பிரான்சு நிஜமும் நிழலும் – II

இடைக்காலம் (கி.பி 476- 1453)

இன்றைய பிரெஞ்சு மொழியின் தாய்மொழி இலத்தீன் அல்லது  இலத்தீன் மொழியின்  வெகுசன வடிவம்.  இரும்பு யுகத்தில்,  பிரான்சு நாட்டின் பூர்வாங்கப்பெயர் கோல் (la Gaule) என்றும், மக்களைக் கொலுவாக்கள் என்றும், அவர்கள் பேசிய மொழி   கொலுவா என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு ரோமானியர்  படையெடுத்துப்பின் விளைகாக இலத்தீன் மொழி உள்ளே நுழைகிறது. இந்த இலத்தீன் உள்ளூர் மொழியோடு கலந்து  வெகுசனப் பயன்பாட்டிற்கு வருகிறது. இடைக்காலத்தின் ஆரம்பத்தில் ரொமானியர்களின் செல்வாக்கு ஜெர்மானியர்களின் படையெடுப்பினால் சரிவுற்றதும், ஜெர்மானிய பிராங்க் இன மக்கள் ரொமானியர் இடத்தைப்  பிடிக்கின்றனர்,  இந்நிலையில்  இடைக்காலத்தின் போது பிரான்சுநாட்டில் செல்வாக்குடனிருந்வை மூன்று வெகுசன மொழிகள். அ. ஓக் மொழி (la langue d’oc); ஆ. ஓய் மொழி (la langue d’oïl ); இ. பிராங்ஃகோ – ப்ரொவொன்சால்(le franco-provençal). இவற்றைத் தவிர பேச்சு வழக்கிலிருந்த மொழிகளும் அனேகம். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில்  ஈல் தெ பிரான்சு (ile de france) அரசவை  மொழியை  இலத்தீன் மொழிக்குப் பதிலாக பயன்படுத்துவதென,  1539 ஆம் ஆண்டில் தீர்மானிக்கிறார்கள். ஆக முதன்முறையாக இலத்தீன் மொழியின் இடத்தில், வெகுசனமொழியாக மட்டுமே இருந்து வந்த இன்றைய பிரெஞ்சு மொழி அதிகாரமொழியாக, அரசு மொழியாக, சமயமொழியாக, இலக்கியமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை  இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி  இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று  நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள்.  பிரெஞ்சு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகச் சுருக்கமாக  பிரெஞ்சு மொழியின் வரலாறு:

இடைக்காலத்தில்  எழுதவும் படிக்கவும் தெரிந்த மக்கள் குறைந்த எண்ணிக்கையினர், அதுவும் தவிர  ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் அறிந்திராத மக்களின் வாய்மொழியாக  இலக்கியம் அறியப்பட்ட காலம். ‘les troubadours’ அல்லது ‘les trouvères’  என்கிற   பாணர்கள் நிலமானிய  பிரபுக்களின் வரவேற்பறைகளில்,  அவைக் களத்தில்  இட்டுக்கட்டிக் பாடியவைதான் அன்றைக்கு இலக்கியம்.  வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டவை என்பதால் மறக்காலிருக்க ஓசையால் சொற்களை வரிசைப்படுத்திக்கொள்வது அவசியமாயிற்று. அவர்களின் படைப்புத் திறன் என்பது நினைவு படுத்த இயலாத சொற்களை, வரிகளை இட்டு நிரப்புவது.  எனவேதான் இடைக்காலத்தின் ஆரம்பகாலத்தில் படைப்பாளிகள் பெயரைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை.  திரும்பத் திரும்ப ஒரே கதை  கூறுபவரின் சொல்வன்மையைப் பொறுத்து புதிய புதிய கற்பனைகளுடன் சொல்லபட்டன. பொதுவாகவே இடைக்கால இலக்கியங்களைத் தழுவல்கள், மொழிபெயர்ப்புகள் என்றுதான் ( இலத்தீன் மொழியிலிருந்து வெகுசன மொழிக்கு)  கூறமுடியும். நிலமானிய முறை வழக்கில் இருந்தகாலம். எனவே பணம் படைத்த, அதிகாரம் படைத்த செல்வந்தர்களின்  ஆதரவினை நம்பியே  இலக்கியங்களுமிருந்தன.

‘படைப்பு’,  ‘படைப்பாளி’ முதலான சொல்லாடல்கள் இடைக்காலத்தில் இறுதியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில்  பதின்மூன்றாம் நூற்றாண்டில்  வழக்கிற்கு வருகின்றன. குறிப்பாக, நகரங்களின் வளர்ச்சி  கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின்பால் கவனம் செலுத்த உதவியது. நிலமானிய அமைப்பு முறையில் பிரபுக்களின் ஆதரவு, குறிப்பாக அவர்களின் பொருளுதவி என்பது ஒருபக்கம்,  மக்களில் ஒரு பிரிவினர், பண்பாடென்பது சிந்தனை அடிப்படையிலானதென்பதை உணர்ந்திருந்தார்கள் என்பது இன்னொரு பக்கம்.  இந்த இரண்டாவது வகையினர்  பிரபுக்கள் இல்லாமல் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்துமிருந்தார்கள். இத்தகைய படைப்பாளிகளின் மொழியாளுமையும், சிந்னையும்,  பிரபுக்கள்  அவைக்களத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.  இப்பிரபுக்களின் பக்கபலமாக பெரும் சொத்தாக ‘les chevaliers’   என்கிற குதிரைவீரர்கள்  இருந்தனர்.   இவர்கள் மீதான அபிமானம் திடீரென்று அதிகரித்தது. இவர்களை மையமாகவைத்து, பிரதானப் பாத்திரமாகப் படைத்து பாடல்கள் சொல்லப் பட்டன.  இப்பாடல்களுக்கு « Les chansons des Gestes » என்று பெயரிட்டார்கள். தமிழில் சொல்லவேண்டுமெனில் ‘பரணி’ இலக்கியவகை. ஆனால் தமிழ்ப் பரணிபோல அல்லது காவியங்கள் போல கடவுள் வாழ்த்து முலான இலக்கண வரிசைகளில்லை. கதை நாயகனை வானளாவ புகழவேண்டுமென்பது மட்டுமே அடிப்படை நோக்கம். ஆகப் பாடுவது பரணி என்பதால், கதை நாயகன் வீரதீர சாகசங்களுக்குப் பெயர்பெற்றவன். ஆனைகள் இல்லாத நாட்டில் ஆயிரம் ஆனைகளை அமரிடை வெல்வதெப்படி ? எனவே இங்கு ஆனைகளுக்குப் பதிலாக குதிரைகள், ஆயிரக்கணக்கில் எதிரிப் படையின் குதிரைவீரர்களைச் சமரில் வெல்பவர்களைப் பற்றிய காவியம்.  இக்குதிரை வீரர்கள் இடைக்காலத்தில் இருகாரணங்களால்  முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

        விசும்பின் துளி : நதி

                                                  

        ஆகாயம் – திசை – தேவலோகம் -மேகம் -வீம்பு- கருவம்- இறுமாப்பு – செருக்கு என்றெல்லாம் அகராதிகள் ‘விசும்பு’ என்ற சொல்லுக்குப் பொருள் தருகின்றன. இவற்றோடு ‘மெல்லிய அழுகையையும் சேர்த்துக்கொண்டால் சொல்லை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள உதவும். சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் நாஞ்சில் நாடனுடன் பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்தும், உட்கார்ந்தும், உண்டும் பருகியும் உரையாடியதன் விளவு இக்கட்டுரையை எழுத உட்கார்ந்தபோது விசும்பு என்ற சொல் குறித்து அகராதியைப் புரட்டத்  தூண்டியது.

         ‘விசும்பு’  என்பதற்கு வான் சிறப்பு அதிகாரத்தின் குறள் பதினொன்றின்படி ஆகாயம். வான் சிறப்பு – பசும்புல்  இரண்டையும் இணைத்து, ‘விசும்பின் துளி’ என்பதை  மேகத்தின் துளியாக பார்க்கவேண்டியுள்ளது. கடவுள் வாழ்த்துப்பாடிய வள்ளுவன் விசும்பை கருவம்-இறுமாப்பு-செருக்கு என்ற பொருளில் கையாண்டிருக்க கிஞ்சித்தும் நியாயமில்லை. பழம்தமிழ்ப்பாடல்கள் அனைத்தும் விசும்பு என்ற சொல்லை ஆகாயம் என்ற பொருளில் பயன்படுத்தியுமைக்குச் சான்றுகள் உள்ளன. விசும்பின் துளியை மெல்லிய அழுகையாக காண்பதிலும் ஓர் அழகிருக்கிறது. ஒவென்று குரலெடுத்து அழுதல் அல்லது கதறி அழுதல் சோகத்தின் உச்சம், கொடும் துன்பம். விசும்பல் அப்படியல்ல. அது குழந்தைகள், பெண்களென்று தனக்கானவர்களை தேர்ந்தெடுத்துக் கையாளுகிறது. அவர்களின் விசும்பல் பெரிதும் சுய தேவையின்பாற்பட்டது.

        விசும்பலை மெல்லிய கேவலாகப் பொருள்கொண்டு ஆகாயத்துடன் இணைத்துப்பார்க்கலாமா ?  ஐம்பெரும் பூதாங்களில் ஒன்றான ஆகாயத்திற்கு, உயிர்களைக் காப்பதன்றி ; அவற்றின் ஆயுளை நீட்டிக்க, அவற்றின் சந்ததியினரை  உய்விக்க என்பதன்றி வேறு சுயதேவைகள் இல்லை என்பது இயற்கைத் தரும் செய்தி.  விசும்பின் அழுகைத்துளிக் கூட்டத்தால் அவற்றின் பெருக்கத்தால் உருவாகும் நதிகள் ஆகாயத்தின் கொடை.

        ‘நீரின்றி  அமையாது உலகு ‘  என்ற உண்மையை உணர்ந்து,  நிலக்குடத்தை நிரப்ப  வள்ளல் வான்பசுக்கள் மடி சுரக்கும்  உயிர்ப்பாலின் வெள்ளமே ஆறு. மனிதர் வாழ்க்கையை ஆற்றுப்படுத்துகிற  நதியென்னும் அற நூல்.  பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நிகழும் இயற்கையின்  இவ்வினையையே நாம்  ஆறு, புனல், நதியென அழகு  தமிழ் பெயர்ச் சொற்கள்களாக `மாற்றி உள்ளோம். ஆறு என்ற சொல்லுக்கு நதி, புனலென்று விளக்கம்தரும் அகரமுதலிகள் அதற்கு ஒழுக்கம், பயன் என்ற பொருளைத் தருவதையும்  கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.

        பனிப்பிரதேசத்தில் வாழ்பவனைக் காட்டிலும் , பாலை நில மனிதனும், விலங்கும் நீரின் அருமையைக் கூடுதலாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் நிலம் கடுமையான வெம்மையையும் வறட்சியையும்  மட்டுமே கொண்ட பாலை நிலம் அல்ல, ஆனால் அதுபோல ஆக்விடக்கூடாதென்ற அச்சத்தில் நாட்களைத் தள்ளும் அவலத்தில் தவிக்கும் நிலம்.  மாரிப் பொய்த்து, காவிரி வறண்டு அறுபோகம் கண்ட தமிழ்நிலம் இன்று ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி போய்விடுமோவென நம் உள்ளம் தவிக்கிறது.

        காலம் காலமாகவே வானத்தைப் பார்த்து வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் உயர்ந்த சிந்தனைக்கு இதுகூட காரணமாக இருதிருக்கலாம். « நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை  என்ற இரண்டு பண்புகளும் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ்’ மொழிப்பெயருக்கு விளக்கம் தர வந்தவர்கள், ‘ இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக்குறிப்பிட்டனர் »  என எழுதுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவன், தமது வடுப்பூக்கள் என்ற  கட்டுரைத் தொகுப்பில். ஆக நீரையே மொழியாக கொண்ட தமிழினம்,  நீரைத் தன் வாழ்க்கையாக வைத்து ஒழுகியதில் வியப்பில்லை.

        பண்டைய நாகரீகங்கள் அனைத்துமே நதிகளில் பிறந்தவை, நதிகளில் வளர்ந்தவை என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. நாகரீகங்கள் என்பது உண்பது, உடுத்துவது அல்ல. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தின் வாழ்க்கை நெறி,  பண்புகளின் கண்ணாடி, கலை  இலக்கிய சாட்சியம், நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாடு. சிந்து நதியைத் தொட்டிலாகக்கொண்ட மொகஞ்சாதாரோ – ஆரப்பா , நைல் நதியைத் தொட்டிலாக்கிக்கொண்ட எகிப்து, டைக்ரீசு யூப்ரட்டீசு நதிக் கரைகளில் வளர்ந்த  மெசொபொத்தோமியா  ஆகியவற்றை நாம் அறிவோம். இன்றும் பல முக்கிய நகரங்கள் அனைத்திலும்  ஏதோவொரு நதி, நகரின் செழுமைக்கும் பெருமைக்கும் அழகியல், பொருளியல் அடிப்படையில் பயன்தருகிறது என்பது கண்கூடு. 

நதியோடு நமக்கு வாய்த்த பெருமையையும் இன்று அடைந்துள்ள சிறுமையையும் பேசுவதற்கு முன்பாக கடந்தகாலத்தில் நமது காவிரியும் இப்படித்தான் இருந்திருக்குமோ என என்னைக் காணும்தோறும் கனவில் ஆழ்த்தும் ரைன்(Rhin) நதி பற்றிச் சொல்லாமற்போனால் இந்தக் கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு எப்படியோ எனக்கு நிறைவாகாது.

பிரான்சு நாட்டை பொறுத்தவரை பெரிய நதிகளென ஐந்து நதிகள் இருக்கின்றன. இவற்றை இந்திய பெருநதிகளோடு ஒப்பிடமுடியாது. பிரான்சின் கிழக்கு எல்லையில் பாய்கிற ரைன் நதியே பிரான்சின் நீளமான நதி. கங்கையைப்போல பலகோடிமக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான புனித நதி அல்ல என்கிறபோதும் தனது பிரவாகத்தால்  கரையோர நகரங்களுக்கும், அந்நகர் சார்ந்த நாடுகளுக்கும் பொருள்வளத்தை வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றது. சற்றேரக்குறைய 1500 கி. மீ தூரம் பாய்கின்ற மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிற ஐரோப்பிய நதிகளில் இதுவுமொன்று. சுவிட்ஸர்லாந்து, ஆஸ்த்திரியா, ஜெர்மன், பிரான்சு, ஹாலந்து ஆகிய நாடுகளுக்கிடையே மனிதர் மற்றும் சரக்குகள் பரிமாற்ற பயன்பாட்டிற்கு உதவும் நதி.

ஒ ரைன் நதியே !

காதல் பைத்தியங்கள்

இப்போதெல்லாம்

இனிமையான கனவுகளுக்கு

 இதயத்தைப் பறிகொடுப்பது

ஏன் தெரியுமா ?

பச்சைபசேல் என்றிருக்கும் – நின்

காடுகளும், பரந்துவிரித

புல்வெளிகளும்

நித்தம் நித்தம் அவர்களைப்

பித்தர்களாக்கினால்

வேறென் செய்வார்கள் ?

இது ஆல்பிரடு முஸ்ஸே (Alfred Musset) என்கிற பிரெஞ்சு கவிஞனின் ரைன் நதிபற்றிய கவிதை.

என்னைக் கவர்ந்த இன்னொரு நதி செக் நாட்டின் தலைநகர் பிராஹா வில் பாயும் வல்ட்டாவாநதி. சிலவருடங்களுக்கு முன் நகரையும் அதன் ஊடேபாயும் வல்ட்டாவா நதியிலும் பயணம் செய்த அனுப்பவம். காஃப்காபவின் நாய்க்குட்டி நாவலில் பல பக்கங்களை நதிக்கென ஒதுக்கி இருக்கிறேன், விரிக்க ஆரம்பித்தால் கட்டுரை நீளும்.      

        நண்பர்களே ! இயற்கை நம்மை ஈர்க்க பல்வேறு சங்கதிகளைத் தம் கைவசம் வைத்திருக்கிறது. அவற்றுள் நதிகளுக்குத் தனித்தசிறப்பு உண்டு. உயிர் வாழ, செழித்துவாழ அதனால் இவ்வுலகம் உய்ய அண்டசராசரத்தையும் தன்னுள் அடக்கிய மழைத்துளியின் பூதவடிவம் நதி. கடந்தகாலத்தில் தன்னைத் தேடி நீர் வராதென்ற  நிலையில்  தனது உயிர்வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நதிகளைத் தேடி மனிதர்கூட்டம் அலைந்தது.  அந்த அலைதலின் பயனாக, ஓரிடத்தில்  ஓங்கி வளர்ந்திருக்கிற  மரங்களையும், தழைத்திருக்கிற புல்பூண்டுகளையும் , எறும்புப் புற்றுகளையும்  வைத்து வெள்ளம் கரைபுண்டோடக் கூடிய இடம் எதுவாக இருக்குமென்ற புத்திக் கூர்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். .

பருமரக் கரு ஆல் அத்தி பாற்பொடி

மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாப் பொளி

தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்

கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே !

காணும் வெண்புல் கருரும்புல் கருஞ்சடை

தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி

தாணு தெற்பை சிறுபீளை சாடிணை

வெங்கோரை பொருதலை வெள்ளமே !

என 19 நூற்றாண்டு பாடல்கள் தெரிவிக்கின்றன, எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை ஆனால்  நூலின் பதிப்பாசிரியர் ச.வெ. சுப்பிரமணியன் என இவற்றைக் குறிப்பிடுபிறார், கடலடியில் தமிழர் நாகரீகம் என்ற நூலை எழுதியுள்ள புதுவை நந்திவர்மன்.

        நதியைக் கண்ட தும்  நீரைபார்த்த மகிழ்ச்சியில் நிலையாக இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு மக்கள் ஆங்கே  தங்கலாயினர்.  ஆற்றங்கரைகளும், அதனையொட்டிய வெளிகளும் ;  அடர்ந்த மரங்கள் செடிகொடிகள், பறவைகள், விலங்குகள்  என்ற உயிர் வாழ்க்கையின் கருவறையாக இலங்குவதைக் கண்ட மனிதன், அவற்றோடு ஒன்றாக தாம் வாழ்வதற்கும் புனல் இடமளிக்கும்  என்று நம்பினான், அன்றிலிருந்து  நாடோடிவாழ்க்க்கையை நதிக்கரை வாழ்க்கையாக  மானுட வாழ்க்கை அணைத்துக்கொண்டது. மனிதம், ஆற்றின் துணைகொண்டு ஆற்றியது வயிற்றின் பசியைமட்டுமல்ல, பொருட்பசியையும்.

        எனவேதான்,

         பூவார் சோலை மயில் ஆல

        புரிந்து குயில்கள் இசைபாட

        காமர் மலை அருகசைய

        நடந்தாய் வாழி காவேரி !

         என்று  காவிரியின் நடைபயணத்தை வாழ்த்துவதன் ஊடாக  இளங்கோ, ஏன் மனிதன் தன் நடைபயணத்தில் இளைப்பாற நதிக்கரையை தேர்ந்தெடுத்தான் என்ற இரகசியத்தையும் போட்டுடைக்கிறான். மனித இனம் நதிக்கரையில்  இளைப்பாறியபின்னர் அங்கே என்ன நிகழ்ந்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடல் நமக்கு விளக்குகிறது. 

        உழவர் ஓதை, மதகோதை

        உடைநீர் ஓதை, தண்பதங்கொள்

        விழவரோதை, சிறந்தார்ப்ப

        நடந்தாய், வாழி காவேரி !

        காவிரிக்கரையில்  காவிரி பாயும் ஓசைமட்டுமல்ல  உழவர் எழுப்பும் ஓசையும் உண்டென்கிறான். இந்த உழவர் ஓசையில் : நுகத்தடி, நுகத்தானி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழுவெருது, உழுசாலில் நீர்பாயும் சலசலப்பு அவ்வளவும் அடங்கும். மதஓதை உடைநீர் ஓதை  நீர் பாய்ச்சலின்போது எழும், மண்வெட்டியை மடையில் போடும் ஓசை, மடை திறக்கும் ஓசை, மடை உடைந்து பாயும் தண்ணீர்ன் ஓசை ; வெள்ளத்தில் நீராடி மகிழும் மாந்தரின் ஓசை என்ற  எல்லாமுமான ஓசையாக ஓசையின் வெள்ளமாக நடக்கின்ற காவிரையை இளவல் பாடுகிறான்.

        உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழ்கூறும் நல்லுல கம் நதியோரம் தம்மைப் பிணைத்துக்கொண்ட உலகம், நதி புனலுடன் தம்

பிறப்பை, இளமையை, முதுமையை, காதலை,மணவாழ்க்கையை, முறிவை,  இறப்பை ஒப்படைத்து வாழ்ந்த இனம் தமிழினம்.  அலெக்ஸாந்திரியா போல, ஆம்ஸ்டர்டாம்போல, பாக்தாத்போல, பெல்கிரேடுபோல, இலண்டன்போல, பாரீசுபோல, ஹோசிமின் போல கல்கத்தா வாரணாசிபோல இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களைப்போல தமிழ் நாட்டின் நகரங்களும் நதிக்கரைகளில்  செழித்தவை, நதிகளால் வளம் பெற்றவை நதிகளால் காதல்வயப்பட்டவை.

                 காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்

                 கண்ட தோர் வையை பொருனைநதி-என

                 மேவியாறு பலஓடத்- திரு

                 மேனி செழித்த தமிழ்நாடு !

என்று தமிழ் நாட்டின் வளத்தை ஆறுகளோடு இணைத்து பாரதி பாடுகிறான். தமிழ் மண்ணை செழிக்கவைக்கும்  ஆறுகளாக ஐந்து ஆறுகளை பாரதி குறிப்பிடிருப்பினும், நமது  தமிழ் நிலத்தின் திருமேனியை செழிக்கவைப்பதில்  இந்த ஐந்து அல்லாது  பல நதிகளின்  பங்கிருப்பதை ‘மேவிய ஆறு பல ஓட’ என்ற வரியைக்கொண்டு புரிந்துகொள்கிறோம். அடையாறு, அமராவதி, கல்லாறு, மணிமுத்தாறு, செய்யாறு, கொள்ளிடம், செஞ்சி ஆறு , கபினி, குடமுருட்டி என சொல்லிக்கொண்டுபோகலாம்.

        தமிழர்தம் வாக்கையும் இந்த ஆறுகளைப்போலவே அமைதியும் ஆர்ப்பரிப்பும், வெறுமையும் செழுமையும், அழகும் ஆவேசமுமாக அமைந்திருந்ததை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் காப்பியங்கள் அனைத்தும்  நதியைப் போற்றுபவை, நதியின் பெருமையைக்கூறி  விளக்கி . அந்நதியை ஒட்டி எழுந்த நகரங்களையும், மக்களின் வாழ்நெறியையும் வடிக்க முனைந்தவை. தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்கான இலக்கணப்ப்பட்டியலில்  «  …..பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் … » என்பதையும் ஓர் அங்கமாகச் சேர்த்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

        ஆற்றின் கரைகளில் உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழகத்திலும் ஊர்களும் நகரங்களும் தோன்றின. « ஆறில்லா ஊருக்கு அழகேது » என்ற பழமொழி தமிழ் வழக்கறிந்த ஒன்று. சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூர் காவிரி ஆற்றங்கரையிலும், பாண்டி நாட்டின் தலை நகரமாகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும், சேர நாட்டின் தலைநகர் வஞ்சி கூட ஓர் நதிகரையில் இருந்த தாகவே சொல்லப்படுகிறது.   அவ்வாறே  துருத்தி என்ற பெயர் ஆற்றின் நடுவே எழுந்த ஊர்களுக்கு அமைந்தது என சொல்லின் செல்வர் ரா. பி சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஆகக் கரையோரம் எழுந்த ஊர்களெல்லாம் தமிழ் இலக்கியப் பக்கங்களைக் காப்பியங்கள், பக்தி இலக்கியங்களாக நிரம்பியுள்ளன.

        ‘ அன்பு எனும் ஆறுகரை அது புரள

        நன்புலனொன்றி நாத என்று அரற்றி ‘

        ‘மாறு இலாத மாக்கருணை வெள்ளமே’ 

என மாணிக்கவாசகர் தமது பக்தியை யும், அப்பகுத்திகுரிய தலைவனையும் வெள்ளத்தின் மருங்கே நிறுத்துவது, தமிழ் நிலம்,  நீர் நிலம்  என்பதால்.

        ஒரு பொருளின் மிகுதியை, அபரித த்தைக் குறிக்க தமிழில் வெள்ளம் என்ற  உறிச்சொல் அதிகம் பயன்பாட்டில் இருந்த து. காலவெள்ளம் புரட்டிபோட்டதில், இன்று நிலை தடுமாறி, அன்பு வெள்ளம், ஆசைவெள்ளம் அருள் வெள்ளம், கருணைவெள்ளம் என்ற காலம்போய், சாதிவெள்ளக் கரை உடைந்து, குருதிவெள்ளத்தில் அவ்வப்போது தமிழ்நிலம் மூழ்கடிக்கப்படும்  அவலத்தையும் இடையில் நினைகூர வேண்டியுள்ளது.

        ஆற்றுப் பெருக்கற்றடி சுடுமந்நாளும வ்வாற்று

        ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு

        நல்குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

        இல்லை எனமாட்டார் இசைந்து.

நல்குடிப்பிறந்தோர்,  தங்களுக்கு ‘இல்லை’ நேரும் காலையும்  அடுத்தவர்  கேட்கும்போது தங்களிடம் உள்ள பொருளை, கால் சுடும் அளவிற்கு நீர்வற்றி வெறும் மணலாக ஆறுறுவற்றிப்போனாலும் அதை நீருக்காக தோண்டுவோருக்கு ஊற்று நீர் கொடுத்து உதவும் நதியைப் போல  என்று ‘நல்வழி’யில் ஔவை குறிப்பிடுவாள். இது தீயவழியில் மணற்கொள்ளைக்குத் தோண்டும் மனிதர்களுக்குப் பாடப்பட்டததல்ல.

         தமிழே  தலைவனாக, தமிழே தலைவியாக தமிழே தோழன் தோழியாக, பிறமாந்தராக அவர் தம் வாழ்க்கையாக நீர்ப்பர்வல் போல ஆற்றுப்படுத்துதல் தமிழ்க்காவியங்களில் நிகழ அப்பெருமை தமிழுக்கும் நீருக்குமுள்ள நெருங்கிய உறவால் நிகழ்ந்த து என்றால்  மிகையில்லை.

        குடகுமலையில் பிறக்கும் காவிரியும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமான  வைகையும்  இன்றளவும் தமிழ் மொழியோடும், தமிழர் வாழ்வாதாரத்தோடும்  பின்னிப்பிணைந்தவை.  காவிரி ப்பாயும் ஊர்களெங்கும் ஆடிப்பெருக்கு விழா  புதுப்புனலை வரவேற்கும் வித த்தில் ஆடிப்பெருக்கு விழாவாக, ஒவ்வொரு வருடமும்   ஆடிமாதம் பதினெட்டாம் நாள்  கொண்டாடப்படுகிறது. கள்ளழகர் வைகையில் இறங்கும் நாள், மதுரைப்பகுதியில் இன்றளவும் ஒரு பெருவிழா.

        நீராடல் நீர் விளையாட்டு வேறு  என்கிறார். தொ.பரமசிவன். அவர் கூற்றின்படி, «   நீராடல் என்பது திராவிட நாகரிகத்தில் சடங்கியல் தகுதி உடையன » மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும்  தமிழர் வழக்கினை அகநானூறு பாடல் கொண்டு விளக்குகிறார். பெண்களின் பூப்பு நீராட்டும் அவர் கூற்றின் படி நீராட்டலின் கீழ் வருகிறது. குளித்தல் அல்லது உடலை குளிர்வித்தல் வெப்பத்தால், அல்லது உழைப்பால் வெப்பமடைந்த உடலை குளிரவைத்தல் என்பது அவர் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் மற்றொரு முக்கியமான தகவல்.  நீரில் நீந்தி மகிழ்வது, நீர் விளையாட்டு . குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலான நூல்களில் இடம்பெறும்  ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் காவிரில் ஆடி மகிழ்ந்தது நீர் விளையாட்டு.  புதுப்புனல்விளையாட்டில்  பங்கேற்க வந்த சேரநாட்டு இளவரசன்ஆட்டநத்தி காவிரிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான்.  ஆவனுடன் நீரில் விளையாடிமகிழ்ந்த ஆதிமந்தி,   நீரோடு அடித்துச்செல்லபட்ட கணவனைத் தேடிக் கண்டடைந்த  கதையை

“– உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” என சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது. «  கன்னியர் ஆகி நிலவினில்  ஆடிக் களித்த தும் இந்நாடே-   தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போர்ந்த தும் இந்நாடே !  »   என்ற வரிகளில் பாரதியும் ‘ நீராடுதல் ‘என்று கூறாமல் ‘நீர் விளையாடி’ என்றே  எழுதுகிறான். கவி அரசு கண்ணதாசனும், « நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே » என்று  எழுதியிருப்பதை நாம் மறந்துவிடமுடியாது. வருங்காலங்களில் நீர்  விளையாட்டுக்கு அல்ல நீராடுவதற்கேனும்  வெள்ளம் வருமா என்பது நமது இன்றைய  கவலை.

————————————————————————-

பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II :

           

கலையும் இலக்கியமும்

கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல்சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும்  உயிர்சார்ந்தவை. மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக பிறந்தானோ, அல்லது என்னவாக இருக்கிறானோ  அப்படி இருக்கமுடியாதென மறுக்கக்கூடிய உயிரி.  அம்மறுப்பை கலை இலக்கிய வழிமுறைகளால் வெளிப்படுத்துவதென்பது ஒர் உபாயம் அல்லது உத்தி. வாழ்வின் நோக்கம் உண்பதும் உறங்குவதும், இனவிருத்தியோடு திருப்தியடைவதும் என முடித்துக்கொள்கிற  விலங்குகள்போலன்றி , அதற்கும் அப்பால் என்பதை உணர்ந்த மனித ஆற்றலின் வெளிப்பாடு. என்னவாக இருக்கிறோமோ, என்னவாக காண்கிறோமோ அந்த இயற்கை உண்மையை, இயல்பு நிலையை  அவன்  விரும்பும் வகையில், சகமனிதனின் ஒப்புதல் வேண்டி திருத்த முற்படுவதுதான் கலையும் இலக்கியமும்.   அவை  ஆன்மாவின் பலம், அறிவின் பலம்.

கலை இலக்கிய படைப்பாளிகள் ஐயன் வள்ளுவன் கூறுவதைப்போல  அவைக்கு அஞ்சாதோர், சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்.   « கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாம் சொல் » என்ற இலக்கணத்திற்குப் பொருந்த தொழில்படுபவர்கள். மனித  வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், அவலங்கள், மேடு பள்ளங்கள், குறைநிறைகள், அழகுகள், கோரங்கள் ஆகியவற்றை கலைபடுத்தும் வல்லுனர்கள்.. தன்னுடைய சொந்த அல்லது தான் சாட்சியாகவிருந்த சகமனிதரின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துதலும், அதேவேளை அவ்வனுபவம் எவ்வகையில் தனித்துவம்பெறுகிறதென்பதை என்பித்தலும் கலை இலக்கியவாதிகளின் கடப்பாடு. எனவேதான் ஒருநாட்டைக்குறித்து, ஓர் இனத்தைக் குறித்து விவாதிக்கிறபோது இலக்கியமென்கிற எடைக்கல்லையும் தராசையும் கையிலெடுப்பது தவிர்க்க முடியாததாகிறது.  பிரெஞ்சு,  தமிழ்போல கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்தகுடிகளின் மொழியல்ல. இலத்தீன் மொழியிலிருந்து திரிந்த அடித்தட்டு மக்கள் மொழியாக , கீழ்மக்கள் மொழியாகத்தான் தொடக்க காலத்தில் இருந்தது.  பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில்தான் தன்னை இன்னாரென்று உணர்ந்துகொண்ட மொழி.   இருந்தும்,  உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று. பிரான்சு நாட்டில் மட்டுமின்றி பெல்ஜியம், கனடா, லக்ஸம்பர்க், சுவிட்ஸர்லாந்து, தவிர உலகில் 51 நாடுகளில் வழக்கிலுள்ள  மொழி, குறிப்பாக ஆங்கிலத்தைப் போலவே, பிரான்சுநாட்டின் காலனி நாடுகள் அனைத்திலும் சாபம்போல ஆயுள் முழுக்க விலக்க முடியாமல் தொடரும் மொழி.  உலகமெங்கும் பரவலாக உபயோகத்திலிருக்கிற பிரெஞ்சு மொழியின் இலக்கியம்,  பிரெஞ்சு மக்களால் மட்டுமே படைக்கப்பட்டதல்ல, அதிலும் நவீன பிரெஞ்சு இலக்கியம், உலகில் எங்கெல்லாம் பிரெஞ்சுமொழி பயன்பாட்டில்  உள்ளதோ அந்நாடுகளின் பங்களிப்பினாலும் ஊட்டம் பெற்றுள்ளதென்பதை நாம் மறந்துவிடமுடியாது.

பிரான்சு நாட்டின் தனித்தன்மை

மொழி அளவில் ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடத்தில் பிரெஞ்சு மொழி இருப்பினும்,  இலக்கியம் தத்துவம் ஆகிய துறைகளில்  உலகச் சிந்தனையில் பிரெஞ்சு மொழியின் பங்களிப்பை உதாசீனப்படுத்து தல் இயலாது. இவ்வெற்றிக்கு அடிப்படையில் உள்ள வலுவான காரணங்கள் பல. நூற்றாண்டுகளைக்கடந்து இன்றுவரை பொறுப்புடனும் அக்கறையுடனும் ஆட்சியாளர்களின் குறுக்கீடின்றி செயல்படும் பிரெஞ்சுமொழி நிறுவனம்,அதனை வழிநடத்தும் மொழி அறிஞர்கள் ; உறுதுணையாக இருந்துவரும் அரசின் கலை இலக்கிய பண்பாட்டுத் துறை ;  படைப்பாளிகளை, இலக்கிய ஆளுமைகளைப் போற்றும் அரசாங்கம்ம ;  தரம் வாய்ந்த நூலகங்கள், பதிப்பகங்கள், படைப்புத்துறையின் பல்வேறு பங்குதாரர்களிடையே  பாலமாக இயங்கும் ஊடகங்கள், நாட்டின் கண்ணியமும் பெருமையும் பொருளியல் வளர்ச்சியில் மட்டுமல்ல கலை இலக்கியத்தையும் உள்ளடக்கியதென நம்பும் பெருவாரியான மக்கள் என வரிசைப்படுத்த முடியும். அவற்றில் ஒன்றிரண்டை அடிக்கோடிட்டும் சொல்லவும் வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட ழூல்ஸ்ஃபெரி  சட்டம் அனைத்துச் சிறார்களுக்கும் கல்வியை இலவசமென உரைப்பதும், அதைக் கட்டாயமென வற்புறுத்துவதும் ஏட்டுச்சுரக்காய் மொழியில் அல்ல, இன்றுவரை இம்மி அளவும் பிசகாது அரசு, அதனை ஓர் தார்மீக க் கடமையாக நிறைவேற்றிவருகிறது. நாட்டின் வரவு செலவுத் திட்ட த்தில் 22 விழுக்காடு, கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கென ஒதுக்கி சடங்காக அன்றி முறையாக அதனை பயன்படுத்தவும் செய்கிறது.. அனைத்திற்கும் மேலாக கலை, இலக்கிய துறை அமைச்சு இங்கு காலம் காலமாக அத்துறைசார்ந்த மனிதர்களிடத்தில், வல்லுனர்களிடத்தில் ஒப்படைக்கபடுகிறது.

இயல்பாகவே விடுதலை மனங்கொண்ட பிரெஞ்சு மக்கள்,  கலை இலக்கியத்திலும் அம்மதிரியான உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இம்முயற்சிகளை ஓவியம், சிற்பம், இசை யென பல துறைகளிலும் காண்கிறோம். இலக்கிய தேவதச்சர்களும் பரிட்சார்த்த முயற்சிகளுக்குத் தாங்கள் விதிவிலக்கானவர்களல்ல என்பதைக் காலந்தோறும் தங்கள் படைப்பின் ஊடாக நிரூபித்துவருகிறார்கள். இவ்விலக்கிய கட்டுமானங்கள்  படைத்தவனின் மனப்புரிதலுக்கேற்ப பெயர்களைச் சூட்டிக்கொண்டன. ஏற்றலும் நிராகரித்தலும் பிரெஞ்சு படைப்புலகில் புதியவை முளைவிடவும், வளர்ந்து தழைக்கவும் காரணமாயின. கடந்த காலத்தை நிகழ்காலம் நிராகரித்துள்ளது,  என இதனை விமர்சிக்க முடியுமா என்றால், அப்படி விமர்சிக்க கூடாது என்பதுதான் உண்மை. ஒரு வீட்டின் நிர்வாகத்திற்கு அந்தந்த காலத்திற்கேற்ப பொறுப்பேற்கிறவர்கள், அவரவர் சூழலுக்கேற்றக் கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். பாட்டன், தந்தை, மகன் என் நிர்வாகப்பொறுப்பேற்பவர்கள்  காலத்திற்கும்,  சூழலுக்கும், திறனுக்கும் ஏற்ப நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம். வழிமுறை எதுவாயினும் குடும்பத்தின் பாரம்பர்யபெருமையை தக்கவைப்பதும், முன்னோக்கிக் கொண்டு செல்வதும் மட்டுமே அவர்களின் இலக்கு. அதை பிரெஞ்சுக்காரர்கள் சரியாகச் செய்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நிறைய இஸங்களை பிரெஞ்சு இலக்கியத்தில் சந்திக்கிறோம், அவற்றை நாம் இத்தொடரில் காணலாம். பட்டியல் நீளமானது, இச்சோதனை முயற்சிகளின் பொதுவானப் பலன் பிரெஞ்சு இலக்கியத்திற்கும் கலைக்கும் பெருமை சேர்த்திருக்கிறதென்கிற இன்றைய உண்மை.

இடைக்காலத்திய படைப்பிலக்கியவாதி பிரான்சுவா லியோன் ஆகட்டும், மானுடவியல் வழிவந்த கவிஞர் பிரான்சுவ ரபெலெ ஆகட்டும், பதினேழாம் நூற்ராண்டின் சமயம், சமூக நெறிமுறைகளில் அத்துமீறலைப் போற்றிய போகிகள் ஆகட்டும், உயர்ந்த கோட்பாடு, மேட்டுக்குடுடி மக்களின் வாழ்வியல் , தேர்ந்தமொழி தொன்மவியல் கோட்பாட்டாளர்கள் ஆகட்டும், பின்னர்வந்த பகுத்தறிவுவாதிகளாகட்டும்  இப்படி அனைவரையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்றைய பின்-பின் நவீனத்துவம் வரை முக்கிய இலக்கியவாதங்களையும் அவற்றை முன்னெடுத்தவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் இப்பகுதியின்  நோக்கம்

ஆஹா (தேர்தல்) வந்திருச்சி – 2

1938 டிசம்பர் 16….

  வாக்களித்த நூதனங் கேளும், பேதகர் சென்று

  வாக்களித்த நூதனங் கேளும்

  போக்கரெல்லாம் ஒன்றுகூடி

  பொதுக்கொலேழினை நாடி

  வாக்களிக்காபேரைத் தேடி

  மண்டையை உடைத்து ஓடி

  வாக்களித்த …

  குடிசையைக் கொளுத்தி னோரும்

  கோட்டைக்குப்பம் மேவினோரும்

  குடித்துத் திருடினோரும்

  கூடலூருக்குக் கோடினோரும்

  வாக்களித்த….

  வந்ததோ ஒரு நூறுபேரே

  வாக்கோ முப்பது முன்னூரே

  இந்தவித செய்தபேரே

  எல்லாஞ் செய்வர் பெரியோரே

  வாக்களித்த நூதனங்கேளும் !

 கடைத்தெரு மூலையில் நின்று பாடிக்கொண்டிருந்த கோமாளியைச் சுற்றி ஒரு சிறுகூட்டம்.

– இங்கே என் கடைமுன்னால வேண்டாம். அவனை அடித்து விரட்டுங்கப்பா. பல்லை இளித்துக்கொண்டு என்ன வேடிக்கை – சத்தம் போட்டார் செட்டியார். நெற்றியிலும் கழுத்து மடிப்புகளிலும் சுரந்த வியர்வையை ஈரிழைத் துண்டால் அழுந்தத் துடைத்தார். பூணூலில் முடிந்திருந்த சாவிக்கொத்து இடம்பெயர்ந்து பானை வயிற்றில் முடிச்சிட்டிருந்த தொப்புளில் திரும்ப விழுந்தபோது சலங்கைபோலக் குலுங்கியது. மதிய உணவை உண்டுமுடித்த கையோடு கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்தார், இட துகை விரல்கள் பிடியில்  பனை மட்டை விசிறி.

செட்டியார் கோமாளியை எதற்காக ஏசுகிறார் என்பது அரசப்பனுக்குத் தெரியும். பைத்தியக்காரன் ஏதோபாடுகிறான் நமக்கென்ன வந்தது எனச் செட்டியாரால்  அலட்சியப்படுத்த முடியாது.  கோமாளியின் பாடல் டேவிட் ஆட்கள் காதில் விழுந்தால், பாடுகின்ற கோமாளி மட்டுமல்ல காதில் வாங்கும் மனிதர்களும் பந்தாடப்படுவார்கள். « ஆனால் இப்படி எத்தனைநாளைக்கு இவர்கள் அட்டூழியத்தைச்  சகித்துக்கொண்டிருப்பது. ஏதாவது செய்தாலொழிய அவர்களின் கொட்டம் அடங்கப்போவதில்லை » என எண்ணியபடி வேகமாக நடந்தான். பசித்தது. காலையிலிருந்து பட்டினி.

அரசப்பன் வீடு காக்காயன் தோப்பிலிருந்தது, மனைவி, பிள்ளைகள், வயதான தாய் என்று ஐந்துபேர்கொண்ட குடும்பம். தகப்பனுக்குக் கள் இறக்கும் தொழில். நித்தம் நித்தம் தலைக்கயிறு,பெட்டி, பாளை சீவும் கத்தி எனச் சுமந்து மரமேறி, பாளையைச்  சீவி, கவனமாய்க் கலயத்திலிட்டு இறங்கிவந்து பசியாறும் தொழில். « இன்னும் எத்தனை காலத்திற்கு உயிரைப் பணயம் வைத்து மரமேறி வயிறைக் கழுவறது. உன் சந்ததிக்காகவாவது விடிவுகாலம் பொறக்கட்டும். ஆலைவேலக்குப்போ, அல்லாங்காட்டி சைகோன் அப்படி இப்படின்னு சொல்றாங்களே போயிட்டு வாயேன் »  என வேலாயுதக்  கிராமணி சொன்னதுல நம்ம அரசப்பனுக்கு வாய்த்தது ஆலைவேலை. பத்துவருடமாக சவானா ஆலையில் தறி ஓட்டும் தொழிலாளி. உத்தியோகம் நிரந்தரமானதும், தமக்கை மகள் பர்வதத்திற்கு மூன்று முடிச்சுப் போட்ட சூட்டோடு இரண்டு பிள்ளைகள். எந்தக் குறையுமில்லை சந்தோஷமாகத்தான் வாழ்ந்தார்கள்.ஒரு முறை மேஸ்திரியிடம் முறைத்துக்கொண்டான். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. போனவருடத்தில்  புதுச்சேரி ஆலைகளில் ஊதிய உயர்வு மற்றும் பிற காரணங்களை முன்வைத்து நடந்த போராட்டம், துப்பாக்கிச்சூடு ஆள்குறைப்பு என முடிந்தபோது, உத்தியோகத்தை இழந்தவர்களில் நம் அரசப்பனும் ஒருவன். கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கும் ரெண்டு கொடுமை வந்து திங்குதிங்குன்னு குதிக்குது என்கிற கதை நம்முடைய  அரசப்பன் விஷயத்தில் நிஜம்.  நகராட்சித்  தேர்தலை முன்வைத்து மகாஜன சபை ஆதரவாளர்களுக்கு எதிராக பிரெஞ்சு  இந்தியக் கட்சியினர்  கட்டவிழ்த்து விட்ட வன்முறையில் அரசப்பன் கூரைவீடு தரைமட்டமானது, எரிந்த வீட்டோடு  பெண்டாட்டி பிள்ளைகள், தாய் என அவனுக்கென்றிருந்த உயிர்ச் சொத்துகளையும் தீ அடித்துப் போனது.

வீராம்பட்டணம் சாலையைப் பிடித்து அரசப்பன் நடந்தான். குடும்பத்தை அரசியல் கலவரத்திற்குப் பலிகொடுத்தபின்னர், நிரந்தர வாசத்திற்கு எதுவுமில்லை.   பகல் நேரங்களில் கடைத்தெருப்பக்கம் ஒதுங்குவான்,  கையை ஏந்துகிறபோது, காலணா அரையணா கொடுக்கிறார்கள். மதிய உணவென்பது பெரும்பாலுமில்லை. காக்கயந்தோப்பிற்குத் திரும்புகிறபோது இவன் வீட்டுக்கு எதிர்வீட்டுவாசியான சொர்ணம் அக்கா மறக்காமல் அழைத்துச் சோறுபோடுவதுண்டு. வழியில் ஏதாவது கோவில்கள் தென்பட்டால், கும்பிடத் தோன்றினால், மகராசி சொர்ணத்திற்காக வேண்டிக் கொள்கிறான்.

பெரியவர் மாசிலாமணி எதிரில் வந்தார். விறுக் விறுக்கென எதிரில் வரும் நபரை எட்டி உதைக்க விரும்பியவர்போலப் பாதத்தை உயர்த்திவைப்பார். கால்களில் இலாடம் கட்டிய எருமைத் தோல் செருப்புகள், பூமியைத் தொடும்போது இரணியகசிபோவெனச் சந்தேகிக்கத் தோன்றும். வேட்டியை மடித்துக்  கட்டி இருந்தார், மேலுக்குச் சட்டை இல்லை, தோளைச் சுற்றிய துண்டு மார்பை மறைக்க வெட்கப்படும். மார்புக்குழியிலும், காம்புகளைச் சுற்றியும் கோரைபோல ரோமம். முகத்திலும் சவரம் செய்யாமல் மூக்கு, நெற்றி, கண்களுக்குவிலக்களித்து தரிசு நிலத்தை ஆக்ரமித்து மழை காணாத புற்கள்போல ரோமம். தொப்புளுக்குக்கீழ் அடிவயிற்றின் மெல்லிய மடிப்புகளை ஒட்டியும் அதற்குக் கீழும் இரண்டு சிப்பங்கள். முதல் சிப்பம் கோரைப்புல்லாலான  அரைப்பை. அதில் வெத்திலை, களிப்பாக்கு, வாசனைச் சுண்ணாம்பு, குண்டூர் புகையிலை, சிறியதொரு பாக்குவெட்டி – இப்படி எல்லாமும் உண்டு. அதற்குக் கீழுள்ள சிப்பம் மேலேயுள்ள சிப்பத்தைவிட அளவில் பெரியது. அது அவருடைய அண்டம். « உங்களைப்  பெரிய மனுஷன்னு  சொல்றாங்களே இதுக்குத்தானா ? » என ஒருமுறை அரசப்பன் விளையாட்டாகக் கேட்கப்போய் ஊர் முழுக்கப் பரவி விட்டது. அவரே ஒருமுறை அரசப்பனை அருகில் அழைத்து, « எனக்கு நாலு பையன், ஆறு பொண்ணு, எல்லாம் இதனுடைய மகத்துவம்தான் புரிஞ்சுக்க » என வேட்டியை அவிழ்த்தபோது, பதறிவிட்டான்.  அப்போதைக்கப்போது, « ஏதாவது சாப்பிட்டியா, வீட்டுக்குப் போ, இன்றைக்கு கிருத்திகைக்கு படைச்சோம். உனக்கு எடுத்துவச்சிருக்காங்க. » என உரிமையுடன் உத்தரவிடுகின்ற ஆசாமி.

கண்களுக்கு மேல் குடைபிடிப்பதுபோல உள்ளங்கையைக் கவிழ்த்தி  நிறுத்தி, « யாரு அரசப்பனா ? உன்னைக் காலையிலிருந்து தேடறோம் எங்க போயிட்ட ? » என வினவினார்.

 அரசப்பன் தலையைச் சொரிந்தான். « சரி மாமா », எனத் தலையாட்டிவிட்டு  நடந்தான். இருபது நிமிட நடைப்பயணத்திற்குப் பிறகு வீட்டுமுன்பாக நின்றான். பெரிய தூலகட்டு வீடு. இவன் தெருவாசலில் பாய்போட்டு படுத்திருந்தான். மனைவி அம்புஜம் தன் பிள்ளைகளுடன் உள் நடையில் படுத்திருந்தாள். தாய் அடுப்பங்கரையில் முந்தானையை விரித்துப் படுத்திருந்தார். நள்ளிரவைக்  கடந்த நேரம். மற்றொரு சாதிக்கார இளஞன் ஓடிவந்தான். தொழிற்சங்க ஆட்களை டேவிட் கட்சிக்காரங்க தடி, கம்புகளுடன் தாக்கறாங்க, நாம அதைத் தடுக்கனும் » என்றான். அரசப்பன் வீட்டிலிருந்த பாளைசீவும் கத்தியைக் கையிலேந்தியபடி அவனுடன் ஓடியவன் திரும்பியபோது, வீடு எரிந்துசாம்பலாகி இருந்தது. ஒரு ஜீவன் கூட மிஞசவில்லை.

வெகுநேரம் குத்துக்காலிட்டுத் தலையைப் பிடித்தபடி வீடிருந்த தழும்பைப் பார்த்து அலுத்து, கால்களைப் போலவே கண்களும் மரத்திருந்தன. ஆழ்ந்த நெடுமூச்சுடன் எழுந்து நின்றான். தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினான். பெரியவர் மாசிலாமணியின் நாலாவது மகன் அருணாசலம்.

– என்னண்ணே, அப்பாவைப் பார்த்தியா, வீட்டுப்பக்கம் வருவேன்னு உன்னை எதிர்பார்த்திருந்தேன்.

– ஏன்,என்ன விஷயம் ?

– இதைப்பிடி.

– என்னது ?

– பிரிச்சுப் பார்.

பொட்டலத்தைப் பிரித்த அரசப்பன் மூர்ச்சை ஆகாத குறை. கைத்துப்பாக்கி.

– சந்திரநாகூரிலிருந்து வந்த சரக்கு, பத்திரம். கவர்ன்மென்ட்டையும் சிப்பாய்களையும் துணைக்கு வச்சிக்கிட்டு அடியாட்களோட அவங்க பண்ற அட்டூழியத்தைக் கேட்க ஆளில்லைங்கிற தைரியத்துல ஆடறானுவ.   அவனுங்க கொட்டத்தை அடக்க நாமளும் ஏதாவது பதிலுக்குச் செய்தாகணும். அதை நீதான் செய்யணும். பெத்தவ, பொண்டாட்டி, புள்ளகள்னு மொத்தக்குடும்பமும் தீயில வெந்திருக்கு, சமந்த மில்லாத எங்களுக்கே நெஞ்சு கொதிக்குதுன்னா, நீ எப்படி நாளத் தள்ளுவ. காதக் கொடு !

அரசப்பன் காதில் திட்டத்தைக் குசுகுசுவென்று ஓதிவிட்டு, புரிஞ்சுதா எனக் கேட்டான் அருணாசலம். இவன் தலையாட்டினான். தலையாட்டிவன் கையில் இன்னொரு பொட்டலத்தைத் திணித்தான், தொடர்ந்து «  காரியம் முடிஞ்சதும் கொஞ்ச நாளைக்குத் தலைமறைவா இருந்துட்டு வா. அதுக்குத்தான் இந்தப்பணம். கரியமாணிக்கம் போயிடு, அங்கிருந்து கூடலூர். பிரச்சனை தணிஞ்சதும் திரும்பலாம், எப்ப வரணுமுன்னு தகவல் அனுப்புவோம், அப்ப  வந்தால் போதும். 

மறுநாள்  பிரெஞ்சிந்தியர் கட்சியைச் சேர்ந்த செல்வராஜு சுடப்பட்டார் என்ற தகவல் அவரைச் சார்ந்த மனிதர்களிட த்தில் பெரும் புயலைக் கிளப்பியது, தடி,கம்பு, திருக்கைவால் எனக் கையிற்கிடைத்த ஆயுதங்களுடன் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் பகுதிகளில் மீண்டும் தாக்குதல்கள், கலவரமென்று புதுச்சேரி அல்லோலகல்லோலப்பட்டது.  

———————————

சைகோன் – புதுச்சேரி (நாவல்)

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

சென்னை

துகினம் (நாவல்)

( திறனாய்வோ மதிப்புரையோ அல்ல, வாசிப்பு அனுபவங்கள்)

                                                                               நாகரத்தினம் கிருஷ்ணா

மனிதர் வாழ்க்கை ராஜப்பாட்டையாக அமைவதில்லை: கல்லும் முள்ளும், காடும் கரம்பும், செடியும் புதரும், நரியும் நாயும் குறுக்கிடும் செப்பனிடப்படாத வழி. மனிதர் அனைவருக்கும் வாழ்க்கைப் பாதையில் ஆரம்பமும் முடிவும் ஒன்றென்கிறபோதும், அவரவர் கால்களுக்கு விதிக்கப்பட்ட தடங்கள் வேறு, காட்சிகளும் ஓசைகளும் வேறு வேறு. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் நம் ஒவ்வொருவருக்கும் துகினம் நாவல் பாத்திரங்கள்  ஆதவன், சங்கரன், சாத்தன் ஆகியோர் மூணாற்றை எட்ட தேர்வு செய்த களவுப்பாதை ஏதோ ஒருவகையில் பொருந்தும்.

‘துகினம்’  நாவலா அல்லது ஒரு கட்டுரை நூலா? என்றொரு கேள்வி இந்நாவலை படித்தபின்னும் எழக்கூடும். இன்றையச் சூழலில் நாவலுக்கென்று எந்தவிதக் கொள்கையோ கோட்பாடோ இல்லை.  கடவுள் வாழ்த்தில் ஆரம்பித்து, இறுதியில் திரை விழும்போது சுபம் எனறு முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற நியதிகள் கொண்ட கால சகாப்தத்தில் நவீன இலக்கியங்களில்லை. இன்றுங்கூட  தமிழில் பாமரத்தனமான இதுபோன்ற எதிர்பார்ப்புகள் இல்லாமலில்லை. இரண்டரை மணி நேர படத்தில் ஒரு முழ உயரமுடைய  நாயகன் ஒன்றரை  முழம் உயரமுடைய நாயகியிடம் ஜொள்ளுவிட்ட நேரம்போக, நான்கு டூயட்டுகள், ஆறு சண்டைகள் என்று பார்த்து பழகிய பெருவாரியான மக்களைக்கொண்ட தேசமில்லையா? அந்த ஈரம் உலராமல் கண்களில் இருக்கத்தான் செய்யும்.

‘துகினம்’ அண்மையில் வெளிவந்ததொரு புதினம்; நாவலின் ஆசிரியர். ஜிதேந்திரன். தேசத்தில் ஏதோவொரு மூலையில்  சம்பாதித்துக் களைத்து வீடு திரும்பியதும்,   அவரவர் தன்மைக்கேற்ப மனைவி  மக்களிடம் உறவாடி, வாழ்க்கைப் படகைச் செலுத்தும் மனிதனுக்கும்; கோடிகோடியாய் கொள்ள அடித்த படத்தில் குடும்பத்திற்குச் சேர்த்ததுபோக, கொஞ்சம் கிள்ளி மக்களுக்குப் பிச்சை போடும் ஆட்சியாளனுக்கும் மன உளைச்சல்களின்றி மணித்துளிகள் நகருமாயின் இன்றைய தேதியில் ஆச்சரியமான விஷயம்.

 “அவனுக்கு  ஆண்கள் என்றாலே பிடிக்காது.அவனுங்களும் அவனங்க மூஞ்சியும். என்ன உருவம்டா இவனுங்க;  குட்டையா.. தொப்பையா.. நெட்டையா.. ஒல்லியா, கறுப்பா, அலங்கோலோமா,  முகத்தில் கொஞ்சம்கூட கருணையே இல்லாம ;  ஒரு ஒழுங்குக்குள்ளே வராத முகங்கள். சரி செயல்களிலாவது இந்த உலகத்தைச் சரி பண்ணியிருக்காங்களா … இல்ல, அதுவும் இல்ல . எப்படியோ நல்லா இருக்க வேண்டிய உலகத்தை இப்படி ஆக்கி வச்சிருக்காங்க. இப்படியாவது விட்டு வச்சிருக்காங்களேனுதான் சகிச்சிக்க வேண்டியிருக்கு. வாழ்வின் அத்தனை அகோரங்களுக்கும் சூத்ரதாரிகள். சுயநலம், சாதி, மதம், மொழி, அரசியல், அணுகுண்டு, நாடு…னு அவங்க இந்த உலகத்தை வாழ்வதற்குப் பொருந்தாத ஒன்றா மாத்தி வச்சிருக்காங்க……..இவங்களுக்கு மத்தியில் வாழ்வதற்குப் பதிலா மிருகங்கள் கூட வாழ்ந்திட்டுப்போயிறலாம்.  ஆண்களும் பெண்களும் மிருகங்கள் தானே ….. மக்கள் நடமாட்டமே இல்லாத காடுதான் வாழறதுக்குச் சரி..”

       … என நாவலின் தொடக்கத்தில் கசப்புச் சொற்களை உமிழும் ஆதவனும் ;  அவன் « எதையாவது தொட்டுப் பிடித்தபடி, அசைத்தபடி , இழுத்தபடி….செடியின் அசைப்பில் மின்மின்ப்பூச்சிகள் பறக்க ; அவன் நடை உரசல் கேட்டு தவளை பினாத்த, படுத்துக்கிடந்த பாம்பொன்று தலையைத் தூக்கிப்பார்த்து கண்கள் பளபளக்க, நாக்கை ஒருமுறை வெளியே நீட்டி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளும் பாம்பையும் ; மனிதர் மிச்சம் வைத்திருக்கிற காட்டை, மலையை ; பறவைகளும் விலங்குகளும் மிச்சமிருக்கிற பூமியைப் பெற்ற மூணாறும்; நாவலின் பிரதான பாத்திரங்கள். உண்மையில் நாவாலசிரியரின் நோக்கம் மனிதர்களைக் கொண்டாடுவதல்ல, மனிதர்களே இல்லாத காட்டையும், நிசப்த மொழியையும், இயற்கையின் மௌனத்தையும், இயற்கையின் இசையையும் கொண்டாடுவது.

ஆதவன் ஒரு கொலை குற்றவாளியாகக் கருதப்பட்டுக் காவல்துறையினரால் தேடப்படுபவன் ; ஒரு மழைநாளில் பெருவெள்ளத்தின் காரணமாக அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கொருபக்கம் சிதறுகின்றனர். இந்த இயற்கை விபத்தில் காணாமற்போன அவன் மகள் குழந்தை தேவயானி, மூணாரில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறாளென கேள்விப்பட்டு அங்கே செல்கிறான். குற்றவாளியின் இந்த இரகசியப்பயணத்தில் அவனோடு எதிர்பாராதவிதமாக வழித்துணையாக சேர்ந்துகொள்ளும் நபர் பெரியவர் சங்கரன். ஆதவனைப் போலவே, பெரியவர் சங்கரனும் தன் ஓடிப்போன மகளின் பிரிவால் வாடும் மனிதர்.  இவர்களோடு இணைந்த மூன்றாவது நபர், ஆதவன் நன்கறிந்த சங்கராம தீரன் என்கிற சாத்தன். ஆதவனும் சாத்தனும் ஞானமட அங்கத்தினர்கள்.  அம்மடத்தின் குரு போதித்ததைத் தங்கள் வாழ்க்கை நெறியாகப் பின்பற்றுகிறவர்கள். இந்த சாத்தன் ஆதவன் குடும்பம் பறிகொடுத்திருந்த குழந்தையின் தற்போதைய காப்பாளர் பற்றிய தகவலை அறிந்தவர்.

மூணாறுவரை இவர்களோடும் கதையும் பயணிக்க வேண்டி இருப்பதால் நாவலாசிரியர் வழித்தடத்தில் குறுக்கிடும் ஊர்கள் அவற்றின் தல வரலாறு, ஆலயங்கள், சர்ச்சுகள், பெருதெய்வங்கள், சிறுதெய்வங்கள் ;  காபி, தேயிலை எஸ்டேட்டுகள், அவற்றில் வேலைசெய்யும் பெண்கள் அவர்களின் அரட்டைகள்; ஆறு, நீர்வீழ்ச்சி ; ஈட்டி, ரப்பர், தேக்கு சந்தணமரங்கள், நரிக்கொட்டை,மலைவேம்பு ; மிளா, கரடி, மான்கள், யானை என குறுக்கிடும் விலங்குகள் ; 1954ல் நடந்த மொழிப்போராட்டத்தகவல்கள், பழைய மூணாறில் 1984ல் நடைபெற்ற தொங்குபாலம் விபத்து பற்றிய  செய்திகள் ; மூணாற்றின் பூவியியல், அதனைச் சுற்றி எழுதப்பட்ட சொல்லப்ட்ட புனைவு, வரலாறென இம்மனிதர்கள் ஊடாக ஆசிரியர் மூணார் பற்றிய ஒரு முழுமையான  எழுத்துச்சித்திரத்தை இந்நாவல் ஊடாகக் கொடுக்க முனைந்திருக்கிறார்.

இத்தகவல் செறிவுகளுக்கிடையில்

« மூவரும் கிளம்பத் தொடங்கினார்கள். அடுத்தது பெரியவார எஸ்டேட். ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் உன்னிப்பூக்கள்  மலர்ந்திருந்தன ….ரோடு மட்டுமல்ல .. பார்க்கிற திசையெங்கும் தேவ குலைசெடிகளும், உன்னிப்பூக்களுமாக. நீலம், ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என்று கொத்து கொத்தாக. மிகச்சிறிய பூ. » என்பதுபோன்ற காட்ச்சிகளையும் ஆங்காங்கே ஆசிரியர் கண் முன் நிறுத்துகிறார்.  இது முதற்புனைவு, ஆசிரியரின் அடுத்தடுத்த புனைவுகள் கூடுதல் கவனம்பெறும்.

———————————————————————-

The fontaine or the Ayi Mandap

The fontaine or the Ayi Mandap

  • Dr. A. Ramadas

(The magnificent white structure that stands in all its majesty in the middle of the ‘Bharathi Park’ in Puducherry city has been alluded to with many stories of its history. One such story says that the structure was built on the order of Napoleon III, who was impressed with the philanthropic acts of  ‘Ayi’ of Mutharaiyarpalayam, who dug up a pond and constructed a well to provide drinking water to the people by demolishing her ‘palace’. Only a few informed people know that it was the structure erected for a water tap, that supplied drinking water, brought from the well of Mutharaiyarpalayam. Here is the true story of the structure.) 

How it all began The era of French India began on 4 February 1673, when Bellanger De Lespinay landed on the coast of Puducherry. The land was purchased by the French a year earlier from Sher Khan Lody, the ruler of the South Carnatic under the Bijapur Sultanate. The French began their trading activities in Puducherry with the arrival of François Martin in 1674.

During the times of  Governors Dumas (1735-1742)  and Dupleix (1742-1754), the city was fully developed with a 30 ft. high wall with 13 bastions surrounding it on all the four sides. The city was divided by the Big Canal into the French quarters on the east and the Native quarters on the west. (They were called ‘white town’ and the ‘black town’ by the French, who later regretted and desisted from calling the parts of the city on racial lines.)

In the 18th and the 19th century Puducherry city, there were a large number of wells made of bricks. To be specific, the French quarters of the city had 276 wells and the Native quarters 1878 wells.1 Generally, the water of the wells with a few exceptions, was not potable; they were more or less brackish. As the water from the wells of the city was not potable, it was used for cooking and washing purposes. Though the rice cooked with the water was yellow in colour, the majority of the people had to use it.2  The fact that some native women used to go outside the city to fetch drinking water is found in the ‘Diary of Irandaam Vira Naicker’.3

The natives, either out of carelessness or poverty, drank the well water to the great detriment of their health. They often fell prey to intestinal disorders, diarrhoea, and a host of other illness. To escape from such ailments, the Europeans drank only the water brought from Mutharaiyarpalayam, situated 6 km. south of the city on the road to Valdavour. To ensure that the water was from Mutharaiyarpalayam they insisted on the certificate issued by the caretaker of the well.4 

                                                          Picture showing the sandy mound

Puducherry was one of the most privileged places not only in India, but also in many other countries, in respect of the excellence of its drinking water. The water came from a well located by the side of a pond at the foot of a sandy mound in the village of Mutharaiyarpalayam.5  There was a spring in the well and the pond, both of which never dried up. The source of the spring was the Lake Ousuteri, which was located to the west of Mutharaiyarpalayam at a higher place than its surroundings. The sandy mound ran between Ousuteri and Mutharaiyarpalayam. The mound was made up of red soil. It started at about 2 km. from Villianur and passed to the north-west of Mutharaiyarpalayam, reached Gorimedu and extended till Lawspet. It was of 250 m. high and its length was about 12 km. It seemed that Nature purposely made this mound in order to provide the inhabitants of Puducherry city the water they needed.6

 The water was well filtered by the sand and the pebbles of the mound, through which it passed and became pure. The water was extremely good. It was colourless,

                                              The well and the pond of Mutharaiyarpalayam

transparent, odourless and could be kept for a very long time without alteration. It was of a pleasant flavour, dissolving the soap easily and cooking the vegetables well.7 

Legend

There is a legend about the pond and the well at Mutharaiyarpalayam. The western wall of the fontaine contains two inscriptions of the legend, one in Tamil and the other in Latin. Though the contents of both are the same, there are a few differences in the information provided. The Latin version, when translated into English, reads:

“At one of the most remote times, King Kichenarayer was walking one evening with his Minister Appaziayer, when he saw the house of the bayadere ‘Aye’ splendidly illuminated. Believing himself to be in front of a temple, he prostrated himself; but, soon recognizing his error, he ordered the demolition of the house and the digging of a pond at the very place. It is that of Mutharaiyarpalayam. At her earnest prayers, the bayadere ‘Aye’ obtained permission to build a well at her own expense and to give it her name. It is also said that it is to the bayadere Bangari, we owe the bangaravaikal canal and her sister the bayadere Singari the lake of Bahur.”8

Whether the legend is true or not, there were a pond and a well in Mutharaiyarpalayam. The well is no more but the pond continues to exist with the name of ‘Ayi kulam’(Ayi’s pond).

The water from the well of Mutharaiyarpalayam fulfilled the drinking water needs of the Europeans in Puducherry city and also the needs of the ships that visited the city. The water was transported in barrels and big vessels in ox-drawn carts and sold in the city. The water of a 380 litre barrel cost 60 centimes9 (60 centimes = 0 .6 fr. = 2 ‘fanons’           = Re. ¼).

The well was at the head of the pond on the western side. It was made of a good masonry with bricks. The diameter of the well was 2.60 m. The parapet wall was of 0.60 m. above the ground. The depth was 4.30 m.10 It is not known when the masonry of the well was done. It might probably be at the time of Dupleix. Le Gentil, the Astronomer from France, who stayed in Puducherry for about two years, was the first to refer to the well in 1768.11

There were many attempts made by various Governors to conduct the Mutharai-yarpalayam water  to the city for the benefit of the inhabitants. Dupleix (1742-1754)                         is  credited   with   the  first  initiative  of   the  honourable   and   philanthropic   project. Unfortunately he could not succeed in his attempt.12 The second attempt was made by Law De Lauriston (1765-1777), who was the Governor when the French establishments were returned to the French in 1765. He wanted to revive Dupleix’s project in 1769. It is said that he had even drawn the funds to make the project as beautiful as it was useful. As the source was far away from the city, he thought that the enemy could easily break the canal in the times of a war and a siege. But, the main reason appeared to be the considerably high cost of building a canal for a length of 6 km.13

Therefore Law thought of taking water from a spring at the limits of Valdaour (probably, Poyé, i.e. Poyakulam near Pakkamudayanpet) about 2 km from the city. As it was found out that the water was almost of the same quality as that of Mutharaiyarpalayam, it was decided to take the water of the spring. The work of constructing the causeway or the dyke was started but it had to be stopped. One did not know whether the engineer entered into some wrong calculations in making the dyke or the pond was at a lower level than the city, a mechanical device like a motor pump was required to raise the water into the dyke.14  Considering the cost of the device, the plan was dropped.

It seems that the third attempt was made in 1789, when the implementation of the project commenced again. The pipes were made and the ground was prepared,15 but nothing more is known.

Project of Spinasse

The Colonial Engineer, who designed and constructed the fontaine, now called as the Ayi Mandap might have been inspired by the plan conceived in 1820 by Spinasse, Colonial Engineer at that time.

Puducherry and the other dependencies were handed over back to the French by the English in 1816 after nearly a quarter of a century’s third occupation since 1793. The city and the surroundings were in shambles. The buildings, the bridges, the reservoirs, etc. were in need of repairs. Under those conditions, Spinasse was sent to Puducherry. He brought to India new methods of the modern administration. His zeal prompted the following comment from Governor Comte Dupuy:

“. . . a zealous Engineer could in some respects be compared to those renowned physicians, who come from afar to teach us that our health, which we thought to be fairly good, is threatened with an imminent alteration, if we postpone submitting to a diet, very austere . . .”16

 Spinasse’s proposed location of the fontaine

It was the turn of Spinasse to make the fourth attempt. He, among his other works, planned and submitted the estimates for taking water from the well of Mutharaiyar- palayam through a brick-pipe to the city and erecting a fontaine in memory of the great son of France, Joseph François Dupleix. He planned to construct the fontaine in a big way using some of the granite columns, which were believed to be brought from Gingee by Dupleix.  He was convinced that the project would be both pleasant and useful to Puducherry.17  Unfortunately,   the  design  of  the  monument  was  not  found.18  Only  an iconographic document indicating the projected location of the fontaine is available. In the diagram, the proposed location (drawn in circles) is near the promenade, south east of the present fontaine.

In addition, the proposal for the project with the signature of Spinasse submitted on 1 July 1820 to the Governor, who sent it along with the other proposals to France for approval, is also accessible. It contains the details of the 8 m. high granite columns with big tops, lying scattered in the Government Square. The columns belonged to the heirs of Dupleix as their cost was borne by him and not by the Company. Spinasse wanted to utilize 20 of those columns in the construction of the monument. The design of the proposed monument caught the attention of  Sgauzin, Inspector General of Maritime Works in France, who observed: “The project of the fontaine is remarkable for its architecture in the Indian style and would do honour to the artists in Europe.”19

Spinasse declared that the intention of Dupleix to give Puducherry a monument, which did honour to his nation, the honourable place his name occupied among the Governors, and the memories attached to his administration had led him to propose that the fontaine be named  Fontaine Dupleix.

Spinasse contended that since the water level at the source was 19 ft. or 6.18 m. above the level of the Government Square the taps could be fixed at the height of 2 or      3 m. or even higher. 

The total estimate amounted to 18,000 fr., out of which 14,116.37 fr. was for the purchase and the laying  of the pipes and the rest, 3,883.63 fr. for the construction of the fontaine. To lessen the burden on the Government, Spinasse suggested that concessions might be made to the individuals willing to pay 6,000 fr. and get 1½ cubic meter of water free daily. He also proposed that the water could also be supplied to the ships at the rate of 6 or 7 fr. a barrel.20

But, what appeared to be a necessity for the health of the city to Spinasse was considered a luxury temptation by Governor Dupuy and the General Council of Puducherry. The project did not find favour in their eyes as they appreciated the things only by their utility and not by their brilliance or their novelty. The Administration did not consider the public fontaine an advantage, as the water of Mutharaiyarpalayam  was available in the city at cheaper rates. It objected to the project drawn by Spinasse, Colonial Engineer on three counts: 1. The cost would double when the project was completed; 2. the wastage of water due to evaporation on the way would be considerable; 3. the  fontaine in the Government Square would deprive the troops of the only place for their practice; it would also deny the Euroean population the place for their peaceful walk; moreover, the crowding of the people of all types at the fontaine might lead to disputes and verbal conflicts.21

However, Sgauzin, taken by the charm of the project, concluded that among those which the Governor had classified as luxury expenditure, the fontaine and the laying of a pipe from the only source available to bring drinking water, of which  the city was deprived of, were to be excepted.22

Although Sgauzin’s opinion was very favourable for the project, no funds were provided for it in the budget of 1821. The reasons for not carrying out the project could not be ascertained.23

Plans accomplished                                                                                                                    Fontaine

One had to wait for 65 years for the fifth attempt to be made by Governor Verninac Saint-Maur (1852-1857) on the Dupleix’s project under the inspirations of Louis Guerre, Colonial Engineer. The work on the construction of a fontaine in the middle of the Government Square, opposite to the Gouvernement, the residence of the Governor, and the water pipe from the well of Mutharaiyarpalayam was started in 1854 under the then Colonial Engineer Garriol. The fontaine rose rapidly.24 But, the laying of the pipeline was delayed considerably. It prompted Otteley, Major of the English Cavalry, who was on holiday to Puducherry, to remark: “Puducherry is a singular city, where one sees a fountain without water, a mint without coins and a cooler without ice.”25

The English man’s criticism was misleading about the intention of Verninac. The object of building the fontaine beforehand was not to obtain a vain satisfaction of the Governor’s self-esteem, but to remind of his successors their commitment to complete the project.

Pipeline

Verninac’s intention came true. The project of laying the pipeline to be made of bricks had some faults. Verninac’s successor, Durand d’Ubraye (1857-1863) ordered a new study of the project.

Finally, on the sixth attempt and nearly 10 years after the erection of the fontaine, the work of laying the pipeline started in 1863. Lamairesse, Colonial Engineer, drew up a new plan. The rectangular-shaped pipe was made up of bricks. Its internal measurements were 25 cm x 20 cm. The length of the pipeline was 5½ km. A part of the pipeline measuring 2,900 m. was built above the ground and the rest below it.26 

Two fontaines, a new one at the Central Bazaar and the one, which had been already-built at the Government Square were fitted with taps. As Mutharaiyarpalayam was located at a higher level than the city, the water flowed through the pipe without the help of any mechanical device due to gravity and reached the city. The water flowed from the two fontaines of Puducherry city in April 1863, when Bontemps was the Governor (1863-1871).27 

 The difference in height between the source and the fontaine at the Central Bazaar was only 3.888 m. and the slope obtained was not very significant as the distance covered was long. In spite of it, the flow of water in the pipeline was free and smooth.28  During the summer season, sometimes, when the water level in the well at the source dropped below that of the pipe, a boom was used to drive the water into the pipe.29

It may be noted that the French books and the documents refer to the monument as the  fontaine.  After 1954, we gave it the name of ‘Ayi Mandapam’, may be because of the inscriptions depicting ‘Ayi’ and the source of the water of the fontaine was ‘Ayi’s pond’. Had Spinasse got his own way, the fontaine might have been more spectacular and bigger proclaiming the Indian architectural eminence and the glory of Dupleix!

NOTES

1. Achille Bedier & Joseph Cordier, Statistiques de Pondichéry (1822-1824), Pondichéry, 1988, p. 45.

2. Le Gentil, Voyage dans les mers de l’Inde, Tome 1, Paris, 1779, p. 528.

3. Orsé, M. Gopalakitchenane, Irandaam Viranaicker Naatkurippu (Tamil), Chennai, 1992, p. 252.

4. Dr. Huillet, Contribution à la géographie médicalePondichéry In: Archives de Médecine Navale. Tome VIII, 1867,  p. 344. 

5. Ibid., p. 342.

6. Le Gentil, Voyage dans les mers de l’Inde, p. 528.

7. Dr. Huillet, Contribution à la géographie médicalePondichéry, p. 343.

8. Ibid., p. 342..

9. Achille Bedier & Joseph Cordier, Statistiques de Pondichéry (1822-1824), p. 45.

10. Louis Vernet, Le Développement de l’Inde Française In: Le Dépéche Coloniale Illustrée, 15 Sep 1907, Paris, pp. 221-222.

11. Le Gentil, Voyage dans les mers de l’Inde, p. 530.

12. Dr. Huillet, Contribution à la géographie médicale Pondichéry, p. 345.

13. Le Gentil, Voyage dans les mers de l’Inde, p. 549.

14. Ibid., p. 549.

15. Mireille Lobligeois, Un projet de Fontaine a Pondichéry en 1820 In: Revue Historique, Vol. 10, Pondichéry, 1972, pp. 85-86.

16. Ibid., p. 81.

17. Ibid., p. 83.

18. Ibid., p. 88.

19. Ibid., p. 91.

20. Ibid., p. 90.

21. Achille Bedier & Joseph Cordier, Statistiques de Pondichéry (1822-1824), p. 45.

22. Mireille Lobligeois, Un projet de Fontaine a Pondichéry en 1820, p. 90.

23. Ibid., 91.

24. Dr. Huillet, Contribution à la géographie médicale Pondichéry, p. 346.

25. Ibid., p. 346.

26. Louis Vernet, Le Développement de l’Inde Française, p. 221.

27. Dr. Huillet, Contribution à la géographie médicale Pondichéry, p. 346.

28. Louis Vernet, Le Développement de l’Inde Française, p. 221.

29. Ibid., p. 222.

அமிழ்தே வாழ்க, அன்பே வாழ்க : பேராசிய நண்பர் க.பஞ்சாங்கம்

                   நாகரத்தினம் கிருஷ்ணா

       நண்பர் க.பஞ்சாங்கம் இன்றொரு முதுமகன் ; 75 ஆண்டுகள் அகவையார். எனக்கது வயது சார்ந்தது அல்ல அறிவில், அனுபவத் தெளிவில், மொழியின் தேர்ச்சியில், கலை இலக்கியத்தின் மீதுள்ள காதலில், நித்தம் நித்தம் மொழித் திடலில் அவர் முயற்சிக்கும் சொல்லேறு தழுவலில், இதுவன்றி இங்கு விடுபட்ட பலபண்புகளில் அவர் முதுமகன்.   இப்பெருமகனாருக்குப் பலமுகங்கள் உண்டு.  இல்வாழ்வில் நல்வழி நிலைபெற்ற துணைவன்,  பெருமிதத்திற்குரிய தந்தை, பெருமைக்குரிய  தலை மாணாக்கர்களை பெற்ற பேராசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், தேர்ந்த  திறனாய்வாளர், அசலான இடது சாரி சிந்தனையாளர், பாசாங்கற்ற பகுத்தறிவுவாதி, அனைத்திற்கும் மேலாக இனிய நண்பர்.

எனக்கும் அவருக்குமான நட்பும் ஒரு நாயக்கர் வறலாறுதான். கி.ரா  என தமிழ் படைப்புகலம் கொண்டாடும் கரிசல் காட்டு நாயக்கரின் தீவிர அனுதாபியான பேராசிரியர்  பஞ்சுவின் அறிமுகம், வெங்கிட சுப்புராய நாயக்கர் எனும் பிரெஞ்சு பேராசிய நண்பரால், என்னுடைய கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி எனும் வரலாற்று புதினத்தால் வாய்த்தது.  இப்புதினம் குறித்த  திறனாய்வு ஒன்றை செஞ்சியில் புதுவை சீனு தமிழ்மணியின் நண்பர், தற்போது காஞ்சிபுரம் கல்லூரியொன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் ஜெ. இராதாகிருஷ்ணன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் பஞ்சாங்கம் நூலைக்குறித்து வைத்த கருத்துகள் அவருடன் நெருங்க வைத்தது. உலகில் மனிதமும் மனிதர்களும் அருகிவிட்டார்களோ என்ற அவ நம்பிக்கையில் வாழ்ந்தவன் ;  அன்று எனக்கு அறுபது வயது. இளமை வாழ்க்கை மிகக் கடினமானது. கல்லூரி நாட்களில் தீக்கதிர் இதழ், மார்க்ஸியம், திராவிடக் கட்சிகளில் ஆர்வம் என்றிருந்தது. இன்றைக்கு எந்த அரசியலும் எனக்கு உகந்ததாக இல்லை, எப்போதும் ஆளுகின்றவர்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பதும், பாதித்தவர் எவராயினும் அவர்பக்கம் துணை நிற்கும் உணர்ச்சிப்பிண்டமாகவும் உணருகிறேன். சட்டென்று கோபப்படவும் செய்வேன் மறுகணம் அதற்காக வருந்தி  எதிர்தரப்பில் நியாயமிருப்பின் மன்னிப்புக்கேட்கவும் தயங்குவதில்லை. அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதுமில்லை. இந்த எனக்குள் ஒருவராக நான் கண்டெத்த நண்பர்தான் பேராசிரியர் க.பஞ்சாங்கம். அவரை, அவரது எழுத்துக்கள் ஊடாக அறியவந்த நாள்முதல், அவருள் நானா  என்னுள் அவரா என விளங்கிக்கொள்ள முடியாத குழப்பம். அவரது பாசாங்கற்ற மொழியும், நலிந்தோருக்கான குரலும் என்னை வசீகரிப்பவை.  நண்பரின் நவீன இலக்கிய கோட்பாடுகளையும்,  திறனாய்வு கட்டுரைகளையும் வாசித்து வியந்தவன் ; இன்றும் வியப்பவன். தமிழ் மொழியிலும், தொல் இலக்கியங்களிலும் எனக்குப் போதாமைகள் உண்டு ;  ‘அவை’ அடக்கமல்ல உண்மையும் அதுதான் ; அவருடைய நவீன இலக்கியங்கள் திற்னாய்வுகளை முன்வைத்தும், பிற ஆளுமைகள் குறித்தும் இன்றளவும் ஆச்சர்யங்கள் தொடருகின்றன.

      பார்வைக்கு எளியவராகவும், பழகுவதற்கு இனியவராகவும், பண்பிற் சிறந்தவராகவும், படைப்புக் கலைஞராகவும் திகழ்கிற பேராசிரிய நண்பர் தொல் இலக்கியம் நவீன இலக்கியம் இரண்டிலும் தோய்ந்தவர்; இப்படி தமிழில் இருமுனைகளிலும் கரைகண்டவர்களைக் காண்பது அரிது, எனவேதான் திறனாய்வு துறையில் பேராசிரியர் பஞ்சு தனித்துவமானதோர் அடையாளத்தைப் பெறமுடிந்துள்ளது.

கலை இலக்கியம் இரண்டுமே எங்கிருந்து வருகின்றன என்பதைப் போலவே எவரிடம் போய்ச்சேருகின்றன என்பதன் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்ந்ததொரு சிற்பியின் கைவண்னத்தில் உருவாகும் சிலையில் அழகும், கலை நேர்த்தியும், உணர்வின் வெளிப்பாடும், உரையாடும் மொழியும், அதன் பின்னல்களும்,வளைவுகளூம்,நெளிவு சுளிவுகளும், நேர்க்கோடுகளும்  ஏற்ற இறக்கங்களும், தவழலும், நடையும், ஓட்டமும், மழலைப்பேச்சும், ஊடலும் சிணுங்கலும் இன்னமும் இதுபோன்ற படைப்பிலுள்ள எண்ணற்ற கூறுகளும், அணுக்களும், இதயத்தில் இறங்கவும் உடல் சிலிர்க்கவும் ஒருவர் தேவை. நீரில் மிதக்கும் நிலவை உள்ளங்கையில் ஏந்தி உதிரத்தில் வெதுவெதுப்பை உணர்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அம்மனிதர் வாசகர் மட்டுமல்ல வாசகருக்கும் மேலானவர், படைத்தவனைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தவர் – ஒரு தேர்ந்த திறனாய்வாளர். ஒரு நல்ல தலைவிக்கு உரிய  தலைவன் அமைவதுபோல அது நிகழவேண்டும். அது நிகழாதவரை அந்த நூல் தனது பிறவிப்பயனை எட்டியதாகச் சொல்வதற்கில்லை. தமிழிலக்கியக் கொப்பில் முகிழ்த்து இதழ்பரப்பிய அனேக மலர்களை முகர்ந்து முகர்ந்து அதன் நறுமணத்தையும் துர்க்கந்தத்தையும் இனம் பிரிக்க அளப்பரிய ஞானமும், பழுத்த அனுபவும் வேண்டும்.

      இலக்கிய திறனாய்வு என்பது  தேடல், வாசிப்பு, ஒப்பீடு, மதிப்பீடு, முடிவெடுத்தல் என்கிற வினைத்திறன்களை உள்ளடக்கியது. எழுத்தூடாக பிறிதொரு பனுவல் பற்றிய தமது வாசிப்பு, உணர்தல் மற்றும் தெளிதலை மூன்றாவது மனிதருடன் பகிர்ந்துகொள்ளல், அடிப்படையில் ஓர் ஒப்பீடு நோக்கு. ஓரு விவாத களம்: ஒரு புறம் திறனாய்வாளன் -திறனாய்வு; எதிர் திசையில் பிரதி – படைப்பாளி. உண்மையில் இவ்விவாதகளத்தில் ஒரு தரப்பில் திறனாய்வாளர் உருவத்தில் அவரைக் கட்டமைத்த அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகள்.  தன்னை உருவாக்கிய சமூகம், மனிதர்கள், அவற்றின் இயக்கம் ஆகியவற்றைக் குறித்த அவரது நியாயங்கள் முடிவுகள், தெளிதல் அடிப்படையில் கையளிக்கபட்ட பனுவலின் குறை நிறைகளை அவர் விவாதிக்கிறார்.  பனுவலின் கலைநேர்த்தி, மொழி, சொல்லாடல்கள், எடுத்துரைப்பு என்றெல்ளாம் தொடர்ந்தது அவதானிப்பதும், வியப்பதும் திறனாய்வாளரின் பின் புலத்தைப் பொருத்தது. இன்று நவீன தமிழிலக்கியத்தில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களில் ஆரம்பித்து புதிதாக எழுதத் தொடங்கும் படைப்பாளிவரை, பேராசிரியர் பஞ்சுவின் பார்வை தங்கள் எழுத்தில் மீது விழாதா எனக் காத்திருப்பது, ஏங்குவது பஞ்சுவின் திறனாய்வுகளுக்குள்ள பெருமையை பறைசாற்றும்.

      தமிழே வாழ்க தாயே வாழ்க !

      அமிழ்தே வாழ்க அன்பே வாழ்க !

      கமழக் கமழக் கனிந்த கனியே

      அமைந்த வாழ்வின் அழகே வாழ்க !

என எங்கள் இனிய நண்பரை பாரதிதாசன் தமிழால் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.

———————————————————————————————————————

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் (மருத்துவக் கேள்வி-பதில்’) – டாக்டர் சண்முக சிவா

டாக்டர் சண்முகம் சிவாவை 2014ல் கோவையில் சந்தித்தேன். கோவை தமிழ் பண்பாட்டு இயக்கம் கூட்டிய ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டிற்கு வந்திருந்தார். அவரது படைப்புகள் குறித்த க.பஞ்சாங்கம் கட்டுரையை ‘சிற்றேடு’ காலாண்டிதழில் ஏற்கனவே வாசித்திருந்தேன். க.பஞ்சாங்கம் உண்மையை எழுதக்கூடியவர். எனவே மருத்துவர் சண்முக சிவா ஓர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற கருத்து மனதில் இருந்தது. கடந்த கால தமிழ் புனைவுகளில் ‘ஆஜானுபாகு’ என்ற சொல்லாடல் உபயோகத்திலுண்டு, அதோடு நல்ல தேஜஸ் என்ற வடமொழி சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம். மனிதர்களை அளக்கும் பார்வை. வார்த்தைகள் நிதனாமாக வருகின்றன. எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை தாங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன், ஈழத் தமிழ் நண்பர்கள் பலரிடமும் இது நிறைய இருக்கிறது. சிங்கப்பூர் நண்பர்களிடமும் கவனித்தேன். ஒன்றரைபக்கத்திற்குத் தங்கள் புகழ்பாடி மின் அஞ்சல் அனுப்புகிறார்கள். நாம் ஏமாளிகளாக இருந்தால், நேற்று கிளேசியோகூட பிரான்சிலிருந்து என்னிடம் பேசினார், உங்கள் எழுத்தைப் படித்துத்தான் எழுதவந்தேன் என்றார் என என்னை மூர்ச்சை அடையச்செய்கிற படைப்பாளிகளும் தமிழில் உண்டு. தமிழினத்தின் சரிவிற்கு தம்மை எப்போதுமே உயரத்தில் வைத்து பார்ப்பதுங்கூட ( எதிராளியை குறைத்து மதிப்பிட்டு) காரணமாக இருக்கலாம். ஒரு வேளை இது நமது தேசிய குணமோ. மலேசியா தமிழர்களிடங்கூட அது பொதுப்பண்பாக இருக்கக்கூடும். அவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காக எப்படி இருக்க முடியும்? எனினும் பத்து விழுக்காடு மனிதர்கள் இப்பொதுபண்பிலிருந்து விலகியவர்களாக இருப்பார்களில்லையா? அப்பத்துவிழுக்காடு மனிதர்களில் திருவாளர்கள் ரெ.கார்த்திகேசுவும், சண்முக சிவாவும் இருக்கக்கூடும். இருவருமே பொறுமைசாலிகள், வார்த்தைகளில் முதிர்ச்சி, கன்னியம். நாம் பேசுவதை அக்கறையோடு கேட்டு முழுவதுமாக கிரகித்துக்கொண்டு ஒருமுறை மனதில் திரையிட்டுப்பார்த்து திருப்தியுற்றவர்களாய் நம்மிடம் பேசுகிறார்கள். அவர்கள் உரையாடும்போது ஒன்றைக் கவனித்தேன். தங்களை ஒருபோதும் உயரத்தில் நிறுத்தி உரையாடுபவர்களல்ல. சொற்களில் பாசாங்குகள் இருப்பதில்லை. தற்புகழ்ச்சி நெடி நமது நாசி துவாரங்களை வதைப்பதில்லை. நம்மை சமதளத்தில் அமர்த்தி உரையாடுகிறார்கள். இது நல்ல கதை சொல்லிக்கான மனோபாவம். அரவணைக்கும், இனிக்கும் தொனி. நவீன், கே.பாலமுருகன் போன்றோரிடமும் இப்பண்புகள் இருக்கக்கூடும் அவர்களிடம் பேசிப்பார்த்ததில்லை. அவர்கள் படைப்புகள் வழி பிறந்த கற்பிதம். டாக்டர் சண்முகசிவா மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூலை அளித்திருந்தார். அதொரு மருத்துவ நூலா? இலக்கிய நூலா? என்ற சந்தேகம் வாசித்து முடித்த பின்பும் நீடிக்கிறது. மருத்துவ அறிவைக்காட்டிலும் தமக்குள்ள இலக்கிய தேடலை தெரிவிக்கவேண்டுமென்ற அவா அவருக்குள் ஆழமாக இருந்திருக்கவேண்டும். திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோல அவரது நூலூடாக நோய்முதல்நாடி உருவான கருத்து.

நூலுக்குப் பிரபஞ்சன், எம்.ஏ. நு•மான் இருவரும் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். நூலைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் குறைவு, மாறாக ஆசிரியர் பற்றிய பாராட்டுமழைகள் நிறைய. சண்முகம் சிவா நிறையவே நனைந்திருப்பார்.. ஆசிரியரின் முன்னுரையிலிருந்து அவர் உள்ளூர் சஞ்சிகைகளிலும் தொலைகாட்சியிலும் வழங்கிய மருத்துவ ஆலோசனைகளே நூலாக வடிவம் எடுத்திருக்கிறதென அறிய வருகிறோம். உடல் நோய், மன நோய் இரண்டிற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட நூலை ஒரு மருத்துவ கையேடு எனலாம். நமக்கெழும் அநேக சந்தேகங்களுக்கு, நம்மிடமுள்ள அநேக கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திரு சண்முகம் சிவாவின் பதில்கள் மருத்துவம் அறிந்த மனிதநேயமிக்க ஒருவருவரின் பதில் போல இருக்கிறது. அவை ஒவ்வொன்றிலும் மெலிதான நகைச்சுவை அடிநாதமாக ஒலிக்கிறது. முத்தாய்ப்பாக கவிதை ஒன்று.

ஏற்கனவே கூறியதுபோன்று அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் உடல் உளம் இரண்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. வயது, சிறியவர் பெரியவர்; ஆண் பெண் பாலினப் பாகுபாடு இப்படி எதுவும் அப்பதில்களில் குறுக்கிடுவதில்லை. அனைவருக்கும் அனைத்திற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன என்பது வியப்பை அளிக்கிறது. கிட்டதட்ட பெரும்பானமையான பதில்களில் – நடிகர் கே. பாக்யராஜ் தமது தமிழ் வார இதழ் கேள்வி பதிலில், பதிலுடன் ஒரு கதையைக் கூறியதுபோல ( இப்போதும் உண்டா?) மருத்துவர் சண்முகம் சிவா கவிதை சொல்லி முடிக்கிறார். கே.பாக்யராஜ் ஒவ்வொரு கேள்விக்கும் புராணங்களிலிருந்தோ, இதிகாசத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தோ உதாரணத்தைக் காட்டும்போது அவரது கேள்விபதில் பகுதியே அதற்காகத்தான் வாசிக்கப்பட்டது எனச்சொல்வதுண்டு. இந்த நூலிலுங்கூட ஆசிரியரின் மருத்துவ ஆலோசனைக்கு வாசிக்கிறவர்களைக் காட்டிலும் அதில் சொல்லப்பட்ட கவிதைகளுக்காக வாசிப்பவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். பல நேரங்களில் கவிதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதற்கேற்ப மருத்துவ கேள்விகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் போன்ற ஐயங்களும் எழாமலில்லை.

பத்திரிகைகள், வார மாத இதழ்களில் இடம்பெறும் அநேகக் கேள்வி- பதில்கள் தயாரிக்கப்படுபவைதான். அந்தச்சந்தேகம் கவிதைகளை வாசிக்கிறபோது இங்கும் வருகிறது. விருந்தளித்த கையோடு ‘தாம்பூலம் எடுங்க’ என்பதைப்போல மருத்துவ ஆலோசனையோடு கொசுறாக ஒரு கவிதை கிடைக்கிறது. எனக்கு ‘ஊட்டிவரை உறவு’ நாகேஷ¤ம் நினைவுக்கு வருகிறார். சிலரின் கேள்விகளை படிக்கிறபோது, அவர்கள் மருத்துவரின் கவிதைக் ‘கொசுறை’ எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. உளவியல் அறிந்த மருத்துவருக்கு இது தெரியாதிருக்குமா? கண்டிப்பாக. தமது மருத்துவ ஆலோசனையைக்காட்டிலும் தாம் படித்த, இரசித்த கவிதைகளை அடையாளப்படுத்தவேண்டும் என்பது மருத்துவருக்கு முதல் நோக்கமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையெனில் அவர் ஜெயித்திருக்கிறார். ‘மருத்துவக் கேள்வி-பதில்’ என்ற உபதலைப்பு, நமக்கெழும் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகள் காமாசோமா அல்ல. நல்ல கவிதை மனம் இருந்தாலொழிய அப்படியான கவிதைகளை இடம் பொருள் அறிந்து உபயோகம் காண சாத்தியமில்லை.

மருந்துக்கு ஒரு உதாரணம்:

சில நேரங்களில் மனம் எதிலும் ஈடுபடமுடியாமல் ஒருவிதமான கவலையுடன் இருக்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்யலாம்?

மருத்துவர் சண்முக சிவாவின் பதில்:

கவிதை எழுதலாம். கவிதை எழுத வராது என்றால் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். புலவர்கள் பண்டிதர்கள், கவிஞர்கள் அதனைக் கவிதை இல்லை என்று சொல்லலாம். கவலைப் படாதீர்கள். எழுதுங்கள். உங்களுடைய கவலை ஒரு தவிப்பு. அதற்கு வடிகால் வேண்டும். நமது உணர்வுக்கெல்லாம் ஆக்க பூர்வமான வடிகால்களை அமைத்துக்கொண்டால் அது பாடலாகவோ இசையாகவோ ஓவியமாகவோ இருந்துவிட்டால் நாம் கலைஞராவோம்.

சோகத்திலும் ஒரு சுகமான கவிதைக் கிடைக்கும். மொழி கைவந்துவிட்டால். உணர்வுகளுக்கு ஆடைகட்டி ஆடவிடலாம், பாடவிடலாம். மனசுக்கு சிறகுகட்டி பறக்கவிடலாம். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்கலாம். கவலையில் மூழ்கிக் காணாமல் போய்விடாமல் இருக்கத்தானே கலைகள் இருக்கின்றன. கவிஞர் ஆசுவின் இந்த வரிகளைப் பாருங்கள்:

“வலிக்குது மவனே
சொமய கொஞ்சம் இறக்கி வையேன்”

“இறக்கி வைத்தேன் அம்மா
கவிதைகளாக
அதற்குள்ளும்
அழுகின்றன அம்மா
நமது வலிகள்.”
—-

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்
மருத்துவ கேள்வி-பதில்
ஆசிரியர் டாக்டர் மா. சண்முகசிவா

உமா பதிப்பகம், கோலாலம்பூர்
umapublications@gmail.com
——————————
நன்றி: திண்ணை 27/07/2014

பார்த்ததும் சுவைத்ததும் : விரக்தி(Despair)

இயல்பாகவே மனிதகுலம் உட்பட விலங்கினங்கள்,  ஒன்று பிறிதொன்றிடம் தன்னைத் தேடுகிறது. தோள் உரசவும், கலந்துரையாடவும், சேர்ந்து விருந்துண்ணவும், விழி சுரக்கும் நீரை விரலால் தொட்டுத் துடைக்கவும் ஒருவன் அல்லது ஒருத்தி தேவை. அந்த இன்னொரு உயிரியை பொதுவான புள்ளிகளில் வைத்து அடையாளம் காண்கிறோம். தனிமனிதன் குடும்பம், சமூகமென்று தன்னைச்சார்ந்தோரை மனித கும்பலில் தேடி உறவுச்சங்கிலியில் பிணைத்துக்கொள்ளும் நுட்பம், இத் தேடலைச் சார்ந்தது. கண்ணாடியில் எதிர்ப்படுபவையெல்லாம் நாமாக இருப்பின் வலுவான கரைகள் கிடைத்த தெம்பில் ஆறுபோல பாய்ந்தும், நிதானித்தும் ஓடி வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம், அமைவது வரத்தைப் பொருத்தது.

லொலிட்டா(Lolita) புகழ் விளாடிமிர் நபோக்காவை (Vladimir Nabokov) நண்பர்கள்  அறிந்திருக்கக்கூடும். ரஷ்யாவில் பிறந்து ஜெர்மனில் வாழ்ந்து, இலண்டனில் கல்விகற்று, பாரீசை நேசித்து, அமெரிக்க பிரஜையாகி, இறுதியில் சுவிஸ்நாட்டில்  பயணத்தை முடித்துக்கொண்ட அவருடைய விளாடிமிரின் வாழ்க்கை ஓர் உயிரியின் மெய்பொருள் தேடல். லொலிட்டாவைக் காட்டிலும் அவருடைய விரக்தி (Despair) நாவல் மீது எனக்கு முழுமையான காதலுண்டு. லொலிட்டா: வாழ்க்கையின் ஒழுங்கு மற்றும் நியதிகளில் நம்பிக்கையற்று உடலிச்சையில் தத்தளிக்கும் அறிவுஜீவிக்கும், தனக்கு என்ன நேர்ந்ததென்பதைக்கூட விளங்கிக்கொள்ளப்போதாத ஓர் அப்பாவி சிறுமிக்குமிடையே நிகழும் தகா உறவினைக்கொண்டு இருவேறு மனித உயிர்களின் இயக்கத்தைப்பேசுகிறதெனில், ‘விரக்தி’ எதிரும்புதிருமான இருமனிதர்களின் திசைக்குழப்பத்தைச் சொல்கிறது. நாவலை ஜெர்மன் திரைப்பட இயக்குனர்களில் அதிகம் பேசப்படுபவரான பஸ்பிண்டெர் (Fassbinder) திரைப்படமாகக் கொண்டுவந்திருக்கிறார். மிகவும் காலம் கடந்து இத்திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது.  1978ம் ஆண்டு கான் விழாவில் பங்கேற்றத் திரைப்படம். ஆனால் அதற்கும் முன்பாக (1977) இறந்திருந்த விளாடிமிருக்கு படத்தைக் காணும் பேறு வாய்க்கவில்லை. நாவலாசிரியரையும், அதனைத்  திரைக்குக்கொணர்ந்த இயக்குனரையும் அறிந்தவர்கள் அந்நாவலில் வரும் இருகதாபாத்திரங்களைப்போலவே பிறப்பு, வாழ்க்கை, தாங்கள் அடங்கிய சமூகம் என எல்லாவற்றிலும் இருவரும் எதிரெதிர் துருவங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்கிறார்கள். விரக்தி நாவலை நீங்கள் வாசித்திருப்பவரென்றால். படத்தைத் தவிர்ப்பது நல்லது.

விளாடிமிர் இந்நாவலை முதன்முதலில் ரஷ்யமொழியில் எழுதியபோது வைத்தபெயர் வேறு என்கிறார்கள். அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது Despair என்று மொழி பெயர்க்கிறார். பிரெஞ்சில் Despair என்கிற சொல் இருக்கிறது. இருந்தும், ‘La Meprise’ என விளாடிமிர் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்புக்கென விதிகளை எழுதிக் களைப்பவர்களுக்காக இதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அதுவன்றி அவரே மொழிபெயர்த்ததால் சில உரிமைகளை விளாடிமிர் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி கூடுதலாக சில பகுதிகளைச் சேர்க்கவும், சிலபகுதிகளைத் தவிர்க்கவும் செய்திருக்கிறார்.  “எனது படைப்பாற்றல் மீது முழுமையான நம்பிக்கையும், உயர்வும் நேர்த்தியும்கொண்ட எனதெண்ணங்களை சாதுர்யமாக வெளிப்படுத்தும் திறனுமில்லையேல் இக்கதையை உங்களுக்குத் தெரிவித்திருக்கமாட்டேன்”..என Super-Ego’ தொனியில் நாவலில் பிரதான ஆசாமி கதையைத் தொடங்குவான். கதைநாயகன் ஹெர்மான் ஒரு விசித்திரமான ஆசாமி புத்திசாலியா அரைவேக்காடா என தெளிவுபடுத்திக்கொள்ள இயலாமல் கதை முழுக்க சங்கடப்படுகிறோம். இருந்தாலும் அவன் கதைசொல்லி. வாசகனை ஈர்ப்பதில்  தேர்ந்திருக்கிறான். ஆர்வத்துடன் உட்கார்ந்து கேட்கிறோம். இடைக்கிடை நம்மையும் முட்டாளாக்குகிறான். கதை நாயகன் ஹெர்மான், மனைவியை நம்புகிறான் அல்லது கொண்டாடுகிறான். (அவள் அவர்கள் குடும்பத்து நெருங்கிய உறவினனுடன் கள்ள உறவுகொண்டிருக்கிறாளென தெரிந்தும் ) பின்னர் அதுவே அவனை அவ்வாழ்க்கையிலிருந்து விடுவிக்கிறது, வேறொருவனாக அவனை உயிர்ப்பித்து இழப்பை நிவர்த்திசெய்யத்தூண்டுகிறது. இன்னொருவனைத்தேடி அவனிடம் தனது வாழ்க்கையைப் பண்டமாற்றுசெய்துகொள்கிறான். அவன் சந்திக்கும் ஓடுகாலனிடம் உருவ ஒற்றுமையில் ‘எனக்கும் உனக்கும் வேற்றுமை இல்லை’ எனக்கூறி நம்பவைக்கிறான். உண்மையில் அவனுக்கும் இவனுக்கும் ஒற்றுமையென்று எதுவுமில்லை. ஒரு புறம் அப்பழுக்கற்ற யோக்கியன்- மறுபுறம் ஊத்தைகுணங்களில் ஊறிய அய்யோக்கியன். கதைகேட்கும் கவனத்திலிருக்கும் நாம் விளாடிமிர் நடத்தும் கண்கட்டுவித்தையில் கட்டுண்டு என்ன நடக்கிறதென விளங்கிக்கொள்ள இயலாமற் தவிக்கிறோம். கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. அதை உடைத்தால் விளாடிமிருக்குத் துரோகம்செய்தவர்களாவோம்.

பாஸ்பிண்டர்(திரைப்பட இயக்குனர்) 1936ல் நடக்கின்ற ரஷ்யப் பின்புலத்தில் சொல்லப்பட்ட கதையை ஜெர்மனி அரசியலோடு கலந்து சொல்கிறார். அண்மையில்தான் பிரெஞ்சு Arte தொலைகாட்சியியின் தயவில் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை பொறுத்தவதை விளாடிமிருக்கு பாஸ்மிண்டர் துரோகமிழைத்திருப்பதாகவே நம்புகிறேன். விளாடிமிர் இத பார்க்காமல் இறந்ததே நல்லதென நினைக்கத் தோன்றுகிறது.

———————————————————————————————-

மொழிவது சுகம் : விபத்தும் நீதியும்

ஏர் இந்தியா- மோன் பிளாங் – இரண்டரை கோடி ரூபாய்?

மோன் பிளாங்(Mont -Blanc), அல்லது பாரதி மொழியில் சொல்வதெனில் வெள்ளிப் பனிமலை. இத்தாலிக்கும் பிரான்சுக்கும் சிறிது தூரத்தில் சுவிட்சர்லாந்துக்கு இடையில் கூன்போட்டு படுத்திருக்கும் மலை. 2013 செப்டம்பர் மாதம் அம்மலையின் அடிவாரத்திலிருக்கும் ஷமோனி( Chamonix ) கிராமத்து மலையேற்றத்தில் ஆர்வம்கொண்ட மனிதருக்கு இந்த வெள்ளிப்பனி மலையில் கிடைத்தப் பயணக் கைப்பெட்டியொன்றில் ஐரோப்பிய யூரோவில் 300000 பெறுமான விலையுயர்ந்த கற்களுடன் ஒரு பை கிடைத்திருக்கிறது.

இம்மலையில் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன, இரண்டுமே ஏர் இந்தியாவுக்குச் சொந்தம். முதலாவது ஒரு போயிங் 707 கஞ்சன்சங்கா என்று பெயர். ஜெனீவா (சுவிஸ்)விமானநிலையத்தில் இறங்க இம்மலையை கடந்து செல்லவேண்டும். 108 பயணிகள், 11 விமான ஊழியர்கள். இவ்விபத்தில் மாண்டனர். விபத்து நடந்த ஆண்டு 1966. இதற்கு முன்ப்பாக இதே மலையில் 1950ல் ஏர் இந்தியாவின் மலபார் இளவரசி தமது பயணிகள் விமானஓட்டிகள் ஊழியர்களுடன் விபத்துக்குளாகியது. ஆக இரண்டில் ஒரு விமானத்திற்கு இப்புதையல் சொந்தம். இதற்கு முன்பாக இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான, மற்றும் அதிகாரபூர்வமாக உரிமை கோரிய பொருட்கள், ஆவணங்கள் – மலையேறிகளுக்கு கிடைத்தவற்றை பிரெஞ்சு அரசாங்கம் இந்திய அரசாங்கத்தை தொடர்புகொண்டு ஒப்படைத்திருக்கிறது. இவ்விலையுயர்ந்த கற்கள் வாஷிங்டனுக்கு ப் போகவிருந்த உயர்மட்ட தூதரக அதிகாரியின் கைப்பெட்டியில் இருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் அமெரிக்காவிற்கு சுவிஸ் வழியாக ஏன் செல்லவேண்டுமென்பது கேள்வி. இக்கேள்வி பதிலின்றி இருக்க விலையுயர்ந்த கற்களை பனிமலையிலில் கண்டெடுத்த பிழைக்கத் தெரியாத மனிதர் கொண்டுபோய் போலீஸ்காரர்களிடம் கொடுக்க அவர்கள் பிரெஞ்சு அரசாக்கத்திடம் கொடுக்க எட்டாண்டுகள் காத்திருப்பிற்கு(2021) பிறகு பிரெஞ்சு அரசாங்கம் மலையேறியின் ஊரான ஷமோனி மேயரிடம் ஒப்படைக்க , அவர் மலையேறியின் குடும்பம் உடபட ஊர்வாசிகள் அனைவருக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார். இதிலிருந்து தெரியவரும் நீதி இந்திய அமைச்சர்கள் அமலாக்கத்துறைக்குப் பயந்து சுவிஸ்பயணம் மேற்கொள்ளவேண்டாம், ஆபத்தில் முடிய வாய்ப்புண்டு.