Monthly Archives: ஜனவரி 2018

‘ரணகளம்’ : ‘துணை’யும் ‘இணை’யும்

26047505_1779219605441809_5161767557754892563_n « புதுச்சேரி என்ற பெயரில் ஒரு  நாவலை எழுதத் தகவலைத் திரட்டினேன். கிடைத்துள்ள தகவல்கள் ஓரளவிற்குப் போதுமானவை. இருந்தாலும் நன்றாக வரவேண்டுமென்ற அச்சத்தினால் தள்ளிப்போகிறது. இடைவெளியை  நிரப்ப  ஒரு குறு நாவலை  எழுத முடிக்க யோசித்திருந்தவேளை ‘ our souls at night’  (கெண்ட் ஹாரெஃப் என்ற அமெரிக்க எழுத்தாளரின் நாவல்)  என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். குறு நாவலொன்றை எழுதத் தீர்மானித்தது தற்செயலெனில், Lunch box புகழ் ரித்தேஷ் பத்ரா எங்கிற இந்திய இயக்குனர் கைவண்ணத்தில் உருவான இத்திரைப்படத்தைக் காண  நேர்ந்ததும் தற்செயலே. ராபர்ட்ஃபோர்ட், ஜேன் ஃபோண்டா இருவரும் நடித்திருக்கிறார்கள். முதுமை அரிக்கும் இரு மனித உயிர்களின் அந்திம  நோய்க்கு கலை, உளவியல் அடிப்படையில் தீர்வுகண்டிருக்கிறார்கள். இப்படம் வேறொரு சிந்தனையைக் கொடுத்தது. துணை என்ற சொல்லைக் குஈத்து யோசிக்க வைத்தது. அந்த யோசனையைப் புனைவாக்கியதன் பலனே இந்த  நாவல். »

 

‘ரண்கவளம்’   நாவலுக்கு எழுதிய முன்னுரை இது. ஆம், ரணகளம் துணைகுறித்த ஒரு பார்வை. துணை மிகப் பெரிய சொல். துணையுடன் ஆற்றும் வினையே முழுமையை எட்ட உதவும் என்பதைமனிதர்க்கு குறிப்பால் உணர்த்த முற்பட்டதுபோல நமது உடலில் கைகள், கால்கள், கண்கள் நாசிதுவாரங்களென, முக்கிய உறுப்புக்களையெல்லாம்  இயற்கை இரண்டிரண்டாக  படைத்திருக்கிறது. இத்துணையை இணையாக, தோழமையாக, சரி நிகராகக் கொள்வதற்கு மாறாக இரண்டிலொன்றை உயர்த்தி பிடிக்கிறபொழுது, ஈன்றெடுத்தல் சுகப்பிரசவமாக நடைபெறுவது கிடையாது. இரண்டிலொன்றை உதவியாள், சேவகன், அடிமை, இரண்டாம் பாலினம் என்று கீழே  நிறுத்தி பெறப்படும் பலன்கள் முழுமையானப் பலன்களா என்றால் இல்லை. விசுவாசத்தின் பெயரால் செய்யப்படும் வினைக்கும் விருப்பத்தின் பெயரால் செய்யப்படும் வினைக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.

 

ரணகளம் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ள ‘our souls at night’  பற்றியும் வேறு இரண்டு தகவல்களையும் பகிர்ந்துகொள்வது ஒருவகையில் அண்மையில் வந்துள்ள என்னுடைய  நாவலை ஏறி நின்று எட்டிப்பார்க்க வசதியாக முக்காலியைப் போடுவது.  ரணகளம்

அந்த வகையில் மூன்று ‘துணை’கள் குறித்து பேசுகிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை.

 

துணை -1 : இணை

‘our souls at night’  நாவலில் நாயகனும் நாயகியும் எழுபது வயதைக் கடந்தவர்கள். நாயகன் மனைவியை இழந்தவர்,  நாயகி கணவனை இழந்தவள்.   ஒரே தெருவில் அவரவர் வீடுகளில், இன்றையை  நியதிக்கேற்ப  பிள்ளைகளைப் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் தனிமை விபத்துக்குள்ளானவர்கள்,   மன ஊனமுற்றவர்கள். பகல்வாழ்க்கையும் அது சார்ந்த உரையாடலும் வணிப விதிக்குட்பட்ட  நிலையில், தெரிந்தமுகங்கள்கூட சம்பாஷனைகளை சடங்குகளாக அணுகுகிறச் சூழலில் பாசாங்கற்ற அன்பிற்கும் அரவணப்பிற்கும் இரவு வெளிச்சம் தருமென  நம்பும் கதை நாயகி தனிமை வெக்கைக்கு நிழல் தேடும் முயற்சியாக மூதாட்டியான ஜேன்ஃபோண்டா, கிழவர் ராபர்ட் ஃபோர்ட் ஐ தேடிவருகிறாள். அவரிடம்  நேரடியாகவே இரவு என்னுடன் வந்து தங்க முடியுமா எனக் கேட்கிறாள். அவர் தயங்குகிறார். யோசித்து சொல்கிறேன் என் கிறார். ஒரு நாள் இரவு  அவள் வீட்டிற்கு இரவுக்கு வேண்டிய ஆடைகளுடன் பிறர் அறியாதபடி அவள் வீட்டு பின் வாசல்  வழியாக வருகிறார். இருவரும் அவரவர் குடும்பம் பிள்ளைகள், பிடித்தது பிடியாதது என உரையாடலைத் தொடங்குகிறார்கள். அவர்களிடையே  நாம் பலரும் சந்தேகிக்கிற வேறுவகையான உறுவுகள் இருப்பதில்லை. பின்னர்  செய்தி அச்சிறிய  கிராமத்தில் மதுச்சாலைகளில், பொதுவெளிகளில் அவர்களைகிண்டலும் கேலியுமாக விமர்சிக்க உதவுகிறது. சொந்த பிள்ளைகளின் கோப்பத்திற்கும் ஆளாகிறார்கள்.

 

துணை -2 : புணர்ச்சி

 

The Reader என்று மற்றொரு திரைப்படம் பெர்னார் ஷ்லிங்க் என் கிற ஜெர்மன் எழுத்தாளரின்  நாவல். இப்படத்தில் மைக்கேல் பதின் வயது சிறுவன். ஒரு மழை  நாளில் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில்  மைக்கேல், திடீரென்று  உடல் நலிவுற்று  வருந்துகிறபோது,  டிராம் ஒன்றில் பரிசோதகராக வேலைசெய்யும்,  அவனைக்காட்டிலும் இருமடங்கு  வயதுடைய  ஹன்னா உதவுகிறாள். அவர்களிடையே  நட்பு பிறக்கிறது. நட்பு காதலாகிறது. முதலில் குறிப்பிட்ட படத்தில் உடல் உறவுக்கு இடமில்லை. இங்கே உடல் உறவின்றி அவர்கள் சந்திப்புகள் கழிவதில்லை. முதல் படத்தில்  நாயகனும் நாயகியும் தங்கள் மனதில் உள்ள சேமித்துள்ள அனைத்தையும் உரையாடலாக பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படத்தில் உடல் உறவு கொள்ளும்  நேரத்திலும் உலக இலக்கியங்களை  மைக்கேல் வாசிக்க ஹன்னா கேட்டு ரசிக்கிறாள். முதல் படத்தில் இருவருக்குமிடையில் ரகசியங்கள் இல்லை. இரண்டாவது படத்தில்  தம்பதிகளிடையே ஒருவர் குறிப்பாக ஹன்னா இளைஞனிடம் மறைக்க ரகசியங்கள் உண்டு.

 

துணை – 3 : காப்பு

Emmanuel-Macron-et-sa-femme-Brigitte-a-l-Elysee-le-2-juin-2015_exact1024x768_p

தற்போதைய பிரெஞ்சு அதிபர் மக்ரோனுக்கும் அவருடைய மனைவி பிரிஜித்திற்கும் இருபத்தெட்டு  வருடங்கள் வித்தியாசம். இருபரும் காதலில் விழுந்த ஆண்டு 1993.  அப்போது  பிரிஜித்  பள்ளி ஆசிரியை நாற்பத்துமூன்று வயது, அவருடைய காதலன் அதிபர் மக்ரோனுக்கு  பதினைந்து வயது. அவர்கள் காதலில் விழுந்தபோது பிரிஜித்தின் முதல் கணவர்  மகளும், அதிபர்மக்ரோனும் ஒரே வகுப்பில் படித்தார்கள். இருந்தபோதும் ஆசிரியையும் மாணவனும் காதலித்தார்கள். பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள சிறுவனுடனான உறவு பெரும்மாபாலான  நாடுகளைப்போலவே பிரான்சிலும் தண்டனைக்குரியது. எனவே இருவரும் 13 வருடங்கள் காத்திருந்தார்கள். முதல் கணவனை 2006ல் பிரிஜித் விவாகரத்து செய்துவிட்டு 2007ல் மக்ரோனை மணமுடிக்கிறார்.  மக்ரோனுக்கும் பிரிஜித்திற்கும் பிள்ளைகள் இல்லை. பிரிஜித்தின் முதல் கணவர் பிள்ளைகளை ஏற்றுகொள்கிறார். அதிபர் மக்ரோன் தான் ஒரு தன் பாலினவிரும்பி இல்லை என பகிரங்கமாக மறுக்கவேண்டிய  நிர்ப்பந்தம் இருந்தது. இன்றும் 38 வயது பிரெஞ்சு அதிபர் இம்மானெவெல் மக்ரோனும் அவருடைய 66 வயது மனவியும் துணை என்ற சொல்லுக்கு துணை என்ற சொல்லின் சாட்சியாய் நிற்கிறார்கள்..

 

இந்த மூன்று தடத்திலும் துணை என்ற சொல் மேற்குலகில் வெவ்வேறு பொருளில் பயணிக்கிறது.  ‘இது என் வாழ்க்கை, பிறர் குறித்து எனக்கென்ன கவலை !’ என்கிற தனிமனிதன் ஒருபக்கம்.  ‘அது அவன் வாழ்க்கை, நமக்கென்ன வந்தது ! எனக் கருதுகிற சமூகம். இந்த இரு தரப்பிற்கும் மேற்கண்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததில் பங்கிருக்கிறது.    இதில் என்னை ஆச்சரியமூட்டும் விஷயம்  தனிமனித வாழ்க்கைக்கு விசுவாசமாக இருக்கவேண்டி பாசம் பந்தம் போண்ற சொற்களைப் பின்னுக்குதள்ளி வாழும்  மேற்குலக சமூகம் கீழைத்தேய சமூகத்தைக் காட்டிலும் வலிமையுடன் இருப்பது.

 

கடந்தகாலம் கடவுள் சடங்கு  பெயரால் மனித உயிர்களை ஒன்றிணைத்தது. அகக் கூறுகளைக் காட்டிலும் புறக் கூறுகள் அன்று முக்கியத்துவம் பெற்றன. இன்று புறகூறுகள் இடத்தில்  அகக்கூறுகள்.

மேற்குறிப்பிட்ட மூன்று உதாரணங்கள்  சாராது, கீழைப்பின்புலத்தில் துணை என்றசொல்லுக்குப் பொருள் காண முற்பட்டதே ‘ரண களம்’    இங்கே எனது ‘துணை’க்குப் பொருள்,  ‘ நட்பு ‘. துணையின்றியும், பயணிக்கலாம். ஆனால் அலுப்பின்றி பயணிக்க  துணை வேண்டும்.

—————–

வனக்கத்திற்குரிய நண்பர்களுக்கு!

எதிர்வரும் ஜனவரி 12 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில், சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில்

ரணகளம் நூல் வெளியீடு   26047505_1779219605441809_5161767557754892563_n

நண்பர்கள்  நாஞ்சிலார், க.பஞ்சு கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

நேரில் அழைத்ததுபோலக் கருதி நிகழ்ச்சியை  மேலும் சிறப்பிக்கும்படி

வேண்டுகிறேன்.

அன்புடன்

நா.கிருஷ்ணா

 

 

நிகழ்ச்சி நிரல்

 

நாகரத்தினம் கிருஷ்ணாவின்

ரணகளம்   நூல் வெளியீடு அழைப்பிதழ்

***

 

நாள் :             12 -01 -2018 மாலை 6 மணி

 

இடம் :              டிஸ்கவரி புக் பேலஸ்,

எண் 6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை,

கே.கே நகர், சென்னை – 600078

 

***

 

தலைமை :            பேராசிரியர க. பஞ்சாங்கம்

 

சிறப்புரை :      திரு. நாஞ்சில் நாடன்

 

நூல் அறிமுகம் :       திரு. சாம்ராஜ்

 

வாழ்த்துரைகள் :    பேராசிரியர் சு.வெங்கடசுப்புராய நாயகர்,

திரு.சீனு தமிழ்மணி,

கவிஞர் மதுமிதா

நூல் முதற்படிபெறூவோர் : திரு. கி.அ. சச்சிதானந்தன்,

திருமதி சுதாராமலிங்கம்

ஏற்புரை :                  திரு. நாகரத்தினம் கிருஷ்ணா

 

***

தொடர்புகட்கு : தொலைபேசி எண்கள் : 9944064656, 9443622366

 

 

 

புதுப்பிக்கும் எழுத்து

A

 

அண்மைக்காலமாக பிரான்சு நாட்டில் சில உளவியல் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு  நல்ல நூல்களைச்  சிபாரிசு செய்கிறார்கள். சிறைகள் மருத்துவமனைகளில் நூல் நிலையங்களைத் திறந்திருக்கிறார்கள், எழுத்தாளர்களை, அவர் தம் படைப்புகளை மருத்துவமனைகள், சிறைச்சாலைகளுக்கு அழைப்பதும்ன் அதனைக் கைதிகளுக்கும் நோயாளிகளுக்கும்  அளிக்கும் சிகிச்சைகளில் ஒன்றாகப் பார்க்கும் போக்கும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் சூழலில் அலெக்ஸாந்ரு ழெஃபென் (Alexandre Gefen) என்பவரின் புதிய நூல் கவனம் பெற்றுள்ளது.

 

அலெக்சாத்ரு ழெஃபென் நவீன பிரெஞ்சு இலக்கிய உலகின் முன்னணி திறனாய்வாளர்களில் ஒருவர், இளைஞர், பிரெஞ்சு தேசிய ஆய்வகத்தில் நவீன இலக்கிய பிரிவு இயக்குனருங்கூட. அவருடைய சமீபத்திய நூல் « Réparer le monde : la littérature française face aux xxi siècle  »  (உலகைச் சரிசெய்தல் : இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிரெஞ்சு இலக்கியத்தை முன்வைத்து)

AlexandreGefen-320x320

அவரின் கருத்துப்படி நவீனப் பிரெஞ்சு இலக்கியங்கள் (குறிப்பாக எண்பதுகளிலிருந்து) வடிவம், இலட்சியம், அழகியல் இவற்றிலிருந்து விடுபட்டு  தனிமனிதன், சமூக மேம்பாட்டிற்குச் சிகிச்சையை முன்வைப்பவை.  அல்பெர் கமுய் கூட, தான் பிழையென்றுணர்வதை படைப்பு மூலம் ஒரு கலைஞன் திருத்த முற்படுகிறான், எனக்கூறியிருக்கிறார்.

மேம்போக்கான பொழுதுபோக்கு அம்சங்களிலிருந்து தம்மை வெகுவாக அந்நியப்படுத்திக்கொண்டிருக்கும் நவீன இலக்கியங்கள் நம்முடைய மனநிலை கட்டமைப்பின் மேம்பாடு, அறம் குறித்த ஆழமான கேள்விகள், வருங்காலம் பற்றிய ஐயங்கள், வாழ்க்கை நெறியிலுள்ள  குழப்பங்கள்  ஆகியவற்றிர்க்கு விடைகாணச்சொல்லி சில கணக்குகளைத் தருகின்றன என்பது மட்டும் நிச்சயம்.