Monthly Archives: ஜூன் 2014

மொழிவது சுகம் ஜூன் 29

1. Herta Muller:

2009 ஆண்டு நோபெல் பரிசை பெற்றவர். -ருமேனியா நாட்டைச்சேர்ந்த இந்த எழுத்தாளர் பெண்மணி ஜெர்மனில் வசிக்கிறார். கடந்த முறை அமெரிக்கா சென்றிருந்தபோது எனது பெரிய மகள் நன்றாக இருக்கிறதென்று சொல்லி இவரது ஆங்கில மொழி பெயர்ப்பு நாவலைக் கொடுத்தாள். நாவலின் பெயர் The Land of Green Plums.

“When we don’t speak, said Edgar, we become unbearable, and when we do, we make fools of ourselves என ஆரம்பமே ஈர்ப்பதாக இருந்தது. நாவல் எளிமையான, சிறுசிறு வாக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பினும் எனக்குப் புரியாத சொற்கள் நிறைய. மிக மெதுவாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசித்து முடித்ததும் எழுதுகிறேன்

2. La terre du cielம் ஹரூகி முராகாமியும்

ழான் பியர் க்ரோ என்ற பிரெஞ்சு நண்பர், இங்கே (Strasbourg) La terre du ciel கிளை ஒன்றை துவக்கி இருக்கிறோம். அதன் அமைப்பாளர்கள் எதிர்வரும் 25/6/2014 அண்று கூட இருக்கிறோம் நீயும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைத்திருந்தார். நண்பர் குரோ 70வயது ஆசாமி. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் குடும்பத்துடன் நட்பிருக்கிறது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த என் மகள் திருமணத்திற்கு கணவன் மனைவி இருவரும் வந்திருந்தார்கள். இந்தியாவிலிருந்து கொண்டு சென்றிருந்த இரண்டு சைக்கிள்களில் ஒன்றை பரிசாக அவருக்கு அளித்திருந்தேன். அதற்கு ஒரு டயர் வேண்டுமெனக் கேட்டிருந்தார். சென்றமுறை இந்தியா வந்தபோது அதைக் கொண்டுவர தவறிவிட்டேன். ஊரிலிருந்து திரும்பி நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நிலையில்தான் La terre du ciel அமைப்பை பற்றிக் கூறி அழைத்தார். புதன் கிழமை அக் கூட்டம் இருந்தது. திங்கட்கிழமை குரோவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. புதன் கிழமை நிகழ்ச்சியை மறந்திடாதே என நினைவூட்டியவர், நான் சற்று முன்னதாகப் போகவேண்டியிருக்கிறது, நீ எலிஸபெத்தை ( அவர் மனைவி) காரில் அழைத்துக்கொண்டு ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடவேண்டும் என்றார். வரும்போதே எல்லோரையும்போல் உன்னுடைய பங்களிப்பாக நான்கு பேர் சாப்பிடக்கூடிய அளவில் இரவு உணவிற்கு இருவகையான உணவுவகைகளை கொண்டுவந்துவிடு என்றார். உண்மையில் அன்று போகும் எண்ணத்தில் இல்லை. உலகக் கால் பந்து போட்டியின் முதல் சுற்று கfடைசி போட்டி. ஏற்கனவே பிரான்சு கலந்துகொண்ட இரு போட்டியிலும் நன்றாக விளையாடி, போட்டிக்கு 3 கோல்கள் என்று போட்டிருந்தார்கள். புதன் கிழமை போட்டி நன்றாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. விருப்பமின்றியே அந்த நிகழ்வுக்குப் போனேன். Strasbourg லிருந்து 20 கி.மீ. தொலைவிலிருந்த Niedernai ஓர் அழகான ஊர். நிகழ்ச்சி, மரி என்பவர் வீட்டில் நடந்தது. பதினைந்து பேருக்குமேல் கூடியிருந்தனர். இங்கே குரோ குடும்பத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள்: குரோ ஸ்ட்ராஸ்பூர் நகர சபையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சமூக ஆர்வலர், பியானோ தொடங்கி நான்கைந்து இசைக்கருவிகளை வாசிப்பவர். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை தனியாகவும் அவர் மனைவியுடனும் சேர்ந்து நடத்திவருகிறார். எலிஸபெத் உளப்பகுப்பாய்வு வல்லுனர், புல்லாங்குழல் நன்கு வாசிப்பார். எனவே இயல்பாகவே la terre du ciel உறுப்பினர்களைக் குறித்து நல்ல அபிப்ராயம். நிகழ்ச்சியில் ‘இந்தியர்களின் தீர்க்க தரிசனம்’ (la Sagesse indienne ) என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு நன்றாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் இரவு உணவிற்கு இல்லை. பத்துமணிக்கெல்லாம் வந்துவிட்டேன். வீட்டை அடைந்த பிறகுதான் காற்பந்துபோட்டி இரவு பத்துமணிக்கு தொடங்குகிறது என்பதை புரிந்துகொண்டேன்.போட்டி முடியும்போது இரவு பன்னிரண்டு. இரவில் சீக்கிரம் படுத்துப் பழக்கம் உறக்கம் வரவில்லை. கைவசம் “ஹரூகி முராகாமியின்” ஸ்புட்னிக்கின் காதலர்கள்’ (Les amants du Spoutnick) என்ற படைப்பு ஒலிவடிவில் இரண்டு நாட்களுக்கு முன் நூலகத்தில் வாங்கிவந்த குறுந்தகடு இருந்தது. அதைபோட்டுக் கேட்டுவிட்டு படுத்தபோது இரவு மூன்றுமணி. இது பற்றி தனியாக எழுதவேண்டும்.

பா. செயப்பிரகாசம். – உயிர்வேலி.

இந்த வாரத்தில் எனக்கு இரண்டு வேலைத் திட்டங்கள் இருந்தன. கடந்த ஜனவரி மாதம் கோவை வந்திருந்தபோது சில நண்பர்கள் தங்கள் படைப்புகள அளித்தார்கள். அவர்களில் ஒரு சிலர் படைப்புகளைக் குறித்து எழுதுவதென்று தீர்மானித்தும் தள்ளிப்போட்டுவந்தேன். அனார் என்ற இலங்கைக் கவிஞர் மூன்று தொகுப்புகளை அளித்திருந்தார். அவற்றை வாசித்தேன். கவிதைகள் என்னை ஏமாற்றவில்லை. இன்றுள்ள தமிழ்க் கவிஞர்களில் அனார் முக்கியமானவ்ர் என்று புரிந்தது. மகிழ்ச்சியோடு ஒரு கட்டுரையை எழுதி முடித்துதேன். அடுத்ததாக இலங்கு நூல் செயல் வலர் பெயரில் க.பஞ்சாங்கத்தைபற்றிய கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பகுதி. அவரது தலித் இலக்கியம் பற்றிய பார்வையை எழுதலாமா என மீள் பார்வைபோல அக்கட்டுரைகளைத் திரும்பவும் படித்தேன். எனக்கு உடன்பாடற்றவை அதிகம் இருப்பதுபோல தெரிந்தது; எழுதும் கட்டுரையில் அவற்றை பதிவு செய்யாமல் எழுதவியலாது என்ற நிலையில் அதனைத் தவிர்த்துவிட்டு எடுத்துரைப்பு பற்றிய அவரது கட்டுரைகள் மிக நன்றாக வந்திருந்தன அதுபற்றி எழுதலாம் தலித் இலக்கியத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம் எனமுடிவெடுத்து கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் பா.செயப்பிரகாசத்த்தின் சிறுகதை ஒன்றை வாசித்ததையும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் போல தோன்றியது

மே தீராநதி இதழில் தி.க.சி பற்றிய கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரை நன்றாக வந்திருந்தது. அவருக்கு எழுதினேன். ஜூன் இதழில் தமது சிறுகதையொன்று வந்திருப்பதாகத் தெரிவித்தார். தீராநதி ஒவ்வொரு மாதமும் 15 தேதிகளில் கிடைத்துவிடும். இம்முறை அது தள்ளிப்போனது. இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கத்திற்கு மாறாக தீராநதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் படித்துவிட்டு எனது கருத்தைச் சொல்கிறேன் என்று எழுதினேன். அவர் தீராநதி வந்த சிறுகதையையும்  மீண்டும் அகரம் இதழில் வந்திருந்த மற்றொரு கதையையும் அனுப்பியிருந்தார். இடது சாரி சிந்தனையாளர், சமூக ஆர்வலர். நல்ல படைப்பாளி, எளிமையானவர். இந்த நான்கும் அவரிடம் எப்போதும் கலந்தே வினை புரிகிறது; ஒன்றின் செயல்பாட்டில் மற்றவையும் முன் நிற்கின்றன; அவருடைய சிறுகதைக்கு வருகிறேன் நாவலின் குறுகிய வடிவம் என்றாலும் ஒற்றை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது; உரைநடையின் கவிதை வடிவம் அல்லது புகைப்படம் அல்லது ஓவியம். காட்சியை உள்வாங்குவது உணர்ச்சியை மொழிபடுத்துவதென்கிற இரண்டு வினைகள் ஒரு புனைவை எழுத காரணமாகின்றன. முதுகில் விழும் சாட்டை வார் பற்றிய சொரணையின்றி வண்டிமாடுகளைபோல வாழ்க்கையை இழுத்துச்செல்லும் அப்பாவி மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவம் சிறுகதையாக்கப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்கிறார் கதை ஆசிரியர் வண்ணான் குடியைச்சேர்ந்த பெண்ணொருத்தி பால்குடி மறக்காத சிசுவையும், கணவனையும் விட்டுவிட்டு வேறு சாதி இளைஞனோடு ஓடிவிடுகிறாள்; காலம் காலமாக கிராமங்களில் நடங்கும் சம்பவம்தான்; ஆனால் அதனை தட்டிக்கொட்டி, நகாசு வேலைகள் செய்து, ஒரு நல்ல குறும்படத்தை அளித்திருக்கிறார் எனச் சொல்லவேண்டும். வட்டார வழக்கு மொழிகளை கையாளுவதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதன் தொனியும் வடிவமும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதை எழுத்தில் சிதைக்காமல் கொண்டுவருவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. பா.செயப்பிரகாசம் ஒரு கிராமத்தின் உயிர்மூச்சை வெப்பத்துடனும், ஈரப்பதத்துடனும் மொழியாக்கி இருக்கிறார்.

நாட்டுப்புற பாடல்போல வாக்கியங்கள்:

– ஏன் ஆத்தா நேரமாயிருச்சா

‘ச்சா’ என்பதை அழுத்தி விதைபோட்டாள்

“வண்னாரப் பிள்ளைக்கு கொழுப்பை பாரு!”

இந்த கேலியையும் கிண்டலையும் கிராமத்து வாசத்தை நுகராதவர்கள் உணர முடியாது.

அதுபோல கீழ்க்கண்ட உவமையும் என்மனதைக் கவர்ந்தது. சாதாரண சொற்கள் கலைவடிவம் பெறும் தந்திரம் இதுதான்.

“தேவாணை நெஞ்சோடு அணைத்து சேலையை விலக்கி, புகையிலைக் கட்டையைபோல் கிடந்த மார்பெலும்பில் பூவரசங்காய்களைப் போல்திருத்தியிருந்த காம்பில் பிள்ளை வாயை வைத்து அழுத்தினான். அப்படியே பல் பதித்துவிட்டது”

“காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடுயது”

கிராமத்துக் கதையை எழுதும் இன்றைய இளைஞரகள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், உவமை உருவங்களை படைக்கிறபோதும் கவனமாக கதைக்கும், கதை மாந்தர்களுக்கும் கதைக்களனுக்கும் உரிய சொல்லாடல்களை கையாளுவது..

—————————————————————————-

 

மொழிவது சுகம் -ஜூன் 22 2014

1. Procrastination அல்லது தள்ளிப்போடுதல்

தள்ளிப்போடுதல் என்ற சொல்லை நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதுவும் ஒரு மன நோய்தான். இம்த மனநோய்க்கு நானும் பலியாகி இருப்பதின் அடையாளம் தான் எனது எழுத்தில் உள்ள தொய்வுக்கான காரணம். கடந்த காலங்களைப் பார்க்கிறபோது இவ் வருடத்தில் எழுதியது குறைவுதான். 2013 ஆரம்பத்திலிருந்து 8 சிறுகதைகளோடு ஒரு தொகுப்பு நிறைவுறாமல் இருக்கிறது.  வெகு நாட்களுக்குப்பிறகு சொல்வனம் நண்பர் கிரிதரன் அன்பினால் அவர்களுக்கு ஒரு சிறுகதையை இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். எனது கடைக்கு வருகிற மொரீஷியஸ் வாடிக்கையாளர்கள் அவர்கள் நடத்தும் ‘மாரியம்மன் கஞ்சி’ என்ற பண்டிகைக்கு அழைத்திருந்தார்கள். வருடத்தில் மூன்று பண்டிகைகள் நடத்துவார்கள்; எல்லா பண்டிகைகளுக்கும் போக முடிவதில்லை. ஞாயிற்றுகிழமைகளில் அல்லது முன்னிரவுகளில் அவற்றை நடத்துகிறார்கள். குறைந்தது 3 மணிநேரம் அந்நிகழ்ச்சிக்கு ஒதுக்கவேண்டும். கடைவைத்திருப்பதால், வாடிக்கையாளர்களின் மனங்கோணக்கூடாது எனப் போகவேண்டியிருக்கிறது ஒரு சிறுகதைக்கான கரு கிடைத்தது.  உடனே எழுதாமற் தள்ளிப்போட்டுவந்தேன்.  சிறுகதைத் தொகுப்பைப்போல,  பிரெஞ்சு இலக்கியத்தைப்பற்றிய கட்டுரைத் தொகுப்பும் முடியாமல் இருக்கிறது. கூடுதலாக நான்கைந்து கட்டுரைகள் எழுதினால் முடித்துவிடலாம். போன வருடத்தில் அம்பை சிறுகதைகளை மொழி பெயர்க்க உட்கார்ந்ததில் அதிக நேரத்தை ஒதுக்கவேண்டியதாயிற்று. பிரெஞ்சு பெண்மணியோடு இணைந்து செய்வதால் நேரம் பிடித்தது.  மொழி பெயர்ப்பு எனது படைப்புத் திறனை (?) கூர்மையைத் சிதைப்பதாக உணர்கிறேன்.  சோம்பலுக்கும் தள்ளிபோடும் மனநோய்க்கும் மொழி பெயர்ப்பு ஒரு காரணம். காலூன்றி இருக்கிற வலைத்தளங்களிலும்ங்கூட அவற்றின் தாக்கம் எதிரொலிக்கிறது. தள்ளிபோடும் மனநோயிலிருந்து விடுபடவேண்டும் என நினைப்பதே  நல்ல அறிகுறிதான். ஆனால் அதையும் தள்ளிப்போடக்கூடாதல்லவா?

சொல்வனம்  இணைய இதழ் 16-6-2014

இந்த இதழ் சிறுகதை இதழாக வந்துள்ளது. நாஞ்சில் நாடன்மொழியில் சொல்வதெனில் ‘அரைக்கோட்டை விதைப்பாடு வேணும்னாலும் எழுதித் தரலாம்” அப்படி வாச்சிருக்கு. நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், குட்டி ரேவதி வ.ஸ்ரீனிவாசன், ரெ. கார்த்திகேசுவின் படைப்புக்களோடு, மொழி பெயர்ப்புளும் உள்ளன.

வல்விருந்து – நாஞ்சில் நாடன் எழுதியுள்ள சிறுகதை.

வழக்கம்போல மனிதர் சிலம்பம் சுழற்றுகிறார். நாஞ்சிலார் எழுத்து. ஒப்பிடமுடியாதது. லாசாரா, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சு.ரா. என சேர்ந்ததொரு கலவை. கும்ப முனியின் எண்ணைகுளியலை ஓர் பத்துதடவையாவது வாசித்திருப்பேன். எதையாவது எழுதி கிச்சு கிச்சு மூட்டுவதென்பது வேறு. பிறரைக் காயப்படுத்தாத நக்கலும், கேலியும், குத்தலும், கோபமும் எத்தனை படைப்பாளிகளுக்குச்சாத்தியம். அவர் வீட்டில் கட்டுதறி இருக்குமென்றால் களவாடிடணும் என்ற எண்ணம் கடந்த சில நாட்களாவே இருந்துவருகிறது.

குளி முறை அன்று கொஞ்சமாக எடுத்து, பெரிய எண்ணெய்க் கரண்டியில் அளவாய் ஊற்றி, அடுப்பில் வைப்பார். நல்லெண்ணெய் நன்கு காயவும் வேண்டும், முறுகவும் கூடாது. இது கொழுக்கட்டையும் வேண்டும், மாவும் குறையக்கூடாது என்பது போல. எண்ணெய் முறுகாமல் இறக்குவதற்கு எளிய வழி ஒன்று உண்டு. எண்ணெய் காய்ந்து வரும்போது இரண்டு நெல் எடுத்து எண்ணெய்ச் சட்டியில் எறிய வேண்டும். நெல் பொரியும் பருவம் சரியான பருவம். பிறகு சதைத்து வைத்திருந்த இஞ்சி, ஒன்றிரண்டாய்த் தல்லிய குருமிளகு போட்டுப் பொரித்தவுடன் இறக்கி விடலாம். இளஞ்சூட்டில் நல்லெண்ணெய் வடிகட்டியபின், உமியுடன் பொரிந்து கிடக்கும் நெல்லைப் பொறுக்கி வீசிவிட்டு, பொரிந்து கிடக்கும் இஞ்சி, குருமிளமை வாயில் போட்டுக் கரகரவெனக் கடித்துத் தின்பது ஆலயம் தொழுவது போல சாலவும் நன்று. கும்பமுனிக்குக் கடைவாய்ப் பற்கள் கண்காணாத தேசத்துக்குப் போய்விட்டபடியால், தவசிப்பிள்ளையே அதைத் தின்று விடுவார்.

கௌபீன சுத்தனான கும்பமுனி, சிரசில் இருந்து கால் பெருவிரல் வரை எண்ணெய் தேய்த்து முடிக்க 24 நிமிடங்கள் ஆகும். அ·தென்ன கணக்கு 24 நிமிடங்கள் என்று கேட்பீர்கள்! ஏனெனில் ஒரு நாழிகை நேரமாகும் என்று எழுதினால் உங்களுக்கு அர்த்தமாகாது. நீங்கள் FB, Twitter காலக் கணக்கர்கள்.

எண்ணெய்ச் சொட்டுகளை தொப்பூழ் குழி, மூலஸ்தானம், செம்பியன் ஏற்றையின் முகம் எங்கும் தொட்டு வைப்பார் நிதானமாக. மீசை இல்லாத, பல் விழுந்த, வழுக்கையும் நரையும் கூடிய, தோல் திரைந்த கிழட்டு உடலுக்கு எண்ணெய் முழுக்காட்டியது போலிருந்தது கும்ப முனியைப் பார்க்க. தலையினின்றும் இழிந்த எண்ணெய் கண்களில் கசிந்து காந்தியது. கம்பனின் கடவுள் வாழ்த்துப் பாடலொன்று சாரைப் பாம்பு போல் சீறிப் பாய்ந்தது.
– (வல் விருந்து- சொல்வனம் 16-6-20014)
இடுக்கிகோல்ட். -குட்டி ரேவதி.

கதைசொல்லலிலும் தாம் வல்லவர் என்பதைக் குட்டி ரேவதி நிரூபித்திருக்கும் சிறுகதை. அவருடைய படைப்பாற்றலை – மொழிக்கும் அவருக்குமான பிணைப்பை ஒருவரும் குறைசொல்லிவிடமுடியாது. சில பகுதிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதை வாசிக்கிறபோது உணரமுடிகிறது. அது ஒரு குறைதான். எனினும் அவர் எழுத்தாற்றல் பிரமிப்பதாக இருக்கிறது. தக்க தருணத்தில் தமது இருப்பை உறுதிசெய்திருக்கும் ஆக்ரோஷமான எழுத்து. பிரெஞ்சில் துராஸ் ஞாபகம் வருகிறது. கொஞ்ச நாட்களுக்கு கவிதையை ஒதுக்கிவிட்டு உரைநடைபக்கம் வாங்களேன் என்ற கோரிக்கையை தாராளமாக நாம் வைக்கலாம்.

சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பத் தன் அறிவை, அவள் கலையாகத்தீட்டிக்கொண்டாள். பாடினாள், ஆடினாள், நீந்தினாள், வானவியல் பேசினாள், வேட்டையாடினாள், சமைத்தாள், பயிர்வெளி வளர்த்தாள், கவிதை இயற்றினாள், எழுதினாள், எல்லாமே அவள் காலத்தின் நீளமெங்கும் நடந்தபடியே செய்து கொண்டிருந்தாள். அவளுக்குத் தன் வாழ்க்கையில் எதுவுமே மீண்டும் நிகழ்ந்ததாக நினைவில் இல்லை”(இடுக்கிகோல்ட் – சொல்வனம் 16-6-20014)

“கவிதை எழுதுகிறவர்கள் உரைநடயிலும் ஜெயிக்கக்கூடும்” என்று சொல்வதுண்டு – இச்சிறுகதை உதாரணம்.

பிற சிறுகதைகளில் யுவன் சந்திரசேகரின் “உலகளந்த நாயகி” ரெ.கார்த்திகேசுவின் ‘வேளைவந்துவிட்டது’ வ.ஸ்ரீனிவாசனின் ‘தீட்டு’ ஆகியவை வாசித்துள்ள பிற சிறுகதைகள். மூன்று கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தி.கசியை நினைவுகூரும் வித்தியாசமான இருகட்டுரைகள். பெரியவர் வெங்கட் சுவாமிநாதனும், சுகாவும் தந்திருக்கிறார்கள். அசோகமித்திரனின் ‘இரண்டு விரல் தட்டச்சு’ம் இருக்கிறது. மூவருமே நன்றாகசொல்ல க்கூடியவர்கள் என்பதால், படிக்க சுவையாக இருக்கிறது.

குன்னி முத்து : இந்த வாரம் படித்து முடித்த நாவல். அரசியல்விமர்சகரின் நாவல்போல இருந்தது. அரசியல்கட்சிகள், இந்துமதம், கிறித்துவ மதத்தின் உட்பிரிவுகள் (இஸ்லாமை கவனமாகத் தவிர்த்துவிட்டு) விமர்சனத்திற்குள்ளாகின்றன. நாவலில் வரும் இருளி, சுந்தரி, கிரேசி, என அவ்வளவுபேரும் விரும்பியோ விரும்பாமலோ சோரம்போகின்றார்கள். அதிக எதிர்பார்ப்புடன் படித்ததாலோ என்னவோ பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானேன். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அது இலக்கியம். இதையே குட்டி ரேவதியோ அம்பையோ எழுதினால் அவர்கள் இருப்பை உறுதிசெய்துகொள்ள முனையும் தந்திரம்.  இதில் வலிந்து சொல்லப்பட்டவை அதிகம். ஒருவேளை நமக்குத்தான் இவர்களின் இலக்கிய அரசியலெல்லாம் பிடிபடவில்லையோ என்னவோ?
—————————

 

 

மொழிவது சுகம் மே 15 2014

1. Ap. JC

வஸிலிஸ் அலெக்ஸாக்கிஸ் (Vassilis Alexakis ) என்ற நாவலாசிரியரின் நாவல் ஒன்றை கடந்த ஒருமாதமாக படித்து நேற்றுதான் முடித்தேன், பெயர் Ap. JC. – அதாவது இயேசுவுக்குப் பிறகு. இந்த நாவலைப் பிரெஞ்சு விமர்ச்கர்கள் என்ன சொல்லியிருக்கிரார்கள் என்பதைப் படிக்கவில்லை. புத்தகத்தைச் சுற்றியிருந்த ஒரு துண்டு ரேப்பர் பிரெஞ்சு அகாடெமியின் பரிசுபெற்ற நூல் என்று தெரிவித்தது. ஆர்வ்சத்துடன் படித்தேன். தொடக்கவரிகள் கொடுத்த ஆர்வம் அடுத்திருந்த பக்கங்கள் தரவில்லை. இரண்டு நாட்களிலேயே கசந்துவிட்டது. தொடர்ந்து படித்திருக்க கூடாதுதான். பிரெஞ்சு அகாடெமியின் மீதிருந்த மரியாதை நூலுக்குப் பங்கிட்டு, படித்தேன். அவர்களே பரிசு கொடுத்திருக்கிறார்களே, ஏதேனும் இருக்கும் இருக்குமென்று கடைசிப்பக்கம்வரை இடையில் சில பக்களத் தாண்டிக் குதித்து – (ஒருவேளை அப்பகங்களில்தான் பிரெஞ்சு மொழி அகாடமியின் பரிசுக்கான தகுதி மொத்தமும் இருக்கிரதோ என்னவோ?) படித்துமுடித்தேன். ஒரு மாதம் பிடித்தது. என் வாழ்நாளில் 30 நாட்களை ஒரு புத்தகத்திற்காகாக – சாண்டில்யனில் ஆரம்பித்து ஜெயமோகன் வரை -ஒதுக்கியதில்லை. எதற்காக பிரெஞ்சு அகாடாமெ இதற்குப் பரிசிகொடுத்திருப்பார்கள் என பலமுறை யோசித்தும் விடைகிடைக்கவில்லை. 380 பக்க நாவலில் ஆசிரியரின், புனைவுக்காக ஒதுக்கிய பக்கங்கள் அதிகப்பட்சம் 50 பக்கங்களை ஒதுக்கலாம். மற்றவை பிறநூல்கள் பற்றிய தகவல்களும், அந்நூல்களில் தமது நாவலுக்கு எடுத்துக்கொண்ட கருவின் அடிப்படையில் சொல்லபட்டத் தகவல்களும். பரிசுக்கு வர் எடுத்துக்கொண்ட கருதான் காரணமாக இருக்கக்கூடும். கதை நாயகன் பல்கலைகழக ஆய்வு மாணவன். தந்தையின் நண்பர் சிபாரிசினால், பார்வை குறைந்த மூதாட்டி (Nausicaa Nicollaidis) வீட்டில் தங்கிப் பல்கலைகழகத்திற்கு போய்வருகிறான். கிழவிக்கு அவ்வப்போது நூல்களை வசித்து, தங்கும் செலவை சரிகட்டுகிறான். மிகப்பெரிய செல்வந்தரான கிழவிக்கு வாரிசுகளில்லை. 50 வருடங்களுக்கு முன்பு, தங்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து அதோஸ் (Le Mont Athos ) மலையில் மரபார்ந்த கிறித்துவ நெறிமுறையினர் மடாலயங்கள் ஒன்றில் துறவுவாழ்க்கை மேற்கொண்டிருக்கிற சகோதரனை கண்டுபிடிக்குமாறு பணிக்கிறார். சீதையைத் தேடிய அனுமானைப்போல கதைநாயகனும் பயணத்தை மேற்கொள்கிறார். கதை தன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லா தேடலிலும் நிலழ்வதுபோலவே, இந்த இளைஞனும் பேராசிரியர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நூலகர், பத்திரிகையாளர், இறுதியாக அதோஸ் மலை துறவி எனப் பலரைச் சந்திக்கிறான். எல்லோருக்கும் அத்தோஸ் மலைவாசிகள் – அதாவது மரபுசார்ந்த கிறித்துவத்தில் நம்பிக்கைவைத்து இயங்கும் மடாலயத்தினரைக் குறித்து குறைசொல்ல நிறைய இருக்கின்றன:

பேராசைப் பிடித்தவர்கள்; வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள், அதிகாரத்திற்காகவும், பொருளுக்காவும் கிரேக்கத்தில் எந்த அரசியல் தலையீட்டையும், ஆட்சியையும் ஏற்பதற்குத் தயாராக இருந்தவர்கள், பெண்களுக்கு எதிரானவ்ர்கள்; யூதர்களைக்கொல்ல காரணமாக இருந்தவர்கள், கொன்றவர்களுக்கு விசுவாசியாக நடந்துகொண்டவர்கள்; கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக இயங்கினார்கள்..என நீளுகிறது அவர்களின் குற்றப்பதிவு. பொதுவாக மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபை கூட்டத்திற்கு அதன் வழிவந்தவர்களுக்கு மரபுசார்ந்த தன்னதிகாரமிக்க கிழக்கு ஐரோப்பிய கிறித்துவர்களை அவ்வளாவாகப் பிடிக்காது. ஐரோப்பாவின் மேற்கு கிழக்கு அரசியல் விருப்பு வெறுப்புகள் ஏதோ பாட்டாளி வர்க்கம் முதலாளிவர்க்க அரசியலைமட்டும் சார்ந்ததல்ல. இதுபோன்ற நூற்றாண்டு பிரச்சினகளெல்லாம் அதற்குண்டு. அதுவும் தவிர அண்மைக்காலத்தில், Auto-fiction எனப்படுகிற சுபுனைவுகள் அதிகமாக வெளிவந்து பிரெஞ்சு வாசகர்களைக் களைபடையச்செய்திருப்பதும் உண்மை. மரபுசார்ந்த கிறித்துவர்களை ஆசிரியர் தமது படைப்பு(?) ஊடாக சில வதந்திகளையும் அதிற் சேர்த்துக்கொண்டு கொடுத்துகிழிகிழியென்று கிழித்திருப்பது பிரெஞ்சு அகாடெமிக்குச் சந்தோஷத்தை தந்திருக்கக்கூடும். அதனைத் தவிர 2007ல் இந்நூலை அகாடெமி பரிசுக்குத் தேர்வுசெய்ய வேறு காரணங்கள் இருக்க முடியாது. இந்த நூல முடித்தபோதுதான் நண்பர் பஞ்சாங்கம் ஒரு தகவல் நினைவுக்கு வந்தது. நாவல் மிக நன்றாக வந்திருந்ததாகக் குறிப்பிட்ட நண்பர் குன்னிமுத்து நாவலில் இந்தியாவில் எப்படி கிறித்துவ அமைப்புகள் செயல்படுகின்றன என்பதை ஆசிரியர் விமர்சித்திருந்ததாக எழுதியிருந்தார். இந்தியாவிலிருந்து வாங்கிவந்த நாவலை படிக்கவேண்டுமென்று எடுத்துவைத்திருக்கிறேன். ஆனால் இதனை ஒரு வாரத்தில் முடித்துவிடுவேன் தொடக்கத்திலே நாவலின் மொழி நடை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

 

காஃப்காவின் பிராஹா -4

மே -10 -2014Prague 211

இத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு, (கொடுத்துள்ள தலைப்பிற்கும் ) வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை. வரவில்லை. இருந்தும் காஃப்காவை (?) சந்தித்தேன். ஆமாம் சந்தித்தேன். இக்கணம்வரை அப்படியொரு வாய்ப்பு எனக்கு எப்படி அமைந்தது? எனப்பலமுறை திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

Prague 131செக் நாட்டிற்கு பெரிய வரலாறு என்று எதுவுமில்லை. பத்தாண்டுகளாகத்தான் செக் நாடு. 1993 வரை செக்கோஸ்லோவோகியா (இதுவும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானதுதான்) என்றிருந்த நாட்டை செக்-ஸ்லோவாக் அண்ணன் தம்பிகள் இருவரும் அடிதடியின்றி பாகம் பிரித்துக்கொண்டார்கள். தனிக்குடித்தனம் போனபிறகு அவர்களுக்கிடை காவிரி- முல்லைப்பெரியாறு சண்டை சச்சரவுகள் இல்லை. அவரவர் பாட்டுக்குத் தாமுண்டு தமது நாடுண்டு என்றிருக்கிறார்கள். செக்நாடு நிலப்பரப்பு 80000 ச.கி.மீ. (தமிழ் நாடு 130060 ச.கீ); மக்கட்தொகை 2012ம் ஆண்டுக் கணக்கின்படி 11 மில்லியன் மக்கள் (தமிழ்நாடு தோராயமாக 72 மில்லியன் மக்கள்). செக் நாட்டுக் கல்வியாளர்கள், கலை, சிற்ப, இலக்கிய ஆளுமைகள் உலகறியப்பட்டவர்கள். சமீபத்திய உதாரணத்திற்கு: 1984ம் வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற அவான் கார்டிஸ்ட்டும் கவிஞருமான Jaroslav Seifert. நோபெல் பரிசெல்லாம் வேண்டாம், « நொந்தே போயினும் வெந்தே மாயினும் …… வந்தே மாதரம் » என்று முழங்கிய பாரதிக்கு, இந்தியாவின் அண்டைமாநில மொழித்துறைகள் செலுத்தும் மரியாதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை. எலிவளையென்றாலும் தனிவளைவேண்டும் என்பது இதற்காகத்தான்.

Prague 185
நேற்றிரவு நாங்கள் தங்கியிருந்த உணவு விடுதிக்குத் திரும்ப, முதல் நாளைப்போலவே இரவு பத்து மணி ஆகியிருந்தது. டிராம்வேயில் இறங்கி விடுதியின் ரிசப்ஷன் டெஸ்க்கை நெருங்கினால், ஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சற்றுதள்ளி அவர்களுடைய கைப்பெட்டிகள், முதுகுப் பைகள் குவிக்கப்பட்டிருந்தன. இரவு அந்த ஓட்டலில் தங்கவந்த சுற்றுலா பயணிகள் போலிருக்கிறது. அவர்கள் ஸ்லாவ் மொழிதான் பேசினார்கள் என்றாலும் செக், ஸ்லோவாக், செர்பியா இவற்றுள் ஏதோ ஒரு நாடாக இருக்கவேண்டும் என்பது புரிந்தது. ரஷ்ய மொழி தெரியாதென்றாலும் அவர்கள் உச்சரிக்குவிதம் ஓரளவு பழகியிருந்தது. எங்களுடைய அறைக்குரிய ஓட்டல் விதிப்படி காலையில் புறப்படுகிறபோது ரிசப்ஷனிஸ்ட்டிடம் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். எங்களுடன் வந்திருந்த பயணிகளில் பலர் சாவியைக் கொடுக்காமலேயே கையில் வைத்திருந்தனர். அவர்கள் செய்த காரியம் சரியா தவறா என்பது இங்கே முக்கியமில்லை, ஆனால் அதிலுள்ள சௌகரியம் அப்போதுதான் எனக்கு விளங்கிற்று. அவர்கள் வந்த வேகத்தில் லிப்ட் எடுத்து அவரவர் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். நானும் மனைவியுமாக எங்கள் அறை சாவிக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. ஐந்து நிமிடக் காத்திருப்பு பத்து நிமிடமாயிற்று. ஏற்கனவே வரவேற்பு பெண்மணியைச் சுற்றியிருந்த கும்பல் கலைந்துபோனதும் மற்றொரு கும்பல் அந்த இடத்தை ஆக்ரமித்துவிட்டது. ரிசப்சனிஷ்ட்டைச்சூழ்ந்த கும்பலைப்பார்க்க எனக்கு மோடியைச் சூழ்ந்த NDA எம்.பிக்கள்தான் நினைவுக்கு வந்தனர். நமக்கென்று உள்ளது எங்கே போய்விடும் என பொன். இராதாகிருஷ்ணன் போல ஒரு ஓரமாக நிற்கிறேன். ரிசப்னிஷ்ட் பெண் கடைக்கண் பார்வைகூட என் மேல் விழவில்லை. அப்பெண்மணியைக் குறை சொல்ல முடியாது. அத்தனை பேரையும் அவர் ஒருவராய் எப்படி சமாளிப்பாரென மனம் சமாதானம் செய்துகொண்டாலும், காத்திருக்க பொறுமையில்லை. கும்பலை விலக்கிவிட்டு, எனது அறை எண்ணைக்கூறி சாவி வேண்டும் என்றேன். அந்த எண்ணுக்குரிய புறாக்கூட்டில் சாவியை சில நொடிகள் தேடினார். தேடிய வேகத்தில் திரும்ப வந்தார். சாவி இங்கில்லை என்றார். உடனே மீண்டும் கும்பலிலிருந்த பயணிகள் பக்கம் அப்பெண்மணியின் கவனம் சென்றது. ஐந்து நிமிடங்கள் கழிந்தன மீண்டு அப்பெண்மணியை விடுவதாக இல்லை. ”மீண்டும் சாவி?” என்றேன். அதுதான் இங்கில்லை என்றேனே, என்றாள். நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை உடனே கூப்பிடு, எனக்குரிய பதில் கிடைத்த பிறகுதான் மற்றவர்களை கவனிக்க அனுமதிப்பேன் என்றேன். இரண்டொரு விநாடிகள் அவள் மூக்கும் முழியும், காதுகளும் சேர்ந்தாற்போல சிவந்தன. தொலைபேசியை எடுத்தாள். யாரையோ அழைத்தாள். நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் அழைக்கிறாள் என நினைத்தேன். பாதுகாவலர் ஒருவரை அழைத்தார். அவருக்கு ஸ்லாவ் மொழி மட்டுமே தெரிந்திருந்தது. அவர் என்னவோ கூறினார். கையிலிருந்த சிறு பெட்டியைக்காட்டினார். ரிசப்னிஷ்ட் அவர் உங்கள் அறையைத் திறந்துகொடுப்பார் என்றார். அவர் எங்களுடன் வந்து அறையைத் திறந்துகொடுக்க, அன்றிரவும் மணி பதினொன்று ஆகியிருந்தது.

மே பத்தாம் தேதி வழக்கம்போல காலையிலேயே எழுந்துவிட்டபோதிலும், மற்ற நண்பர்கள் பத்துமணிக்கு முன்பாக புறப்படுவதில்லை என்று தீர்மானித்தவர்கள்போல பொறுமை காப்பதால் நிதானமாகமாகவே கீழே இறங்கினோம். டைனிங்ஹாலில் வழக்கம் போல ஐரோப்பிய உணவுகள். செக் மக்கள் காலையில் பெரும்பாலோர் சாசேஜ் சூப் உடன் ரோஹ்லிக் என்ற பிரெட், தயிர், சீஸ் இவற்றையெல்லாங்கூட பிற ஐரோப்பியர்களைப்போலவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள்; நானும் மனவியும் வழக்கம்போல், அவர்களுடைய ரோஹ்லிக், ஆம்லேட் ஆரஞ்சு ஜூஸில் காலை உணவை முடித்துக்கொண்டோம். முடித்து விட்டு வரும்போது பயணிகளில் ஒருவர் எங்கள் அறை சாவியைக்கொண்டுவந்து கொடுத்தார். தவறுதலாக, வந்திருந்த சக பயணி ஒருவர் அறையில் கிடைத்தது என்றார்கள். அதன் பூர்வாங்க விசாரணையில் இறங்கவில்லை. மீண்டும் அறைக்குச்சென்று கைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்கினோம். இன்றைய திட்டம் வெல்ட்டாவா (Vltava – உச்சரிப்பு குழப்பம் இருக்கிறது, முந்தைய பக்கங்களில் வல்ட்டாவா என எழுதியிருந்தேன், தற்போது வெல்ட்டாவா என உச்சரிப்பதுதான் சரியென அறியவந்தேன்) – நதியில் படகு சவாரி, பிற்பகல் மீண்டும் பிராகு நகரத்தை வலம்வருவது. ஓட்டலை காலிசெய்துவிட்டு பேருந்தில் நாங்கள் கொண்டுவந்த பெட்டிகளை வைத்தாயிற்று. பேருந்து ஓட்டுனர்கள் படகுசவாரிக்கு வசதியாக எங்கள் பேருந்து, படகுத் துறைக்கே எங்களைக் கொண்டுபோய் சேர்த்தது

வெல்ட்டாவா படகு சவாரி

Prague 145வெல்ட்டாவா நதியில் இரவுவேளையில் படகிற் செல்ல கொடுப்பினை வேண்டும். எங்கள் பயணத்திட்டத்தில் இரண்டாம் நாள் மாலை படகு சவாரி எனச்சொல்லியிருந்தார்கள். பயணச் சீட்டை எங்கே பெறலாம் என்கிற தகவலின்மையும், மாலை ஆறுமணிக்குமேல் பயணச்சீட்டு விற்கும் முகமைகள் தொழில் புரிவதில்லை என்ற காரணத்தினாலும் அம்முயற்சியை பயண ஏற்பாட்டாளர்கள் கைவிட்டனர். ஆக 10ந்தேதி காலை படகுச்சவாரிக்குத் தயார்படுத்திக்கொண்டவர்களாய்ப் புறப்பட்டோம். மதிய உணவை படகிலேயே வைத்துக்கொள்ளலாம் என்ற சிலரின் யோசனையைப் பெரும்பானமை நிராகரித்துவிட்டது. படகுச் சவாரியை முடித்துக்கொண்டு அவரவர் விருப்பத்திற்கு எங்கேயேனும் மதிய உணவை எடுக்கலாம் எனத் தீர்மானித்து படகடிக்குச் சென்றோம். நாங்கள் ஐம்பதுபேருக்குமேல் இருந்ததால் மொத்தமாக படகொன்றை ஒரு மணிநேர சவாரிக்கு வாடகைக்கு எடுத்தோம். அதிலேயே உண்வு எடுத்துக்கொள்வதெனில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகலாம். மொத்தபேரும் மேற் தளத்தில் அமர்ந்துகொண்டோம். Prague 151உடலை வருத்தாத வெயில், Prague 167நதியில்விளையாடி கொடியிற் தலைசீவி நடந்துவந்த இளங்காற்றின் சிலுசிலுப்பு, வலப்பக்கம் எனது வாழ்க்கைத் துணை, சற்று தூரத்தில் கூச்சலும் கும்மாளமுமாக ஆண்கள் ஓரணி பெண்கள் ஓரணியென உத்திபிரித்து பாட்டுக்குப் பாட்டு, இடைக்கிடை கொறிப்பதற்கு நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பகடிகள், கேலிகள், கிண்டல்கள், சிப்ஸ், வேர்க்கடலை, வீட்டுப் பக்குவத்துடன் செய்திருந்த முறுக்கு…. மகிழ்ச்சியை அளக்க நீட்டல், நிறுத்தல், கொள்ளளவு… எதுவும் காணாது. கம்பனைத்தான் அழைக்கவேண்டும். நதிக்கரையெங்கும் பிராகு நகரத்தின் கட்டிடம் மற்றும் கலை அற்புதங்கள் – சார்லஸ் பாலம், பிராகு கோட்டை, நேஷனல் தியேட்டர்…- எழில் கொஞ்ச முறுவலிக்கின்றன. Prague 159                                            Prague 164அப்போதுதான் ஒருநொடி, ஐம்பது நொடியென ஆரம்பித்து நிமிடங்களைஉண்டு ஒரு பெயர் கண் சிமிட்டுகிறது, கண்ணாடியைச் சரி செய்துகொண்டு மீண்டும் ஒரு முறை படிக்கிறேன். வெள்ளைப் பதாகை விரித்ததுபோல பத்தடி நீளத்திற்கு ஒரு பெயர்ப்பலகை: Prague 156‘காஃப்கா மியூசியம்’ என்று எழுதியிருக்கிறது. படித்து முடித்த மாத்திரத்தில் ஒரு சோர்வு தட்டியது. அடடா! எப்படியான வாய்ப்பைத் தவறவிட்டோம்! என நினைத்துக்கொண்டேன். நண்பர்களே! பிராகுவிற்கும் காஃப்காவிற்குமுள்ள பந்தம் குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று பயணம் செய்திருக்கிறேன் என நான் கூறுவதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். படகுச்சவாரி முடிந்ததும், வந்திருக்கிற நண்பர்களில் எவராவது விரும்பினால் அழைத்துக்கொண்டு மியூசியத்தைப் பார்த்து வருவது என சட்டென்று முடிவெடுத்தேன். படகு சவாரி முடிவுக்குவந்து, நண்பர்கள் படகைவிட்டு இறங்கியதும் “இரவு 10மணிக்கு பேருந்து நிற்கும் இடம் இதுதான் இங்கேயே வந்துவிடவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வார்த்தைக்குக் காத்திருந்ததுபோல சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வந்திருந்த நண்பர்கள் சென்றார்கள். பயண ஏற்பாட்டாளர் வேறு, “தனித்தனியே எங்கும் போகவேண்டாம், நான்கைந்து பேராகச் செல்லவும். அப்போதுதான் இரவு பத்துமணிக்கு எளிதாக அனைவரும் ஒன்றுசேர முடியுமென்றார். அவர் கூறிய மறுகணம் காஃப்கா மியூசியத்தைப் பார்க்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். தவிர பிரான்சிலிருந்து புறப்படும்போது காஃப்கா குறித்து இம்மிகூட நினைப்பு இல்லை என்கிறபோதும், முதன்முறையாக அதொரு குறையாக அரித்தது.Prague 193

 

Prague 132படகுத் துறையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் பிரிந்து, நகரத்தின் இதயப்பகுதியில் 200 கடைகள் சேர்ந்தாற்போலவிருந்த ஒரு பேரங்காடி மையத்தில், ஓர் இந்தியத் தமிழர் எங்களைபார்த்ததும் தனது மனைவியிடம் ‘இலங்கைத் தமிழர்கள்’ எனக்கூறியது காதில் விழுந்தது. மணி பிற்பகல் இரண்டு. நல்ல பசி. மூன்றாவது தளத்தில், பொதுவாகப் பேரங்காடி மையங்களிற் காண்கிற எல்லாவிதமான உணவகங்களும் இருந்தன. ஒரு சீன உணவகத்தைத் தேர்வுசெய்து நானும் மனைவியும் சாப்பிட்டோம். அருகிலேயே பயண ஏற்பாட்டாளரின் சகோதரியும் கணவரும், பிள்ளைகளுமாக உணவருந்தினார்கள். பேரங்காடி மையத்திலேயே காலாற நடந்துவிட்டு ஐந்து மணி அளவில் கீழே இறங்கினோம். வொரெயால் தமிழ்ச் சங்கதலைவர் இலங்கைவேந்தன், திரு திருமதி குரோ என நாங்கள் ஐந்து பேருமாக பழைய பிராகுவில் இதுவரை காலெடுத்துவைக்காத பகுதிகளுக்குள் நுழைவதெனத் தீர்மானித்து Starmestske Namesti க்கு மேற்காக நடந்தோம், அதாவது புனித நிக்கோலாஸ் தேவாலயத்தினை நோக்கி. Prague 199இங்கும் வழியெங்கும் Prague 194நினைவுப்பொருட்கள் கடைகள், ஓவியக் கண்காட்சி சாலைகள். மனிதர்களை சித்திரவதைப் படுத்த உபயோகித்த கருவிகளையுங்கூட ஓரிடத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள், தாய் மசாஜ்க்கான இடங்களும் இருந்தன. கிரிஸ்ட்டல், விலையுயர்ந்த கற்களில் செய்த பொருட்களின் விற்பனையகங்கள் இங்கும் நிறைய இருந்தன. ஒரு திறந்தவெளியில் முடிந்தது. அங்கு முதன் முத்லாக கத்தோலிக்க மதச்பைக்குஎதிராகக் குரல்கொடுத்ததால் உயிருடன் எரிக்கபட்ட ஜான் ஹஸ் (Jan Hus)  என்பவரின் நினைவுசின்னம் இருக்கிறது. Prague 201அதை பார்த்துவிட்டு காப்பி குடிக்கலாம் என்று ஒரு விடுதிக்குச் சென்று வெளியில் போட்டுவைத்திருந்த மேசையில் அமர்ந்து ஐந்துபேரும் அவரவர்க்கு பிடித்தமான காப்பியை வரவழைத்து குடித்துவிட்டு வெரெயால் தமிழ்ச் சங்கதலைவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பினேன்.

காஃப்கா பிறந்த வீடு

Prague 212நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வலது பக்கம் வீதியோரம் கட்டிடத்தின் முகப்பில் காஃப்காவின் பாதி உடல் சிலையாக பொறித்திருந்தது. அந்த இடத்திற்கு Namesti Franz Kafka என்று எழுதியிருந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. இலங்கைவேந்தனிடம் ஏதோ பேசவேண்டும் என நினைக்க நா குழறுகிறது. காஃப்காவைப் பற்றி சுருக்கமாகக்கூறினேன். வந்திருந்த பிறரும், குறிப்பாக எனது சந்தோஷத்திற்கு எவ்வித குறையும் நேர்ந்துவிடக்குடாது என்பதுபோல வொரெயால் தமிழ்சங்க தலைவர் என்னுடன் வந்தார். ஐவருமாக நடக்கவில்லை ஓடினோம். என் ஊகம் சரி. அந்தக்கட்டிடத்திற்கும் காஃப்காவிற்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனால் உணவு விடுதி. ஓட்டல் சர்வர்களை விசாரிக்கிறேன்: காப்காவின் வீடா? ஆம் என்பதுபோல தலையாட்டுகிறார். சந்தோஷத்துடன் அவர் கைகளைப் பிடித்துக்கொள்கிறேன். உள்ளே போய் பார்க்கலாமா? தாராளமாக என்று பதில் வருகிறது. உள்ளே போனால் சுவர் முழுக்க காஃப்காவின் புகைப்படங்கள். Prague 2141883 ஜூலை 3ந்தேதி காஃப்கா இந்த இடத்தில்தான் பிறந்திருக்கிறார். சரியாக சொல்லவேண்டுமெனில் மைஸ்லோவா (Maislova) வீதியும் கப்ரோவா (Kaprova) வீதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. துர் அதிர்ஷ்ட்டமாக 1897 ம் வருடத்தில் தீ விபத்தொன்றில் அக்கட்டிடம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட 1906ல் இப்புதிய கட்டிடம் எழும்பி இருக்கிறது. கட்டிடத்தின் முகப்பில் உள்ள அரை உருவ காஃப்கா சிலையை வடித்தவர் செக் நாட்டின் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் Hladik . இல்லத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். Prague 197நண்பர் இலங்கைவேந்தனுக்கு நன்றி சொல்லவேண்டும். அந்த வீதியில் நடந்ததும், அவர் நினைவாக நடத்தப்படும் புத்த்கக்கடை, நூல்நிலையம் முன்பு கழித்த நொடிகளும் பிறவும் மறக்க முடியாதவை. பிராகுவும்காஃப்காவும் என்னுள் அடுத்த நாவலுக்கான உந்துதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். அதனாற் சில தகவல்களில் முழுமையாக விவரிக்காமல் போனது. பொறுமையுடன் வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
———————————-

 

 

 

கா•ப்காவின் பிராஹா -3

மே 9 -2014

Prague 092

பொதுவாகவே புதிய மனிதர்களின் சந்திப்புகளும் சரி, புதிய இடங்களின் தரிசனங்களும் சரி, அல்பெர் கமுய் கூறுவதைப்போல எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் அனுபவத்திற்குமான இடைநிலையாகவோ அல்லது பிராய்டு வகைபடுத்துகிற திருப்தி-அதிருப்தி இரண்டுக்குமான நனவிலி மனநிலையாகவோ இருப்பதால் இதுபோன்ற பயணங்களில் ஓர் ஆர்வத்துடனேயே கலந்துகொள்கிறோம். தவிர நண்பர்கள் அல்லது நமது மக்களுடன் செய்கிற குறுங்கால பயண அனுபவங்கள் பிராய்டுகூறுகிற அதிருப்தி விழுக்காடுகளைக் குறைக்க உதவுகின்றன என்பது சொந்த அனுபவம். ஓட்டலில் காலை உணவுக்கு மட்டும் ஏற்பாடு செய்திருந்தார்கள். பாரீஸிலிருந்த வந்திருந்த அனேகர் தங்கள் கையோடு கொண்டுவந்த உணவுகள் இரண்டாம் நாள் வரை பலரும் சாப்பிட உதவியது, குறிப்பாக வெரெயால் தமிழ்ச்சங்கத் தலைவரின் குடும்பம். ஆக முதல் நாள் இரவு அன்பழகன் என்பவரின் உபசரிப்பில் சப்பாத்தி, தமிழ்ச் சங்கத் தலைவர் இலங்கைவேந்தன் அன்பிற்காக மிளகாய்ப்பொடியுடன் இரண்டு இட்டலி எனப் பிராகுவிலும் பாரதப் பண்பாட்டை வாய்மொழிந்துவிட்டுப் படுக்க இரவு பதினொன்றாகியிருந்தது.

ஒன்பதாம் தேதியன்று எழுந்திருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக 7 மணி. காலைக் கடன்களை முடித்துக்கொண்டு ஓட்டலின் உணவுவிடுதிக்கு வந்தபோது 8.30 ஆகியிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே ஐரோப்பிய உணவுவகைகள். பெரும் எண்ணிக்கையில் இந்தியர்களைக் கண்டது அங்கிருந்த மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கலாம். பரிசாரகர்கள் அவ்வப்போது குறைகிற உணவு வகைகளை நிரப்புவதோடு; தட்டுகள், முள் கரண்டிகள், கத்திகள், கண்ணாடி தம்ளர்கள், கோப்பைகள் எனவைக்கிறபோதெல்லாம் எழுந்த ஓசைகள், உணவுண்ட மனிதர்களின் மெலிதான உரையாடலைத் துண்டித்து நேரத்தை நினைவூட்டுவதாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் காண்கிற பலமுறை ஒத்திகைபார்த்து பழகிய முகமனும், உபசரிப்பும் இல்லை. நேர்க்கோட்டிலிருந்து விலகாத ஒழுங்கு மட்டுமே காண முடிந்தது. இன்றைக்குப் பார்க்கவேண்டியவை பட்டியலில் Prague Castle என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற பிராகா கோட்டை இருந்தது, அடுத்ததாக செக் நாட்டைச்சேர்ந்த தமிழ் அறிஞர் வாச்செக் யாரோஸ்லா•ப் (Vacek Jaroslav).

இந்தியர் வழக்கப்படி தாமதமாகப் புறபட்டோம். சந்தோஷத்தை மட்டும் கணக்கிற்கொள்ளவேண்டும் என்பதால் பயண ஏற்பாட்டாளர்களின் திட்டமிடலில் நிகழ்ந்த சிறு பிழைகளில் கவனம் செலுத்தவில்லை. ஓட்டல் அருகே முன்னூறு நானூறு மீட்டர் தொலைவிலிருந்த Zborov – Strašnické நிறுத்தத்தில் குழப்பங்களுக்கிடையில் எண் 5 டிராம்வே எடுத்து பின்னர் வேறொரு இடத்தில் மற்றொரு டிராம்வே எடுத்து பயணிக்கவேண்டியிருந்தது. ஐம்பது இந்தியர்கள் (தமிழர்கள்) கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் இப்படி ஒட்டுமொத்தமாகக் காண்பது செக் நாட்டவர்க்கு அரிதானக் காட்சி. அரசுப் போக்குவரத்து சாதனங்களில் கலகலப்பான (?) பயண அனுபவங்களை இதற்கு முன்பாக அவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

பிராகா கோட்டை – Prague Castle (Prazsky hrad)

பிராகா நகரத்தின் இதயத்துடிப்பு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. சுற்றுலா பயணிகள் இல்லையெனில் பிராகு நகரமே வெறிச்சோடிக்கிடக்கும் என்ற எண்னம் அடிக்கடி வருகிறது. அதிலும் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒரு நகரத்தின் இயக்க அடையாளத்தை முற்று முதலாக இழந்திருந்தன. குறிப்பாக வால்ட்டவா நதியை டிராம்வேயின் ‘தடக்’குகளைப் பதினோரு மணி கிழக்கு ஐரோப்பிய குளிர்வெயிலில் அரைவிழிமூடி கடந்ததும் எதிர்கொள்கிற சொப்பன நகரமும் உறக்கம் கலையாத மனிதர்களும் வித்தியாசமான அனுபவம். இத்தனைக்கும் நாங்கள் சென்றிருந்தது ஒரு சனிக்கிழமை. Prazsky hrad என்றே ஒரு நிறுத்தம் இருந்தது. இறங்கியதும் இடப்புறமிருக்கும் தோட்டத்தைக் கடந்து ஒரு அரைகி.மீட்டர் தூரம் படியேறவேண்டும். கோட்டையென்றாலே குன்றின் மீதோ மலை மீதோ கட்டுவதுதான் பாதுகாப்பு என உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்ட நியதிக்கு செக் முடியாட்சியும் தப்பவில்லை என்பதன் அடையாளமாக இக்கோட்டையும், அதன் தேவைக்கான பிறவும் இங்கும் ஒரு மலையை சுவீகரித்துக்கொண்டிருந்தன. கோட்டைக்குள் நுழைவதற்கு முன்பு இடப்புறமிருக்கும் முற்றத்தில் – பிற சுற்றுலாவாசிகள் போகட்டுமென பொறுமையுடன் காத்திருந்து – பிராகு நகரத்தின் தென் கிழக்குப் பகுதியைக் காமிராவில் கிளிக்கிடுவதற்கு முன்பாக, தவறாமல் கண்களில் பதிவுசெய்துகொள்ளவேண்டும். Prague 087நுழைவாயிலில் காவலர்கள் இருவர் ஆடாமல் அசையாமல் பக்கத்திற்கு ஒருவரென நிற்கிறார்கள். கோட்டையின் நுழைவாயில் இடது புறம் இருக்கிற ராயல் கார்டனை வரும்போது பார்க்கலாம் என நினைத்து பாரக்காதது, தனிக்கதை. நுழைவாசலில் நுழைந்ததும் ஒரு பெரிய திறந்தவெளி. ஒரு நீரூற்று கோத்திக் காலத்து சிலையுடன் இருக்கிறது.Prague 094

பழைய அரண்மணை: இடதுபுறம் திரும்பியதும் பார்வையிடுவதற்கான அனுமதிச்சீட்டை வாங்கிவர ஏற்பாட்டாளர்கள் சென்றதால் காத்திருக்கவேண்டியிருந்தது. காத்திருந்ததும் தவறில்லை Joze Plenik சிற்ப கலைஞர் முதல் உலகப்போர் நினைவு ஸ்தூபத்தை காண நேரம் கிடைத்தது. அனுமதிசீட்டு வந்து சேர்ந்ததும், உள்ளே சென்றோம். இப்பகுதி 12ம் நூற்றாண்டிலிருந்து உபயோகத்திலிருக்கிறது தொடக்கக் காலத்தில் அரசகுமாரர்களுக்கும் பதினாறு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மன்னர்களின் உபயோகத்திந் கீழும் இருந்திருக்கிறது. விலாடிஸ்லாவ் மண்டபத்தில் கோத்திக் காலத்து உட்கூரை பார்க்கவேண்டிய ஒன்று. பூமிக்கடியில் குடைந்துள்ள பகுதியில் கோட்டையின் ஆயிரம் ஆண்டுவரலாற்றை ஆவணங்கள், பொருட்கள் துணைகொண்டு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றுள் வைரங்கள் விலை உயர்ந்த கற்கள் பதித்தப் பொருட்களும் அடக்கம். புனித கீ தேவாலயத்தின் வலது புறம் செக் நாட்டு ராணுவம் மற்றும் காவல்துறையின் சீருடைகளில் ஏற்பட்ட மாற்றங்களை தொடக்கங்காலத்திலிருந்து வைத்திருக்கிறார்கள் இதுவும் சரி தேவாலயத்தில் எதிரிலிருந்த புனித ஜார்ஜ் பசிலிக்கா என்கிற சிறுதேவாலயமும் சரி பெரிதாக ஈர்க்கவில்லை. Zlata Ulicka என அழைக்கப்படுகிற கோல்டன் லேனில் சிறு சிறு குடில்கள் இருக்கின்றன. Prague 121இதுபோன்றதொன்றை ஸ்பெயினிலுள்ள பார்சலோனா நகரிலும் பார்த்திருக்கிறேன். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து 20 ம் நூறாண்டுவரை பல் வேறு கலைஞர்கள், கைவினைஞர்களின் இல்லங்கள் எப்படி யிருந்தன என்பதைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு பொற்கொல்லரின் இல்லம், மதுச்சாலை, இறுதியாக சினிமா வரலாற்றறிஞரின் குடில். பார்த்துமுடித்து இடப்புறமுள்ள குறுகிய வழியில் குனிந்து வெளியேறினால் ஒரு திறந்த வெளியில் முடிகிறது. இடதுபக்கமாகச் சென்றால் டலிபோர்க்கா (Daliporka) வருகிறது. மிகவும் குறுகலான படிகளில் கீழே இறங்கிசெல்லவேண்டும். படிகளில் குறுகிய அமைப்பே பார்க்கவிருக்கும் பயங்கரத்தைக் குறித்த எச்சரிக்கையாகக் கருதலாம். டலிபோர் என்கிற வீரன், விவசாயிகள் அரசுக்கு எதிராகத் திரண்டபோது அவர்களுக்கு ஆதரவாக இருந்தவனாம். நீங்கள் நினைப்பதுபோலவே அவனைக் கைது செய்து நிலவறையில் அடைத்து சித்திரவதை செய்து தூக்கிலிட்டார்கள் எனச்சொல்கிறார்கள். அவன் அடைபட்டிருந்தபோது வாசித்த வயலின் இசை கோட்டையெங்கும் ஒலித்ததாம். அதன் அடிப்படையில் ஒரு ஒப்பேரா என்ற இசை நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கிறார்கள். ஆகக் கீழே எல்லாவிதமான வதை ஆயுதங்களையும் காணமுடிகிறது. இறுதியாக லோக்கோ விச் என்ற இடம் : இது தனிநபர் ஒருவரின் விசேடமாக சேர்த்துவைத்த பொருட்களின் கண்காட்சிக்கூடம். செக் நாட்டின் பிரசித்திபெற்ற ஓவியக்கலைஞர்களின் ஓவியங்கள், பீத்தோவன், மொஸார் போன்ற இசைக்கலைஞர்கள் கைப்பட எழுதிய இசைக் குறிப்புகள் இங்குள்ளன. இறுதியாக செயிண்ட் கி தேவாலயம் வந்தோம். மிகப் பிரம்மாண்டமான ஆலயம். பிராஹா கோட்டையில் Prague 091மிகமுக்கியமானதொரு இடம். இதன் வெளி முகப்பும் Prague 097சரி, உள் விதானங்களும் தனி அழகு. Prague 110அவற்றின் கண்ணாடிஓவியங்கள், குறிப்பாக சிலுவையில் அறைந்த இயேசுவின் மரச்சிற்பம், ‘புனித கி'(Saint Guy)யின் கல்லறை என எழுத நிறைய உண்டு.
Vacek Jaroslav
Prague 125வாச்செக் யார்ஸ்லோ• என உச்சரிக்கவேண்டும். தமிழில் குறிப்பாக செவ்விலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளவர்களுக்கு இப்பெயர் அன்னியமானதல்ல. இவரை அதிகம் அறிந்திராத நண்பர்களுக்காக வேண்டுமானால் சில கூடுதல் தகவல்கள்: பிராகு பல்கலைகழகத்தின் மொழியியல் பீடத் தலைவர். ஏற்கனவே ‘கமில்’ என்கிற செக்நாட்டு தமிழறிஞர் பற்றி அறிந்திருக்கிறோம். அடுத்தது இவர். அண்மையில் இந்திய அரசால் குறள் பீட விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டவர். இந்திய மொழிகளில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் ஆழ்ந்த ஞானம். அவருடைய தமிழ்ப் பங்களிப்பை எழுத இங்கே இடம்போதாது. தமிழ் மொழி சார்ந்து பணி யாற்றுகிற நமது தமிழர்களிடம் நான் பேச அஞ்சுவதுண்டு. பெய்த மழையில் வள்ளுவர் நனைந்தார், இரண்டு நாள் அவர் சிலைக்குக் குடைபிடித்தேன் என்றெல்லாம் தமிழ்ச் சாதனையாளர்கள் பெருகிவிட்ட காலமிது. சுயபுராணம் படிக்காத ஒரு தமிழரை கண்டு பிடித்தல் அரிது. அதிலும் தற்போதெல்லாம் மனிதர்களின் ஆற்றலை தொலைகாட்சிகள், ஊடகங்களின் தராசுகொண்டு எடைபோட ஆரம்பித்த பிறகு; அடக்கமாய், நமது தொலைகாட்சிபெட்டிகள், ஊடங்களின் பிடியில் சிக்காத ஒரு மனிதரை, பிரான்சுநாட்டைசேர்ந்த வொரெயால் தமிழ்ச் சங்கமும், தலைவர் இலங்கைவேந்தனும் சங்கத்தின் பிற உறுப்பினர்களும் அழைத்துவைந்து பாராட்டநேர்ந்தது ஓர் அதிசய நிகழ்வுதான். கடந்த வருடத்தில், பாரீஸ் நகருக்கு அழைத்து அவரை கௌவரவித்திருக்கிறார்கள். இவர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்த அதே ஆண்டு குறள்பீட விருதும் கிடைத்திருக்கிறது. அம்மானிதர் Náměstí Republiky என்ற இடத்திற்கு வொரெயால் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவ்ர்களைத் தேடிவந்து தனது பல்கலைக்கழகப் பீடம் வரை அழைத்துச்சென்றதும் உரையாடியதும் மனம் நெகிழ்ந்த தருணங்கள். அவர் பேசியபோது உள்ளன்போடு வார்த்தைகள் வெளிவந்தன. குறள்பீடம் விருதைப்பற்றி அதிகம் வாய் திறக்காத; அதனைத் தமது சாதனைப்பட்டியலில் குறிப்பிட விரும்பாத முனைவர் வாச்சக் (Vacek), இவர்கள் கௌரவித்ததை மகிழ்ச்சியோடு ஏற்றார் எனில், அவர்மீது வொரெயால் தமிழ்ச்சங்கத்தினர் கொண்டிருந்த அன்பு முழுமையானது, கபடமற்றது -குறள்பீட விருது அரசியலுக்கு அப்பாற்பட்டது எனபதை மனமார உணர்ந்திருந்தார்.
(தொடரும்)

—————————————–