Monthly Archives: ஜனவரி 2019

தமிழும் நதியும் – நா கிருஷ்ணா

 

‘நீரின்றி  அமையாது உலகு ‘  என்ற உண்மையை உணர்ந்து,  நிலக்குடத்தை நிரப்ப  வள்ளல் வான்பசுக்கள் மடி சுரக்கும்  உயிர்ப்பாலின் வெள்ளமே ஆறு. மனிதர் வாழ்க்கையை ஆற்றுப்படுத்துகிற  நதியென்னும் அற நூல்.  பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நிகழும் இயற்கையின்  இவ்வினையையே நாம்  ஆறு, புனல், நதியென அழகு  தமிழ் பெயர்ச் சொற்கள்களாக `மாற்றி உள்ளோம். ஆறு என்ற சொல்லுக்கு நதி, புனலென்று விளக்கம்தரும் அகரமுதலிகள் அதற்கு ஒழுக்கம், பயன் என்ற பொருளைத் தருவதையும்  கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.

 

பனிப்பிரதேசத்தில் வாழ்பவனைக் காட்டிலும் , பாலை நில மனிதனும், விலங்கும் நீரின் அருமையைக் கூடுதலாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் நிலம் கடுமையான வெம்மையையும் வறட்சியையும்  மட்டுமே கொண்ட பாலை நிலம் அல்ல, ஆனால் அதுபோல ஆக்விடக்கூடாதென்ற அச்சத்தில் நாட்களைத் தள்ளும் அவலத்தில் தவிக்கும் நிலம்.  மாரிப் பொய்த்து, காவிரி வறண்டு அறுபோகம் கண்ட தமிழ்நிலம் இன்று ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி போய்விடுமோவென நம் உள்ளம் தவிக்கிறது.

 

காலம் காலமாகவே வானத்தைப் பார்த்து வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் உயர்ந்த சிந்தனைக்கு இதுகூட காரணமாக இருதிருக்கலாம். « நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை  என்ற இரண்டு பண்புகளும் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ்’ மொழிப்பெயருக்கு விளக்கம் தர வந்தவர்கள், ‘ இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக்குறிப்பிட்டனர் »  என எழுதுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவன், தமது வடுப்பூக்கள் என்ற  கட்டுரைத் தொகுப்பில். ஆக நீரையே மொழியாக கொண்ட தமிழினம்,  நீரைத் தன் வாழ்க்கையாக வைத்து ஒழுகியதில் வியப்பில்லை.

 

பண்டைய நாகரீகங்கள் அனைத்துமே நதிகளில் பிறந்தவை, நதிகளில் வளர்ந்தவை என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. நாகரீகங்கள் என்பது உண்பது, உடுத்துவது அல்ல. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தின் வாழ்க்கை நெறி,  பண்புகளின் கண்ணாடி, கலை  இலக்கிய சாட்சியம், நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாடு. சிந்து நதியைத் தொட்டிலாகக்கொண்ட மொகஞ்சாதாரோ – ஆரப்பா , நைல் நதியைத் தொட்டிலாக்கிக்கொண்ட எகிப்து, டைக்ரீசு யூப்ரட்டீசு நதிக் கரைகளில் வளர்ந்த  மெசொபொத்தோமியா  ஆகியவற்றை நாம் அறிவோம். இன்றும் பல முக்கிய நகரங்கள் அனைத்திலும்  ஏதோவொரு நதி, நகரின் செழுமைக்கும் பெருமைக்கும் அழகியல், பொருளியல் அடிப்படையில் பயன்தருகிறது என்பது கண்கூடு.

 

இன்றைய மனிதர்கள் நீரைத்தேடி எதற்காக நாம் போக வேண்டும், அது ஆட்சியாளர்கள் உறங்கினாலும்,  அண்டைமாநிலமும்  கைவிரித்தாலும் , உச்ச நீதிமன்ற தீர்ப்பு உதவாவிட்டாலும், வானம் கருணைகாட்டும், தன் வாசல்தேடி  வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். ஆனால் அன்றைக்கு,  தன்னைத் தேடி நீர் வராதென்ற  நிலையில்  தனது உயிர்வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நதிகளைத் தேடி மனிதர்கூட்டம் அலைந்தது.  அந்த அலைதலின் பயனாக, ஓரிடத்தில்  ஓங்கி வளர்ந்திருக்கிற  மரங்களையும், தழைத்திருக்கிற புல்பூண்டுகளையும் , எறும்புப் புற்றுகளையும்  வைத்து வெள்ளம் கரைபுண்டோடக் கூடிய இடம் எதுவாக இருக்குமென்ற புத்திக் கூர்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். .

 

பருமரக் கரு ஆல் அத்தி பாற்பொடி

மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாப் பொளி

தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்

கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே !

 

காணும் வெண்புல் கருரும்புல் கருஞ்சடை

தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி

தாணு தெற்பை சிறுபீளை சாடிணை

வெங்கோரை பொருதலை வெள்ளமே !

 

என 19 நூற்றாண்டு பாடல்கள் தெரிவிக்கின்றன, எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை ஆனால்  நூலின் பதிப்பாசிரியர் ச.வெ. சுப்பிரமணியன் என இவற்றைக் குறிப்பிடுபிறார், கடலடியில் தமிழர் நாகரீகம் என்ற நூலை எழுதியுள்ள புதுவை நந்திவர்மன்.

 

நதியைக் கண்ட தும்  நீரைபார்த்த மகிழ்ச்சியில் நிலையாக இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு மக்கள் ஆங்கே  தங்கலாயினர்.  ஆற்றங்கரைகளும், அதனையொட்டிய வெளிகளும் ;  அடர்ந்த மரங்கள் செடிகொடிகள், பறவைகள், விலங்குகள்  என்ற உயிர் வாழ்க்கையின் கருவறையாக இலங்குவதைக் கண்ட மனிதன், அவற்றோடு ஒன்றாக தாம் வாழ்வதற்கும் புனல் இடமளிக்கும்  என்று நம்பினான், அன்றிலிருந்து  நாடோடிவாழ்க்க்கையை நதிக்கரை வாழ்க்கையாக  மானுட வாழ்க்கை அணைத்துக்கொண்டது. மனிதம், ஆற்றின் துணைகொண்டு ஆற்றியது வயிற்றின் பசியைமட்டுமல்ல, பொருட்பசியையும்.

 

எனவேதான்,

 

பூவார் சோலை மயில் ஆல

புரிந்து குயில்கள் இசைபாட

காமர் மலை அருகசைய

நடந்தாய் வாழி காவேரி !

 

என்று  காவிரியின் நடைபயணத்தை வாழ்த்துவதன் ஊடாக  இளங்கோ, ஏன் மனிதன் தன் நடைபயணத்தில் இளைப்பாற நதிக்கரையை தேர்ந்தெடுத்தான் என்ற இரகசியத்தையும் போட்டுடைக்கிறான். மனித இனம் நதிக்கரையில்  இளைப்பாறியபின்னர் அங்கே என்ன நிகழ்ந்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடல் நமக்கு விளக்குகிறது.

 

உழவர் ஓதை, மதகோதை

உடைநீர் ஓதை, தண்பதங்கொள்

விழவரோதை, சிறந்தார்ப்ப

நடந்தாய், வாழி காவேரி !

 

காவிரிக்கரையில்  காவிரி பாயும் ஓசைமட்டுமல்ல  உழவர் எழுப்பும் ஓசையும் உண்டென்கிறான். இந்த உழவர் ஓசையில் : நுகத்தடி, நுகத்தானி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழுவெருது, உழுசாலில் நீர்பாயும் சலசலப்பு அவ்வளவும் அடங்கும். மதஓதை உடைநீர் ஓதை  நீர் பாய்ச்சலின்போது எழும், மண்வெட்டியை மடையில் போடும் ஓசை, மடை திறக்கும் ஓசை, மடை உடைந்து பாயும் தண்ணீர்ன் ஓசை ; வெள்ளத்தில் நீராடி மகிழும் மாந்தரின் ஓசை என்ற  எல்லாமுமான ஓசையாக ஓசையின் வெள்ளமாக நடக்கின்ற காவிரையை இளவல் பாடுகிறான்.

 

உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழ்கூறும் நல்லுல கம் நதியோரம் தம்மைப் பிணைத்துக்கொண்ட உலகம், நதி புனலுடன் தம்

பிறப்பை, இளமையை, முதுமையை, காதலை,மணவாழ்க்கையை, முறிவை,  இறப்பை ஒப்படைத்து வாழ்ந்த இனம் தமிழினம்.  அலெக்ஸாந்திரியா போல, ஆம்ஸ்டர்டாம்போல, பாக்தாத்போல, பெல்கிரேடுபோல, இலண்டன்போல, பாரீசுபோல, ஹோசிமின் போல கல்கத்தா வாரணாசிபோல இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களைப்போல தமிழ் நாட்டின் நகரங்களும் நதிக்கரைகளில்  செழித்தவை, நதிகளால் வளம் பெற்றவை நதிகளால் காதல்வயப்பட்டவை.

 

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்

கண்ட தோர் வையை பொருனைநதி-என

மேவியாறு பலஓடத்- திரு

மேனி செழித்த தமிழ்நாடு !

 

என்று தமிழ் நாட்டின் வளத்தை ஆறுகளோடு இணைத்து பாரதி பாடுகிறான். தமிழ் மண்ணை செழிக்கவைக்கும்  ஆறுகளாக ஐந்து ஆறுகளை பாரதி குறிப்பிடிருப்பினும், நமது  தமிழ் நிலத்தின் திருமேனியை செழிக்கவைப்பதில்  இந்த ஐந்து அல்லாது  பல நதிகளின்  பங்கிருப்பதை ‘மேவிய ஆறு பல ஓட’ என்ற வரியைக்கொண்டு புரிந்துகொள்கிறோம். அடையாறு, அமராவதி, கல்லாறு, மணிமுத்தாறு, செய்யாறு, கொள்ளிடம், செஞ்சி ஆறு , கபினி, குடமுருட்டி என சொல்லிக்கொண்டுபோகலாம்.

 

தமிழர்தம் வாக்கையும் இந்த ஆறுகளைப்போலவே அமைதியும் ஆர்ப்பரிப்பும், வெறுமையும் செழுமையும், அழகும் ஆவேசமுமாக அமைந்திருந்ததை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் காப்பியங்கள் அனைத்தும்  நதியைப் போற்றுபவை, நதியின் பெருமையைக்கூறி  விளக்கி . அந்நதியை ஒட்டி எழுந்த நகரங்களையும், மக்களின் வாழ்நெறியையும் வடிக்க முனைந்தவை. தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்கான இலக்கணப்ப்பட்டியலில்  «  …..பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் … » என்பதையும் ஓர் அங்கமாகச் சேர்த்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

 

ஆற்றின் கரைகளில் உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழகத்திலும் ஊர்களும் நகரங்களும் தோன்றின. « ஆறில்லா ஊருக்கு அழகேது » என்ற பழமொழி தமிழ் வழக்கறிந்த ஒன்று. சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூர் காவிரி ஆற்றங்கரையிலும், பாண்டி நாட்டின் தலை நகரமாகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும், சேர நாட்டின் தலைநகர் வஞ்சி கூட ஓர் நதிகரையில் இருந்த தாகவே சொல்லப்படுகிறது.   அவ்வாறே  துருத்தி என்ற பெயர் ஆற்றின் நடுவே எழுந்த ஊர்களுக்கு அமைந்தது என சொல்லின் செல்வர் ரா. பி சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஆகக் கரையோரம் எழுந்த ஊர்களெல்லாம் தமிழ் இலக்கியப் பக்கங்களைக் காப்பியங்கள், பக்தி இலக்கியங்களாக நிரம்பியுள்ளன.

 

‘ அன்பு எனும் ஆறுகரை அது புரள

நன்புலனொன்றி நாத என்று அரற்றி ‘

 

‘மாறு இலாத மாக்கருணை வெள்ளமே’

என மாணிக்கவாசகர் தமது பக்தியை யும், அப்பகுத்திகுரிய தலைவனையும் வெள்ளத்தின் மருங்கே நிறுத்துவது, தமிழ் நிலம்,  நீர் நிலம்  என்பதால்.

 

ஒரு பொருளின் மிகுதியை, அபரித த்தைக் குறிக்க தமிழில் வெள்ளம் என்ற  உறிச்சொல் அதிகம் பயன்பாட்டில் இருந்த து. காலவெள்ளம் புரட்டிபோட்டதில், இன்று நிலை தடுமாறி, அன்பு வெள்ளம், ஆசைவெள்ளம் அருள் வெள்ளம், கருணைவெள்ளம் என்ற காலம்போய், சாதிவெள்ளக் கரை உடைந்து, குருதிவெள்ளத்தில் அவ்வப்போது தமிழ்நிலம் மூழ்கடிக்கப்படும்  அவலத்தையும் இடையில் நினைகூர வேண்டியுள்ளது.

 

ஆற்றுப் பெருக்கற்றடி சுடுமந்நாளும வ்வாற்று

ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு

நல்குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை எனமாட்டார் இசைந்து.

 

நல்குடிப்பிறந்தோர்,  தங்களுக்கு ‘இல்லை’ நேரும் காலையும்  அடுத்தவர்  கேட்கும்போது தங்களிடம் உள்ள பொருளை, கால் சுடும் அளவிற்கு நீர்வற்றி வெறும் மணலாக ஆறுறுவற்றிப்போனாலும் அதை நீருக்காக தோண்டுவோருக்கு ஊற்று நீர் கொடுத்து உதவும் நதியைப் போல  என்று ‘நல்வழி’யில் ஔவை குறிப்பிடுவாள். இது தீயவழியில் மணற்கொள்ளைக்குத் தோண்டும் மனிதர்களுக்குப் பாடப்பட்டததல்ல.

 

தமிழே  தலைவனாக, தமிழே தலைவியாக தமிழே தோழன் தோழியாக, பிறமாந்தராக அவர் தம் வாழ்க்கையாக நீர்ப்பர்வல் போல ஆற்றுப்படுத்துதல் தமிழ்க்காவியங்களில் நிகழ அப்பெருமை தமிழுக்கும் நீருக்குமுள்ள நெருங்கிய உறவால் நிகழ்ந்த து என்றால்  மிகையில்லை.

 

குடகுமலையில் பிறக்கும் காவிரியும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமான  வைகையும்  இன்றளவும் தமிழ் மொழியோடும், தமிழர் வாழ்வாதாரத்தோடும்  பின்னிப்பிணைந்தவை.  காவிரி ப்பாயும் ஊர்களெங்கும் ஆடிப்பெருக்கு விழா  புதுப்புனலை வரவேற்கும் வித த்தில் ஆடிப்பெருக்கு விழாவாக, ஒவ்வொரு வருடமும்   ஆடிமாதம் பதினெட்டாம் நாள்  கொண்டாடப்படுகிறது. கள்ளழகர் வைகையில் இறங்கும் நாள், மதுரைப்பகுதியில் இன்றளவும் ஒரு பெருவிழா.

 

நீராடல் நீர் விளையாட்டு வேறு  என்கிறார். தொ.பரமசிவன். அவர் கூற்றின்படி, «   நீராடல் என்பது திராவிட நாகரிகத்தில் சடங்கியல் தகுதி உடையன » மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும்  தமிழர் வழக்கினை அகநானூறு பாடல் கொண்டு விளக்குகிறார். பெண்களின் பூப்பு நீராட்டும் அவர் கூற்றின் படி நீராட்டலின் கீழ் வருகிறது. குளித்தல் அல்லது உடலை குளிர்வித்தல் வெப்பத்தால், அல்லது உழைப்பால் வெப்பமடைந்த உடலை குளிரவைத்தல் என்பது அவர் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் மற்றொரு முக்கியமான தகவல்.  நீரில் நீந்தி மகிழ்வது, நீர் விளையாட்டு . குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலான நூல்களில் இடம்பெறும்  ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் காவிரில் ஆடி மகிழ்ந்தது நீர் விளையாட்டு.  புதுப்புனல்விளையாட்டில்  பங்கேற்க வந்த சேரநாட்டு இளவரசன்ஆட்டநத்தி காவிரிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான்.  ஆவனுடன் நீரில் விளையாடிமகிழ்ந்த ஆதிமந்தி,   நீரோடு அடித்துச்செல்லபட்ட கணவனைத் தேடிக் கண்டடைந்த  கதையை

 

“– உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” என சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது. «  கன்னியர் ஆகி நிலவினில்  ஆடிக் களித்த தும் இந்நாடே-   தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போர்ந்த தும் இந்நாடே !  »   என்ற வரிகளில் பாரதியும் ‘ நீராடுதல் ‘என்று கூறாமல் ‘நீர் விளையாடி’ என்றே  எழுதுகிறான். கவி அரசு கண்ணதாசனும், « நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே » என்று  எழுதியிருப்பதை நாம் மறந்துவிடமுடியாது. வருங்காலங்களில் நீர்  விளையாட்டுக்கு அல்ல நீராடுவதற்கேனும்  வெள்ளம் வருமா என்பது நமது இன்றைய  கவலை.

 

————————————————————————-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பெண் இலக்கியம்

 

நாகரத்தினம் கிருஷ்ணா

 

பெண் என்ற சொல் குறித்து அச்சொல் தரும் பிம்பம் குறித்து, அப்பிம்பத்தின் வளர்நிழல், தேய்நிழல் குறித்து எத்தகைய நோக்கினை, நோக்கிற்குரிய பொருளை இவ்வுலகும், அதனுள் அடங்கிய சமூகமும் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கிறபோது அச்சமூகத்தின் அங்கமாகிய  நம்மீது – ஆணினத்தின் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது. இருமை வாத ஒழுங்கின்படி பருப்பொருள் உயிர் இருவேறெனக்கொள்வதில் சிக்கலில்லை ஆனால் ஆண்xபெண் என்கிற இருமையியத்தை தராசில் இட்டு, ஒன்றை எடைகூடியதாகவும் மற்றொன்றை எடைகுறைந்த தாகவும் காட்டுகிற  இந்த ஆண்சமூகத்தின் கட்டளை கற்களில்தான் பிரச்சினையே.  இறைநம்பிக்கை அடிப்படையில் உருவானது  மனிதர் வாழ்க்கை.. நமது சமூகத்தின் மரபுகள் இருமைவாதத்தை சமயநெறிகளின் அடிப்படையில் புண்ணியம்x பாவம், சொர்க்கம்x நரகம், நன்மைxதீமை  ஆகியவற்றின் வழிமுறையில்  ‘ஆண்xபெண்’ ஐயும் நிறுத்தி பொருள் காண்பது தான் நமக்குள்ள சிக்கல்.

நித்தம் நித்தம் வீட்டிலன்றி சாலையில், பேருந்தில், அலுவலகங்களில், பொதுவெளிகளில்  எங்கும் பெண்கள் என்கிறபோது  பெண்களற்ற  சமூகம்  மூலவரற்ற கருவறைக்குச் சமம் என்கிற ஞானத்தில்,  நமது பகுத்தறிவு முரண்நகையாக தெளிவு பெற்றிருக்கிறபோது மனிதர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கலை இலக்கிய படைப்புகள் பெண்களையும் கருத்தில்கொண்டு உருவாவது இயற்கை, இலக்கியத்தில் பெண்கள் இடம்பெறுவது ஒருவகையான சமூக நீதி.  இந்தச் சமூக நீதி சரியாக வழங்கப்படுகிறதா, யார் வழங்குவது முறை என்பதுதான் நமக்கு முன்னுள்ள கேள்வி.

« ஆண்கள் சமூகம் மூன்று வகைகளாகப் பெண்களைப் பிரித்திருக்கிறது. இயற்கையில்  பெண்கள் எப்படி இருக்கவேண்டுமென சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அவ்வாறு இருக்கிற சராசரி பெண்கள் முதல்வகை. தனக்காக என்றில்லாமல் பிறருக்கென வாழப்பழகிய அர்ப்பணிப்பு பெண்கள் இரண்டாம் வகை, புதிர்ப்பெண்கள் மூன்றாவது வகை. பெண்ணினத்தால் அனுகூலம் பெற்ற மனிதர்கள்  ஏற்படுத்திய வகைப்பாடே இவை மூன்றும். » என்கிறார் பெண்ணினத்தின் விவிலியம் எனப்படும் ‘இரண்டாம் பாலினம்’ நூலின் ஆசிரியர் சிமொன் தெ பொவ்வார்,   முத்தாய்ப்பாக, « ஒவ்வொரு ஆணும் தனிப்பட்ட வகையில் இப்பிரிவுகளால்  நன்மை அடைகிறான் » என்பதோடு, «  இதுபோன்ற பிரிவுகளின் அடிப்படையில் பெண்களுக்கெதிராகச் சட்டங்களை இயற்றுவதும், நெறிமுறைகளை வகுப்பதும் தந்தைவழிச் சமூகத்திற்கு எளிது », என்கிறார்.

சமூகமும் பெண்களும்   

உலகங்கும் நிறம் இனம் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களில் இந்த இரண்டிலும் சாராது சிறுமை படுத்தப்படுவதில் பெண்களும் அடக்கம் என்பதுதான் பெண்ணினத்தின் பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குரலெழுப்பிய  சிமொன் தெ பொவ்வாரின் நூல் தெரிவிக்கிறது. பெண்விடுதலைக்கான போராட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஓர் அலுவகத்தில் ஆணும் பெண்ணும் பதவியிலும், வாங்கும் ஊதியத்திலும், பெறும் சலுகைகளிலும் சமமென்றே சட்டம் கருதினாலும், அதை முறைப்படுத்தினாலும் இருவேறு உலகங்களை அவர்கள் அலுவலக வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதாக ஒரு பிரெஞ்சு இதழ் தெரிவிக்கிறது:

எதிர்ப்படும் உங்களுக்கு அலுவலகத்தில் வணக்கம் தெரிவிக்க மறந்தால்:

ஆண் எனில்: அவனுக்கு இன்று ஏதோ பிரச்சினைகள்.

பெண் எனில்: அவளுக்குத் திமிறு

நிறுவனத்தின் இயக்குனரோடு உணவு விடுதியில் சேர்ந்து சாப்பிடுகிறாள் என வைத்துக்கொள்ளுங்கள்

ஆணென்றால்: கூடிய சீக்கிரம் அவனுக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது

பெண்ணென்றால்: இயக்குனருக்கும் அவளுக்கும் ஏதோ கசமுசா

வேலையில் கறாராக இருப்பதாக வைத்துக்கொண்டால்

ஆணென்றால்: தனக்குள்ள அதிகாரத்தை பிரயோகித்தத் தெரிந்தவன்
பெண்ணென்றால்: என்ன இருந்தாலும் அந்தப்பொம்பிளைக்கு இத்தனை ஆர்பாட்டம் கூடாது

மாலையில் அலுவலகத்தில் கூடுதலாக சில மணி நேரம் இருக்கவேண்டி இருக்கிறது

ஆணென்றால்: அவனுக்கு வேலையிலே அவ்வளவு அக்கறை
பெண்ணென்றால்: என்னவோ நடக்குது கேமரா வைக்கணும்

கூடுதலாக ஊதியம் கேட்பது

ஆணென்றால்: அவனுக்கு வேறு எங்கோ நல்ல வேலை கிடைப்பதற்கு சாத்தியங்கள் இருக்கவேண்டும்.
பெண்ணென்றால்: இப்போது அவள் வாங்குகிற சம்பளமே அதிகம்

அலுவல் விஷயமாக வெளிநாடு செல்லவேண்டும்

ஆணென்றால்: மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி அடிக்கடி பிரயாணம் செய்வது சிரமம்தான்
பெண்ணெனில்: இப்படி அடிக்கடி ஊர்மேயறாளே புருஷன் கண்டுகொள்வதில்லையா?

அலுவலகங்களைத் தவிர வீட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறையாமலிருப்பதை மேற்கு நாடுகளில் காணமுடிகிறது. அதிலும் சமயம், சாதி, எண்ணற்ற உட்பிரிவுகள்  என்கிற பாகுபாடுள்ள இந்தியச் சமூகத்தில். பண்பாட்டின் பேராலும், மரபின் பேராலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்  மேற்குநாடுகளைக் காட்டிலும் அதிகம் என்றே சொல்லவேண்டும். கிறிஸ்துவ மதத்தைக் காட்டிலும், இங்கு இந்துமதத்தைச் சார்ந்த பெண்களுக்குச்  சிக்கல்கள் அதிகம். இந்துமதத்தைச் சார்ந்த பெண்களைக்காட்டிலும் இஸ்லாமிய பெண்களுக்குக் கூடுதல் நெருக்கடிகள். பிராமண வகுப்பைச்சார்ந்த பெண்ணைக்காட்டிலும் தலித் பெண்ணிற்கு கல்வி வாய்ப்புகள் இங்கு குறைவு. குறிப்பாக வறுமையில் வாடும் குடும்பங்களில் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதில் ஆகட்டும், கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதிலாகட்டும் ‘பொட்டை புள்ளை’களுக்கு அநீதிதான்.  இந்நிலையில் உள்ள நமது சமூகத்தின் பெண்ணிலக்கியத்தை யாரிடம் தேடுவது எங்கே தேடுவது என்று கேள்வி.

இலக்கியத்தில் பெண்கள்

தமிழ் நிலத்தில் பெண்கள் சங்க காலம் தொட்டு கல்விகற்று ஆண்களுக்கு நிகராகத் திகழ்ந்துவந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனாலும் அவர்களின் விழுக்காடுகள் குறைவு.  மகளிரில் பெரும்பாலோர் ‘மனை உறை’ மகளிராக வாழ்ந்து போருக்கான ‘வீர மறவர்களை ஈன்று புறம் தருதல்’ அறம் எனப் போற்றியதாகத்தான் சங்க கால வாழ்க்கை நெறி தெரிவிக்கிறது.  அக்கால இலக்கியங்களும் இவற்றையே எதிரொலிக்கின்றன. நவீன தமிழ் படைப்பாளுமைகளில் முதன்முதலாக பெண்ணினத்திற்கு குரல்கொடுத்தவர் பாரதி. ‘நத்தைப் புழுவைபோல ஆணும் பெண்ணும் கூடப்பிறக்கிறோம். இதில் உடன் பிறந்தான் ஆண்டான் ; உடன் பிறந்தவள் அடிமை, சுவாமி சுத்த பாமர ஜனங்கள்’, என்றதோடு ஆண்வர்க்கத்தைப் பார்த்து, ‘பெண் உயராவிட்டால் ஆண் ஏது ?’ எனக் கேட்டவர். அவரைத் தொடர்ந்து ஆண் எழுத்தாளர்கள் பலர் தங்கள் படைப்புகளில் பெண்களைப் புதிய கோணத்தில் படைத்திருப்பினும், ஒரு வகையில் அவை குற்ற உணர்வின்  வெளிப்பாடே. தவிர பெண் எனில்  ஏதோ அச்சம், நாணம், கற்பு, தியாகம் ; அழகு, மென்மையான உடல், இனிமையான குரல் என்று ஒரு சில பண்புகளுக்காகவே என்பதுபோல கட்டமைக்கும் போக்கும் ; சீதையாக, தமயந்தியாக, சாகுந்தலாவாக, ஆண்டாளாக, வாசுகியாக, கண்ணகியாக , மாதவியாக, கோப்பெரும் தேவியாக மொத்தத்தில் பெண்ணை உயர்த்துவதுபோல எழுத்தைப்படைத்ததும்  அவளைக் காதலன் அல்லது கணவனின் நிழலாகச் சித்தரிப்பதற்கே. நவீன ஆண்படைப்பாளிகளையும் இந்த அடிப்படையிலேயே அணுக வேண்டியுள்ளது.    « இலக்கியவாதிகள் பெண்களைக் காட்டும் சித்திரங்களனைத்தும் சொந்தச் சரக்கல்ல. ஏற்கனவே நமது பழங்கதைகளில் கட்டமைக்கப்பட்ட பெண்ணையே இவர்கள் மீளுருவாக்கம் செய்திருக்கிறார்கள், தவிர எழுத்தாளர்கள் காட்டுகிற பெண் வடிவம் பெண்களுடையதுமல்ல, அவர்களின் கற்பனைவடிவம் »  என்ற சிமொன் தெ பொவ்வார்  கூற்று  சிந்தனைக்குரியது.

பெண்ணிலக்கியம்

‘பெண்ணியக் கவிதை’ என்று வகைப்படுத்துவதைவிட ‘பெண்களின் கவிதை’ என்றோ ‘பெண் கவிதை’ என்றோ வகைப்படுத்திக்கொள்வது நல்லதாக இருக்கும். என்கிறார், கவிஞர் மாலதி மைத்ரியின் ‘நீரின்றி அமையாது உலகு’ கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய கவிஞர் பிரம்மராஜன்.  அவர் வழிமுறையிலேயே  பெண்ணிய இலக்கியத்தை, ‘பெண்களின் இலக்கியம்’  என்றோ, பெண் இலக்கியம் என்றோ வகைப்படுத்திக் கொள்வதுதான் நல்லதாக இருக்கும், காரணம் இவை  பெண்களை முன்னிறுத்தி, பெண்ணுரிமைக்காக வாதிடும் பெண்படைப்பாளிகளின் இலக்கியம்.

பெண்களுக்காக குரல்கொடுத்த, குரல்கொடுக்கிற ஆண் இலக்கியவாதிகளின் நல்லெண்ணத்தில் குறை இல்லை. ஒர் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவருக்காக வழக்காடுவதும், தம் கட்சிக்கார ருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் கேட்பதும் சனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு. எனினும்   பாதிக்கப்பட்டவரே தமது வலியை,  சந்தித்த துயரங்களை, படும் வேதனைகளை, இழைக்கப்படும் அநீதிகளைத் தெள்ளத் தெளிவாக நீதிமன்றத்தில் வைக்க முடியுமானால் அவர்களின் குரலைத்தான் இச்சமூகம் செவிமடுக்கவேண்டும் அதுதான்  நியாயம், முறையுங்கூட.

« நாவலுக்கு உலவும் பெண்கள் என் உலகத்தில் என்னோடு  உலவும் பெண்கள். என் உலகத்தில் என்னோடு சகபயணிகளாக இருந்து கொண்டிருப்பவர்கள் . அவர்களுக்கென சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களுக்குப் பொருந்தாத யதார்த்தமானவர்கள். எல்லா மனித ஜீவன்களையும் போல தம் வாழ்வை , வாழவும் நேசிக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்  எல்லைக்குள்ளிருந்தபடியே தங்களுடைய சந்தோஷங்களை, கனவுகளை, ரகசியங்களை, துயரங்களைத் தேடிக் கொள்பவர்கள், பிறருடைய சவுகரியத்துக்காகவோ, அசவுகரியத்துக்காகவோ ஒரு வார்த்தையைக்கூட நான் எழுதவில்லை. மொத்த நாவலிலுமே இது இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன், அவ்வளவுதான். » (இரண்டாம் ஜாமங்களின் கதை முன்னுரையில் – நூலாசிரியர் சல்மா)

« திருமணத்தையும்  சாதியையும் உடும்புப் பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிற இந்தச் சமுதாயத்தில்  தன்னந்தனியாக வாழ முடிவெடுத்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும், சுகதுக்கங்களையும் , இன்னல் இடையூறுகளையும், இன்பதுன்பங்களையும் முழுமையாக அனுபவித்ததன் வெளிப்பாடுதான் இந்த ‘மனுசி’ . திருமணத்தை ஒரு கையிலும் சாதியத்தை மறுகையிலும் வைத்துக்கொண்டு பெண்ணைச் சிதைத்து சின்னா பின்னமாக்கும் இந்தச் சமூக அமைப்புக்குள் இருந்துகொண்டு  ஒரு போராட்ட வாழ்க்கையை  வாழ்ந்து விடவேண்டும்  என்ற கனவும், அதனை நனவாக்கிட எனக்குள் எழுந்த வேகத்தின், தாகத்தின் வீரிய விதைகளே இவ்வெழுத்துக்கள். » (மனுசி முன்னுரையில் -நூலாசிரியர் பாமா)

« பெண் இன்று மட்பாண்டமில்லை. யார் உடைத்தும் அவள் சிதறிப் போகமாட்டாள். அவள் இன்று கல்வி பெறுகிறாள். உயர் தேர்வுகளில் இடம்பெறுகிறாள். பணி செய்ய அலுவலகம் போகிறாள். சம்பாதிக்கிறாள். தன்னைக் கௌரவமாகப் பேணிக்கொள்கிறாள். சமூகத்தோடு இசைவாகத் தன்னைப் பொருத்திக்கொல்கிறாள் » ( நேசத்துணை – முன்னுரையில் நூலாசிரியர் திலகவதி)

ஆக இலக்கிய அலகு களுக்கு அப்பாற்பட்டது பெண்ணிலக்கியம். ஓர் இலக்கிய பிரதிக்குரிய அல்லது தேவையான பிரத்தியேகப் பண்புகளுடன் ஒடுக்கபட்ட பெண்ணினத்தின் குலாகவும் ஒலிப்பது இவற்றின் சிறப்பு. அது விடுதலைக்குரல், அடிமைபட்டுக் கிடக்கும் வர்க்கத்தின்  சுதந்திரக் குரல். « உன்னிலும் நான் உயந்தவள் ! » என்கிற அகங்காரம் இல்லை. « உன்னிலும் நான் எந்த விதத்தில் தாழ்ந்தவள் ? » எனக் கேட்கும் குரல்.  மேடும்பள்ளமுமாக இருக்கிற  மானுடச் சமூகத்தை சமப்படுத்த விழையும் குரல். இக்குரல்கள் அவரவர் பின்புலம், பெற்றகல்வி உற்ற அனுபவம் ஆகியவற்றிற்கேற்ப மென்மையாகவோ, வன்மையாகவோ ஒலித்தாலும் பெண்களுக்கென எழுதப்பட்ட விதியைத் திருத்த முற்பட்டவை, இதுநாள்வரை சகித்திருந்தோம், இனி சகிப்பதில்லை என ஒலிக்கும் குரல்கள்.

« அடிவயிற்றில் நெருப்பை வச்சிக்கிட்டு எத்தனை நாள் அலைய முடியும் ? » இதை  பல  பெண்களிடமிருந்து பல்வேறு தருணங்களில் நான் கேட்டிருக்கிறேன். இந்த வாக்கியம் நம் சமூகத்தின் பெண் இருப்பு சார்ந்த அச்சத்தை உணர்த்துவதாக இருந்தாலும் அது வேறெதையோ சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. » என்கிறார் மாலதி மைத்ரி

நவீன தமிழ் இலக்கிய பெண் படைப்பாளிகள் குறிப்பாக கவிஞர்கள்   இன்றைய தேதியில் ஆண் படைப்பாளிகளைப்போலவே ஆளுக்கொரு கவிதைத் தொகுப்பை வைத்துக்கொண்டு பதிப்பக க் கதவுகளை தட்டுகின்ற போதிலும் எனக்கு வாசிக்க கிடைத்த நவீன தமிழ் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள்  அனைத்துமே  ஒரு நல்ல படைப்புக்குரிய அடர்த்தியையும், ஆழத்தையும், நேர்த்தியையும் பெற்று, கூடுதலாக  பெண் விடுதலைக்காக வாதிடுகின்றன.

அம்பை, பாமா, திலகவதி, வைகைச்செல்வி, இளம்பிறை, சதாரா மாலதி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மாலதி மைத்ரி, சல்மா,அனார், குட்டி ரேவதி, சுகிர்தராணி, தமிழ்நதி அ.வெண்ணிலா, என நீளும் பட்டியலில் புதிய தலைமுறையினரும் இணைந்துகொண்டுள்ளனர்  இவர்களின் படைப்புக்களின் வடிவத் தேர்வு எதுவாக இருப்பினும், பெண்களை முன்னிலைப்படுத்தி, பெண்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பவையாக உள்ளன. காட்டழிப்பை கண்டிக்கும் நேரத்திலும்  கவிஞர் வைகைச் செல்வி « கருவில் பெண்ணை அழிப்பார்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ ? » எனப் பெண்ணினத்தின் பிரச்சினையை மறப்பதில்லை,  என்பதை உதாரணத்திற்குக் கூறவேண்டும்.

மணவாழ்க்கையும் பெண்ணிலக்கியமும்

இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை அல்லது நாமறிந்த தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை குடும்ப வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் சரி, பெண்களின் கருத்துக்களைப் புறம்தள்ளுவது இன்றளவும் தொடர்கிறது. சுற்றம் சூழ பெண்பார்க்கச் செல்லும் ஓர் ஆண்,  தன் வாழ்க்கைத் தோழியின் மனதை அறிய முற்படுவதில்லை. ஒரு மாட்டைச் சந்தையில் பிடிப்பதுபோலத்தான் தரகருடன் வியாபாரம் பேசுகிறான். காதல் கூட தன்னையும் தன் குடும்பத்தையும் கரைசேர்க்க பெண்ணின் பின்புலம் உதவுமெனில்   ஆணின் மனம் அக்கறை காட்டுகிறது.  புகுந்த வீடு அவளுக்குத் தொழுவம். காரியம் யாவிலும் கைகொடுப்பவளாக அல்ல, நுகத்தடிக்குப் பொருந்துவள், குடும்ப பாரத்தை இழுப்பவள், சுமப்பவள். ஆனால் மாட்டிற்கு ஒரு விலையுண்டு, உரிய விலையை விற்பவனுக்கு அளித்தாலொழிய  உடமை யாக்கிக்கொள்ளல் சாத்தியமில்லை. ஆனால் இவ்விலங்கிற்கு உரிய விலையை விற்பவர்தான் வாங்குபவனுக்குத் தரவேண்டும் .

இப்பெண்பார்க்கும் வலியை ஏ ராஜலட்சுமி என்ற கவிஞர் :

‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’

 

‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’

அப்பாவின் அவசரகடிதம் !

என்றோ ஒரு நாள் என்று நிகழ்ந்தது

இப்பொழுது அடிக்கடி அவஸ்தையாய்…

ஜாதகப் பொருத்தம் வருமானம்

குடும்ப நிலை வீட்டுச் சூழல்

ஒவ்வொன்றிலும்  கழன்றுவிடும்

ஏதோ ஒன்று

சரியில்லை என்று. (எனக்கான காற்று)

 

வாசல் – கனிமொழி

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டைபோட்டுக்கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன்
என்முறை வருமென்று. (கருவறை வாசனை )

 

என்ன விலை காதலே -வைகைச் செல்வி

‘ ………………………..

………………………………………….

கல்யாணம் ஆகிவிட்டால்

கல்லாகி விடுவேனோ ?

கயவர்கள் உலகத்தில் சுய நலமே வாழ்க்கையெனில் – எனக்கு

பந்தக்கால் தேவையில்லை

சொந்தக்கால் போதுமடா. (அம்மி)

 

புதின இலக்கியத்தித்திலும் திருமணம் குறித்து படைப்பாளிகள் சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் தங்கள் கொந்தளிப்பையும்  கோபத்தையும் காட்டவே செய்கிறார்கள்.

‘நம்ம கையில ஒழைப்பு இருக்கு. எவந்தயவும் நமக்குத் தேவையில்லை. ஆம்பள இல்லாம நம்மளால வாழமுடியாதா என்ன ?’ (மனுசி -பாமா, ப.117)

‘எனது உடலுக்குச் சொந்தக்காரி நான். அதைக் கொடுப்பதையும் கொடுக்காமலிருப்பதையும் தீர்மானிப்பதும் நானாகத்தான்  இருக்கவேண்டும். இந்தச் சுதந்திரத்தை இழக்க எனக்கு ஒரு போதும் சம்மதமில்லை.’ (மனுசி-பாமா. ப.208)

திருமணத்தை மறுத்து குரலெழுப்பும் பெண் எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எனில்  மணமான அன்றே சல்மாவின், இரண்டாம் ஜாமங்களின் கதையில் வரும் பிர்தவ்ஸ் தன் புதுக்கணவன் யூசுபின் தோற்றத்தைப் பார்த்த கணத்தில், ‘ நான் உன்னோடு வாழப்போவதில்லை. என்னைத் தொடவேண்டாம் ‘ (பக்கம் 35, இ.ஜா.கதை)  என்கிறாள். கதையில் அவள் முடிவைக்கேட்டு நாவலாசிரியர் ஊரே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்ததாக  எழுதுகிறார். பிர்தவ்ஸ் என்ற பெண்ணின்  வார்த்தைகளைக் கேட்டு நூலாசிரியரின் துணிச்சலான இவ்வரிகளை வாசிக்கிறபோது நாமும் உறைந்து போகிறோம். காரணம் நூலாசிரியரைப் போலவே அப்பெண்ண்ணும்  ‘ வயதுக்கு வந்த பெண்கள் வீட்டு வசல்படியைத் தாண்டுவதே இல்லை ; வெளியிலிருந்து வீட்டுக்குள் எந்த அன்னிய ஆண் வந்தாலும்  அவர் முன் தலைகாட்டக்கூடாது என்கிற ஒழுங்கைக் கடைபிடிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவள்.

சமயமும் பெண் இலக்கியமும்

ஆண்களைக் காட்டிலும் சமய நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர்கள் பெண்கள். ஆனால் உலகில் மதங்களுக்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை,  மதங்கள் பெண்களுக்குக் கொடுப்பதில்லை என்பதே உண்மை.

‘பெண்ணாவது தெய்வமாவது ஆதி ! என் எண்ணப்படி எது நடக்கிறது ? பாத்திமாவுடன் பேசியபடி பாலைவனத்தைச் சுற்றி வர ஆசை. மேரி கையிலிருந்து குழந்தையை வாங்கி என் இடுப்பில் வைத்துக்கொண்டு பெத்லஹெம் மற்றும் சுற்று புற பிரதேசங்களைப் பார்த்துவர  ஆசை. இப்படி இவன் காலடியில்  உட்கார்ந்திருப்பதில் என்ன சுகம் ?  அக்கடா என்று படுக்க  ஒரு பாம்பு படுக்கை உண்டா எனக்கு ?’ (காட்டில் ஒரு மான் ப. 38)  என ஆதிசேஷனைப் பார்த்து லட்சுமி கேட்பதாக அம்பை எழுதுகிறார்.

‘ ஹனீபா தன் கணீர்குரலில் , « இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று  சொல்லுவதில்லை » என்று பாடிக்கோண்டிருந்தார். பிர்தவ்ஸுக்குச் சிரிப்பு வந்த து. « நானும் தான் என்னவோ கேட்டேன். எதைக்கொடுத்தானாம் ?’ (ப.188 ) என்று இரண்டாம் ஜாமங்களின் கதையில் தன் கதைமாந்தர்களில் ஒருவரைவைத்து வினவுகிறார் சல்மா.

பண்பாடும் பெண் இலக்கியமும்.

பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள மரபையும் பண்பாடுகளையுங்கூட நவீன பெண் இலக்கியம் சகித்துக்கொள்ளாது என்பதைச் சொல்லவும் உதாரணங்கள் இருக்கின்றன.

விளக்குகள்  என்ற கவிதையில்  வைகறைச்செல்வி :

 

‘……….

குத்துவிளக்கென்று

பெண்ணைச் சொல்வார்

ஆங்கோர் மூலையிலே

மோனத்தவம் செய்வதற்கும்

எடுப்பார் கையிலெல்லாம்

அடங்கி இருப்பதற்கும் ( அம்மி -ப. 72)  என்று எழுதுகிறபோதும்,

 

‘குறள் போட்டி, தேவாரப் போட்டி எல்லாம் நாங்க வெக்கிறோம். பெண்கள் பரிசு வாங்கினா கன்னா பின்னாட்டு பரிசு தரமாட்டோம். குத்து விளக்கு தருவோம்…..ஒண்ணுமில்லைம்மா நம்ம பண்பாடு முழுக்க முழுக்க பெண்கள் கையில் இருக்கும்மா’ (ப. 124, காட்டில் ஒரு மான்) என்று  ஓர்ஆண் வர்க்கத்தின் பிரதிநிதியாக புத்தககக் கடைகாரர் ஒருவர் வாய்மொழிக்கொண்டு  அம்பை வைகைச் செல்வியின் மேலே கூறப்பட்டக் கவிதையை உறுதிபடுத்துகிறபோது, இப்படி ஒரு பிரிவினரை ஒடுக்குவதற்கென வகுத்துக்கொண்ட நமது பண்பாடுகளின் மீது பகுத்தறிவுகொண்ட மனிதர் எவரும் கோபம் கொள்வது இயற்கை.

இறுதியாக பொதுவெளியில் பெண்களின் நிலமையென்ன ?  என்பதைத் தெரிவிக்க இரு கவிதைகள்

உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ ?   – வைகைச்செல்வி

‘என் தாயே !

நீ மாதவம் செய்திருக்கத் தேவையில்லை

அங்கே மா மரத்தின் கீழே

என் வயதுப்பெண்கள்

நட்சந்திரங்களுடன் பேசுகையில்

இங்கே நானோ,

சிம்னி வெளிச்சத்தில்

அரிசியிலே கற்களைப் பொறுக்குகிறேன்.

…………………

நேற்று ஒருவன் பாரதியைக் காதலித்தான்

இன்று நான் கதலிக்கிறேன்

அவனுக்குப் பெயர் பாரதிதாசன்.

தாசனுக்குப் பெண்பால் எனில்

தமிழே என்பால் கல்லெறியும்’  (அம்மி – ப. 23)

 

வீடுகளால் ஆன இனம் – மாலதி மைத்ரி

 

ஊரில் அனைத்து வீடுகளும்

நடப்பட்ட பெண்களென நிற்கின்றன

சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்

யாரோ ஒரு ஆணிற்காக ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன

வயதுக்கேற்றபடி த் தம் உறவுகளுக்காக

கொலைகாரன் திருடன்

குடிகாரன் துரோகி மோசடிக்காரன்

ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்

கொடுங்கோலன் காமவெறியன்

சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்

இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை

அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது

உடம்பு தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து

உயிரும் உணவும் அளித்து

அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்

 

ஆண்கள் வீட்டைப் புணர்வதன்மூலம்

பூமியை வளர்க்கிறார்கள்

பெண்களையல்ல

காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.(நீரின்றி அமையாது உலகு ப. 35)

 

 

ஆணோ பெண்ணோ படைப்புவேறு தான் வேறுஅல்ல  என நினைப்பவர் எவரோ, தான் படைக்க நினைப்பதற்கு உதாரணமாக முடிந்தமட்டும் தன்னையும் சொந்த அனுபவத்தையும்  பொதுப்படுத்தும் எழுத்தாற்றல் எவருக்குச் சாத்தியமோ  அவரே என்வரையில் ஒரு நல்ல படைப்பாளி. கலையும் இலக்கியமும் அழகியலுக்கு அப்பாற்பட்டு, புலன்களைக் கடந்து இதயத்திற்குச் சிலிர்ப்பூட்ட வேண்டும், அறிவையும் மனதையும் அலைக்கழிக்கவேண்டும்.

இரண்டாம் ஜாமங்களின் :  சொஹ்ரா, றைமா, அமீனா, சவூரா, நூரம்மா, மும்தாஜ், பிர்தவ்ஸ், வயிற்றுப்பிழைப்புக்காக இவர்களுடன் பிணைத்துக்கொள்ளும் மாரியாயி

பெண் என்ற இனம் பொதுவாக இரண்டாம் தளத்தில் நிறுத்தப்படுவது ஒரு பக்கமெனில் அவள் தலித்தாக பிறந்ததால் இச்சமூகத்தின் கருநாக்குகளுக்குக் கூடுதலாக பதில் சொல்லவேண்டியிருக்கிறது, நெருக்கடிகளுக்குப் பலியாக வேண்டியிருக்கிறது என்பதை தெரிவிக்கும் பாமாவின் மனுசி  ‘ராசாத்தி’.

அம்பையின் சீதாயணத்திற்குக் கனவுகாணும் அடவி செந்திரு,  அகம்பாவ ஷண்முகத்தை மேடையில் வீழ்த்தும் செண்பகம்.

பெண்களின் துயரங்கள் அனைத்தும் குடும்பம், திருமணம் ஆண்-பெண் உறவு ஆகிய வேர்களின் மூலாதாரத்தில் கிளைவிடுகிறதென்று உறுதிராக நம்பும் திலகவதியின் நேசத்துணை பாகீரதி..

இவர்களை வாய் பேசவைத்த படைப்பாளிகள், கவிதையுடாக பெண் இருத்தலை வலியுறுத்தும் கவிஞர்கள், இவர்கள் அனைவரின் குரலும், மாலதி மைத்ரி தமது ‘புலி’ கவிதையில் சொல்வதுபோல எல்லாரையும் தாண்டி  எல்லாவற்றையும் தாண்டி இன்று ஆண்களின் தலைமாட்டருகே காத்திருக்கிறது. விழித்தால் தப்பித்தோம். உறங்குவதுபோல பாவனை செய்தாலோ, பெண்புலிதானே என அலட்சியம் செய்தாலோ ஆபத்து ஆண் வர்க்கத்திற்கு இல்லை, சமூகத்திற்கு.

——————————————————————————–

 

 

 

 

 

பெண் இலக்கியம் – நாகரத்தினம் கிருஷ்ணா

பெண் என்ற சொல் குறித்து அச்சொல் தரும் பிம்பம் குறித்து, அப்பிம்பத்தின் வளர்நிழல், தேய்நிழல் குறித்து எத்தகைய நோக்கினை, நோக்கிற்குரிய பொருளை இவ்வுலகும், அதனுள் அடங்கிய சமூகமும் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கிறபோது அச்சமூகத்தின் அங்கமாகிய  நம்மீது – ஆணினத்தின் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது. இருமை வாத ஒழுங்கின்படி பருப்பொருள் உயிர் இருவேறெனக்கொள்வதில் சிக்கலில்லை ஆனால் ஆண்xபெண் என்கிற இருமையியத்தை தராசில் இட்டு, ஒன்றை எடைகூடியதாகவும் மற்றொன்றை எடைகுறைந்த தாகவும் காட்டுகிற  இந்த ஆண்சமூகத்தின் கட்டளை கற்களில்தான் பிரச்சினையே.  இறைநம்பிக்கை அடிப்படையில் உருவானது  மனிதர் வாழ்க்கை.. நமது சமூகத்தின் மரபுகள் இருமைவாதத்தை சமயநெறிகளின் அடிப்படையில் புண்ணியம்x பாவம், சொர்க்கம்x நரகம், நன்மைxதீமை  ஆகியவற்றின் வழிமுறையில்  ‘ஆண்xபெண்’ ஐயும் நிறுத்தி பொருள் காண்பது தான் நமக்குள்ள சிக்கல்.

நித்தம் நித்தம் வீட்டிலன்றி சாலையில், பேருந்தில், அலுவலகங்களில், பொதுவெளிகளில்  எங்கும் பெண்கள் என்கிறபோது  பெண்களற்ற  சமூகம்  மூலவரற்ற கருவறைக்குச் சமம் என்கிற ஞானத்தில்,  நமது பகுத்தறிவு முரண்நகையாக தெளிவு பெற்றிருக்கிறபோது மனிதர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கலை இலக்கிய படைப்புகள் பெண்களையும் கருத்தில்கொண்டு உருவாவது இயற்கை, இலக்கியத்தில் பெண்கள் இடம்பெறுவது ஒருவகையான சமூக நீதி.  இந்தச் சமூக நீதி சரியாக வழங்கப்படுகிறதா, யார் வழங்குவது முறை என்பதுதான் நமக்கு முன்னுள்ள கேள்வி.

« ஆண்கள் சமூகம் மூன்று வகைகளாகப் பெண்களைப் பிரித்திருக்கிறது. இயற்கையில்  பெண்கள் எப்படி இருக்கவேண்டுமென சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அவ்வாறு இருக்கிற சராசரி பெண்கள் முதல்வகை. தனக்காக என்றில்லாமல் பிறருக்கென வாழப்பழகிய அர்ப்பணிப்பு பெண்கள் இரண்டாம் வகை, புதிர்ப்பெண்கள் மூன்றாவது வகை. பெண்ணினத்தால் அனுகூலம் பெற்ற மனிதர்கள்  ஏற்படுத்திய வகைப்பாடே இவை மூன்றும். » என்கிறார் பெண்ணினத்தின் விவிலியம் எனப்படும் ‘இரண்டாம் பாலினம்’ நூலின் ஆசிரியர் சிமொன் தெ பொவ்வார்,   முத்தாய்ப்பாக, « ஒவ்வொரு ஆணும் தனிப்பட்ட வகையில் இப்பிரிவுகளால்  நன்மை அடைகிறான் » என்பதோடு, «  இதுபோன்ற பிரிவுகளின் அடிப்படையில் பெண்களுக்கெதிராகச் சட்டங்களை இயற்றுவதும், நெறிமுறைகளை வகுப்பதும் தந்தைவழிச் சமூகத்திற்கு எளிது », என்கிறார்.

சமூகமும் பெண்களும்   

உலகங்கும் நிறம் இனம் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களில் இந்த இரண்டிலும் சாராது சிறுமை படுத்தப்படுவதில் பெண்களும் அடக்கம் என்பதுதான் பெண்ணினத்தின் பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குரலெழுப்பிய  சிமொன் தெ பொவ்வாரின் நூல் தெரிவிக்கிறது. பெண்விடுதலைக்கான போராட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஓர் அலுவகத்தில் ஆணும் பெண்ணும் பதவியிலும், வாங்கும் ஊதியத்திலும், பெறும் சலுகைகளிலும் சமமென்றே சட்டம் கருதினாலும், அதை முறைப்படுத்தினாலும் இருவேறு உலகங்களை அவர்கள் அலுவலக வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதாக ஒரு பிரெஞ்சு இதழ் தெரிவிக்கிறது:

எதிர்ப்படும் உங்களுக்கு அலுவலகத்தில் வணக்கம் தெரிவிக்க மறந்தால்:

ஆண் எனில்: அவனுக்கு இன்று ஏதோ பிரச்சினைகள்.

பெண் எனில்: அவளுக்குத் திமிறு

நிறுவனத்தின் இயக்குனரோடு உணவு விடுதியில் சேர்ந்து சாப்பிடுகிறாள் என வைத்துக்கொள்ளுங்கள்

ஆணென்றால்: கூடிய சீக்கிரம் அவனுக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது

பெண்ணென்றால்: இயக்குனருக்கும் அவளுக்கும் ஏதோ கசமுசா

வேலையில் கறாராக இருப்பதாக வைத்துக்கொண்டால்

ஆணென்றால்: தனக்குள்ள அதிகாரத்தை பிரயோகித்தத் தெரிந்தவன்
பெண்ணென்றால்: என்ன இருந்தாலும் அந்தப்பொம்பிளைக்கு இத்தனை ஆர்பாட்டம் கூடாது

மாலையில் அலுவலகத்தில் கூடுதலாக சில மணி நேரம் இருக்கவேண்டி இருக்கிறது

ஆணென்றால்: அவனுக்கு வேலையிலே அவ்வளவு அக்கறை
பெண்ணென்றால்: என்னவோ நடக்குது கேமரா வைக்கணும்

கூடுதலாக ஊதியம் கேட்பது

ஆணென்றால்: அவனுக்கு வேறு எங்கோ நல்ல வேலை கிடைப்பதற்கு சாத்தியங்கள் இருக்கவேண்டும்.
பெண்ணென்றால்: இப்போது அவள் வாங்குகிற சம்பளமே அதிகம்

அலுவல் விஷயமாக வெளிநாடு செல்லவேண்டும்

ஆணென்றால்: மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி அடிக்கடி பிரயாணம் செய்வது சிரமம்தான்
பெண்ணெனில்: இப்படி அடிக்கடி ஊர்மேயறாளே புருஷன் கண்டுகொள்வதில்லையா?

அலுவலகங்களைத் தவிர வீட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறையாமலிருப்பதை மேற்கு நாடுகளில் காணமுடிகிறது. அதிலும் சமயம், சாதி, எண்ணற்ற உட்பிரிவுகள்  என்கிற பாகுபாடுள்ள இந்தியச் சமூகத்தில். பண்பாட்டின் பேராலும், மரபின் பேராலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்  மேற்குநாடுகளைக் காட்டிலும் அதிகம் என்றே சொல்லவேண்டும். கிறிஸ்துவ மதத்தைக் காட்டிலும், இங்கு இந்துமதத்தைச் சார்ந்த பெண்களுக்குச்  சிக்கல்கள் அதிகம். இந்துமதத்தைச் சார்ந்த பெண்களைக்காட்டிலும் இஸ்லாமிய பெண்களுக்குக் கூடுதல் நெருக்கடிகள். பிராமண வகுப்பைச்சார்ந்த பெண்ணைக்காட்டிலும் தலித் பெண்ணிற்கு கல்வி வாய்ப்புகள் இங்கு குறைவு. குறிப்பாக வறுமையில் வாடும் குடும்பங்களில் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதில் ஆகட்டும், கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதிலாகட்டும் ‘பொட்டை புள்ளை’களுக்கு அநீதிதான்.  இந்நிலையில் உள்ள நமது சமூகத்தின் பெண்ணிலக்கியத்தை யாரிடம் தேடுவது எங்கே தேடுவது என்று கேள்வி.

இலக்கியத்தில் பெண்கள்

தமிழ் நிலத்தில் பெண்கள் சங்க காலம் தொட்டு கல்விகற்று ஆண்களுக்கு நிகராகத் திகழ்ந்துவந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனாலும் அவர்களின் விழுக்காடுகள் குறைவு.  மகளிரில் பெரும்பாலோர் ‘மனை உறை’ மகளிராக வாழ்ந்து போருக்கான ‘வீர மறவர்களை ஈன்று புறம் தருதல்’ அறம் எனப் போற்றியதாகத்தான் சங்க கால வாழ்க்கை நெறி தெரிவிக்கிறது.  அக்கால இலக்கியங்களும் இவற்றையே எதிரொலிக்கின்றன. நவீன தமிழ் படைப்பாளுமைகளில் முதன்முதலாக பெண்ணினத்திற்கு குரல்கொடுத்தவர் பாரதி. ‘நத்தைப் புழுவைபோல ஆணும் பெண்ணும் கூடப்பிறக்கிறோம். இதில் உடன் பிறந்தான் ஆண்டான் ; உடன் பிறந்தவள் அடிமை, சுவாமி சுத்த பாமர ஜனங்கள்’, என்றதோடு ஆண்வர்க்கத்தைப் பார்த்து, ‘பெண் உயராவிட்டால் ஆண் ஏது ?’ எனக் கேட்டவர். அவரைத் தொடர்ந்து ஆண் எழுத்தாளர்கள் பலர் தங்கள் படைப்புகளில் பெண்களைப் புதிய கோணத்தில் படைத்திருப்பினும், ஒரு வகையில் அவை குற்ற உணர்வின்  வெளிப்பாடே. தவிர பெண் எனில்  ஏதோ அச்சம், நாணம், கற்பு, தியாகம் ; அழகு, மென்மையான உடல், இனிமையான குரல் என்று ஒரு சில பண்புகளுக்காகவே என்பதுபோல கட்டமைக்கும் போக்கும் ; சீதையாக, தமயந்தியாக, சாகுந்தலாவாக, ஆண்டாளாக, வாசுகியாக, கண்ணகியாக , மாதவியாக, கோப்பெரும் தேவியாக மொத்தத்தில் பெண்ணை உயர்த்துவதுபோல எழுத்தைப்படைத்ததும்  அவளைக் காதலன் அல்லது கணவனின் நிழலாகச் சித்தரிப்பதற்கே. நவீன ஆண்படைப்பாளிகளையும் இந்த அடிப்படையிலேயே அணுக வேண்டியுள்ளது.    « இலக்கியவாதிகள் பெண்களைக் காட்டும் சித்திரங்களனைத்தும் சொந்தச் சரக்கல்ல. ஏற்கனவே நமது பழங்கதைகளில் கட்டமைக்கப்பட்ட பெண்ணையே இவர்கள் மீளுருவாக்கம் செய்திருக்கிறார்கள், தவிர எழுத்தாளர்கள் காட்டுகிற பெண் வடிவம் பெண்களுடையதுமல்ல, அவர்களின் கற்பனைவடிவம் »  என்ற சிமொன் தெ பொவ்வார்  கூற்று  சிந்தனைக்குரியது.

பெண்ணிலக்கியம்

‘பெண்ணியக் கவிதை’ என்று வகைப்படுத்துவதைவிட ‘பெண்களின் கவிதை’ என்றோ ‘பெண் கவிதை’ என்றோ வகைப்படுத்திக்கொள்வது நல்லதாக இருக்கும். என்கிறார், கவிஞர் மாலதி மைத்ரியின் ‘நீரின்றி அமையாது உலகு’ கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய கவிஞர் பிரம்மராஜன்.  அவர் வழிமுறையிலேயே  பெண்ணிய இலக்கியத்தை, ‘பெண்களின் இலக்கியம்’  என்றோ, பெண் இலக்கியம் என்றோ வகைப்படுத்திக் கொள்வதுதான் நல்லதாக இருக்கும், காரணம் இவை  பெண்களை முன்னிறுத்தி, பெண்ணுரிமைக்காக வாதிடும் பெண்படைப்பாளிகளின் இலக்கியம்.

பெண்களுக்காக குரல்கொடுத்த, குரல்கொடுக்கிற ஆண் இலக்கியவாதிகளின் நல்லெண்ணத்தில் குறை இல்லை. ஒர் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவருக்காக வழக்காடுவதும், தம் கட்சிக்கார ருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் கேட்பதும் சனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு. எனினும்   பாதிக்கப்பட்டவரே தமது வலியை,  சந்தித்த துயரங்களை, படும் வேதனைகளை, இழைக்கப்படும் அநீதிகளைத் தெள்ளத் தெளிவாக நீதிமன்றத்தில் வைக்க முடியுமானால் அவர்களின் குரலைத்தான் இச்சமூகம் செவிமடுக்கவேண்டும் அதுதான்  நியாயம், முறையுங்கூட.

« நாவலுக்கு உலவும் பெண்கள் என் உலகத்தில் என்னோடு  உலவும் பெண்கள். என் உலகத்தில் என்னோடு சகபயணிகளாக இருந்து கொண்டிருப்பவர்கள் . அவர்களுக்கென சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களுக்குப் பொருந்தாத யதார்த்தமானவர்கள். எல்லா மனித ஜீவன்களையும் போல தம் வாழ்வை , வாழவும் நேசிக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்  எல்லைக்குள்ளிருந்தபடியே தங்களுடைய சந்தோஷங்களை, கனவுகளை, ரகசியங்களை, துயரங்களைத் தேடிக் கொள்பவர்கள், பிறருடைய சவுகரியத்துக்காகவோ, அசவுகரியத்துக்காகவோ ஒரு வார்த்தையைக்கூட நான் எழுதவில்லை. மொத்த நாவலிலுமே இது இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன், அவ்வளவுதான். » (இரண்டாம் ஜாமங்களின் கதை முன்னுரையில் – நூலாசிரியர் சல்மா)

« திருமணத்தையும்  சாதியையும் உடும்புப் பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிற இந்தச் சமுதாயத்தில்  தன்னந்தனியாக வாழ முடிவெடுத்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும், சுகதுக்கங்களையும் , இன்னல் இடையூறுகளையும், இன்பதுன்பங்களையும் முழுமையாக அனுபவித்ததன் வெளிப்பாடுதான் இந்த ‘மனுசி’ . திருமணத்தை ஒரு கையிலும் சாதியத்தை மறுகையிலும் வைத்துக்கொண்டு பெண்ணைச் சிதைத்து சின்னா பின்னமாக்கும் இந்தச் சமூக அமைப்புக்குள் இருந்துகொண்டு  ஒரு போராட்ட வாழ்க்கையை  வாழ்ந்து விடவேண்டும்  என்ற கனவும், அதனை நனவாக்கிட எனக்குள் எழுந்த வேகத்தின், தாகத்தின் வீரிய விதைகளே இவ்வெழுத்துக்கள். » (மனுசி முன்னுரையில் -நூலாசிரியர் பாமா)

« பெண் இன்று மட்பாண்டமில்லை. யார் உடைத்தும் அவள் சிதறிப் போகமாட்டாள். அவள் இன்று கல்வி பெறுகிறாள். உயர் தேர்வுகளில் இடம்பெறுகிறாள். பணி செய்ய அலுவலகம் போகிறாள். சம்பாதிக்கிறாள். தன்னைக் கௌரவமாகப் பேணிக்கொள்கிறாள். சமூகத்தோடு இசைவாகத் தன்னைப் பொருத்திக்கொல்கிறாள் » ( நேசத்துணை – முன்னுரையில் நூலாசிரியர் திலகவதி)

ஆக இலக்கிய அலகு களுக்கு அப்பாற்பட்டது பெண்ணிலக்கியம். ஓர் இலக்கிய பிரதிக்குரிய அல்லது தேவையான பிரத்தியேகப் பண்புகளுடன் ஒடுக்கபட்ட பெண்ணினத்தின் குலாகவும் ஒலிப்பது இவற்றின் சிறப்பு. அது விடுதலைக்குரல், அடிமைபட்டுக் கிடக்கும் வர்க்கத்தின்  சுதந்திரக் குரல். « உன்னிலும் நான் உயந்தவள் ! » என்கிற அகங்காரம் இல்லை. « உன்னிலும் நான் எந்த விதத்தில் தாழ்ந்தவள் ? » எனக் கேட்கும் குரல்.  மேடும்பள்ளமுமாக இருக்கிற  மானுடச் சமூகத்தை சமப்படுத்த விழையும் குரல். இக்குரல்கள் அவரவர் பின்புலம், பெற்றகல்வி உற்ற அனுபவம் ஆகியவற்றிற்கேற்ப மென்மையாகவோ, வன்மையாகவோ ஒலித்தாலும் பெண்களுக்கென எழுதப்பட்ட விதியைத் திருத்த முற்பட்டவை, இதுநாள்வரை சகித்திருந்தோம், இனி சகிப்பதில்லை என ஒலிக்கும் குரல்கள்.

« அடிவயிற்றில் நெருப்பை வச்சிக்கிட்டு எத்தனை நாள் அலைய முடியும் ? » இதை  பல  பெண்களிடமிருந்து பல்வேறு தருணங்களில் நான் கேட்டிருக்கிறேன். இந்த வாக்கியம் நம் சமூகத்தின் பெண் இருப்பு சார்ந்த அச்சத்தை உணர்த்துவதாக இருந்தாலும் அது வேறெதையோ சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. » என்கிறார் மாலதி மைத்ரி

நவீன தமிழ் இலக்கிய பெண் படைப்பாளிகள் குறிப்பாக கவிஞர்கள்   இன்றைய தேதியில் ஆண் படைப்பாளிகளைப்போலவே ஆளுக்கொரு கவிதைத் தொகுப்பை வைத்துக்கொண்டு பதிப்பக க் கதவுகளை தட்டுகின்ற போதிலும் எனக்கு வாசிக்க கிடைத்த நவீன தமிழ் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள்  அனைத்துமே  ஒரு நல்ல படைப்புக்குரிய அடர்த்தியையும், ஆழத்தையும், நேர்த்தியையும் பெற்று, கூடுதலாக  பெண் விடுதலைக்காக வாதிடுகின்றன.

அம்பை, பாமா, திலகவதி, வைகைச்செல்வி, இளம்பிறை, சதாரா மாலதி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மாலதி மைத்ரி, சல்மா,அனார், குட்டி ரேவதி, சுகிர்தராணி, தமிழ்நதி அ.வெண்ணிலா, என நீளும் பட்டியலில் புதிய தலைமுறையினரும் இணைந்துகொண்டுள்ளனர்  இவர்களின் படைப்புக்களின் வடிவத் தேர்வு எதுவாக இருப்பினும், பெண்களை முன்னிலைப்படுத்தி, பெண்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பவையாக உள்ளன. காட்டழிப்பை கண்டிக்கும் நேரத்திலும்  கவிஞர் வைகைச் செல்வி « கருவில் பெண்ணை அழிப்பார்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ ? » எனப் பெண்ணினத்தின் பிரச்சினையை மறப்பதில்லை,  என்பதை உதாரணத்திற்குக் கூறவேண்டும்.

மணவாழ்க்கையும் பெண்ணிலக்கியமும்

இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை அல்லது நாமறிந்த தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை குடும்ப வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் சரி, பெண்களின் கருத்துக்களைப் புறம்தள்ளுவது இன்றளவும் தொடர்கிறது. சுற்றம் சூழ பெண்பார்க்கச் செல்லும் ஓர் ஆண்,  தன் வாழ்க்கைத் தோழியின் மனதை அறிய முற்படுவதில்லை. ஒரு மாட்டைச் சந்தையில் பிடிப்பதுபோலத்தான் தரகருடன் வியாபாரம் பேசுகிறான். காதல் கூட தன்னையும் தன் குடும்பத்தையும் கரைசேர்க்க பெண்ணின் பின்புலம் உதவுமெனில்   ஆணின் மனம் அக்கறை காட்டுகிறது.  புகுந்த வீடு அவளுக்குத் தொழுவம். காரியம் யாவிலும் கைகொடுப்பவளாக அல்ல, நுகத்தடிக்குப் பொருந்துவள், குடும்ப பாரத்தை இழுப்பவள், சுமப்பவள். ஆனால் மாட்டிற்கு ஒரு விலையுண்டு, உரிய விலையை விற்பவனுக்கு அளித்தாலொழிய  உடமை யாக்கிக்கொள்ளல் சாத்தியமில்லை. ஆனால் இவ்விலங்கிற்கு உரிய விலையை விற்பவர்தான் வாங்குபவனுக்குத் தரவேண்டும் .

இப்பெண்பார்க்கும் வலியை ஏ ராஜலட்சுமி என்ற கவிஞர் :

‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’

 

‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’

அப்பாவின் அவசரகடிதம் !

என்றோ ஒரு நாள் என்று நிகழ்ந்தது

இப்பொழுது அடிக்கடி அவஸ்தையாய்…

ஜாதகப் பொருத்தம் வருமானம்

குடும்ப நிலை வீட்டுச் சூழல்

ஒவ்வொன்றிலும்  கழன்றுவிடும்

ஏதோ ஒன்று

சரியில்லை என்று. (எனக்கான காற்று)

 

வாசல் – கனிமொழி

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டைபோட்டுக்கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன்
என்முறை வருமென்று. (கருவறை வாசனை )

 

என்ன விலை காதலே -வைகைச் செல்வி

‘ ………………………..

………………………………………….

கல்யாணம் ஆகிவிட்டால்

கல்லாகி விடுவேனோ ?

கயவர்கள் உலகத்தில் சுய நலமே வாழ்க்கையெனில் – எனக்கு

பந்தக்கால் தேவையில்லை

சொந்தக்கால் போதுமடா. (அம்மி)

 

புதின இலக்கியத்தித்திலும் திருமணம் குறித்து படைப்பாளிகள் சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் தங்கள் கொந்தளிப்பையும்  கோபத்தையும் காட்டவே செய்கிறார்கள்.

‘நம்ம கையில ஒழைப்பு இருக்கு. எவந்தயவும் நமக்குத் தேவையில்லை. ஆம்பள இல்லாம நம்மளால வாழமுடியாதா என்ன ?’ (மனுசி -பாமா, ப.117)

‘எனது உடலுக்குச் சொந்தக்காரி நான். அதைக் கொடுப்பதையும் கொடுக்காமலிருப்பதையும் தீர்மானிப்பதும் நானாகத்தான்  இருக்கவேண்டும். இந்தச் சுதந்திரத்தை இழக்க எனக்கு ஒரு போதும் சம்மதமில்லை.’ (மனுசி-பாமா. ப.208)

திருமணத்தை மறுத்து குரலெழுப்பும் பெண் எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எனில்  மணமான அன்றே சல்மாவின், இரண்டாம் ஜாமங்களின் கதையில் வரும் பிர்தவ்ஸ் தன் புதுக்கணவன் யூசுபின் தோற்றத்தைப் பார்த்த கணத்தில், ‘ நான் உன்னோடு வாழப்போவதில்லை. என்னைத் தொடவேண்டாம் ‘ (பக்கம் 35, இ.ஜா.கதை)  என்கிறாள். கதையில் அவள் முடிவைக்கேட்டு நாவலாசிரியர் ஊரே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்ததாக  எழுதுகிறார். பிர்தவ்ஸ் என்ற பெண்ணின்  வார்த்தைகளைக் கேட்டு நூலாசிரியரின் துணிச்சலான இவ்வரிகளை வாசிக்கிறபோது நாமும் உறைந்து போகிறோம். காரணம் நூலாசிரியரைப் போலவே அப்பெண்ண்ணும்  ‘ வயதுக்கு வந்த பெண்கள் வீட்டு வசல்படியைத் தாண்டுவதே இல்லை ; வெளியிலிருந்து வீட்டுக்குள் எந்த அன்னிய ஆண் வந்தாலும்  அவர் முன் தலைகாட்டக்கூடாது என்கிற ஒழுங்கைக் கடைபிடிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவள்.

சமயமும் பெண் இலக்கியமும்

ஆண்களைக் காட்டிலும் சமய நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர்கள் பெண்கள். ஆனால் உலகில் மதங்களுக்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை,  மதங்கள் பெண்களுக்குக் கொடுப்பதில்லை என்பதே உண்மை.

‘பெண்ணாவது தெய்வமாவது ஆதி ! என் எண்ணப்படி எது நடக்கிறது ? பாத்திமாவுடன் பேசியபடி பாலைவனத்தைச் சுற்றி வர ஆசை. மேரி கையிலிருந்து குழந்தையை வாங்கி என் இடுப்பில் வைத்துக்கொண்டு பெத்லஹெம் மற்றும் சுற்று புற பிரதேசங்களைப் பார்த்துவர  ஆசை. இப்படி இவன் காலடியில்  உட்கார்ந்திருப்பதில் என்ன சுகம் ?  அக்கடா என்று படுக்க  ஒரு பாம்பு படுக்கை உண்டா எனக்கு ?’ (காட்டில் ஒரு மான் ப. 38)  என ஆதிசேஷனைப் பார்த்து லட்சுமி கேட்பதாக அம்பை எழுதுகிறார்.

‘ ஹனீபா தன் கணீர்குரலில் , « இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று  சொல்லுவதில்லை » என்று பாடிக்கோண்டிருந்தார். பிர்தவ்ஸுக்குச் சிரிப்பு வந்த து. « நானும் தான் என்னவோ கேட்டேன். எதைக்கொடுத்தானாம் ?’ (ப.188 ) என்று இரண்டாம் ஜாமங்களின் கதையில் தன் கதைமாந்தர்களில் ஒருவரைவைத்து வினவுகிறார் சல்மா.

பண்பாடும் பெண் இலக்கியமும்.

பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள மரபையும் பண்பாடுகளையுங்கூட நவீன பெண் இலக்கியம் சகித்துக்கொள்ளாது என்பதைச் சொல்லவும் உதாரணங்கள் இருக்கின்றன.

விளக்குகள்  என்ற கவிதையில்  வைகறைச்செல்வி :

 

‘……….

குத்துவிளக்கென்று

பெண்ணைச் சொல்வார்

ஆங்கோர் மூலையிலே

மோனத்தவம் செய்வதற்கும்

எடுப்பார் கையிலெல்லாம்

அடங்கி இருப்பதற்கும் ( அம்மி -ப. 72)  என்று எழுதுகிறபோதும்,

 

‘குறள் போட்டி, தேவாரப் போட்டி எல்லாம் நாங்க வெக்கிறோம். பெண்கள் பரிசு வாங்கினா கன்னா பின்னாட்டு பரிசு தரமாட்டோம். குத்து விளக்கு தருவோம்…..ஒண்ணுமில்லைம்மா நம்ம பண்பாடு முழுக்க முழுக்க பெண்கள் கையில் இருக்கும்மா’ (ப. 124, காட்டில் ஒரு மான்) என்று  ஓர்ஆண் வர்க்கத்தின் பிரதிநிதியாக புத்தககக் கடைகாரர் ஒருவர் வாய்மொழிக்கொண்டு  அம்பை வைகைச் செல்வியின் மேலே கூறப்பட்டக் கவிதையை உறுதிபடுத்துகிறபோது, இப்படி ஒரு பிரிவினரை ஒடுக்குவதற்கென வகுத்துக்கொண்ட நமது பண்பாடுகளின் மீது பகுத்தறிவுகொண்ட மனிதர் எவரும் கோபம் கொள்வது இயற்கை.

இறுதியாக பொதுவெளியில் பெண்களின் நிலமையென்ன ?  என்பதைத் தெரிவிக்க இரு கவிதைகள்

உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ ?   – வைகைச்செல்வி

‘என் தாயே !

நீ மாதவம் செய்திருக்கத் தேவையில்லை

அங்கே மா மரத்தின் கீழே

என் வயதுப்பெண்கள்

நட்சந்திரங்களுடன் பேசுகையில்

இங்கே நானோ,

சிம்னி வெளிச்சத்தில்

அரிசியிலே கற்களைப் பொறுக்குகிறேன்.

…………………

நேற்று ஒருவன் பாரதியைக் காதலித்தான்

இன்று நான் கதலிக்கிறேன்

அவனுக்குப் பெயர் பாரதிதாசன்.

தாசனுக்குப் பெண்பால் எனில்

தமிழே என்பால் கல்லெறியும்’  (அம்மி – ப. 23)

 

வீடுகளால் ஆன இனம் – மாலதி மைத்ரி

 

ஊரில் அனைத்து வீடுகளும்

நடப்பட்ட பெண்களென நிற்கின்றன

சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்

யாரோ ஒரு ஆணிற்காக ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன

வயதுக்கேற்றபடி த் தம் உறவுகளுக்காக

கொலைகாரன் திருடன்

குடிகாரன் துரோகி மோசடிக்காரன்

ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்

கொடுங்கோலன் காமவெறியன்

சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்

இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை

அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது

உடம்பு தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து

உயிரும் உணவும் அளித்து

அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்

 

ஆண்கள் வீட்டைப் புணர்வதன்மூலம்

பூமியை வளர்க்கிறார்கள்

பெண்களையல்ல

காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.(நீரின்றி அமையாது உலகு ப. 35)

 

 

ஆணோ பெண்ணோ படைப்புவேறு தான் வேறுஅல்ல  என நினைப்பவர் எவரோ, தான் படைக்க நினைப்பதற்கு உதாரணமாக முடிந்தமட்டும் தன்னையும் சொந்த அனுபவத்தையும்  பொதுப்படுத்தும் எழுத்தாற்றல் எவருக்குச் சாத்தியமோ  அவரே என்வரையில் ஒரு நல்ல படைப்பாளி. கலையும் இலக்கியமும் அழகியலுக்கு அப்பாற்பட்டு, புலன்களைக் கடந்து இதயத்திற்குச் சிலிர்ப்பூட்ட வேண்டும், அறிவையும் மனதையும் அலைக்கழிக்கவேண்டும்.

இரண்டாம் ஜாமங்களின் :  சொஹ்ரா, றைமா, அமீனா, சவூரா, நூரம்மா, மும்தாஜ், பிர்தவ்ஸ், வயிற்றுப்பிழைப்புக்காக இவர்களுடன் பிணைத்துக்கொள்ளும் மாரியாயி

பெண் என்ற இனம் பொதுவாக இரண்டாம் தளத்தில் நிறுத்தப்படுவது ஒரு பக்கமெனில் அவள் தலித்தாக பிறந்ததால் இச்சமூகத்தின் கருநாக்குகளுக்குக் கூடுதலாக பதில் சொல்லவேண்டியிருக்கிறது, நெருக்கடிகளுக்குப் பலியாக வேண்டியிருக்கிறது என்பதை தெரிவிக்கும் பாமாவின் மனுசி  ‘ராசாத்தி’.

அம்பையின் சீதாயணத்திற்குக் கனவுகாணும் அடவி செந்திரு,  அகம்பாவ ஷண்முகத்தை மேடையில் வீழ்த்தும் செண்பகம்.

பெண்களின் துயரங்கள் அனைத்தும் குடும்பம், திருமணம் ஆண்-பெண் உறவு ஆகிய வேர்களின் மூலாதாரத்தில் கிளைவிடுகிறதென்று உறுதிராக நம்பும் திலகவதியின் நேசத்துணை பாகீரதி..

இவர்களை வாய் பேசவைத்த படைப்பாளிகள், கவிதையுடாக பெண் இருத்தலை வலியுறுத்தும் கவிஞர்கள், இவர்கள் அனைவரின் குரலும், மாலதி மைத்ரி தமது ‘புலி’ கவிதையில் சொல்வதுபோல எல்லாரையும் தாண்டி  எல்லாவற்றையும் தாண்டி இன்று ஆண்களின் தலைமாட்டருகே காத்திருக்கிறது. விழித்தால் தப்பித்தோம். உறங்குவதுபோல பாவனை செய்தாலோ, பெண்புலிதானே என அலட்சியம் செய்தாலோ ஆபத்து ஆண் வர்க்கத்திற்கு இல்லை, சமூகத்திற்கு.

——————————————————————————–

 

 

 

 

 

காலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்

panchu

(இறந்த காலம் நாவலுக்கு மூத்த திறனாய்வாளர் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் அணிந்துரை)

eranthakaalam_2 copy (1)

* ஆரோவில் குறிப்பிட்ட எவருக்கும் சொந்தமானதல்ல ; ஆரோவில் மனித இனம் முழுவதற்கும் சொந்தமானது ஆகும் ; ஆனால் ஆரோவில்லில் வசிக்கவேண்டும் என ஒருவர் விரும்பினால் அவர் தெய்வீக உணர்விற்கு விருப்பத்துடன் தொண்டு செய்பவராக இருக்கவேண்டும்.

 

* ஆரோவில் முடிவுறாத கல்வி, இடையறாத முன்னேற்றம், மூப்புறாத இளமை ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்கும்.

 

*  ஆரோவில் இறந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும்  இடையேஒரு பாலமாக இருக்க விழைகிறது ; புற உலக, அக உலகக் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தியபடி இது துணிவுடன் எதிர்கால நன்முடிவுகளை  நோக்கித் துடிப்புடன் முகிழ்த்து எழும்.

 

* ஆரோவில் மனித குல ஒருமைப்பாட்டிற்கு ஓர் உருவம் கொடுப்பதற்கான  உலகியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சிகளுக்குரிய நிலையமாக விளங்கும்.

 

இதுதான் 1968, பிப்ரவரி, 28 ஆம் நாள் ஆரோவில் நகரக் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டும்போது ஸ்ரீ அன்னையே (1878 – 1973) வாசித்தளித்த ஆரோவில் சாசனம். 121 நாடுகளில் இருந்தும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் எடுத்துவரப்பட்ட பிடிமண்ணைச் சலவைக் கல்லால்  தாமரை மொட்டுவடிவில்  வடிவமைக்கபட்ட தாழியில் ஒன்றாகப்போட்டு, பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா என்ற இயற்பெயர் உடைய  ஸ்ரீ அன்னையால் (ஐ நாவின் யுனெஸ்கோ மற்றும் இந்திய அரசின் நிதி உதவியுடன்) ‘ சர்வதேச ஆன்மீக நகரமாக வளரும் ‘ என்று பிரமாண்டமான நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் புதுச்சேரிக்கு அருகில் தொடங்கப்பட்டதுதான் இந்த ஆரோவில் ; இப்படித் தமிழ்நாட்டின் தொன்மையான நிலத்தைப் பெரிய பெரிய கனவுவார்த்தைகளாகக் கூறி  ஏறத்தாழ 20 கிலோ மீட்டர்  சுற்றளவிற்கு விலையில்லாமலும் அடிமாட்டு விலைக்கும் நிலம் கொடுப்போர்க்கு  ஆரோவில்லில் வேலைதரப்படும் என்ற பொய்யான உறுதிமொழிகளாலும் ஆக்ரமிக்கபட்ட பூமிதான் ஆரோவில்.

 

இன்று தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஓடிவிட்டன ; பொன்விழா கண்டுவிட்ட இந்த நகரம் என்னவாக இருக்கிறது என்பதைப் படைப்பாளிக்கே உரிய கூர்மையான  பார்வையோடு புனைவு மொழியில் எடுத்துரைப்பதுதான்  நாகரத்தினம் கிருஷ்ணாவின் ஆறாவது நாவலாகிய  இந்த ‘ இறந்த காலம்‘. இந்தப் பிரதிக்குள் வாசிப்பு நிகழ்வதற்கு ஆரோவில் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள் தேவை என்று  கருதியதால்தான் இங்கே  அவைத்தரப்பட்டன.

 

பாரீஸ் பெருநகரில் பிறந்து வளர்ந்தவள் மீரா (27 வயது).தன் தாய் இஸாபெல்லை, அவள் குழந்தையோடு மணம்முடித்துக்கொண்ட வளர்ப்புத் தந்தை லூயிஸ்மேல் பெரிதும் பிரியம் கொண்டவள் மீரா. அத்தகையவரைப் பிரிந்து மற்றொரு ஆடவனோடு வாழப்போகிறேன் என்று முடிவெடுக்கும் அம்மாவின் செய்கையால் மனக்கலக்கத்திற்கு உள்ளாகிறாள் ; இத்தகையக் குடும்பச்சூழல் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், தனக்குள்ளேயே மற்றொரு குரல் அவளுக்குக் கேட்டவண்னம் இருக்கிறது. அது தன்னையும் மீரா என்றே சொல்லுகிறது ; « இறந்தகால நான்களின் தொகுப்பு‘ எனச்சத்தியம் செய்கிறது. சமூகம் கட்டமைத்த போலி ‘நான்’ஐச் சுமந்துகொண்டு உண்மையான நான்-ஐ ஒதுக்கி வாழ்வதாக » அவளுக்குள் மூச்சு விடாமல் தொணதொணக்கிறது.

 

இப்படியான மனநிலையில்தான் அவள் கையில் « ஆரோவில் » பற்றிய குறிப்புகள் அடங்கிய அட்டை கிடைக்கிறது. (ஆரோவில் பன்னாட்டு மையங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் 23 நாடுகளில் உள்ளன.) உடனே முடிவெடுக்கிறாள் ; 2017, நவம்பர் 18ல் புறப்பட்டுச் சென்னை வந்து ஆரோவில்லில் உள்ள ஆல்பர்ட்-தேவகி வீட்டின் மாடியில் ‘பேயிங் கெஸ்ட்டாகத்’ தங்குகிறாள் ; இத்தகையை மீராவின் பார்வையில் ஆரோவில்லில் நடக்கும் கதை சொல்லப்படுகிறது ; மீராவிற்கு இங்கே அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸிக்கா என்ற தோழி கிடைக்கிறாள் ; அவள் மூலம் புதுச்சேரி அரசு  ஊழியனான  மாதவனும் அவன் குடும்ப உறவுகளும் நட்பாகக் கிடைக்கின்றனர்.  இப்படியொரு பின்னனியை அமைத்துக்கொண்டு ஆரோவில்லின் நடப்புக்களை விவரிக்கிறார் கதைசொல்லி.

 

மீரா, ஆரோவில் « சாசனத்தை » வாசித்தபோது  தனக்கு ஏற்பட்ட மன உணர்வை  இவ்வாறு பதிவு செய்கிறாள்  :

 

« முதன் முறை வாசிக்கிறபோது கடைவிளம்பரமொன்றை வாசிக்கிற மனநிலைதான். தேர்ந்தெடுத்த விரயம் இல்லாத சொற்கள், வாக்கிய அமைப்பு, அவற்றை அச்சடிக்கப் பயன்பட்ட எழுத்துவகை, அவற்றின் அளவீடு அனைத்திலும் விளம்பர உத்திக்குரிய சாதுர்யம் என்றுதான் நினைத்தேன் »

 

இப்படித் தொடங்குகிறது ஆரோவில் குறித்த மீராவின் விமர்சனம் ; இதேபோல் « மாத்ரி மந்திர் » எனப்படும் அன்னை ஆலயம் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை ஆடம்பரமாக உணர்கிறாள் ; ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆன்மீக சோசலிஸம் என்று வர்ணிக்கப்படும் ஆரோவில்லில் இத்தகைய ஆடம்பரம் வேணுமா எனக் கேட்கிறாள்.

 

இன்னும் மாதவன் மூலமாக « ஆரோவில் ஒரு நவீனக் காலனித்துவக்குணம் கொண்டது ; தாங்கள் உயர்ந்த இனம் என்றும், அக்கம் பக்கத்திலுள்ள ஏழைத்தமிழர்களைக் காலனிக்காலக்கூலிகள் என்றும் கருதுகிறார்கள் ; அரவிந்தர் ஆஸ்ரமத்தை விரிவாக்கும் ஒரு திட்டம்தான் ஆரோவில் ; அதுவும் பெரிதும் இந்தியர்களால் நிரம்பிக்கிடக்கும் ஆசிரமத்திற்குள் ஐரோப்பியர்களையும் உள்ளே கொண்டுவரும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது ஆரோவில்.

 

உலகமெலாம் ஒரு குடும்பம் எனும் ஆன்மீக மார்க்ஸியத்தின் அடிப்படையில் சமயமில்லை ; எல்லையில்லை ; பணம் வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது ; ஆரோவில்லின் தற்போதைய நிலை என்ன ? பணமில்லாதவர் உள்ளே நுழைய முடியாது என்பதுதானே.

 

ஆரோவிலியன்கள் எல்லாருமே அரவிந்தருமல்ல, மீரா அல்ஃபஸ்ஸாவுமல்ல. « இங்கு வருகிறவர்கள் கர்மயோகிகள் அல்ல ; வாழ்க்கைப்போகிகள். சராசரி மனிதர்கள், தப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் ; சில நல்லது நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாதென்றாலும், இந்த விடியல் நகரம்(ஆரோவில் என்றால் உதய நகரம் (அ) விடியல் நகரம் என்று பொருள்) இன்னும் வைகறையைக் கூடக்காணவில்லை » இப்படி நீளுகிறது மாதவனின் பார்வை.

 

இன்னும் ஆரோவிலியன் யாரும் தங்கள் பெயரில் நிலமோ, வீடோ வாங்கக்கூடாது என்பது விதியாக இருக்கிறது ; ஆனால் பல காட்சிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து வாங்கிய ஏழை முடிவெட்டும் தொழிலாளியின் நிலம், அவர்கள் புத்திப்பேதலித்து வாழ்வையே இழந்து போகும் முறையில் அபகரிக்கப்படுகிறது என்பதும் நாவலில் சித்தரிக்கப்படுகிறது ; மேலும் தனித்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு உற்பத்திசெய்து வாணிபம் செழிக்கிறது ; « ஆரோவில் ஒரு பணமற்ற சமூகமாக மலரும் » என்று சொல்லப்பட்ட மொழி என்ன ஆயிற்று ? உலோகத் தொழிற்கூடங்கள், விண்கலத்தில் செல்வோர் உண்ணும் உணவுப்பாசி உற்பத்திசெய்யும் தொழிற்சாலை என்று 140க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் ‘சரக்குகள்’ உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 

இன்னும் கொடுமைகளின் உச்சமாக ஆன்மீக நகரத்தை அசிங்கப்படுத்தும் பாலியல் குற்றங்கள் பிரதியில் பதிவாகியுள்ளன. 70களில் ஹிப்பி நாகரீகம் பிரபலமாக இருந்தபோது அந்தக் கும்பலில் இருந்து கோவா-வில் வந்து தங்கி, பிறகு அங்கிருந்து ஆரோவில்லின் தொடக்கக் காலத்திலிருந்தே இங்கே தங்கியிருக்கும் பிரெஞ்சுக்காரர் ‘துய்மோனும்’, மீராவிற்குத்தங்குவதற்கு மாடியில் இடம் அளித்த ஆஸ்திரேலியரும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் லீலைகள் கதைசொல்லியின் மேன்மையான எடுத்துரைப்பு மொழியில் சொல்லப்படுகின்றன. மீராவின் அமெரிக்கத்தோழி ஜெஸிக்காவின் பிறந்த நாள் விழாவைப் பயன்படுத்தி இருவரும் அவளைப்பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துகின்றனர். அதிலிருந்து அன்றைக்குத் தப்பித்த மீராவை, மறுநாள் அதேபோல் மதுவை ஊற்றிக்கொடுத்து ஆல்பர்ட் தனது வீட்டிலேயே பாலியல் வல்லுறவு புரிகிறான். யோகத்தை ஏற்பதற்கு விலக்க வேண்டியவைகளாகஸ்ரீ அன்னையால் முன்மொழியப்பட்ட அரசியல், காமம், புகைப்பிடித்தல், மதுக்குடித்தல் ஆகிய நான்கும் இங்கே முனைமழுங்காமல் மும்முரமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன ; கதைசொல்லியின் வெறும் கற்பனை சார்ந்த புனைவு என்று இவற்றைஎளிதாகச் சொல்லிவிடமுடியாது.  2008, மே, 22இல்  இலண்டன் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில், குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆரோவிலியன் குறித்துக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதற்குப் பிறகு இங்கேAuroville Child protection Service தொடங்கப்பட்டது என்பது வரலாற்று நிகழ்வு. எனவே இந்த நாவலில் வரும் மீரா ஓரிடத்தில் சொல்வதுபோல, « இது பாழ் கிணறில்லை என்றாலும் கரையேற இயலாத  உறைகிணறு » என்று நினைக்கத் தோன்றுகிறது.

 

இவ்வாறெல்லாம் படைப்பாளி தனது அலசல் பார்வைவையை முன்வைப்பதின் நோக்கம், வெறுமனே ஒன்றின்மேல் சேற்றை அள்ளி வீசுவது என்று எளிமையாகப் புரிந்துகொள்ளும் விபத்து நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது ; ஆனால் இப்படியான குறிக்கோளுடனும் கனவுகளுடனும்  எத்தனையோபேரின் உழைப்பின்மேல் எழுப்பப்பட்ட நகரம் இப்படி ஆனதே என்ற ஆதங்கத்தின் வெடிப்பு இந்த எழுத்து ; கதைசொல்லி ஆரோவில்லின் தொடக்கக் காலத்திலிருந்தே புதுச்சேரியில் வாழ்ந்தவர், பின்னர் புதுச்சேரி, ‘ மாவட்ட ஆட்சியர் ‘ அலுவலகத்தில் அரசு ஊழியராக வேலைபார்த்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துவந்தவர் ; எனவே இத்தகைய விமர்சனப்பார்வை அவரையும் மீறி அவருக்குள் இருக்கும் படைப்பு மனதிற்குள்  இருந்து புறப்பட்டு வருவது.

 

மேலும் இது ஓர் ஆரோவில் பிரச்சனை மட்டுமல்ல. சமூகவாழ்வின் பிரச்சனையாகத்  தீராத நோயாகத் தொடர்கிறது. அதாவது பெரிய பெரிய இலட்சியங்களோடு தொடங்கப்பட்ட மனிதர்களின் இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் இப்படித்தான் சீரழிந்து முடிந்துள்ளன ; பிறகேன், மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட ஒளிமயமான  வாழ்வு குறித்த இலட்சியங்கள் ? இந்தக் கேள்விதான் படைப்பாளியை ஆட்டிப்படைக்கிறது ; மேலும் இத்தகைய இலட்சியங்களை விதைப்பவர்கள், இந்த இலட்சியங்களை உண்மையிலேயே பின்பற்றுபவர்களாகக் கூட இருக்கவேண்டாம், குறைந்தது அவர்கள் போதிக்கும் இலட்சியங்கள்மேல்  நூறு விழுக்காடு நம்பிக்கைக் கொண்டவர்கள்தானா ?  அதனால்தான் வரலாறு முழுக்க இலட்சியங்கள் இப்படிப்படுதோல்வி அடைகின்றனவா ? இப்படித் தூங்க முடியாத முரண் இழுவைக்குள் அடைபட்ட படைப்பு மனம்தான்  இந்த எழுத்தை இயக்குகிறதே ஒழிய, சாதாரணமாகச் சேற்றை அள்ளி அடிக்கும் வேலை இல்லை இது .வரலாறு தோறும் படைப்பாளிகள் இப்படித்தான் இயங்கியுள்ளார்கள்.

 

இந்த இழுபடும் முரண்விசையிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கத்தான் கதைசொல்லி ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார் ; அந்தக் காமுகர் இருவரும் அஸ்ஸாம் மாநிலத்திற்குச்  சுற்றுலா சென்றபோது, « குழந்தையைக் கடத்துபவர்கள் » என்று 16 பேர் அடங்கிய கும்பலால் கொல்லப்படுகிறார்கள் . இது, « தான் உயர்ந்த நோக்கோடு தொடங்கிய ஒன்று, இப்படியானதே » என்று கருதிய ஸ்ரீ அன்னையின்  அமானுஷ்ய சக்தியால் நிகழ்ந்தது என்பதுபோல வாசகர்கர்கள் கருதும்படி, நாவலை முடிக்கிறார்.

 

 

நவீனகால ஆரோவில்லின்கதை சொல்லுவதன்  ஊடே, இந்த நாவலில் பிரஞ்சுக் காலக்கட்டத்தில், புதுச்சேரியின் எளிய மக்களை வேரோடு அள்ளிக்கொண்டுபோய் தங்களின் பிறகாலனிய நாடுகளில் ஒன்றான « இந்தோசீனாவில் »  கொட்டிய  பிரஞ்சுக் காலனியவாதிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டல் வரலாற்றையும் ஊடுபிரதியாகக் கதைசொல்லிப் பதிவு செய்துள்ளார் ; இது தமிழ் வாசகர்களுக்குப் புதிது. ‘ரெனோன்சியாசியோன்’ (la renonciation) எனப்படும் பிரெஞ்சுக் குடியுரிமை தருகிறோம் என்ற பேரில் கொண்டு சென்று இராணுவத்தில் சிப்பாய்களாக்கிப் பன்றிக்கறியும் நூடூலும் கொடுத்துப் பழக்கி  அவர்களின் போரக் களத்தில் அவர்களுக்காகச்  சாகடித்து  ‘இரத்த வரி’ (l’impôt de sang) வாங்கிய காலனியக் காலஅதிகார மூளையின் தந்திரங்களையெல்லாம் உடைத்துக் காட்டுகிறார் ; தம்பி சதாசிவத்திற்குத்தமக்கை வேதவல்லி எழுதும் மடலில் இந்தோ சீனாவில் புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையை « உறியடி வாழ்க்கை» என்கிறார் ; கைகளில் கம்பும்,  கண்களில் மறைப்பும், கால்களில் தடுமாற்றமுமாக இலக்கின்றி வீசும் கம்பு காற்றில் அலைகிறது » என்கிறார்.

 

மேலும் « சொந்த மண்ணைப்பிரிந்து வாழும் வாழ்க்கையும் தற்கொலையும் ஒன்றுதான் ; நினைவுகளும் ஏக்கமும் நெஞ்சை இறுக்க , அவற்றின் கைகளை விலக்க விருப்பமின்றி, காலவிரயத்துடன் கூடிய ஒரு புதியவகைத்  தற்கொலையை  நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் »  என்கிறார். கதை சொல்லியும் ஒரு புலம்பெயர்ந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதால், அதன் வலியையும் வேதனையையும் உறவுகளின் மடல்வழியாக வாசிக்கத் தரும்போது வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும் , ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் செலுத்துகிற இந்தத்தொடர் உழைப்பும், கீழைத்தேய மரபிற்கு ஏற்பத் தானொரு அறநெறிப்பட்ட கதைசொல்லி  என்பதைச்  சொல்லிய வண்ணம் இருக்கின்றன.  இத்தகைய நாவல்களை இன்றைய பின்காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில்  அணுகி ஆராய்ந்து ஒரு இணைப்பிரதியை உருவாக்க க் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கேற்ப இவர் நாவல்களை இணைக்கும் ஹரிணி இந்த நாவலிலும் வருகிறார்.

 

 

இந்தோசீனாவில் சிக்கிச் சிதறுண்ட புதுச்சேரி மக்கள் குறித்து ஒரு தனி நாவலே எழுத எண்ணியிருப்பதாக அறிவித்துள்ளார் ; அதை அவர் கட்டாயம் செய்து முடிக்கக் காலம் துணை செய்யவேண்டும். ஏனென்றால் கதை சொல்லலின் உடற்கூறை, அதன் இரத்த நாளங்களின் வெப்பத்தை எல்லாம் அறிந்துகொண்டு மொழிமேல் வினைபுரியும் அற்புதமான கதைசொல்லியாக விளங்குகிறார் ; நன்றாக முழுமையாக விளைவதற்கு முன்பே அறுவடை செய்துகொண்டு வந்து, செயற்கையாகப் பாடம் செய்து ஒன்றுகூட வீணாகாமல் விற்று, நல்ல காசு சம்பாதித்துவிட முடியுமென்கிற சந்தைச் சூழல், தமிழ் க்கலை இலக்கியத்துறையிலும் பரவி அனைத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிற ஒரு நிலையில், இத்தகைய கதை சொல்லிகள் பெரிதும் கொண்டாடப்பட வேண்டுமென விழைகிறேன்.

 

கதைகட்டுவதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளை வளர்த்தெடுக்கும் கதைமாந்தர் தேர்வும், இவர்களை இணைக்கும் மொழியாடலும் ஒரு சிறிதும் பிசிறு இன்றிக் கச்சிதமாக வந்து விழுகின்றன.எனவே வாசிப்பு அனுபவம் எளிதாகக் கூடி வருகிறது; ஓர் எழுத்தின் வெற்றி என்பது இறுதியில் இதுதானே !  இந்த வெற்றித் தொடரட்டும்.

 

 

சிங்கப்பூர்                                                                                        க. பஞ்சாங்கம்

22 -11 – 2018

கைப்பேசி : 9003037904

மின்னஞ்சல் : drpanju49@yahoo.co.in

____________________________________________________________

இறந்த காலம்  – நாவல்

ஆசிரியர்:  நாகரத்தினம் கிருஷ்ணா

சந்தியா பதிப்பகம், சென்னை.