ந்தது.  நண்பர் மாலன், திரு சிற்பி ஆகியோரின் பெரும் பங்களிப்பில்   நடந்த இரு நாள் நிகழ்வில்  ஓர் அமர்விற்கு என்னைத் தலமை தாங்கச்சொல்லியிருந்தார்கள். அது கார்த்திக்கேசுவிற்கும் மாலனுக்குமுள்ள உயர்ந்த நட்பின் விளவாக சாத்தியமாகி இருக்கவேண்டுமென்பது என் ஊகம்.   நிகழ்வின் போது இரண்டு நாட்களும்  ரெ.கா வுடன்  போதிய அளவிற்கு உரையாட முடிந்தது.

மாத்தாஹரி பிரெஞ்சில் 2017ல் வந்துவிடுமென்று நம்பிக்கை.செய்தியை அறியவந்தால்  உண்மையில் மகிழக்கூடியவர்களில் அவரும் ஒருவர். .

எனக்கு சிலர் யோசனைகூறியதுபோல, அவர்கூட மலேசியாவில் ஒரு பரிசொன்றை  ஏற்படுத்தி வருட த்திற்கு ஒரு மூத்த எழுத்தாளருக்கு ஐந்தாயிரம் மலேசிய வெள்ளி  பரிசு கொடுத்திருந்தால், தமிழகச் ஜாம்பவான்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் பகலும், இரவும், காலையும், மாலையும், பூத்தலும், காய்த்தலும் யார் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறது?.

 

கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெக்கிளெர்க்

                கதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு இவருடைய துபாம்பூலுக்கே வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர். முதியவர் விமானத்தில் காலைவைத்த பின்னரே அவரும் புறப்பட்டுச் சென்றார். விமானப்பணிப்பெண்ணிடம் ஒரு குழந்தையைப் போல அவர் ஒப்படைத்துவிட்டு ச் சென்றார், அதை நபிசாட்டு உணர்ந்திருக்கவில்லை. பாரீஸ் நகரில் ஒரு விமான நிலையத்திலிருந்து மற்றொன்றிர்க்கு அவரை பத்திரமாக அனுப்பிவைத்தது அதே விமானப் பணிப்பெண் தான். கடந்த எட்டு நாட்களாக செடார் சகோன் என்கிற ஸ்லாபூகூம், ஒவ்வொரு நாளும் காலையில், இனிமேலும் மர்மமாக இருக்க சாத்தியமற்ற ஹூல்ட்ஸ் அம்பை( அம்பையொத்த கதீட்ரல் கோபுரம்கத்தீட்ரலை வடிவமைத்தவர் ஹூல்ட்ஸ் என்கிற கட்டிடக் கலைஞர்) அல்லாவிற்கு நன்றியைத் தெரிவித்தபடி பார்க்க முடிகிறது. அவர் நன்றி தெரிவிக்கிறவர்களின் பட்டியலில் நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் மூவரும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியின்றி ‘ Gallia’ என்றழைக்கப்படுகிற ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக் கழக மாணவர் விடுதி 243 ஆம் எண் அறைவாசியாக தற்போது இருக்கச் சாத்தியமில்லை.

மணி எட்டாகிறது. கீழே இறங்கி ஒரு சிறுவனைபோல காலை உணவாக இரண்டு சாக்லெட் திணித்த ரொட்டியை விரும்பித் தின்பதற்கான நேரம்.

-போதுமான நேரம் இருக்கிறது, இரண்டு வாரங்கள் தங்க இருக்கிறாய்

நேரம், நேரம்! எல்லோரும் இங்கு நேரம் பற்றியே பேசுகிறார்கள்.

விமான நிலையத்தைச் சுற்றிப்பார்க்கவிரும்பியதால் உடனடியாக புறப்பட முதியவருக்கு விருப்பமில்லை. ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) நகரை சில மணி நேரங்களில் அவர் பார்க்கப்போவதில்லை. தவிர விடுதியில் அவருக்காகப் பலர் காத்திருக்கிறார்கள் எனக்கூறி அப்தூலயே அவரைச் சமாதானப்படுத்தினான்.

– ‘ ஹூல்ட்ஸ் அம்புஎன்பதென்ன ? எங்கிருக்கிறது ?

புரியலை.

– ‘ஹூல்ட்ஸ் அம்பு‘.

என்ன அம்பு ? அப்படி எந்த அம்பும் இங்கில்லையே.

-அப்படி ஒன்றிருக்கிறது. சினேகிதன் லூசியன் சொல்லியிருக்கிறானே !

லூசியானா ? யார் அது ?

எனக்கு அதுபற்றிய தகவலை விளக்க ஒருவர் கிடைக்காமலா பொவிடுவார். எப்படியும் அப்படி ஒருவரை நிச்சயம் கண்டிபிடிப்பேன்.

அப்தூலயேக்கு கவலை வந்துவிட்டது. கிழவர் மூளைக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதென நினைத்தான். மேயர் டீட் ரைஸ்‘ (Maire Dietrich) சாலையிலிருந்த பல்கலைக்ழக மாணவர் விடுதிக்கு முன்பாக இருவரும் கடைசியில் வந்துசேர்ந்தபோது, அவர் மனநிலைப் பாதிப்புக் குறித்துத் தெளிவாய் இருந்தான். லா மர்செய்யேஸ்(la Marseillaise) பாடலில் சிலவரிகளை முணுமுணுத்தார். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் அவர் நடந்துகொண்ட விதம் அவனுடைய பயத்தைக் குறைக்கப் போதுமானதாக இருந்தது. அப்பெண்ணும் அப்தூலயேவுமாக முதியவருக்கென ஒதுக்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்கள்

-மதாம், உங்கள் நடையுடை பாவனை எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது ! – என வரவேற்பு பெண்ணிடம் பெரியவர் கூறினார்

இதுதான் உங்கள் அறை, எண் 243. இது உங்கள் அறையின் சாவி. – பெண்.

கொஞ்சம் இரும்மா, போகாதே ! உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும். ஹூல்ட்ஸ் அம்பு என்றால் என்ன தெரியுமா?

அப்தூலயே சங்கடப்பட்டான். பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைத்தவன்போல அறையின் வசதிகள் குறித்துப் பேச விரும்பினான். மாறாக முதியவர், அறைக்குள் நுழைந்த மறுகணம் கட்டிலில் உட்கார்ந்தவர், தன்னுடைய சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதைத் தவிர வேறு வேலையில்லை என்பதைப்போல :

ஹூல்ட்ஸ் அம்பு ? என மீண்டும் வினவினர்.

நீங்கள் அம்பு எனக்குறிப்பிடும் ‘flèche ‘ என்றப் பிரெஞ்சு வார்த்தைக்கு கோபுரம் என்றும் பொருளுண்டு

, இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஹூல் ட்ஸின் முழுப்பெயர் ஜோஹன்னஸ் ஹூல்ட்ஸ் (Johannes Hültz) – முதியவர்.

கிழவரின் பிதற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்ணும் எதையோ உளறுகிறாளென அப்தூலயே நினைத்தான்.

சரி கொஞ்சம் இப்படி சன்னல் பங்கம் வாங்க, கூறிய பெண் சன்னலை நோக்கிநடக்க, அப்தூலயேவும் அவனுடைய பெரியவரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள். சன்னல் அருகில் நின்றவள், ‘ இடதுபக்கம் உயரத்தில் என்ன தெரிகிறதென்று பாருங்கள்‘, என்றாள். பேரனும் தாத்தாவும் அவள் காட்டிய திசையில் பார்த்தார்கள்.

இது தானாஅது?

கதீட்ரலின் தேவாலய மணிகூண்டு.

பெண்ணின் கை முதியவரின் தோளில் இருந்தது. அவள் பக்கம் திரும்பியவர், «  லூசியன் பொய் சொல்லவில்லை, எனக்கூறினார், அவ்வாறு கூறியபோத, கண்களில் நீர் அரும்பியது

கோபுரத்தின் உயரம் 142 மீட்டர் ! கதீட்ரலை கட்ட ஆரம்பித்தது பன்னிரண்டாம் நூற்றாண்டு. கோபுரத்தை ஜோகன்ஸ் ஹூல்ட்ஸ் கட்டி முடித்தது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு , கற்பனை செய்துபாருங்கள் ! – பெண்.

இப்படியின்று இருக்குமென்று எனக்கு நன்றாகத் தெரியும். லூசியன்!…இக்கோபுரம் பற்றி என்னிடம் பேசியிருக்கிறான்.

          லூசியான் யார் என அவள் வினவவில்லை. கதீட்ரலின் உயரமான கோபுரத்தின் பக்கம் பார்வை சென்றது. ஹூல்ட்ஸ் அம்பு‘ , எனும் புதிரானச் சொற்கள் இரண்டும் அர்த்தமின்றி அவருடைய கதைசொல்லலில் இடம்பெற்றவை, அவை பொருளுளிழந்த சொற்களாகவே இருந்தன. அவை திடமானவையாக, மிகுந்த உயரத்தில் விண்ணில் பறப்பதற்கு முனைவதுபோல இருந்தன. உணர்ச்சிப் பெருக்குடன், கன்னத்தில் விழுந்து உதடுகளருகே உருண்ட ஆனந்தகண்ணீரைத் தேய்த்துத் துடைதார்.

          ஒரு வாரத்தில் ஸ்லாபூகூம் அவர் இதுவரை அறிந்திராத வேறு பல தகவல்களும் நகரைப்பற்றிக் கிடைத்தன. தமது சினேகிதனின் ஊரிலுள்ள அனைத்தையும் பார்க்க விரும்பினார். குடைராட்டினத்தில் சுற்ற ஆசைபட்ட குழந்தையைப்போல டிராமில் பயணப்பட்டார். செல்லவேண்டிய இடம் தூரமெனில், கார் வைத்திருந்த ஒன்றிரண்டு பேர் வழிகாட்டிகளாகக் கிடைப்பார்கள், அவர்களைச் சென்றுபார்ப்பார். தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள நினைத்து, ரோவான் கோட்டை‘ (le château des Rohan), கதீட்ரல் கடிகாரம்,’ le palais de l’Europe’ மண்டபம், அதே பெயர்கொண்ட ஒரு பாலம் ஆகியவற்றைக் காணச் சென்றபோது நூற்றுகணக்கான கேள்விகளை எழுப்பினார். ‘la pharmacie du Cerf’ என்ற மருந்தகம் பிரான்சு நாட்டின் முதல் மருந்தகம் எனும் தகவல் அவருக்கு வியப்பை அளித்தது. இதுபோன்ற உண்மைகளைத் தெரிந்து கொள்கிறபோது கிராமத்துப் பரணொன்றில் பதுங்கி யிருந்தபோதும், பயணத்தை விடிந்து தொடரலாமென காட்டில் காத்திருந்த இரவுவேளையிலும்,, இலண்டனுக்குச் செல்லும் வழியிலும் சினேகிதன் லூசியன் மொர்பான்ழுடையக் வார்த்தைகள் போல இருந்தன. புதிது புதிதாய் ஒன்றை அறிகிறபோதெல்லாம் அவர் நெகிழ்ந்துபோகிறார். சிற்சில சமயங்களில் அவர் வாய் விட்டுச் சிரிப்பதுண்டு, அதற்கான காரணமும் பூடகமானது. ஊரில் தீவென்று இவர் வர்ணித்தது எப்படி தீவாக அல்லாமல் நதியாக இருந்ததோ அதுபோலக் கேட்டவர்கள் வியப்புற்ற ஸெல்‘(Zel) எனக்குறிப்பிட்டதும், கடைசியில் கதீட்ரலுக்கு எதிரே ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதர் குடியிருப்பாகத் திகழ்ந்த லா மெய்ஸோன் கமிட்ஸெல் (la maison Kammerzel) என்ற கட்டிடமன்றி வேறில்லை என்பதை விளங்கிக்கொண்டார். லூசியன் மொரான்ழ் நினைவுகளையெல்லாம், காலம் துடைத்திருந்தது, அவற்றில் எஞ்சியவற்றைக்கொண்டு வியப்புக்குரிய புனைவுகளை உருவாக்கினார். இன்று அவையெல்லாம் திரும்ப உண்மையாயின. இதுநாள்வரை பொருளைத் தொலைத்திருந்த அதுபோன்ற சொற்கள், கூற்றுகள் எல்லாம்,நகரைச்சுற்றுகிறபோது எதிர்பாராதவிதத்திலும்,, காப்பி விடுதியில் அற்முகம் ஆனவர்களிடம் வித்தியாசமானதொரு ஆப்ரிக்காவை இவர் இட்டுக் கட்டி விவரிக்கிறபோது கேட்கிறவர்கள் சந்தேகித்தவையும் இன்று உண்மையாயின. கனிம நீர், பீர், சாலட் ஆகியவற்றைக் கேட்பவர்களுக்கு கொடுத்துக்கொண்டே அப்தூலயே சிரித்துக்கொண்டிருப்பான். ‘இவரை ஏன் அழைத்தோம்என்கிற கவலைகளெல்லாம் அவனிடத்தில் தற்போதில்லை.

           கழிந்த ஒவ்வொரு நாளும் இளமைக்காலத்தை அவரிடம் திரும்ப அழைத்திருந்தது. அல்ஸாஸ் பிரதேச ‘les Dernières nouvelles d’Alsace’ செய்தித்தாளைப் வாசித்துக்கொண்டே காலை உணவை உட்கொண்டிருந்த முதியவருக்கு, ஸ்ட்ராஸ்பூர்நகர 60000 குடும்பங்களும் குடிநீர் விநியோக பிரச்சினையால் தவித்த செய்தியையும், நகரப் பேருந்துகளில் முன்னால் ஏறவேண்டிய நிலைமையையும் இனிப்பிறருக்குச் சொல்லலாம் என்பதை நினைக்கப் பெருமையாக இருந்தது. அவர் தங்கியிருந்த மாணவர் விடுதியையே விலைக்குவாங்கிக்கொள்ளும் உத்தேசத்திலிருப்பவர்போல விடுதி முழுவதையும் சுற்றிப்பார்த்தார். ‘கலியா‘(Gallia) என அழைக்கபட்ட அவ்விடுதியின் ஒவ்வொரு மாடியிலும் ஏறி இறங்கினார். சில சமயம் தனித்தும், சிலசமயம் துணையுடனும் அது நிகழ்ந்தது. அப்போது, மாணவர்களின் உடற்பயிற்சிக் கூடத்தையும், அவர் கண்டிராத புதிய உடற்பயிற்சிக் கருவிகளையும்; ஓவியக்கூடத்தில் இசைக்கும் பியானோவையும், புத்தகங்களில் வரிசை வரிசையாகக் கவிழ்ந்திருந்த தலைகளை நூலகத்திலும் கண்டார். மாணவர்களில் ஒன்றிரண்டுபேர் தங்கள் அறைக்கு அழைத்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அவர்கள் அறைக்குச் சென்று அவர்களின் வாழ்வனுபவக் செய்திகளைக் காதுகொடுத்து கேட்பார், இவரும் தன்பங்கிற்கு துல்லியானத் தகவல்களைக்கற்பனையாக உருமாற்றித் தெரிவிப்பதுண்டு. அவரிடம் உரையாடியவர்கள் அனைவரும் ஆளுக்கொருவிதமாய் இருந்தது அவருக்கு வியப்பினைத் தந்தது. உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் தங்களின் பிரதிநிதிகளாக மாணவர்களை விடுதிக்கு அனுப்பியிருக்கவேண்டுமென நினைத்தார். அவர்கள் சொல்ல நிதானத்துடன் கேட்டார், இடைக்கிடை அவர்களின் நாட்டார் மரபுக் கதைகள் பற்றி வினாக்கள் எழுப்புவார், அவற்றைக்கொண்டு புதிய, இசைவான குட்டிக்கதைப் படைத்தார். அவை அனைத்தையும் நினைவிற்கொள்ள இயலாமற்போகலாம். ஆனால் அவற்றில் நினைவில் நிறுத்த முடிந்தவற்றிலிருந்து, முதியவர் தமது சொந்த ஊரான துபாம்பூல் திரும்பியதும் , அவருடைய புனைபெயருக்குக் கடன்பட்டுள்ள வீதிகள் நகரம் குறித்து, அந்நகரம் பற்றிய உண்மைகள் கூடுதலாகத் தெரியவந்துள்ள நிலையில் இனி உரைக்கும் கதைகளில் அடுக்கடுக்கான அத்தியாயங்களைச் சேர்க்க உதவும். ஆனால் என்றும் விளங்கிக்கொள்ள இயலாதப் புதிராக அம்பும்‘, ‘ஸெல்லும் தொடரும், ஆனான் அவற்றுடன் வேறுபல பல இரகசியங்களும் இணைந்துகொள்ளும். ஏற்கனவே இவருக்கென மாணவர் பேரவை எற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியொன்றில் கேட்டவற்றை தம்முடைய உபயோகத்திற்கென பத்திரப்படுத்திக்கொண்டார். .

          இவருடைய நிகழ்ச்சிக்கென வைத்திருந்த அறிவிப்புத் தட்டி ஸ்லாபூகூம், புகழ்பெற்ற கதைசொல்லி யினுடைய நிகழ்ச்சி எனத் தெரிவித்தது. அதன்படியே நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம். கைத்தட்டியவர்களைக் காட்டிலும் அவருடைய கதைசொல்லலில் மயங்கியவர்கள் எண்ணிக்கை அதிகம், அப்படியொரு வெற்றி. அவரொரு தொழில் முறை கலைஞர் இல்லையென்கிறபோதும் சிரிப்பையும், உணர்ச்சியையும் சரியான அளவில் கலந்து, சேட்டைகளின்றி பார்வையாளர்களைக் கட்டிப் போட அவரால் முடிந்தது. துபாம்பூலில் நடந்ததைப் போலவே ஒவ்வொரு சொல்லும் புதிய சொற்களுக்குக் காரணமாயின, அதுபோலவே ஒவ்வொரு புனைவும், புதிய புனைவுகளுக்கு வித்திட்டன. உதாரனத்திற்கு தேன் நிறகூந்தலையுடைய இளம்பெண்ணின் கதை தற்போது, துரதிஷ்டம்கொண்ட எகிப்திய பெண் தேவதையை கொக்கொன்று இந்திய அரண்மணையில் காத்திருந்த காக்கேசிய (Caucase) இளைஞனிடம் கொண்டுபோய் சேர்த்தது. மாறுபட்ட இழைகளைக்கொண்டு திரும்பத் திரும்ப புதிய ஆடையாக உருமாற்றிகொண்டிருந்தார். விதிவிலக்காக கழுகும் சேவலும் என்ற கதையை மட்டும் முதல் நாளிலிருந்தே, திரும்பத் திரும்பத் சொல்லவேண்டியக் கட்டாயம். கேட்டவர்களில் ஒருவர் கீழ்க்கண்ட வகையில் அதைக்குறித்து எழுதினார்.

“தனது கூடு போதாதென நினைத்த கழுகொன்று சேவலொன்றின் பிரதேசத்தைக் கைப்பற்றியது. அதன் இறக்கைகொண்டு முதலில் இருமுறைத் தாக்குதல், பின்னர் மூன்றுமுறை அலகால் கொத்த பிரச்சினை எளிதாகத் தீர்க்கப்பட்டது. வெற்றிபெற்றக் கழுகு , தம்மால் முடிந்த அளவிற்குக் கழுகுகளை ஒன்று திரட்டி, அற்புதமானதொரு வீட்டை வோழ்மலை கற்களைக்கொண்டு கட்டியது. சூரியன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவ்வீடு சூரிய ஒளியைப் பிரதிபலித்தது. சேவல் பொறுமையுடன் சில ஆண்டுகள் காத்திருந்தது, அதுவும் தன்னால் முடிந்தமட்டும் துணைக்கு சேவல்களைச் சேர்த்துக்கொண்டு கழுகுடன் சண்டையிட்டுத் தனது பிரதேசத்தைக் கைப்பற்றி கழுகின் அற்புதமான வீட்டைத் தனதாக்கிக்கொண்டது.. கழுகு அதிகக் காலமெல்லாம் காத்திருக்கவில்லை. சேவல்களை அடித்துத் துரத்திவிட்டு, தன்னுடைய அதிசய வீட்டைத் திரும்ப எடுத்துக்கொண்டது. ஆனால் மீண்டும் குறுகிய காலத்திலேயே ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்காவென்று வெகு தொலைவிலிருந்து வந்த மிருகங்களைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு கழுகைத் துரத்திவிட்டுத் திரும்பவும் சேவல் அந்த அற்புதமான வீட்டைத் தன்வசம் ஆக்கிக்கொண்டது. அக்கணத்தில் கழுகுகளும், சேவல்களும் பொருளின்றி சண்டையிட்டு அடிக்கடி உறையும் இடத்தை மாற்றிக்கொண்டிருப்பது வீணென்று புரிந்துகொண்டன. கழுகு சேவலின் பிரதேசத்திற்கு ஆசைப்படுவது தவறென உணர, அன்றிலிருந்து ஏராளமான சேவல்களும், கழுகுகளும் மாத்திரமின்றி கரடி, சிங்கம், மான், எருது, புறா என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையுடன் அந்த அதியவீட்டில் வசிக்கத் தொடங்கின.”

          இக்கதை யை முழுமையாக இட்டுக்கட்டியதென்று கூற முடியாது. அனைத்திற்கும் மேலாக வியப்புக்குரிய விஷயம் கலியா‘ (Gallia) என்ற பெயர்காரணத்தைத் தெரிந்துகோள்ள அவர் காட்டிய ஆர்வம். அவருக்கு அது தெரிவந்தபோது பெருமையாக இருந்தது.

ஆரம்பத்தில் கலியா என்ற பெயரில்லை. ஜெர்மானியா என்றே அழைக்கப்பட்டது. காரணம் 1870க்குப் பிறகு ஜெர்மானியர்கள்…………யுத்தத்தில்

அந்தப் போர்பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் ஜெயித்திருந்தார்கள்.

நெப்போலியன் படையில் செனெகல் நாட்டு வீரர்கள் இடம்பெறாததுதான் காரணம்.- என்பது பெரியவரின் பதில்.

ஜெர்மானியர்கள் எழுப்பிய கட்டிடம். ஆனால் 1918ல் பிரெஞ்சுக்காரர்களின் கைவசம். ஜெர்மானியர்கள் இனி இல்லையென்றான பிறகு கலியாஎன்று அழைக்கத் தொடங்கினார்கள்.

40 ல் மறுபடியும் ஜெர்மானியாஆனதில்லையா.

ஆமாம், ஆனால் 45ல் மீண்டும்…..

புரிகிறது. இக்கதை நல்லவேளை பாதகமாக முடியவில்லை

உங்களிடம் அப்படி முடிகிற கதை இருக்கிறதா ?

இல்லை. பொதுவாக கதைக்கேட்பவர்கள் சுபமாக கதை முடியவில்லையெனில் கேட்கமாட்டார்கள்.

இக்கதை நீங்கள் பிறருக்குச் சொல்லக்கூடியதுதான். ஆனால் எல்லோருக்கும் தெரிந்தக் கதையாயிற்றே.

          முதியவர் சிரித்தார். அப்தூலயேவிற்கு ஸ்லாபூகூம் உண்மையான கதையொன்றை படைக்கக்கூடியவர் என்று தெரியாது.

           ஹூல்ட்ஸ் கோபுரத்தை ப் பார்க்கிறார். இனி அவருக்கு அது புதிரில்லை. அல்லாவுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதேவேளை நஃபிசாட்டு, அப்தூலயே, உமர் ஆகியோரையும் அவர் மறந்தவரில்லை. சாக்லேட் திணித்த ரொட்டியை, ஒரு சிறுவனைப்போல விரும்பிச் சாப்பிடும் நேரம். தூண்களுக்கிடையில் கச்சிதமாக அமைந்த 243 ஆம் எண்கொண்ட அறை, அசையாமல் நின்றிருந்தார். பதினைந்து நாட்களும் வேகமாக கரைந்துவிட்டன. ஸ்லாபூகிமிற்கு, ஸ்ட்ராபூர்கூமை மட்டுமல்ல பழகிவிட்ட கலியாவையும் பிரிந்து செல்ல மனமில்லை என செடார் சொகோன் முனுமுனுத்தார். தனது சினேகிதன் லூசியன் மொரான்ழிடம் , « அவர்கள் என்னைத் தங்கச்சொல்லப்போகிறார்கள் பார்எனத் தெரிவித்தார். இங்கே எனக்கு நன்றாக இருக்கிறது. தவிர நான் காணவேண்டிய வீதிகளும், வரலாற்று நினைவுச்சின்னங்களும் மிச்சமிருக்கின்றன. இங்கிருக்கிறவர்கள் அனைவரையும் விரும்புகிறேன். உன்னுடைய நகரத்தைப் பற்றி நிறைய கதைகள் சொல்லவேண்டியவை பாக்கியுள்ளன. அவற்றைச் சொல்லி முடித்ததும், பிற கதைகளுக்குச் செல்வேன். அல்ஸாஸ் மிகப்பெரிய பிரதேசம். »

          தனது எதிர்காலத் திட்டம் பற்றிக் கூறியதைத் திரும்ப முணுமுணுத்தார். அவரை ஒருவரும் முட்டளாக்க முடியாது. இனி இதுபோன்ற நாளைகள் உண்மை அல்லாத கதை மாந்தருக்கென அவர் படைக்கும் கற்பனை மனிதர்களிடத்தில் மட்டுமே சாத்தியம். இன்னும் சிறிது நேரத்தில் கலியாவைச் சேர்ந்த நண்பர்களும் பிற நண்பர்களும் வழி அனுப்ப வருவார்கள், சற்றுமுன்னர் அவர் உரையாடத்தொடங்கிய லூசியானும் அங்கு வரக்கூடும். உலகின் அம்மறுமுனை, விமான தளம், மேகத்திற்கு மேலே, நாலாயிரம் கி.மீட்டர் தூரத்தில் இருக்கக்கூடும், செனெகெல் நாட்டு டாக்ஸியில் சென்றால் இருநூறு கி.மீட்டர். அவருடைய வாழ்க்கை துபாம்பூலில் கதைசொல்லி யாக இருப்பதேயன்றி, சாலைகள் ஊரில் ஒரு நட்சத்திரமாக வலம் வதில்லை.

வருகின்றவர்கள் எதுவேண்டுமானாலும் கூறட்டும், நான் இங்குதான் தங்கப்போகிறேன்

          இனி இந்தவாழ்க்கை சாத்தியமில்லை என்கிற போதும் கணநேரம் அதில் திளைப்பதும் சுகமாக இருந்தது. நம்பிக்கையின்றி அவ்வனுபவக் கற்பனையில் மூழ்கினார். சாக்லேட் திணித்த ரொட்டியை மறந்து பாலகணியில் அசையாமல் நின்றார். இடதுபக்கம் கதீட்ரல், வல்துபக்கம் சேன்போல் தேவாலயம். நேரெதிரே தீவுஎன்று பெயர்கொண்ட நதி ஓடிக்கொண்டிருந்தது, நதியில் சுற்றுலா பயணிகளின் படகுகள்.

முற்றும்

 

 

கதை சொல்லி-3 (சென்றவாரத் தொடர்ச்சி) – பியர் ரொபெர் லெகிளெர்க்

          இடது பக்கம் கத்தீட்ரல், வலது பக்கம்  சேன்-போல் தேவாலயம்; நேர் எதிரே அவர் தீவு என்று குறிப்பிட்ட நதி. தம்மை அவர்கள் கடந்துசெல்லும் ஒவ்வொருமுறையும்கையை அசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார். அவர்கள் சுற்றுலா பயணிகள், படகில் நகரைச் சுற்றிப் பார்ப்பவர்கள். அறை எண் 243, பால்கணியில் நிற்கிறார். இப்படியொரு அதிசயத்தை அவருக்களித்த அல்லாவிற்கு மாத்திரமின்றி, ஒருவகையில் இந்த அதிசயத்திற்குப் பங்களித்த சகோதரர் நஃபிசாட்டு, அவர் பேரன் அப்துலயே, வெகுதொலைவில் இருக்கிற உமார் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

 

          இப்புதியப் பயணத்தைத் தொடங்கியாயிற்று, தற்போது இதுவும் அவருடைய புனைவுகளில் ஒன்றாக தொடருகிறது. இயலாமைக்கு அல்லா ஒர் எல்லையை வகுத்திருந்தார். அவரைப் பொருத்தவரை “நீ போவது உறுதி” என்கிற நஃபிசாட்டுவின் வார்த்தைகள் போதுமானவையாக இருந்தன.

 

          அவரது புனைகதை நகருக்கு வந்தாயிற்று. காலை மணி எட்டு. வயிறு புடைக்க உண்ணும்  ஒரு சிறுவனைப்போல இரண்டு சாக்லேட் திணித்த ரொட்டியை காலை உணவாகக்கொள்ள கீழே இறங்கவேண்டும்.

 

          நஃபிசாட்டு, இவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டபோது, இவருடைய எள்ளல் புன்னகைக்கு மயங்கியதாகத் தெரியவில்லை. சகோதரருக்கு உண்மையில் நம்பிக்கை ஏற்படவில்லை.  எதிர்பார்த்ததுதான்.  கதைசொல்லி முதியவரின் சகோதரர்  நஃபிசாட்டு வெளிப்படையாக எதையும் கூறாமல்தான் புறப்பட்டுச் சென்றார். ஆனால் டக்கார் நகரை அடைந்ததும், தம்முடைய பேரன் அப்துலாயே வுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்லாபூகூம்  என்ற பெயரை முன்னிறுத்திக் கூறப்பட்ட நகரத்தைக்குறித்து எழுதவே செய்தார் :

            உனது பெரிய தாத்தாவின் கற்பனை மிகவும் சுவாரசியமானது ,  அதேவேளை மனதை நெகிழ்விக்கக் கூடியதுமாகும்  என்பதை  நீ புரிந்துகொள்வாயென எனக்குத் தெரியும். அவருடைய சினேகிதனின் நகரத்திற்குத் திரும்பும் சூழலுக்கு நீயும் முயற்சி செய் , அவ்வாறு செய்தால், உனது கனவிற்கும் ஏதேனும் பலன் கிடைக்கும்”

 

          அப்தூலயே சிரித்தான். ஒரு மாற்றத்திற்கு முதன்முறையாக பிடிவாதம் என்ற வார்த்தையைத் தவிர்த்துவிட்டு , கனவென்ற சொல்லைத் அவனுடைய தாத்தா உபயோகித்திருந்தார். 

 

          இரண்டாண்டுகளுக்கு முன்பு உமரைப் பார்க்க்கும் எண்ணம் வந்தது. ஸ்ட்ராஸ்பூர் லூயிபாஸ்ட்டர் பல்கலைகழகத்தில்  இயற்கை இடர்ப்பாடுகள் மற்றும் மண்பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெறுவதர்க்குரிய கல்வியை உமர் முடித்திருந்தான். அப்தூலமயே அவனை மிகவும் நேசித்தான். உமரைச் சென்று பார்க்காதது ஒரு குறையாகத் தோன்றியது. அவனிடம் கூறுவதற்கென்றிருந்தவற்றை  மூன்று பக்கங்களில் ஒரு கடிதமாக எழுதினான். CROUS Cité Universitaire Gallia ; 1- Quai du maire Dietrich என்று முகவரியை எழுதியபோது, கை நடுங்கியது. அவன் எதிர்பார்த்ததுபோலவே  உமருடைய பதிலும் இருந்தது :

 

          என்னைப் பார்க்கவிரும்பியது, உண்மையில் நல்ல யோசனை. எனக்கும் உன்னைக் காணாதது ஒரு குறை.  உன்னைப்பற்றித்தான் மேடம் சொடெவ் விடம்  பேசினேன். பல்கலைக்கழக த்தின் மாணவர்நலனுக்கென இயங்கும் CROUS அமைப்பின் கலை பண்பாட்டுத்துறையின் பிரதிநிதி அந்த அம்மாள். அன்பான  பெண்மணி, உதவும் மனப்பான்மை நிறைய உண்டு. நியாயமான வாடகைக்கு  ஒரு மாதத்திற்கு அந்த அம்மாள் உதவியுடன் ஓர் அறையை எடுக்க  முடியும். உன்னுடைய வருகையினால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நகரத்தைச் சுற்றிவரலாம். உன்னை எங்கெல்லாம் அழைத்துச் செல்வதென்கிற  திட்டங்களெல்லாம் தயார். » கடிதம் ஏதோ சுற்றுலா கையேட்டுக்குரியத் தகவல்களுடன் தொடர்ந்தது.

 

           அப்தூலயே தனது சகோதரனை மிகவும் நேசித்ததென்னவோ உண்மை,  கண்ணாடி ஒவியம் கற்க வேண்டுமென்ற தாத்தாவினுடைய விருப்பத்தை நிறைவேற்ற பேரனுக்கு  ஆர்வமில்லை.  எனினும் திடீர் பயணத்திற்குக் காரணமும் இருந்தது. இவனுடைய சகோதரன் உமருக்கும், குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும்,  இப்பயணம்  ஸ்ட்ராஸ்பூர்கில் சில நாள் தங்கித் திரும்பும் உத்தேசத்திற்குரிய ஒரு பயணம். ஆனால் அப்தூலயேவுக்குத் திரும்ப செனெகெல் நாட்டிற்கு வரும் எண்ணமெல்லாம் இல்லை.  . அவனுடைய  விசாவில் ஒரு முத்திரையும் சில நொடிகளும் போதும், சுற்றுலா பயணியென்கிற தகுதிக்குப் பதிலாக வந்தேறி , கள்ளத்தனமான குடியேற்றவாசி என்கிற அந்தஸ்த் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.

 

       உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது !

 

       தங்கி விடுகிறேன்.

 

       அப்படித் தங்க முடியாது.

 

       எனக்குப் போக விருப்பமில்லை.

 

       அறிவுபூர்வமாக யோசி ! குடும்பத்தை யும் நினைத்து பார். உன்னுடைய இப்பயணத்திற்காக நம் குடும்பத்தில் நிறைய சிரமப்பட்டிருக்கிறார்கள். ஊரில் உனக்காக அவர் காத்திருக்கிறார்கள்.. என்னால் உனக்கு உதவ முடியாது. எங்கே போகப் போகிறாய் ? அதிலும் இங்கிருந்து என்ன செய்வதாய் உத்தேசம்.

 

       எடுத்த முடிவு எடுத்ததுதான். நான் இங்குதான் தங்கப்போகிறேன்.

 

       அதற்குச் சாத்தியமே இல்லை, அப் தூலயே. முட்டாள் தனமான காரியம். வீணாகப் பிரச்சினைகளைத் தேடுகிறாய் !

 

       என்ன சொன்னாலும் முடிவில் மாற்றமில்லை.

 

       இதற்கு மேல நான் என்ன சொல்ல, இருந்து தொலை !

 

          கிளேபர் சதுக்கத்தில், ஒரு காப்பி பாருக்கு வெளியில் அமர்ந்து தாழ்ந்த குரலில் ஆரம்பித்து  சகோதரர்கள் இருவரும் உரத்து முடித்திருந்தார்கள். விவாதம் சர்ச்சையாக மாறியிருந்தது. உமர்  தொடர்ந்து வற்புறுத்த வில்லை. மேசையில் பில்லுக்குரிய பணத்தை வைத்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றான். சர்வரிடம் அதனைக்கொடுத்தனுப்பிவிட்டு மீதிச் சில்லறைக்காக இவன் காத்திருந்தான். சிறிது தூரத்தில், வீதிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழுவொன்று  ஆர்ம்ஸ்ட்ராங்கை இசைத்துக்கொண்டிருந்தது : « கொடுத்துவைத்த வாழ்க்கை ! » என நினைத்தான். ‘Stormy weather’, ‘Sweet Lorraine’, ‘Cheeck to cheek’ ஆகியவற்றை சீழ்க்கையில் இசைத்தான். ஒரு கிளாஸ் பீருடன்  அவர்கள் முடிக்கும்வரை காத்திருந்தான்.

 

          குழுவில் மிகவும் இளம் வயதாகத் தோன்றியவன், தன்னுடையைக் கிடாரை  வாசிப்பதை நிறுத்தியதுபோல பக்கத்தில் வைத்தான். காப்பி பாருக்கு வெளியில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி வந்தான். கேட்டுக்கொண்டிருந்தவர்கள்  இதொரு இலவச நிகழ்ச்சியல்ல என்பதை உணரவேண்டியக் கட்டாயம். அப்தூலயே இசைநிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதைப் புரிந்து கொண்டான். நாற்காலியிலிருந்து எழுந்தான்.  காசுகேட்டுவந்த இளைஞனைத் தவிர்க்க நினைத்தவன்போல முகத்தைத் திருப்பிக்கொண்டான். ‘What a wonderful world’  பாடலை முனுமுனுத்தவாறு அவ்விடத்தைவிட்டு அகன்றான்.

 

          கிராண்ட் ஆர்க்காட்வீதிக்கு வந்தவன் சிறிது நின்றான் அவனுக்கு முன்பாக மனிதர் கூட்டம். கிட்டத்தட்ட வீதியின் கணிசமானதொரு பகுதியியை அடைத்துக்கொண்டிருந்தார்கள். காலத்திற்குச் சம்பந்தமற்ற ஹிப்பித் தோற்றத்தில் இருந்தார்கள். தலைமயிர் பராமரிக்கப்படாமல் புதர்போல மண்டிக்கிடந்தது. மூக்கு, காது, உதடுகளென்று வளையங்கள் அணிந்திருந்தார்கள்.  இதுவரை அவன் காணாதது. சுதந்திரத்தை ஊக்கத்தொகையாகப்பெற்ற மகிழ்ச்சி.  அவர்களைக் கடந்து சென்ற காவற்துறை  மனிதர்கள், அம்மனிதர்களிடம் மரியாதையான பார்வையைச் சிந்தினார்கள்.  தவிர அவர்களின் புன்னகையில்  வெளிப்பட்டது இரக்கமா ?  ஏக்கமா என்ற் கேள்வியும் பிறந்தது.

 

          அப்தூலயே  அவர்களை நெருங்கினான்.  பெட்டை நாயொன்றின் வயிற்றில், குட்டிகளுக்குக்  கோபமூட்டுகின்ற வகையில் கிழவரொருவர்  தலைவைத்துப் படுத்திருந்தார், அருகில் இளைஞனொருவன் ஹார்மோனிகா போல சத்தமெழுப்பிக்கொண்டிருந்தான். இருவருக்கும்  இடையில்  அமர்ந்தான். ஒரே சமயத்தில் முரண்பாடான இரு அனுபவங்கள்.பொருண்மையில் இரு அனுபவங்களுக்குகிடையில் பேதங்களுமில்லை. : மகிழ்சி, விரக்தி இரணடும் சமவீதத்தில் இருந்தன.

 

          அந்தி பிறந்தது, குளிரையும் கொண்டுவந்திருந்தது. மகிழ்ச்சியைக் காட்டிலும் விரக்தி கூடுதல் வலிமைகொண்டதாக ப் பட்டது. சுதந்திரம் தற்போது ருசியாக இல்லை. தலையை மொட்டை அடித்திருந்த பெண் அளித்த ரொட்டியும், சாசேஜ்ஜும், விநோதமாக இருந்தன. எப்படி அவர்களை வந்தடைந்தானோ அதுபோலவே  அவர்களிடம் எவ்வித பேச்சுமின்றி புறப்பட்டுச் சென்றான். பெண் கெட்ட வார்த்தையை உபயோகிக்க, வயதான ஆசாமி, நல்லது நடக்கட்டுமென வாழ்த்தினான்.

 

          வீதி வீதியாக நடந்தான். உமருடன் சேர்ந்து நடந்த வீதிகள் அவை. தனியாக, சுற்றுலா பயணியாக , மெதுவாக, ஒரு திசையைக் குறிவைத்து, பின்னர் அத்திசையைத் தொலைத்து என்பது போன்ற அனுபவங்கள் திரிந்ததில் கிடைத்தன. தற்செயலாகவா, மனமிட்ட கட்டளையின் படியா, சுய நினைவின்றியா அல்லது விரும்பியா  ஆனால் அதை வெளிப்படையாகக் கூற விருப்பமின்றி ஒருவழியாக கடைசியில் தீவென அழைக்கப்டுகிற ‘L’ill’ நதிக்கரை அருகே வந்து நின்றான். அப்பகுதி அவனுக்குப் புதிதல்ல. வலது பக்கம் கதீட்ரல், இடதுபக்கம் சேன்-போல் தேவாலயம், எதிர்த் திசையில் ஒரு பெரிய கட்டிடம், இரவு நேர மின்சார ஒளியில் அதன் காவி நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தது அக்கட்டிடம் ஸ்ட்ராஸ்பூர் பூர்க் ‘CROUS’ க்குச் சொந்தமான பல்கலைக் கழக மாணவர்களின் உணவு விடுதிக் கட்டிடம் : ‘Gallia’. அப்தூலயே அங்கு நிறைய மாணவர்களை நண்பர்களாகக்  கொண்டிருந்தான். அவனுடைய சகோதரன் வேலைசெய்தபோது, நண்பர்களை காப்பி விடுதியில் சந்திப்பதுண்டு. அங்கு சென்றான். தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக ஒரு பெருங்கூட்டமிருந்தது. ஒரு காற்பந்து போட்டி நடந்தது அதிற்கவனம் செல்லவில்லை. நடுவர் விசிலை ஊதி இடைவேளையை அறிவித்தபோது இரண்டாவதாக ஒரு பீரை குடித்துமுடித்துவிட்டு, பணிப்பெண்ணை முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.  அவளிடமிருந்து இவன் கற்றது அதிகம், கைமாறாக முத்தம் தரலாம், தவறில்லை. முத்தமிட்டுவிட்டு, அவளிடம் திரும்பவும் கேட்டான்.

 

       உண்மைதானா, நன்றாகத் தெரியுமா ?

         

       உன்னிடம் எதற்காகப் பொய் சொல்லப் போகிறேன்? பதினைந்து நாளில் அவன் போகப்போகிறான். இதுவரை அவனுடைய வேலையைச் செய்ய எவரும் கிடைக்கவில்லை.

 

       பதினைந்து நாளிலா ! அது வரை நான் தாக்குப்பிடிக்க முடியும்.

 

          பிரச்சினைத் தீர்ந்தது.  தங்குவதற்கு அனுமதிக்கும், அரசாங்கத்தின் அத்தாட்சி தாள்கள் கைக்கு வந்தபிறகு  அதிட்டம்  வீரியத்துடன் இருக்கிறது. மினோத்தோர் காப்பி விடுதியில்  அப்தூலயே சொகோனுக்கு சர்வர் வேலை கிடைத்தது. உமர் செனெகெலுக்குத்  திரும்பிவிட்டான். அங்கிருந்துகொண்டு அவ்வப்போது கடிதமும் எழுதுகிறான். உள்ளூர் விவசாயிகளுடன் அவன் செய்கிற வேலைகள் பற்றியும் எழுதுகிறான். குடும்பத் தகவல்களும் உண்டு. தாத்தா நஃபிஸாட்டு பற்றியும் அவருடை புகழ்பெற்ற கண்ணாடி ஓவியங்கள் பற்றியும் கூட எழுதுகிறான். இந்தத் தாத்தா விடமிருந்துதான் அப்தூலயேவிற்கு, துபாம்பூல் நகர்  முதிய வர் பெரிய தாத்தா  கதைசொல்லிப்பற்றியத் தகவல் கடிதம் மூலமாகத் தெரியவந்தது.

 

          முயற்சி செய் !  என்றுய் டாக்கா நகரிலிருந்துகொண்டு எழுதுவது மிகம் சுலபம். ஒருமுறை புத்தான்டுப் பிறப்பிற்கு போஸ்   நகருக்கு கதைசொல்லி முதியவர் வந்திருந்தார், சுவாரஸ்யமான  மனிதராகவும் எல்லோரிடமும் குறிப்பாக இவனையொத்த பையன்களிடத்தில்  நன்றாகப் பழகினார்.

 

          நஃபிஸாட்டு  மிகத்தெளிவாக பலவிபரங்களையும் அப்தூலயேவிற்கு  எழுதியிருந்தார். அக்கடிதத்திலிருந்த பயணம்பற்றிய விவரம் வேடிக்கையாக இருந்தது.  சுவாரஸ்யாமாக இருந்ததென்றாலும், முட்டாள்தனமான யோசனையென நினைத்தான்.   ஒரு  கதைசொல்லியை,  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நண்பனுடைய ஸ்ட்ராஸ்பூர்  நகருக்கு,  ஒருவித ஆயிரத்தொரு  இரவுகள் நாடொன்றில் அந்நகரைக் கற்பனைசெய்து  தமது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்காக அவரை அனுப்புவது என்ன யோசனையோ ?  சுவாரஸ்யமானது‘, ‘நெகிழ்ச்சியானது  என்றாலும் முட்டாள் தனமானது‘. இம்மூன்று அடைமொழிகளையும்  தனது தாத்தா  நஃபிசாட்டுக்கு எழுதிய பதிலில் குறிப்பிட்ட அப்தூலயே கடைசி அடைமொழியை மட்டும் அடித்துவிட்டு, ‘இயலாதது என்று மாற்றினான்.

 

          அதுவும் தவிர, விடுதிகளிலெல்லாம்  வாடகைக்கு எடுத்து அவரைத் தங்கவைப்பது கடினம், இந்த யோசனைக்கு நீ எழுதியிருப்பதைப்போலவே  அதிகப்பணம் தேவைப்படும். எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ. தவிர அவருடைய உணவுச் செலவுகளும் இருக்கின்றன. ஒன்றிரண்டு நாட்கள் சமாளிக்க முடியும், அதற்கு மேல் சாத்தியமில்லை. நான் புலம்புகிறேன் என நினைக்கவேண்டாம். இரண்டுபேர் செலவினைச் சமாளிக்க என்னிடம் பணமில்லை என்றுதான் சொல்கிறேன். அடுத்ததாக அவர் முதியவர், இந்நிலையில் நீயோ அல்லது வேறு யார் துணையுடனோதான் வரமுடியும்.  அப்படிவந்தால்  கவனித்துக்கொள்ள எனக்கு நேரமுமில்லை. நம்முடைய ஊருக்கே அவர் வந்ததில்லை, அப்படியிருக்க தனியே அவர் ஸ்ட்ராஸ்பூர் வரை வருவாரா என்பதும் சந்தேகம்.  அதுமட்டுமல்ல, எந்நேரமும் என் கண்காணிப்பிலும் அவரை வைத்திருக்கவேண்டிய பிரச்சினையுமுள்ளது. நான் வேலை செய்கிறேன், எப்படி அவரருகில் இருப்பது ? என் பொறுப்பிலில்லாமல் அவரை அனுப்பி வைத்தால் நேரம் கிடைக்கிறபோது சென்று அவரைப் பார்ப்பேன்.  ஒரு ஞாயிற்றுக்கிழமை ஊரையும் சுற்றிக்காட்டுவேன். ஆனால் எல்லா நாட்களிலும் என்னால்  அவரைபார்த்துக்கொள்ள வேண்டுமென்றால் என்னால் முடியாது. »

 

          இக்கடிதத்திற்கு நஃபிசாட்டுவின் பதில் சுருக்கமாக இருந்தது. ஒரு சில வரிகளில் இருந்த அப்பதிலில் , ‘அதுவும் தவிரபோன்ற சொற்களையெல்லாம்  பயன்படுத்து வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் அச்சொல்லைத் தவறாகப் பயன்படுத்தாதே, என எழுதிவிட்டு,  சாத்தியமாகும்எனக்குறிப்பிட்டு ஒன்றுக்கு மூன்றாக  அடிக்கோடிட்டு  முயற்சி செய்என முடித்திருந்தார்.

 

          அப்தூலயே கடித்தத்தை  வீசி எறிந்தான். அவன் பதில் எழுதவில்லை,. அவன் வேலைசெய்யும் சகப்பணியாளர்களிடம், மாணவர்களிடம், மாணவிகளிடமென யார்யாரையெல்லாம் தெரிந்துவைத்திருந்தானோ அவர்களிடத்திலெல்லாம் இக்கதையைக் கூறினான். நாளடைவில் இக்கதை, சுவாரஸ்யம் குறைந்து கேலிக்குரியதாக  மாறி இருந்தது. வெகுசீக்கிரம் பல்கலைக் கழக மானவர் விடுதியில், இக்கதையை அறியாதவர் ஒருவருமில்லை என்றாயிற்று. அப்தூலயே எதிர்கொள்ளும் மாணவர்கள் , அவனை நலம்  விசாரிப்பதுபோல ” ஊரிலிருந்து அங்க்கிள் எப்போது வருகிறார் ? » எனக் கேட்க ஆரம்பித்தார்கள்.

 

          வந்ததென்னவோ புதிதாக ஒரு கடிதம். இம்முறை முயற்சி செய்என்ற வார்த்தைக்குக் கீழ் நான்குமுறை அடிக்கோடிட்டு இருந்தது. அவ்வார்த்தையை கண் முன்னால் அவை நிறுத்தின. அதன் கட்டளைக்குப் பணிந்து  சொந்தப் பிரச்சினையாகப் பார்க்கத் தொடங்கினான். ஏதாவதொரு தீர்வினைக் காணவேண்டிய நெருக்கடி உருவாயிற்று. காப்பிவிடுதியில் வைத்திருந்த தகவல் விளம்பரம் அவனை ஈர்த்தது. ‘l’afges’ எனும் பல்கலைக் கழக மாணவர் பேரவை வைத்திருந்த தட்டி  அது.  பிரான்சு நாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள லா பூர்கோஜ்ன்  பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் ஒருவர், கவிதை வாசிக்கப்போவதாக அதில் குறிப்பிடிருந்தது.  கடந்த சில மாதங்களாக  தள்ளாடும் வயதிலுள்ள தாத்தாவின்  மூத்த சகோதரரை பிரான்சு நாட்டிற்கு எப்படி அழைத்துவந்து தங்கவைப்பதென்ற விடயத்தில்  மிகவும்  குழம்பிப்போயிருந்த  அப்தூலயேவுக்கு தீர்வு  அத்தட்டிச் செய்தியில் இருக்கக்கூடுமென்று நினைத்தான். ‘CROUS’ பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் அனைவரையும் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யும், அமைப்பு. பேராசிரியர்கள் ஆய்வின் பொருட்டும், எழுத்தாளர்கள்  சொற்பொழிவுக்காகவும் வந்து தங்குவார்கள்.

 

       ஒரு ஆப்ரிக்கக் கதைசொல்லியும் ஏன் அதுபோல வரக்கூடாது ?

 

       என்ன சொல்கிறாய் ?

 

           பாரீஸ் சாலட்   என்ற ஒன்றைத் தயார் செய்துகொண்டே தனக்குத்தானே  சத்தமாக அவன் பேசிக்கொண்டிருந்தான்.

 

       ஆப்ரிக்கர் கதைசொல்லியை அழைத்துவருவதில் என்ன பிரச்சினை ? அதிலும் அனைவரினும் பார்க்க புகழ்பெற்றவர் என்கிறபோது.

 

       அப்படியா ?

 

       எனது  தாத்தாவின் சகோதரர்பற்றி வேண்டுமானால், உனக்கு விளக்கமாக சொல்கிறேன்.

 

       நிறைய தடவை நீசொல்ல நாங்கள் கேட்டாயிற்று.

 

          இவனிடம் காதுகொடுத்துக் கேட்ட சர்வர் பெண்ணிடம், தனது யோசனையைத் தெரிவித்தான். அன்று மாலையே ஒரு மாணவனைக் கலந்தான். அவனுடைய தந்தை ரைன் நதி புதிர்களென  ஒரு நூலை எழுதியிருந்தார். ஏராளமான சொற்பொழிவுகள், மாநாடுகள் என அடிக்கடி கலந்துகொண்டு பல்கலைக்கழக விடுதியில் தங்கியதுண்டு. 2000 ஆம் ஆண்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரவாசியான டொமினிக் நாட்டைச் சேர்ந்த ழான் டொலெர்(Jean Tauler)  என்பவரின் ஏழாவது நூற்றான்டு விழாவிலும் கலந்துகொண்டார்.

 

       என் தந்தைக்கு  இங்கு தங்கியபோது எந்தக் குறையுமில்லை, அவருக்குத் திருப்தி.

 

       ஓரு கதைசொல்லியை, அதுவுமொரு ஆப்ரிக்க கதைசொல்லியை உண்மையில் இங்கே அனுமதிப்பார்கள் என்று நினைக்கிறாயா ?

 

        ஏன் கூடாது ? எதற்கும் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்கள் யாரையேனும் போய்ப்பார்.

 

       நானும் அதைப்பற்றி யோசித்தேன்.

 

          மறுநாள் அப்தூலயே மாணவர் பேரவையைச் சேர்ந்த இருவரைச் சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தான். அவர்கள் இருவரும் பல்கலைகழகத்தில் புதிதாய் எதையேனும் செய்வதில் ஆர்வம்கொண்டவர்கள்.  இவன் யோசனையைக் கேட்டதும் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. விஷயத்தை அவர்கள் மதாம் சொடெவ்விடம் கொண்டு போனார்கள். பல்கலை கழகத்தின் கலைப்பண்பாட்டுத்துறை நிர்வாகியான அபெண்மணி  யோசனையையைக்  CROUS  இயக்குனரிடம் கொண்டுசென்றார்.

 

          இயக்குனரைச் சந்திக்கவேண்டியிருந்தது. அப்தூலயே இயக்குனரின் அலுவலகம் வரை வந்தவன் உள்ளே செல்ல தயங்கினான். என்ன சொல்லலாம் ? எப்படி ? என்பது போன்ற கேள்விகள் அவனுக்குள் எழுந்தன. இந்தச் சின்னக் காரியத்திற்காக இயக்குனர் அலுவலகக் கதவையெல்லாம் தட்ட வேண்டியிருக்குமென அவன் யோசித்ததில்லை. அவனுக்கு தைரியம் காணாது. தாத்தாவின் கடிதத்திலிருந்த ” முயற்சி செய்” என்ற வார்த்தைக் காதில் ஒலித்தது.

 

          இயக்குனரின் அலுவகத்திற்குள் நுழைந்தவன்  முதல் அடியை எடுத்துவைக்க  சில நொடிகள் எடுத்துக்கொண்டான். சன்னல் அருகே ஒரு ஒட்டகச் சிவிங்கியின் படம். ல்ல சகுனமாகப்பட்டது.  ” ஆப்ரிக்காவில் கவனம் செலுத்தும் ஸ்ட்ராஸ்பூர்” என்கிற வார்த்தைகள்  மனதில் ஓடின, எனினும் அதைச் சொல்லத் தயங்கினான்.

 

       உட்கார் ! ஏதோ கதை சொல்லி ஒருவரை அழைத்து வரும் திட்டம் உன்னிடம் இருக்கிறதென்று கேள்வி.

 

       எப்பச் சொல்வது…ஆமாம்  ஒரு கதைசொல்லி … நான் சொல்ல வந்தது …

 

       சரி அதற்குத்தானே வந்திருக்கிறாய், சொல்லேன்.

 

  அவனுடையத் தயக்கத்தை இயக்குனரின் கனிவான வார்த்தைகள் போக்கின. வசதியாக நாற்காலியில் உட்கார்ந்தான். ஆப்ரிக்க நாட்டைச்சேர்ந்த மிகப்பெரியக் கதை சொல்லியைப் பற்றித்தான் அவன் பேச வந்தது. அவரின் புகழ் செனெகெல் நாடு மட்டுமின்றி ஆப்ரிக்கக் கண்டம் முழுதும் தெரிந்திருக்கிறது. எனக் கூறியபோது, சற்று மிகைபடக் கூறியதாக உணர்ந்தானே தவிர அதை நிறுத்தவில்லை, அதொருவகையில்  கேள்விகளைத் தள்ளிப்போட உதவியதும் காரணம் .  அவன் கூறியதை வேடிக்கையாகக் கேட்டுக்கொண்டிருந்த இயக்குனர் கோப்பு ஒன்றை எடுத்து வைத்தார். தமக்குள்ள சங்கடத்தை தெரிவிக்க வும் அவர் தயங்கவில்லை. 

 

        கதை சொல்லி உனது உறவினரில்லையா ? அதுவும் தவிர மிகவும் வயதான மனிதர். சரிதானே ?

 

        ஆனால்  நெறிதவறாதவர்.

 

        மிஸியே சொகோன் என்பவரை நீ பல்கலைக்கழக விடுதியில் தங்கவைக்க நினைக்கிறாய் ?

 

        அவர் பெயர் உண்மையில் ஸ்லாபூம்.

        ஸ்லாபூல்கூம் ? கதைசொல்லியின் பெயரா அது ?

        ஆமாம் அவருடைய பெயர்தான் ஸ்லாபூகூம்

        அவர் இங்கே தங்கவைக்கவேண்டுமா ? முடியாததில்லை. எனினும் சில விதிமுறைகள் இருக்கின்றன. நீ முதலில் ‘DRAC’  ஐ சென்று பார்க்கவேண்டும். அதற்கு என்ன அர்த்தமென்று தெரியுமா ?

 

        அதாவது……

        கலை பண்பாட்டுத்துறை அமைச்சகத்தில் பிரதேசக் கிளை அலுவலகம். அவர்களைச் சென்று பார்த்துவா. எனக்கு முதியவரை இங்கே தங்க வைக்க எந்தவிதப் பிரச்சினையுமில்லை.

 

        மிக்க நன்றி மிஸியே, அழகா இருக்கிறது !

 

        என்ன சொல்கிறாய் ? எனக்குப் புரியலை.

        உங்க ஒட்டகச்சிவிங்கி, அழகாக இருக்கிறதென்றேன். சன்னல் வழியாக வெளியே பார்ப்பதுபோல இருக்கிறது.

        ஆமாம் களைப்பின்றி அதைத்தான் செய்கிறது. அது அழகா இருப்பதும் உண்மைதான்.

     இத்தனை அழகா வேறொன்றைப் பார்த்ததில்லையென அப்தூலயே தெரிவித்தான். அவன் உயரத்திற்கு இருந்தது, துணிகொண்டு செய்திருந்தார்கள். கடைசியாக ஒருமுறை பார்த்தவன், நாற்காலியிலிருந்து எழுந்துகொண்டான்.

 

     இயக்குனர் அலுவலகத்திலிருந்து வெளியேறியவன், கூடம் படிகள் என வேகமாகக் கடந்தான். இதை உடனே அவனுடைய தாத்தாவிற்கு எழுதவேண்டுமென்ற ஆர்வம் இருந்தது.

 

இயக்குனரைச் சென்று பார்த்தேன். அவருடைய அலுவலகத்தில் ஒரு ஒட்டகச்சிவிங்கி இருக்கிறது . உண்மையானதல்ல. ஆனால் ஆப்ரிக்காவைப் பற்றி அவரிடம் பேச  எனக்குப்  பெரிதும் உதவியது. பின்னர் அவரிடம் என்னுடைய பெரியத் தாத்தாவை அழைக்கக்போகிறேன், அவருக்கு நமது பல்கலைக்கழக விடுதியில் ஓர் அறையை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றேன்.  சில விதிமுறைகள் இருக்கிறதென்றார். மாநில கலைப்பண்பாட்டுத்துறை அலுவலகத்தைப் பற்றி என்னிடம் தெரிவித்தார். எனக்குத் தற்ஓதைக்கு  அதுபற்றி எதுவும் தெரியாது.  உங்கள் ச்கோதரர் மிகப்பெரியக் கதைசொல்லியென்றும், அவர் ஆப்ரிக்காவெங்கும் அடைந்த புகழை ஸ்ட்ராஸ்பூர்கிலும் அடைவார் என்றேன். கதைசொல்லி தாத்தாவை உடனே அழைக்கலாம் என்ற பதில் அவரிடமில்லை. அதற்கென்று சில விதிமுறைகள் இருகின்றன. ஆனால் அவரிடம்  அச்சமின்றி பேசமுடிந்தது எனது கோரிக்கையை மறுக்கக்கூடாதென்று சொல்லியிருக்கிறேன். காதுகொடுத்து அனைத்தையும் கேட்டவர் இறுதியில் சம்மதம் தெரித்திருக்கிறார்.  நீங்கள் சொன்னதுபோலவே எனது முயற்சியில் ஜெயித்தியிருக்கிறேன். அவ்வார்த்தைக்கு  ஐந்து முறை அடிக்கோடிட்டான். அவர் வருகைக்காக நான் காத்திருக்கிறேன்,  என்று முடித்தான்.

 

(தொடரும்[

 

கதை சொல்லி (சென்ற வாரத் தொடர்ச்சி) -2 பியெர் ரொபெர் லெக்ளெர்க்

 

நூரம்பரக் இலண்டன் பயணத்தின்போது செகோனுக்கும் மொரான்ழ்க்குமிடையில் பிறந்த நட்பு நெருக்கடியன நேரத்திலும், சந்தோஷமான தருணங்களிலும் உருவாகி நீடிக்கக்கூடிய நட்பு வகையைச் சேர்ந்தது. அவர்கள் பிரிவுக்குப் பின்னர் முடிவு என்ன ஆயிற்றென்று ஒருவருக்கும் தெரியாது. அவற்றின் மறுபிறப்பு வாழ்க்கையின் எதிர்பாராத நிகழ்ழ்வுகளின் கைவசம் உள்ளது. அவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.

மொரான்ழ் நினைவில் மூழ்கி, அடிக்கடி ஸ்லாபூகூம் கனவில் ஆழ்ந்துவிடுவதையும், கண்கள் அடிவானத்தில் குத்திட்டு நிற்பதையும் பலரும் அறிவார்கள். என்ன ஆனாய் லூசியன் ? உயிருடன் இருக்கிறாயா ? எங்கே நீ இறந்தாய் ? சாலைகள் நகருக்குத் திரும்பப் போனாயா ? என்றெல்லாம் முனுமுனுப்பதும் காதில் விழும். அல்லாவிடம் அவரது அடிமையானத் தன்னை அந்த நகரைத் திரும்பக் காண க் கருணைபுரியவேண்டும் என க் கேட்பார். ஆனால் அதில் எந்தப் பயனுமில்லை. கடவுள்களிடம் எல்லாவற்றையும் கேட்டுப்பெற முடியாது. அவர்களை என்ன பெயரிட்டு அழைத்தாலும் என்ன நிறமென்றாலும் சரி, இயலாததை அவர்கள் நிறைவேற்ற மாட்டார்களென்பது வயதினால் பெற்ற ஞானம் தெரிவிக்கும் உண்மை. இருந்தாலும், கடவுளிடம் இறைஞ்சுவது, குறைந்தப்பட்சம் அந்த ஊர்மீதான நம்பிக்கையைக் குலைக்காமல் வைத்திருக்க உதவலாம். அல்லாவாக இருந்தாலும் அவரால் முடிந்தது, எண்பபது வயது முதியவருக்கு அந்த ஊரைப்பற்றிய அறிவைத் தருவது, அதற்கு மேல் முதிவருக்கும் கடவுளிடம் எதிர்பார்ப்புகளில்லை.

முதிய தம்பதிகளின் பரணில், இரவுவேளைகளில் காடுகளில் தங்க நேரிட்ட இடங்களில், கலேயிலிருந்து ஃபோக்டோனுக்குப் சிறிய படகொன்றில் பயணித்தவேளையில், தேம்ஸ் நதிக்கரையில் என எல்லா இடங்களிலும் தான் காதலில் வீழ்ந்த அந்த ஊரைப்பற்றி மொரான்ழ் பேசாத நேரமில்லை.

    • அது என்னுடையது, புரியுதா, என்னிடமிருந்து அவர்கள் பறித்துக்கொண்டார்கள்.
    • தைரியமாக இரு, திரும்ப அதைக் காணும் நாள் வரும்.
    • அதற்காகத்தான் நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன், உன்னையும் ஒரு நாள் அங்கு அழைத்துப்போவேன், கண்டிப்பாக நடக்கும், இது சத்தியம்.

சத்தியம் நமக்குக் கட்டுப்பட்டதா என்ன. வழ்க்கை விருப்பங்களைக் காட்டிலும் பலம் வாய்ந்தது. புகழ்பெற்ற எண்ணிக்கையற்ற நகரங்களைக் காண்பதற்கு யுத்தம் ராணுவவீரர் சொகோனுக்கு சந்தர்ப்பத்தை அளித்தது, அதுபோலவே பெயர்களையும் எண்ணிக்கையையும் ஞாபகப்படுத்த முடியாத அளவிற்கு கிராமங்களையும் அதே யுத்தம் காண வகை செய்தது. அவரை, மொரான்ழ் ஊர் வழியாகவும் அவருடனோ அல்லது அவரின்றியோ அழைத்துச் செல்ல நேரிட்டிருக்கலாம். ஆனால் ராணுவத் தலைமை வேறு வகையாக முடிவெடுத்தது. கதைசொல்லியின் வாழ்க்கையில் அதிசயம்போல அது நிகழ்ந்தது. அவருக்கு அது கடவுளின் சமிக்கை.

அந்த அதிசயம், எதிர்பாராத அவருடைய தம்பியின் வருகையால் ஏற்பட்டது. அவருடைய கால் கள் ஒத்துழைக்க மறுத்த நாளிலிருந்து இளைய சகோதரரை அவர் பார்த்ததில்லை. நஃபிஸாட்டு, போஸ் என்ற இடத்தில் வசிக்கிறார். டக்கார் நகருக்கு போவதற்கு முன்பாக இடையில் டியூர்பெல் வரை அவர் செல்லவேண்டியிருந்தது, வழியில் துபாம்பூல், எனவே சேடாரை பார்த்து இரண்டொரு வார்த்தைப் பேசிவிட்டுப்போகலாமென வந்திருக்கிறார்.

    • இப்போதெல்லாம் நீ தம்காரிட்டிற்கு வருவதில்லையென குடும்பத்தில் அனைவருக்கும் வருத்தம்.
    • பிரச்சினை, எனது கால்கள்.
    • கால்கள் பிரச்சினையெனில், பேருந்து பிடித்து வரலாமே!
    • எனக்கு நடந்து பழகிவிட்டது, என்றைக்கு கால்கள் வலுவிழந்துவிட்டன எனத் தெரிந்ததோ அன்றைக்கே இருக்கின்ற இடத்தைவிட்டு எங்கும் நான் நகரக்கூடாதென்பதற்கான அறிகுறி.
    • நீயும் உனது அறிகுறியும் !
    • அல்லாவின் கட்டளை !
    • இருக்கலாம். ஆனால் அவர் சொல்ல மறந்தாலும், நீயாக ஏதாவது கற்பனை செய்துகொள்வது வழக்கம்தானே, உனக்கு அதுதானே தொழில்.
    • எங்கே இந்தப்பக்கம் ?
    • ‘Dak’art 2000 ல் கலந்துகொள்ள வந்தேன், கண்ணாடி ஒவியர்கள் பலர் கூடுகிறார்கள்.
    • Dak’art 2000?
    • கண்காட்சி. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஆப்ரிக்கக் கண்டத்தில் நடக்கும் முக்கியமான ஓவியக் கண்காட்சி. த்யூர்பெல்லில் என்னுடைய மாணவன் ஒருவனை அழைத்துச்செல்ல வந்தேன், வழியில் உன்னைப் பார்க்கலாமென்று தோன்றியது.
    • நல்ல காரியம் செய்தாய். எனக்கும் வயதாகிறது நஃபிஸாட்டு.
    • அப்படிசொல்ல இன்னும் காலம் இருக்கிறது.
    • இல்லை அநேகமாக இதுதான் கடைசியாக இருக்கும். வேண்டாம், பதிலெதுவும் சொல்லவேண்டாம். இங்கே வர நினைத்து வந்தது, மிகவும் நல்ல விஷயம். நானும் உன்னைப்போல ஒருவன் வருகைக்காகத்தான் காத்திருந்தேன். என்னிடமொரு ரகசியம் இருக்கிறது. என்னுடைய மரணத்தோடு அந்த ரசியத்தையும் கொண்டுபோகக்கூடாதில்லையா ? தோட்டத்திற்கு ரகசியங்களோடு வருகிறவர்கள் பூக்களற்ற பாலையில் அவற்றை வைக்கிறார்கள்.
    • உனது ரகசியம் தீயசக்தியான பாம்புகள் என்பது உறுதி. உனது வழக்கமானக் கட்டுக்கதைகளில் ஒன்றா.
    • கிண்டல் வேண்டாம்! என்னிடத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. ‘சாலைகள் நகரம் பற்றியது அந்த ரகசியம்.
    • நீ சொல்வதெதுவும் எனக்குப் புரியவைல்லை.
    • நாள் ஆக ஆக , மறதியும் அதிகரித்துவருகிறது. துண்டு துண்டாக ஊரின் மொத்தக் காட்சிகளும் ஒன்றன்பின்னொன்றாகஅதன் நிறத்தை இழந்துவருகின்றன. ஒரு நாள் அந்த ஊரையே இழக்க நேரலாம். என்னிடத்தில் எஞ்சியுள்ளவற்றில் கொஞ்சமேனும் உனது நினைவில் பதிவாக வேண்டியவை. பத்திரமாக நீ கட்டிக்காக்கவேண்டுமென்பது எனது ஆசை. அதைத் தொலைக்க எனக்கு விருப்பமில்லை. உனது தலையில் இருக்கின்ற அந்த மிச்சத்தை, அவ்வப்போது நீ எவரிடமாவது தெரிவிக்கவேண்டும்.
    • உன்னைபோல நானொரு கதைசொல்லி இல்லை. அந்த நகரம் உனக்குத்தான் சொந்தம். உன்னுடைய கற்பனைதானே ?
    • இல்லை, கற்பனையில்லை. ஆமாம் ! அப்படியும் சொல்லலாம். ஆனால் அது நிறமிழந்துவருகிறது., இரப்பரால் கலைபட்ட படத்தைப்போல. எனக்கு மறதி அதிகம். நிறைய விஷயங்களை மறந்துவருகிறேன். சாலைகள் நகரம் எப்படி இருக்குமென்பது சுத்தமாக எனக்கு மறந்துவிட்டது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. எவரிடமிருந்தேனும் எனக்குத் தெரியவந்ததா? இல்லை நானாக இட்டுக்கட்டியதா? கதைசொல்லியின் வாழ்க்கையைக்காட்டிலும் , இந்தவாழ்க்கை விநோதமானது. உதாரணத்திற்கு எப்படிசொல்வது, ஒரு வீட்டை எடுத்துக்கொள்வோம். மிகவும் எளிமையான வீடு, , ஒரு நாள் அதைப்பற்றி விவரிக்கிறோம். மறுநாள் அது அரண்மணையாக மாறிவிடுகிறது. காலங்கள் கடக்கின்றன, ஆரம்பத்தில் அது வீடாகத்தான் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. இதுதான் லூசியான் நகரத்தின் விஷயத்தில் நடந்தது.
    • லூசியான் ?
    • லூசியான் மொரான்ழ. அவன் என்னுடைய கைகளில் இறக்கவில்லை. என்ன செய்ய சொல்ற ? சினேகிதன் ஒருவன் நமது கைகளில் மடிவது அத்தனைச் சந்தோஷம் அளிக்கக் கூடியதா ? இக்கட்டத்தில் கேட்பவர்கள் உருகிப்போய்விடுவார்கள். அவனுக்கு எந்நேரமும் தனது ஊரப்பற்றிய பேச்சுதான். யுத்தம் தொடங்கியதும் அதைப்பற்றி எழுதவேண்டுமென நினைத்தான். அந்த நூலுக்குத் பெயர்கூட வைத்து எனக்குச் சொல்லவும் செய்தான். எல்லாவற்றையும் போலவே அதுவும் எனக்கு மறந்து விட்டது. தற்போது அவைகளெல்லாம் ஒன்றோடொன்று கலந்துள்ளன. முன்புபோல லூசியனுடைய ஊரைப்பற்றி எதையும் கூற முடிவதில்லை .
    • இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது, முடிந்தமட்டும், அதைச்சொல்வது.
    • நினைவிலிருந்து கூற முடிகிற சிற்சிலவார்த்தைகளுக்கு உண்டான பொருள் ஞாபகத்திலில்லை. அச்சொற்கள் தரையில் கொட்டிய கற்களைப்போல கிடக்கின்றன, அவை வீடுகட்ட ஒருபோதும் உதவப்போவதில்லை….ஹூல்ட்ஸ்(Hultz)! என்ன அர்த்தம்? ஹூல்ட்ஸும் அம்பும் என்றால் என்ன? அது பற்றி தெரிந்துவைத்திருக்கிறேன் . எனக்கு அதுபற்றி முன்பே தெரியுமென்பது, உறுதி. ஹூல்ட்ஸ், நான் இட்டுக்கட்டிக் கூறியதல்ல., எனக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது, ஆனால் தற்போது அதுபற்றிய காரணம் வயதினால் மறந்துபோய்விட்டது.
    • ஒருவேளை வில் வீரனாக இருக்குமோ?
    • இருக்கலாம். புகழ்பெற்ற வில்வீரனாக இருந்து, அவனைப்பற்றி மொரான்ழ் என்னிடம் கூறியிருக்கலாம்.. ஆனால் அம்புஎன்ற வார்த்தை என்னைக் குழப்புகிறது. அதைத்தான் தேடுகிறேன். என்னுடைய கதையுடன் இணைத்து பொருத்தமாக கூறும் முயற்சியில் தற்போது தோல்வி. லூசியன் கூறிய வார்த்தைகளை ஞாபகப்படுத்த முடிகிறது. அவற்றினால் பயனேதுமில்லை என்கிறபோதும் தெரிவிக்கிறேன். எவ்வித பிரயத்தனமுமின்றி வெகு எளிதாக அவற்றை நினைவுபடுத்தமுடிகிறது. எப்படியென்று கூறத் தெரியவில்லை. அதாவது என்ன மொழியென்று தெரியாமல், ஒரு மொழியில் உரையாடுவதைப்போன்ற உணர்வு.
    • கேட்பவர்கள் மகிழ்கிறார்கள் இல்லையா.
    • ஸெல்என்றொரு தாயைப் பற்றி அடிக்கடிக் குறிப்பிடுவான். உதராணத்திற்கு இதையே கூட எடுத்துக்கொள்ளலாம் . இதற்கு என்ன பொருள்? இது போலவே அவன்: « ஆறொன்றிர்க்கு தீவு என்று பெயர் எனக்கூறிக்கொண்டிருப்பான். அதற்கு என்ன அர்த்தம்? ஆறு ஒரு தீவாக இருக்க முடியாது. எதற்காக சிரிக்கிறாய்? நான் இட்டுக்கட்டியதில்லை.. அவந்தான் தீவு என்று குறிப்பிட்டான். என்னால் உறுதியாகக் கூறமுடியும். அதை நான் மறக்கவில்லை. ஆனால் ஆறொன்றை நதியென்று எப்படிச் சொல்வார்கள் . ஏன் சிரிக்கிறாய்? அடுத்துதாக: «’ பெத்தீத் பிரான்சுபக்கம் நடத்துவிட்டு வரலாமா? » என்று கேட்பான். ‘பெத்தீத் பிரான்சுஎன்பதென்ன? ஏன் சிரிக்கிறாய்? அவன் : « அது என்னுடைய ரூழே தெ லீல் (Rouget de Lisle) நகரத்தில் இருக்கிறது » என்பான்.
    • லா மர்செய்யேஸ்‘ (La Marseillaise)பாடுவானா.
    • ஆமாம்! உனக்கு எப்படித் தெரியும்?
    • அதுதானே உன்னுடைய ரகசியம் ? உன்னுடைய மர்மமான நகரம் அதுதான் இல்லையா ? உண்மையில் இந்த உலகை ஏமாற்ற முடியுமென்று நினைக்கிறாயா ? இந்த மர்மத்தைக் கட்டிக் காக்க நீ ஆயிரம் தந்திரங்கள் கண்டுபிடிக்கலாம், தவிர அதில் நியாயமும் இருக்கிறது . மர்மத்தைக் கையாளத் தெரியாத கதைசொல்லி வந்த வேகத்தில் காணாமற் போய்விடுவார். ஆனால் உன்னுடைய கதை தெளிவாக இருக்கிறதே ! கேட்பவர்கள் இதையெல்லாம் ஊகிக்க மாட்டார்களென்றா நினைக்கிறாய் ? சரிதான் ! அனைவருமே ஊகிக்க மாட்டார்கள் என்பதை நம்ப நான் தயாரில்லை, வேண்டுமானால் பெரும்பாலோர் என்று வைத்துக்கொள்ளலாம்.. நீ தெரிவிக்கிற ஸெல்என்கிற இந்தத் தாய் யார், பிறகு ஹூல்ட்ஸ் மற்றும் அவருடைய அம்புஎன்றால் என்ன என்பது போன்றவற்றைத் தெரிந்தவர் ஒருவர் கூட இல்லை என்று வேண்டுமானால் உறுதியாகக் கூறலாம்., எனக்குக்கூட அவைகுறித்து எதுவும் தெரியாதென்பதும் உண்மை. ஆனால் நீ குறிப்பிடும் நகரம் கேட்பவர் அனைவருக்கும் புதிரானது அல்லது மர்மமானதென்றல் யார் நம்புவது. உன் முதுகின் பின்னால், “மர்ம நகரத்தின் விஷயத்தில், நம்மை முட்டாளாகிவிட்டதாக நினைக்கிறான் மனுஷன் » என நாகரீகமாக கூறி நகைப்பார்கள் என்பது நிச்சயம்.
    • அப்படி யாரும் இதுவரைச் சொன்னதாகத் தெரியவில்லை.
    • நம்புகிறேன் ! காரணம் உன்னை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதற்காக. தவிர அப்படி க்கூறி அவர்களுக்குக் கிடைக்கும் சந்தோஷத்தைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் நினைக்கிறார்கள். கதை சொல்லிகள், எழுதுகிறவர்களும் ஒன்று என்பது உனக்குத் தெரியுமா ? கேட்பதும் வாசிப்பதும் ஏதோ முதன் முதலாக நடப்பதுபோன்ற உணர்வுடன் நிகழ்கிறது. ஒரு நூலில் தவறாமல் அன்பு, மரணம், பொறாமை, நல்லவை, கெட்டவை …..நகரம் என அனைத்தையும் சந்திக்கிறோம். கதைசொல்லலிலும் தீயவற்றைக் களைய தேவதைகள் வருவார்கள், நல்ல பூதங்கள் மேகத்தின் மீது நடக்கலாம்., மலைகளை இடம்பெயர்த்துவைக்கலாம்., கெடுமதிகொண்ட ராஜாக்களை, அழகான இளம் வீரன் சண்டையிட்டுக்கொன்று , அவர்களுடைய அழகான இளவரசியை மணக்கலாம்.. மர்மமான நகரம் வேறேன்ன !
    • ஆக என்னால் எந்தப்பயனுமில்லை.
    • இல்லை என்று சொல்ல முடியுமா ? கதை கேட்கிறவர்களுக்கு நீ சந்தோஷத்தை தருகிறாயே. அவர்கள் உன்னை நம்புவதில்லை , ஆனால் எப்படிச் சொல்லவேண்டுமோ அப்படிச் சொல்கிறாய், அவர்களை சிரிக்கவும் அழவும் உன்னால் செய்யமுடியும் என்றால், வீட்டை அரண்மணை ஆக்க முடியுமெனில் , பருத்திப் பறிக்கும் பெண்ணைத் தேவதை ஆக்க இயலுமென்றால், அவர்களுக்கு மகிழ்ச்சிதானே. எனவே திரும்ப உன்னிடம் கதைகேட்க வருகிறார்கள்.உன்னுடைய ரகசியமென்பது உனது சினேகிதனின் ஊரல்ல, உன்னுடையது. அதை நீ ஒருவரிடமும் தாரைவார்க்க முடியாது. ஆனால் உன்னால் கொடுக்கக் கூடியதென்று ஒன்றுண்டு, அது வேறொரு ரகசியம்.
    • அப்படியொரு வேறொரு ரகசியம் எதுவும் என்னிடத்திலில்லை.
    • நீ என்னிடம் அதுபற்றி பேசியதுண்டு என்று கூறினால் ? அதாவது உன்னுடைய் பொய்யான பெயர் பற்றியது அது.
    • ஐம்பது ஆண்டுகளின் முடிவில் அதற்கு உண்மையிலேயே உரிமையுடையவனாக மாறியுள்ளேன்.
    • ஸ்லாபூகூம் தானே! நமது குடும்பத்தில் அது குறித்து பேசியதுண்டு. இப்படி சொல்கிறேனே வருத்தப்படவேண்டாம். எங்களுக்கெல்லாம், உண்மையில் இதெல்லாம் முட்டாளதனமாகப் பட்டது. நகைப்பிற்குரிய இப்ப்டியொரு பெயரை அப்படி எங்குதான் கண்டுபிடித்தாய் ?
  • முதியவர் சிரித்தார். கெட்டிக்கார கதைசொல்லி, கேட்பவரின் ஆர்வத்தை மேலும் கூட்டுவ்தற்கு விரும்பினார். பிறரைக் காதுகொடுத்து கேட்கச்செய்யும் காரியம் அத்துணை எளிமையானதல்ல என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய கலையின் வெற்றிக்கான காரணமும் அதுதான். பெரும்பாலானவற்றை மறந்திருந்த போதிலும் ஸ்லாபூகூம் பெயரின் நதிமூலத்தை மறந்தவரில்லை. அதனைத் உறுதிபடுத்திக்கொள்ள , அழகானக் காட்சி சித்திரங்கள், கவனத்தை தக்கவைத்துக்கொள்ள உதவிய சூத்திரங்கள் என்று தேடுகிறார். தம்முடைய சகோதரனின் கேள்வியினால் முடிவுறாத கதையொன்றிர்க்காக பயணிப்பதைபோல உணர்கிறார். ஆனால் அதைத் தொடரவிருப்பமில்லை. அந்த ஞானஸ்நானத்திற்கு மொரான்ழிடம் பெரிதும் கடன்பட்டுள்ளார். அதிகம் மிகைப்படுத்தாமல் சொல்லத் தொடங்குகிறார்.

ஸ்லாபூகூம் ! முதியவரின் அல்ஸாஸ் சினேகிதன் தன்னுடைய நகரம் குறித்து அனைத்தையும் பிறர் தெரிந்துக்கொண்டிருக்கிறார்களென்றுகவலைப் பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் : «  ஹூனர்(Huns) களின் படையெடுப்பிறகு அவர்கள் வேளியேறிய பின்னர் அந்த ஊரை ஸ்ட்ராட்பூர்கம்‘ (Strateburgum) என்று அழைக்கத் தொடங்கினார்கள். » எனக்கூறினான். அன்றிலிருந்தே எங்கள் இருவரிடை ஸ்லாபூகூம்வேடிக்கைச் சொல்லாக உருமாறியது. சேடார் ஸ்ட்ராட்பூர்கம்ஊரின் பெயரை உச்சரிக்க முயன்றார். பிரெஞ்சு மொழியில் ஊரின் பெயரிலுள்ள ‘r’ என்ற எழுத்தில் தடுமாறினார். எழுத்தைக் கூட்டிச் சரியாக உச்சரிக்க முயன்றபோது திக்கினார். சினேகிதனின் காதில் ஸ்லாபூகூம்என்று விழுந்திருக்கிறது. அவன் வாய்விட்டுச் சிரித்தான். முடிவில் சரியான மரமண்டை ஸ்லாபூகூம்என்று கூற இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். இது நடந்தது அல்ஸாஸ் கிராமத்தில் வயதானத் தம்பதியினர் இல்லப் பரணில். மொரான்ழ் செகோன்என்று அழைக்காமல் அன்றிலிருந்து ஸ்லாபூகூம்என்று கூப்பிட ஆரம்பித்தான்.

    • வேறு பெயரில் அவன் அழைப்பதில்லை. அவன் ஸ்லாபூகூம் என்று அழைக்கிறபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் நாங்கள் சிரித்தோம். அச்சிரிப்பு நெருக்கடியான தருணங்களிலும் தொடர்ந்தது. அவ்வாறான நெருக்கடியானத் தருணங்கள் கலே நகரம் வரை ஏற்பட்டன. ஸ்லாபூகூம் என்ற பெயர் எங்கள் இருவருக்கும் ஒருவிதத் துணிச்சலைத் தந்தது. அவன் கடைசியாக அப்பெயரை எப்போது உச்சரித்தான் என நினைவுகூர முடியாதது எனக்கு வருத்தமளிக்கிறது.
    • அதைப் பெரிதுபடுத்தாதே. சில விஷயங்கள் அப்படித்தான். எதற்காக என்று விளங்கிக்கொள்ளாமலேயே , முக்கியமற்றவை, முக்கியமனவையாக உருமாறுகின்றன.
    • உண்மைதான் ! லண்டனில் நாங்கள் பிரிந்தபோது, விமானி ! ஆம் மொரான்ழிற்கு விமானியாக வரவேண்டுமென்ற எண்ணமிருந்தது. அதுதான் காரணமாக இருக்கவேண்டும் , வேறு காரனங்களுக்கு வாய்ப்பில்லை. அவன் என்னிடம் «ஹாய், ஸ்லாபூகூம்ஆமாம் அப்படி அழைத்ததாகத்தான் நினைவு. பிறகு நாங்கள் வழக்கம்போலச் சிரித்தோம். இம்முறை கடைசியாக. ஸ்லாபூகூம் ! பிரச்சினை உனக்கு வேடிக்கையாக இருக்கிறதில்லையா ?
    • இனி இருக்காது.

செகோன் கதைசொல்லியாக இருப்பதென்று முடிவெடுத்தபோது ஒருவரும் கேட்டிராதப்பெயரைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இப்பெயரைத் தேர்வு செய்தார். அவருடைய மாமனாரும், «  நல்ல பெயர், உன் சினேகிதன் நினைவாக இப்பெயர் நல்ல யோசனைஎனக்கூற, அன்றிலிருந்து ஸ்லாபூகூம். மொரான்ழ், நினைவாக மட்டுமல்ல, இருவரும் சந்தித்த நெருக்கடிகள், பட்ட துயரங்கள், அச்சங்கள், சிரித்த சிரிப்புகள் என்று அனைத்தின் நினைவாகவும். அவரோடு ஒட்டிக்கொண்டது.

    • சாலைகள் நகரம் எங்கிருக்கிறதென்று தெரியும். அங்கு செல்லவேண்டுமென்று அடிக்கடி எண்ணம் வரும். அதொரு கனவு ! செல்ல நேர்ந்தால், சினேகிதனிடம் பேசமுடியும், அவனும் பதில் கூறுவான். ஒருவேளை உலக முடிவில் உரையாடுவதற்கென்றே கூட எங்களிடையே விஷயங்கள் இருக்கலாம். ஆம் சாலைகள் நகரம் எங்கே இருக்கிறதென்று தெரியும். அதன் உண்மைப்பெயர் தெரியாதென்றுதான் கூறிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் நான் கூறுவது போல அந்த ஊரில்லை. அதுவும் தவிர எனது நண்பன் என்னை எப்படி அந்த ஊரைப் பார்க்கவைத்தானோ அதுபோலவும் இல்லை. அங்கே செல்வதற்காக பிரார்த்த்னைகூட செய்தேன்.
    • நீ போவாய் !
    • முடியாதென்று எனக்குத் தெரியும். நல்ல வகை பூதங்களையெல்லாங்கூட எனது கதைகளுக்கென உருவாக்கியதுண்டு, ஆனல் இந்த்க்கிழவன் சேடாரை அங்கு அழைத்துப்போக ஒன்றை படைக்கத் தவறிவிட்டேன்.
    • போகத்தான் போகிறாய். ஸ்லாபூகூம் ! உனக்காக அந்த ஊரில் யாரேனும் காத்திருக்கிறார்களா ?

அவருடைய கதைகளில் முதியவரான இக்கதைசொல்லி இதுபோன்ற பல பதில்களை, வாக்குறுதிகளை, பிரியமானவர்களிடம் உரைக்கிற மீண்டும் சந்திப்போம்என்பது போன்ற பிரியா விடை வார்த்தைகளை கற்பனைசெய்து இடம்பெறச்செய்திருக்கிறார் . « நீ போவாய் ! » என நஃபீகாட்டு அளித்த ஊக்கம், சாகும் தறுவாயில் இருக்கிற மனிதர்களிடத்தில் அவர்களுடைய எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசுவதை ஒத்திருந்தது. முதியவரின் சகோதரர் பயனற்றதொரு ஆறுதலைத் தந்துவிட்டு க் கிளம்ப அவருக்கு அதை உணர்த்த முனைந்தவர்போல, அமைதியானதொரு எள்ளல் கலந்த புன்னகையை உதிர்த்தார்.

(தொடரும்)