Monthly Archives: நவம்பர் 2011

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

Strasbourg

 

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம். அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

 

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது  ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில்  எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள்.  அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும்  இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

 

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

 

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை  விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு  அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.

 

 

———————————————–

கதையல்ல வரலாறு -2-1

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பப்படவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.

நைநியப்பிள்ளை செய்திருந்த குற்றமென்ன? தண்டனையின் தீவிரத்தைப் பார்க்கிறபொழுது குற்றம் அசாதாரதனமானதென்கிற முடிவுக்கு எவரும் வரமுடியும். இழைக்கப்படும் குற்றமும் வழங்கப்படும் தண்டனையும் எப்போதுமே சமன் செய்யப்பட்டதாக வரலாறில்லை. வல்லான் வகுத்ததே வாய்க்கால் மட்டுமல்ல நீதியுங்கூட.  இங்கே நைநியப்பிள்ளை குற்றம் சாட்டப்படவர் என்றால், அவரை விசாரனை செய்யும் அதிகாரத்திலும் நீதி வழங்குமிடத்திலும் இருந்தவர்கள் அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள்: ஒருவர் கியோம் ஆந்தரே எபெர், மற்றவர் அவருடைய மகன்: குளோது ஆந்தரே எபேர்.

புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் முதல் கவர்னராக  இருந்தவர் பிரான்சுவா மர்த்தேன். திருச்சிராப்பள்ளியின் அப்போதைய நிர்வாகியாக இருந்த ஷெர்க்கான் லோடி, பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் புதுச்சேரியில் நிரந்தரமாய்த் தங்கி வியாபாரம் செய்யவும், சரக்குக்கிடங்குகள் கட்டிக்கொள்ளவும் 1673ம் வருடம் ஜனவரி மாதம் 2ந்தே அனுமதி வழங்குகிறார். பிரான்சுவா மர்த்தேனுக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடைத்தரகராகயிருந்து செயல்பட்டவர் சென்னையிலிருந்து பிரான்சுவா மர்த்தேனால் அழைத்து வர்ப்பட்டிருந்த தானப்ப முதலியார். பின்னாளில் தரகு தானப்ப முதலியார் என்றழைக்கபட்ட இம்மனிதரின் உழைப்பும், திட்டமிடலும் புதுச்சேரியை மட்டும் கட்டி எழுப்ப உதவவில்லை. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் இந்தியாவில் நிலைபெற்று தங்கள் பங்காளிகளைப்போலவே காலனி ஆதிக்கத்தை பிரெஞ்சுக் காரர்கள் கட்டி எழுப்பவும் அவை உதவின.. 1691ம் ஆண்டு தானப்ப முதலியார் இறக்கிறார். எல்லாக் காலங்களையும் போலவே  அப்போதும் தந்தைக்குப்பிறகு மகனுக்கு உத்தியோகத்தை வழங்குவதென்பது ஒரு சம்பிரதாயமாக இருந்துவந்திருக்கிறது. எனவே பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் தரகராக தானப்ப முதலியார் மகன் முத்தியப்ப முதலியார் நியமிக்கப்படுகிறார்.

33 ஆண்டுகள் புதுச்சேரிகவர்னராக இருந்த மர்த்தேன் – இடையில் ஆறாண்டுகாலம் (1693-1699)புதுச்சேரி ஆலந்து நாட்டினர் வசமிருந்தது – 1706ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந்தே தேதி இறக்கிறார். அவருக்குப் பின் புதுச்சேரி கவர்னராக பதினான்காவது லூயியினால் நியமனம் செய்யப்பட்டவர் கியோம் ஆந்தரே எபேர் (Guillaume Andre Hebert).

இவரைபற்றி ஆனந்த ரங்கப்பிள்ளை நாட்குறிப்பு தொகுதி ஒன்றின் முன்னுரையில் அறிஞர் ஞானு தியாகு, “அந்த மனிதன் ஒரே முழுக்கில் கூடை மண் வாரவேண்டுமென்கிற எண்ணமுடையவர். எவ்வளவு சுருங்கின கால அளவில் திரண்ட ஆஸ்தியைச் சம்பாதிக்கமுடியுமோ, அவ்வளவையும் சம்பாதிக்கிற எண்ணத்துடன் புதுச்சேரிக்கு வந்தார்”, என்றெழுதுகிறார்.

ஆகவே வந்தவர், கூட்டுறவு சங்க நிர்வாகத்தில் பணம் காய்க்கும் மரங்கள் எவையெவையென பட்டியலிட்டார். அதில் மாட்சிமைமிகுந்த மன்னராட்சிக்கு என்ன இலாபமென பார்ப்பதற்கு முன்னால் தம் பங்கிற்கு எவ்வளவு சம்பாதிக்கமுடியுமெனவும் கணக்கிட்டார். அதனை அதிகரிப்பதற்கு செய்யவேண்டிய வழிமுறைகளும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளும் பற்றி நன்கு யோசித்து வரையறுத்தவர் செயலில் இறங்கவும் தயங்கவில்லை. வந்தவர் கவனத்திற்கு முதலில் தெரிய வந்த தகவல், கூட்டுறவு சங்க வர்த்தகத்தில் முத்தியப்ப முதலியாருக்கிருந்த செல்வாக்கும் முக்கியத்துவமும்.

*     *

– உள்ளூர் வியாபாரிகள் வந்தார்களா?

– முத்தியப்ப முதலியார் ஊரில் இல்லையாம்.

*     *

– விலை எப்படி? குறைத்து கேட்டிருக்கலாமே?

– அப்படித்தான் நினைத்திருந்தோம், ஆனால் முத்தியப்ப முதலியார்தான் நியாயமான விலை, கொடுக்கலாம் என்கிறார்.

*     *

– தவக்கமில்லாமல் சரக்கு நாளை கப்பலில் ஏற்றப்பட சாத்தியமுண்டா

– தோணி செலுத்தும் செம்படவர் முத்தியப்ப முதலியார் வந்தால்தான் கடலில் இறங்குவார்களாம்

*     *

முத்தியப்ப முதலியார்மீது தேவயின்றி கோபம் வந்தது. முன்பிருந்த கவர்னர் இந்த மனிதரைத் தேவையின்றி வளர்த்துவிட்டாரோ என்ற சந்தேகம். காப்ரிகளை எப்படி வைத்திருக்கவேண்டுமென ஆந்த ஆளுக்கு ஏன் விளங்காமல் போயிற்று எனக் கோபப்பட்டார். இதை இப்படியே விடக்கூடதெனத் தீர்மானித்தவராய், முத்தியப்ப முதலியாருக்கு துணையாக இருக்கும் கணக்கனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவரும் தலையை சிலுப்பிக்கொண்டு வந்து நின்றார்.

– சிப்பாய் ஒருவனை உடனடியாக அனுப்பி முத்தியப்ப முதலியாரை என்னை வந்து பார்க்கசொல், என்றார்.

போன கணக்குப்பிள்ளை இரண்டு மணி நேரத்தில் குடுமியை முடிந்துகொண்டே திரும்பவும் வந்தார். இன்றைக்கு அவரது தாயாருக்கு திதியாம். வீட்டில் அவசியம் இருந்தாகவேண்டுமாம். நாளை வந்து பார்க்கிறேன், என்று முதலியார் கூறியதாகத் தெரிவித்தார். அவர் வேறொன்றையும் தெரிவித்திருக்கவேண்டும். எதற்காக வீண் வம்பென நிறுத்திக்கொண்டார். வரமாட்டேனென்று கூறிய முதலியார், “ஏண்டா மாடு பன்றிகளை தின்கிறவனுக்குத்தான் புத்தியில்லை, உங்க கணக்கனுக்கு எங்க போச்சு புத்தி. எங்க வீட்டிலே விசேஷம்ணு அவனுக்குத் தெரியுமே, எப்படி சொல்ல மறந்தான்? என இடக்குத்தனமாக முதலியார் கேள்வியெழுப்பியதையும் சிப்பாய் சொல்லியிருந்தான், கணக்குப்பிள்ளை அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களை உணர்ந்திருக்கவேண்டும், கவர்னரிடம் கூறாமல் தவிர்த்தார்.

– சரி சரி நீ போ, என்ற கவர்னர் ஆந்தரே எபெருக்குக் கோபம். உடனே முத்தியப்ப முதலியாரை கட்டி இழுத்துவந்து சந்தியில் தூக்கில் போடலாமா என்று கூட நினைத்தார். அவர் மூளை வேறுவிதமாக யோசித்திருந்தது. இந்தக் காட்டுமிராண்டிகளை மேய்த்துவிட்டு தாய் நாட்டுக்குத் திரும்பும்போது முடிந்த அளவு செல்வத்தை அள்ளிபோகவேண்டும், அதற்கு வேண்டிய தந்திரங்களை கையாளவேண்டும் என்பதை புரிந்துகொண்டவுடன் கவர்னரின் கோபம் அன்றைக்குத் தணிந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கவர்னர் எபெர் தரகர் முத்திய முதலியாரை அழைத்திருந்தார். முத்திய முதலியாரும் கவர்னரின் உத்தரவை மதித்து கவர்னர் சமூகங்காண உடனடியாக வந்திருந்தார். வந்த முத்திய முதலியாரிடம் கவர்னர் ஐம்பது பேழைகளைக் கொடுத்தார். பேழைகள் ஒவ்வொன்றிலும் நன்கு சிவந்த பவழங்கள் இருந்தன.

– என்ன பார்த்தீரா?

– பார்த்தேன்.

– அவ்வளவும் ஜாதி பவழங்கள் எனக்குப் பரிசாக வந்தவை. அவற்றை விற்கலாமென தீர்மானித்திருக்கிறேன்.

– நல்லது.

– மணங்கு ஒன்றுக்கு 120 வராகன் போகுமென்று சொல்கிறார்கள். விற்க ஏற்பாடு செய்யுங்கள்.

சரக்கினைப் பெற்றுக்கொண்ட உள்ளூர், வெளியூர் வியாபாரிகளை வரவழைத்து பவழங்களைக் காட்டியபோது, அவர்கள் சரக்குகளை பரிசோதனை செய்து சரக்குகள் நல்ல ஜாதியில்லை என்றார்கள். மணங்குக்கு 106 வராகனுக்குமேல் ஒரு குண்டுமணிகூட பெறுமதி இல்லையென தெரிவிக்கின்றனர். கவர்னர் எபெர் குறைந்தது 110 வராகனாவது வேண்டுமென பிடிவாதமாக இருந்தார். முத்தியப்ப முதலியார் வியாபாரிகளை சமாதானம் செய்து மணங்கிற்கு 110 வராகன் என முடித்துவைத்தார். சம்மதித்த வியாபாரிகள் போகிறபோது சண்டையிட்டுக்கொண்டுப் போனது கவர்னரின் காதிற்கு எட்டியது. கவர்னர் பிரச்சினைகள் அனைத்திற்கு தரகர் முத்தியப்ப முதலியாரே காரணமென நினைத்தார். முதலியார் நினைத்திருந்தால் மணங்கொன்றிர்க்கு தமக்கு 120 வராகன் விற்றுத் தந்திருக்கலாம், தவிர வியாபாரிகளை எப்படி வழி நடத்துவதென்பதைக்கூட அவர் அறியாமலிருக்கிறார் என்றெண்ணி தரகர் பதவிக்கு அவர் சரியான ஆளல்ல என்ற முடிவெடுத்து தமக்கு விசுவாசமாக இருக்கிற நைநியப்பிள்ளையை அன்றுமுதல் தரகராக நியமிக்கிறார்.

(தொடரும்)

 

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம். அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது  ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில்  எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள்.  அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும்  இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை  விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு  அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.
Strasbourg Christmas market:
http://www.google.fr/search?q=strasbourg+march%C3%A9+de+noel&hl=fr&client=firefox-a&hs=DUy&rls=org.mozilla:fr:official&channel=s&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=MFPTTqGyBYSUsgaN9vDJDA&ved=0CGAQsAQ&biw=1143&bih=676
———————————————–

 

 

 

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

ஸ்ட்ராஸ்பூர்

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில் எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள். அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும் இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.

Strasbourg Christmas market: http://www.google.fr/search?q=strasbourg+march%C3%A9+de+noel&hl=fr&client=firefox-a&hs=DUy&rls=org.mozilla:fr:official&channel=s&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=MFPTTqGyBYSUsgaN9vDJDA&ved=0CGAQsAQ&biw=1143&bih=676

—————

———————————————–

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்

இதற்கு முன்பும் தோல்விகளை மகா சன்னிதானம் சந்தித்திருக்கிறார். விழுந்த வேகத்தில் எழுந்துமிருக்கிறார். இம்முறை மனமல்லவோ விழுந்திருக்கிறது. இனி கற்பதற்கு எதுவுமில்லையென இறுமாந்திருந்தபோது, மிகப்பெரிய பாடத்தை வாழ்க்கை போதித்திருக்கிறது. குடும்ப வாழ்க்கையிலும் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, நுகத்தடியில் எருதுகளை வலம் இடம் அறிந்து பூட்டியவர்  இப்பொழுது சாட்டையை கையிலெடுக்க பயம். சாட்டையைக் கையிலெடுத்து பழகிய கைக்குச் சோர்வு ஒருபக்கமெனில், ஓங்கிய கையைத் தடுத்து ஓரிரு வார்த்தைகளை இவருக்கு எதிராக உதிர்ந்தாலும் போதும், உடல் கூசிப்போகும். குருபீடத்திலிருத்து இவர் இறக்கப்பட்டது குறித்த கவலைகளோடு வாரிசுகளின் பார்வையில் தெறிக்கிற கோபமும், துச்சமும் வேறு கழுத்தை அன்றாடம் நெறிக்கின்றன.

எல்லாம் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. பூஜ்யத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சாதுர்யமும் சவடாலும் இருபதாம் நூற்றாண்டிற்குத் தோதான ஆசாமியென்ற பெயரை வாங்கித்தந்திருந்தது. தொட்டதெல்லாம் துலங்கிற்று. ஆடுபுலி ஆட்டத்தில், இவர் மட்டுமே புலி – பசித்த புலி. எத்தனை ஆடுகளை குரல்வளையைக் கடித்து உயிரை வாங்கியிருப்பார், இரத்தம் தோய காடு கரம்பைகளிலும், முட்புதர்களிடையேயும் இழுத்துச்சென்று வாய்கொள்ள கவ்வியும், பற்களால் கிழித்தும் மென்றும் விழுங்கியும் பசியாறியிருப்பார். கடைவாய்ப்பற்களில் நிணச்சாறு வழிய முகவாயை அடிமரத்தில் துடைத்திருப்பார், நிதானமாக அசைபோட்டிருப்பார். சோர்வுகளில்லை, கண் துஞ்சலில்லை. திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்,  வெற்றியின் களிப்பு உதட்டோரங்களில் ஆரம்பித்து பிடறி மயிர்க்கால்கள்வரை சிலுசிலுவென்று உணரப்பட்டிருக்கிறது. மலமிருக்க புதருக்குப்பின்னால் ஒதுங்கியது போக, கழிவறைக்குக்கூட தொண்டர்கள் பொன்வேய்ந்து அழகுபார்த்தார்கள். படகைச் செலுத்துவதில் சாமர்த்தியம் அதிகமென்று ஊர்மெச்சியது. எதிர் நீரோட்டத்திற்கும் சுழலுக்கும் வெகு எளிதாக தப்பித்ததுண்டு. காலம் பொல்லாதது. வழக்கம்போல இந்த ஆனையின் அடிசறுக்கவேண்டுமென்பதற்காக காரணங்களுக்கென காத்திருந்திருக்கிறது. ஆகப் படகு கரைதட்டிவிட்டது. காரணங்கள்: ஒன்றா இரண்டா? திசைகள்தோறும் இருக்கின்றன. இங்கே கொலையாளியும் கொலையுண்டவரும் ஒருவரே என்றால் நம்பவா முடியும்.

அழைப்பு மணி பொத்தானை நான்கு அழுத்தினார். தலையை படியவாரி, சந்தனப்பொட்டும் சாம்பல் வண்ண சபாரியுமாக எட்டிப்பார்த்த காரியதரிசி ‘கூப்பிட்டிங்களா! என்றார். சில நொடிகள் தம்மை ஏறிட்டுப்பார்ப்பதை காரியதரிசி சிலிர்ப்புடன் ஏற்றுக்கொண்டார். அச்சு அசலாக தாம் செல்லமாய் வளர்க்கும் நாயின் முகவாயைப் போலவே காரியதரிசியின் முகவாயும் இருப்பதாக ஒருமுறை கூறியிருந்தார். அவர் தலையை உயர்த்திய மாத்திரத்தில் அழைப்பின் காரணத்தை ஊகிந்திருந்த காரியதரிசி, ‘எதுவும் வரலீங்க. அம்மாவையும் கேட்டேன், இல்லைண்ணு சொன்னாங்க’, என்றார். ‘சரி நீ போ’ என்றதும்” காரியதரிசி தலையைத் தாழ்த்தி விடைபெற்றார். வெளியேறி கதவை மூடும் வேளை, ‘நில்லுய்யா! என்றார். காரியதரிசி நின்றார். ‘வா!’, என்றார். வந்தார். தனக்கும் அவருக்குமான இடைவெளி சாசுவதமானதென்பதைப்போல பாதங்களை யோசித்து எண்ணி நான்கடிகள் வைத்த காரியதரிசி, தோராயமாக தமது மனதிற்குள் கிழித்திருந்த எல்லைக்கோட்டுக்குள் நின்றார். “நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கா?, அதட்டல்போல பிறந்த குரலுக்கு “ம்” என்ற முனகலைத் தொடர்ந்து காரியதரிசியின் தலை காற்றுக்கு ஆடும் கிளைபோல இரண்டொருமுறை அசைந்து கொடுத்தது. தொடர்ந்து, “பார்சலை நீதான் வாங்கணும். நேரே இங்கே கொண்டுவரணும், ஒருத்தர் கிட்டேயும் இதுபற்றி மூச்சுவிடக்கூடாது”, என்று கோர்வையாக வாக்கியங்களைக்கூறி அமைதியானதும், மறுபடியும் காரியதரிசியிடமிருந்து தலையாட்டல்கள். அடுத்து ‘நான் போகலாமா?’ என்ற கேள்வியையும், ‘நீ போகலாம்’ என்ற பதிலையும் இருவர் பார்வைகளும் நடத்தி முடித்தன. இவருடைய கட்டளையை மனதில் எழுதிக்கொண்டவராக கால்களை பின்வைத்து பவ்யமாக வணங்கி காரியதரிசி வெளியேற, கதவு மூடிக்கொண்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. எதிரியிடம் பீடத்தை தொலைத்திருந்த தினம்.  அக்கறையுடன் அனுதாபம் தெரிவிக்கவந்தவர்களைக் காட்டிலும், மீசையில் மண் ஒட்டியிருக்கிறதா என்று பார்க்கவந்தவர்கள் அதிகம். எல்லோரும் புறப்பட்டுப்போனதும், இவரது பிரத்தியேக தொலைபேசிகளையெல்லாம் துண்டிக்கும் படி ஆணைபிறப்பித்துவிட்டு இவரது நெருங்கிய சகாவோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான், காரியதரிசி தன்னுடைய செல்லிடபேசியை தூக்கிக்கொண்டுவந்தார். அமெரிக்காவிலிருந்து போன் என்றார். காரியதரிசியை வெளியிற் போகச்சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த நண்பரிடம், ‘என்னவென்று கேளேன்’- என்றார். வாங்கிய நண்பர் ஓரிரு நொடிகளுக்குப்பிறகு, ‘கடைசியா ஒரு லைசென்ஸ¤க்கு அரசாங்கத்திடம் சொல்லி ஏற்பாடு செஞ்சு கொடுத்தோமில்லையா, அந்த ஆள். உங்கக்கிட்ட மட்டும்தான் பேசுவாராம்.

‘உனக்குத் தெரியாத ரகசியமா? என்னன்னு நீயே விசாரிச்சுட்டு சொல்லு..”

தொலைபேசி உரையாடல்  உதடுகளில் ஏற்ற இறக்கங்களும், இடைக்கிடை சன்னமான வார்த்தைகளுமாக  நான்கைந்து நிமிடங்கள் நீடித்திருக்கக்கூடும். இவர் ஓரளவிற்கு யூகித்திருந்தார். இருந்தபோதிலும் நண்பர் சொல்லட்டுமென காத்திருந்தார். தொடர்பு துண்டிக்கப்படவும், நண்பர் இவரது திசைக்காய் திரும்பினார்.

– ‘ஏதோ அன்பளிப்பொன்று சென்னைக்கு வந்து சேர்ந்துட்டுதாம், வீட்டுக்கு எப்ப அனுப்பிவைக்கட்டுமென்று கேட்கிறார்கள்..

 

– எந்த எழவும் இப்போது வேண்டாமென்று சொல், ஏற்கனவே தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.

– என்ன செய்வது நேற்றே அனுப்பியாச்சாம். உங்கள் துணைவியார் பெயருக்கு, வீட்டு முகவரிக்கு..

– போய்யா, போய் உன்வேலையைபாரு. போனைக்கூட ஒழுங்காக கையாளத் துப்பில்ல.

– அனுப்பிட்டேன்னு சொல்லும் போது என்ன பண்ணமுடியும்.

– இப்படி சொல்லி சொல்லியே, நீங்க.. போய்டுவீங்க.

 

– ஏதோ இந்த நிலமைக்கு நாங்கதான் காரணங்கிற மாதிரி பேசறீங்க

– நேற்றுவரை நீ இப்படி பேசினவனில்லை, இப்போ எங்கிருந்து ஒனக்கு தைரியம் வந்திருக்கு? சுண்டல் விற்றவனையெல்லாம் பக்கத்துலே உட்காரவெச்சன்பாரு.

– இப்படி எடுத்தெரிஞ்சு பேசறது நல்லா இல்லை.  நம்ம பிரச்சினைகள் சந்திக்கு வந்தா நாளைக்கு எல்லோருக்குந்தான் கேடு.

– இன்னும் என்ன நடக்கனும்னு எதிர்பார்க்கறே.

– நேரம் சரியில்லைன்னா, வார்த்தைகள் கூடவா யோசிக்காம வரணும். எங்களையெல்லாம் பகைச்சுகுகிட்டா உங்களுக்கு நல்லதில்லைன்னு சொல்லவந்தேன்.

– என்ன மிரட்டறியா? குரல்வளையை அறுத்து இங்கேயே புதைச்சுடுவேன், நாயே வெளியிலே போ

நண்பர் போய்விட்டார். போனாலும் வருவாரென்று இவருக்குத் தெரியும்.

அண்ணாந்து உட்தளத்தைப் பார்த்தார். உத்திரங்களையும் பிறவற்றையும் பலமுறை எண்ணியாயிற்று. இப்பொழுதெல்லாம் மேலே அண்ணாந்து பார்த்தாலே எண்ணத் தொடங்கிவிடுகிறார். விசாலானமான அறை, தரையில் கடப்பைக்கற்கள், இரத்தின கம்பளம். மெருகுக்குலையாமல் பாதுகாக்கப்படும் பொன்வேய்ந்த கட்டில்கள், செதுக்கு வேலைபாடுமிக்க நாற்காலிகள், அலங்கார மேசைகள் அவற்றின் வண்ணப் பூச்சில் தீப்பறியதுபோல வெள்ளித் தகடுகளாய் மினுங்குகிற குழாய் விளக்கின் ஒளி. அலங்காரமான கண்ணாடி அலமாரி,  உள்ளே வெள்ளியும் பொன்னுமாய் இழைத்து இழைத்து உருவாக்கியிருந்த விருதுகள் கேடயங்கள், ஒருகளித்த நிலையில் புத்தகங்கள். அலங்காரப் பொருட்கள், தவிட்டு நிறத்தில் சுவர், சுவரில் பூர்வாசிரமத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல் நிழற்படம். அவ்வளவும் அலுத்திருந்தன.

கண்களில் பணிவும், ஈறுகடித்த பற்கள் தெரிய முக தரிசனத்திற்காக பரிதவிப்புடன் காத்திருக்கும் மனிதர்களை இரண்டு நாட்களுக்கு முன்புவரை சுமந்த வீடு. நடைவாசல் திறக்காதா, மகா சன்னிதானத்தின் பார்வை படாதா என்று பயபக்தியுடன் காத்திருந்த பக்தர்களில்லை. சலவை மணம் கிஞ்சித்தும் குறையாத ஆடைகளின் சலசலப்புகூட நிசப்தத்தைக் கு¨லைத்துவிடலாம் என்பதுபோல அச்சத்துடன் நிற்பார்கள். இவர் விழிப்பைக்கூட கலைத்து விடக்கூடாதென்பதுபோலவும் இவர் கால்களை நலன் விசாரிக்க வந்தவர்கள்போலவும் தரையையில் பாதியும் அவர் கால்களில் பாதியுமாக பார்வையை பங்கிட்டிருப்பார்கள். எழுந்தவர் தடுமாறி மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார். இந்த வயதிலும் பிறர் துணையின்றி அவரால் எல்லாம் செய்ய முடியும். ‘சோ’வென்று மழைபெய்து முடித்த நிலத்தில் இறுக்கமும், ஈரக்கசிவும் உடலில் இருக்கிறது, ஆனால் மனம் தான் நூலறுந்த பட்டம்போல நீரில் அமிழ்வதும் நிலத்தில் மோதுவதுமாக, இவர் துரத்தலுக்கு பிடிகொடுக்காமல் நழுவிச்செல்கிறது.

எப்பொழுதும் தலையை நாற்காலியில் அணைத்து சாய்ந்து உட்கார அவருக்குப் பிடிக்கும். பகல் நேரத்திலுங்கூட  அங்குள்ள அத்தனை மின்சார விளக்குகளும் பழுதின்றி முதல்நாள் ஜ்வலிப்புடன் எரியவேண்டும். பிரகாசத்தில் தொய்வு கூடாது, ஒளிநாக்குகள் விறைத்து நிற்கவேண்டும். அதைச் செவ்வனே செய்து முடிக்க திரும்பும் திசையெல்லாம் ஏவலாட்கள், சீடர்கள், நண்பர்கள், பிள்ளைகள். இனி ஒருவரும் வேண்டாம், விளக்குகள் உமிழும் ஒளியின் நிழலுட்பட. ஒளிகள் கடந்த கால அகங்காரங்களை, பெருமைகளை நினைவிற் கிளறி பெருமூச்சிடவைக்கின்றன.

கதவு மெள்ள திறப்பட்டிருக்கவேண்டும், முனகியது. மீண்டும் காரியதரிசி. தலைமட்டும் கதவிடுக்கில் சிக்கிக்கொண்டதுபோல நிற்கிறது. “ஐயா மணி அடிச்சீங்களா?’ காரியதரிசி.

– என்னய்யா வந்துச்சா?

– இல்லைங்க, வந்ததும் சொல்றேன். வேற ஏதாச்சும்?

– நீ கூட என்னை மறந்துட்டியா? இந்த நேரத்துலே நவதானிய கஞ்சிண்ணு ஒண்ணைக்கொடுப்பியெ இரண்டு நாளா என்ன ஆச்சு?

– நான் மறக்கலை. என்னாச்சுண்ணு வீட்டுலே கேட்கறேன்.

– கேட்கவேண்டாம் நீ போ.

தனிமை வேண்டியிருந்தது. தனிமையைச் கடைசியாக எப்போது சந்தித்தது? நினைவில்லை.  அந்திமாலையிலும், புலரும் காலையிலும் காணக்கூடிய பஞ்சுபோல காற்றில் அலைகிற இளம் இருள் யாருமற்ற அவரது தனிமைக்குப் பொருந்துகிறது. இந்த ஒற்றை இருப்பு இவராகத் தேர்வு செய்ததுதான். பாதகுறடுகளை கையிலேந்திநிற்கிற சேவகர்களையும், பல்லக்குப் பயணமும், பேரிகையின் அதிர்வும், முழவின் தும்..தும்மும் கசந்துவிட்டது. நான்கு சுவர்களுடனும் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. கணக்கின்றி அவர் வாழ்நாளில் இந்த அறையையும் நாற்காலியையும் மேசையையும் உபயோகித்திருக்கின்றார், குறைந்தது நாளொன்றுக்கு ஐந்து மணிநேரமாவது அவைகளுடன் கழித்திருக்க வேண்டுமென மனதிற்குள் கணக்கைப்போட்டார். எஞ்சியிருக்கிற நாட்களையாவது அவைகளுடன் கழிக்கவேண்டும்.

அவ்வப்போது தலையை நிமிர்த்தி எதிரிலிருந்த சுவரைப் பார்க்கிறார், இவர் எதிரே சுவர் பவ்யமாக நிற்பதுபோலவும், இவர் பேசுவதைக்கேட்க தயார் என்பதுபோலவும் காதுகள் விடைக்க நிற்கிறது. பேசவும் செய்கிறார். கோர்வையாக இல்லையென்கிறபோதும் சொல்லவந்ததை இரண்டொரு சொற்களில் தெளிவு படுத்தமுடிகிறது. சுவர்களும் இவரது  பழம்பெருமைகளை அவற்றின் இழப்புகளைக் கேட்டு சோர்வின்றி தலையாட்டுகின்றன. சிற்சில நேரங்களில் அவரது ஒருதலை உரையாடல் முனகலாகவும் பின்னர் விசும்பலாகவும் தேங்கி நிற்கிறபோது, அத்தடையை உடைப்பதோ அல்லது குறைந்த பட்சம் சீண்டும் வழக்கமோ சுவர்களுக்கில்லையென்பது கூடுதல் சௌகரியம். பிறகு இருவரும் கருத்தொருமித்தவர்களாய் உரையாடலை துண்டித்துக்கொண்டு அவ்விடத்தில் நிசப்தத்தை இட்டு நிரப்பி விடுவார்கள்.

சிலவேளைகளில் இத்தனிமையை அநியாயமாக அவரற்ற பிறர் தன்மீது சுமத்தியதாகவும் உணர்வதுண்டு.  அதுபோன்ற தருணங்களில் அகத்தில் மார்பில் அறைந்துகொள்வார். அதன் விளைவாக புறத்தில் விழிகளில் நீர் தளும்புவதும் – ஒன்றிரண்டு நீர்முத்துகள் இரப்பை விளிம்பில் மயிற்கால்களை சுற்றிவந்து பின்னர் விழிமூலையில் தயங்கி தயங்கி இறங்கவும் செய்யும். இப்போதும் அது நிகழ்ந்தது. துண்டை எடுக்க கைமுனையவில்லை. மனதை சமாதானபடுத்த உயிர்ப்பின் தன்னிச்சையான இயக்கம் செய்யும் உதவி. அழுவதற்கும் கொடுப்பினை வேண்டும். மனம் வெக்கையில் அவிய விம்மி அழுவது அவர் வாழ்க்கையில் அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது.  ஏதோ நினைத்தவராய் நாற்காலியைவிட்டு எழுந்து அறைக்கதவு வரை மெல்ல மெல்ல நடந்து வந்துவிட்டார். கதவின் தாழ்ப்பாளை திறக்கப்போனவேளை, வேண்டாம் என்பதுபோல மீண்டும் நிதானமாக நாற்காலிபக்கம் திரும்பிவந்தார். வியப்பு. சரீரமும் ஆன்மாவும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லையோ? கடந்த இரண்டு நாட்களாக ஓர் அந்நியனைப்போல தனது செயல்பாடுகளை வேடிக்கைப் பார்க்கின்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. சிறுவர் கை பொம்மைபோல சில நேரங்களில் சீராட்டப்படுகிறார், பல நேரங்களில் கேட்பாரற்று கிடக்கிறார். காலத்திற்குக்கூட இவரிடம் வன்மமிருக்கவேண்டும், அதுகூட எஞ்சிய வாழ்நாளை கனவுகளிலும் நம்பிக்கைகளிலும் தோய்த்து அசைபோட பணித்துவிட்டு ஒளிந்துகொண்டது. எங்கேயாவது தொலைந்து போ என்று விட்டுவிட்டார். அதைக் கண்டுபிடித்து பரணி பாடவெல்லாம் இப்போதைக்கு இயலாது, சரீரத்தில் அதற்கான தெம்புமில்லை. இவர் வாழ்ந்ததுதான் வாழ்க்கை என பிறர் கற்பிதத்தில் ஜீவித்திருக்கிற கடந்தகால வாழ்க்கையின்  ஒவ்வொரு கணத்தையும் நினைவூட்டுகிற நிலவையும், நட்சத்திரங்களையும், ஆற்றின் பாய்ச்சலையும், பெருவெடிப்பையும், பெருநதியின் சுழலையும் மறக்க எத்தனிக்கிறார். இயலாதபோது அத்துவானக் காட்டில் தன்னைக் கொண்டுவந்த சக்திக்கு பெயரிடத் தெரியாமல் குழம்பினார். இக்கொடுங்கனவிலிருந்து விடுவிக்கும் சூட்சமங்கொண்ட திறப்பு யாரிடத்தில் இருக்கும்? அவரது எதிர்கால இருப்பின் தலைவிதியை எழுதும் ஆற்றல் கிடைக்கவிருக்கும் திறப்பையும், அது கையில் கிடைக்கிற கால அலகினையும் பொறுத்தது. சுவரிலிருந்த சிங்கப்பூர் கடிகாரம் மணி பதினொன்றென அறிவித்தது. இரண்டு மணி நேரத்திற்குமேல் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூடிக்கிடக்கும் சன்னலை திறக்கலாமா? ஏசியை நிறுத்தி, கொஞ்சம் இயற்கை காற்றை சுவாசிக்கலாமென்ற எண்ணம் போயிற்று. ஒற்றை மனிதராக இவரது சுவாசத்தையே திரும்பவும் சுவாசிப்பதும், உள்ளிருக்கும் ஒவ்வொரு பொருளும் தத்தமக்கொரு வாசத்தை வாயிலடக்கி இவர்மீது துப்புவதும் எரிச்சலையும் அலுப்பையும் உடல் கொள்ள திணித்திருந்தது.

கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த காரியதரிசி தயங்கி நின்றார்.

– என்ன விஷயம்?

– டாக்டர் வந்திருக்கிறார்

– உள்ளே அனுப்பு.

– வாங்க டாக்டர், காலையிலே ஒன்பதுமணிக்கெல்லாம் வந்துடுவீங்களே இன்றைக்கு என்ன ஆச்சு?

– எதிர்பாராம ஒரு பிரச்சினை, வீட்டுக்குப் போன்பண்ணியிருந்தேனே?

– அப்படியா? இதற்கு முன்னாலே இப்படி பிரச்சினைகள் உங்களுக்கு வந்தததா ஞாபகமில்லை.

– மன்னிக்கணும், எனக்கு எப்போதும் நீங்கள் ஒரேமாதிரிதான், என்னை சந்தேகிக்கவேண்டாம். அப்படி எனக்கு சிக்கல்களென்றால் அவசரத்திற்கென இன்னும் இரண்டு டாக்டர்களை வச்சிருக்கீங்க. அப்படி இருக்கச்சே உங்களுக்கு  நான் தான் வரணுமென்று அடம்பிடிச்சா எப்படி? எல்லா நாட்களிலும் அது சாத்தியமா சொல்லுங்க. வாங்க வந்து இப்படி படுங்க. உடம்பைப் பற்றி சொல்லுங்க.

இவர் மௌனமாக இருந்தார். நாடி, இரத்தம் அழுத்தம் என்று ஆரம்பித்து வழக்கமான சோதனைகள் நடந்து முடிந்தன.

– உடம்பிலே எந்தக் குறையுமில்லை. வயதுக்குத் தகுந்த உடல்நிலைதான். ஆரோக்கியமென்றுதான் சொல்லணும்.

– டாக்டர் பக்கத்திலே வாங்க. எத்தனை வருடமா எனக்கு டாக்டரா  இருக்கீங்க, ஞாபகபடுத்தி சொல்ல முடியுமா?

– இதிலென்ன கஷ்டம் போன ஏப்ரலோட முப்பத்தெட்டு வருடங்கள் ஆகபோகுது.

– ஆமாம். முப்பத்தெட்டு வருடங்கள் ஆகுது. நீங்கள் டாக்டர் இல்லை. குடும்ப நண்பர் அதனாலே சொல்றேன். எங்கிட்டே இன்னொரு நோயிருக்கு, மருத்துவ பரிசோதனைகளோ, ஆய்வுக்கூட சோதனைகளோ கண்டறிவதற்கு சாத்தியமற்ற நோய். அந்த மலைப்பாம்பு என்னை கொஞ்சகொஞ்சமா விழுங்கி வருது. நேற்று ராத்திரி தலைமட்டும் தான் என்பதுபோல கனவு கண்டேன்.

– எனக்குப் புரியலை?

– புரியாது. அதற்கெல்லாம் மருத்துவபடிப்பு உதவவும் உதவாது. வாழ்க்கைதான் புரியவவைக்கணும். எனக்கே இப்பதான் புரிஞ்சுது, புரிஞ்சு என்ன புண்ணியம், ரொம்ப லேட்.

காரியதரிசி உள்ளேவந்தார்.

-என்னய்யா? டாக்டர் இருக்கும்போது உள்ளேவரக்கூடாதுண்ணு தெரியுமில்லையா?

– பார்சலொண்ணை எதிர்பார்த்திருந்தீங்களே வந்துட்டுது, அம்மா பேர்லேதான் இருக்குது, இப்போதான் கொடுத்துட்டுப் போனாங்க கையில் பிடித்துக் காட்டினான்.

– தூக்கி குப்பையிலே போடு.

– பிரிக்கவேண்டாமா?

– வேண்டாம்.

– சித்தே முன்னே ஏதோ நோயொண்ணு ரொம்பகாலமா இருக்குதுண்ணு சொன்னீங்களே, அதற்கான ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிச்சுட்டீங்கண்ணு சொல்லுங்க.

மருத்துவர் இங்கிதமற்று சிரித்தார். மகா சன்னிதானம் அமைதியானார். எதிரே சுவர் தமது காதுகளை விடைத்துக்கொண்டு, உமது புலம்பல்களை கேட்க தயாராக இருக்கிறேன் என்கிறது

மருத்துவரும் காரியதரிசியும் ஒருவர் பின்னொருவராக புறப்பட்டு போனதன் அடையாளமாக கதவு விசுக் விசுக்கென்று அசைந்து பின்னர் இறுக மூடிக்கொண்டது. சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்ந்தார். சுவரை மீண்டும் பார்த்தார், ‘எனது பிறவி நோயை குணப்படுத்திட்டேன் தெரியுமா? என்றார்.  சுவர் சிரித்தது.

அன்றிரவு மறுபடியும் இவரது அந்தரங்க எண்ணிற்குப் போன் வந்தது. தொலைபேசியின் மறுமுனையில் கரகரவென்று ஒரு குரல். ஐயா பார்சலை பிரிச்சீங்களா? உள்ளே என்ன இருந்ததுண்ணு தெரியுமா? மர்லின்மன்றோவின் ஸ்கர்ட். ஒன்றரை மில்லியன் டாலருக்கு ஏலத்துக்கு எடுத்தோம். நீங்கள் செஞ்ச உதவிக்கு  ஏதோ எங்களாலான சின்ன அன்பளிப்பு..  மகா சன்னிதானத்தின் கையியிலிருந்து தொலைபேசி நழுவியிருந்தது.

நன்றி: காலச்சுவடு நவம்பர் 2011

——————————–

 

மொழிவது சுகம் நவம்பர் 21:

எஸ் ராமகிருஷ்ணன்:

வழங்கும் இலக்கிய தொடர் பேருரைகள் நவம்பர் 21லிருந்து 27 தேதிவரை ஒரு வாரகாலம் தினமும் மாலை 6 மணிக்கு ஆழ்வார் பேட்டையிலுள்ள ரஷ்ய அறிவியல் மற்றிம் கலாச்சார மையத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திங்கள் தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை நாளுக்கொன்றென ஏழு இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார். நண்பர் எஸ்.ரா. நிகழ்த்தும் இவ்வுரைகள் ஏற்பாட்டாளர்கள் சொல்வதுபோல இளம்வாசகர்கள், கல்விப்புலம் சார்ந்து இலக்கியம் பயில்வோரன்றி இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டோர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற சொற்பொழிவுகளை அடிக்கடி நிகழ்த்துகின்றனர். தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கியத்தினை முன் வைத்து தொடர் சொற்பொழிவுகள் இதற்கு முன்பு நடந்திருக்கிறதாவென்று தெரியாது. நண்பர் எஸ்.ரா.விற்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தமிழ் படைப்புலகு கடமைப்பட்டிருக்கிறது.

நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் தளத்தில் அவரது மகளின் திருமண விழா படங்கள். காணக் கண்கொள்ளா காட்சி. பார்த்து மகிழ்ந்தேன். திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர் ஜெயமோகனின் வர்ணனையை வாசித்தால் திருமணத்தில் கலந்துகொண்ட அனுபவத்திற்கு உள்ளாவோம். அவருக்கே உரிய நடையில் மிக ழகாக நிகழ்ச்சியைச் சித்தரித்திருக்கிறார். புதுச்சேரியில் இருந்திருந்தால் நாஞ்சிலார் அழைக்காவிட்டாலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பேன். மணமக்களை வாழ்த்த அல்ல, வாழ்த்த அவருக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்குக்கிடைப்பார்கள். அவர் தயவில் நல்ல நாஞ்சில் நாட்டு சமையலை ஒரு பிடி பிடித்திருக்கலாம்.

வித்தியாசமான புத்தகவிழா

வருடம் தோறும் நவம்பர் மாதத்தில் 17-19 தேதிகளில் ஒரு வித்தியாசமான புத்தகவிழா ஒன்றை பிரான்சு நாட்டில் கொண்டாடுவார்கள். படைப்பிலக்கியத்தில் வாசகனை நகைப்பில் ஆழ்த்துகிற சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற பகுதிகளை உரத்து வாசிப்பதென்பது நிகழ்ச்சியின் கருப்பொருள். இம்மையக்கருத்துக்கு உகந்தவை என்பது உடல்மொழியால் சொல்லகூடியவையாக இருத்தல்வேண்டும். படைப்பிலக்கிய பொது மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக இருக்கவேண்டும். தனது வாசகனை மகிழ்விக்கவும் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கும் வல்லமை அவ்வெழுத்துக்களுக்கு இருக்கவேண்டும். கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும்  எனது சொந்தத் தொழில் சம்பந்தமாக பாரீஸ¤க்குச் சென்றவன் பாரீஸ் சொர்போன் பலகலைகழகத்தின் கலை பண்பாட்டுத்துறை சேவை ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் நிகழ்ச்சியில், 19ந்தேதி நிகழ்ச்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பியர் ழூர்து(Pierre Jourde) என்ற எழுத்தாளர் வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்திருந்ததாகக் கூறினார்கள். நன்கு அறியப்பட்ட மற்றும் அறியப்படாத எழுத்தாளர்களென இரு தரப்பினரின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. வாசிக்கப்பட்டவைகளில் அல்போன்ஸ் அல்லேஸ், மிகெல் தெ செவாந்த், இடாலோ கல்வினோ, டனியல் பென்ஸெக் போன்ற எழுத்தாள்ர்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. வாசித்த இருவரும் ஏற்கனவே, குறுந்தகடுகளில் ஒலிவடிவம் பெற்ற படைப்புகளுக்குக் குரல் கொடுத்தவர்கள். முன் வரிசையில் னric Chevillard. எதையும் நையாண்டிசெய்தே பபழக்கப்பட்டவர் Anti -novelist வகையறா என்கிறார்கள் (எனக்கு Anti -novel, New Roman, Modern novel, Post modern novel -விவாதத்திகுரியவை அனைத்துமே பழைய மொந்தையல்ல என்கிறார்கள்) இது பற்றி ஒரு தொடரை எழுதவேண்டும்.

தற்போதைய தமிழ் படைப்புகளில் நகைச்சுவை தேடவேண்டியிருக்கிறது. நகைசுவையாக எழுதுவதற்கு தனி ஆற்றல் வேண்டும். கல்கி எழுத்துக்களை நான் விரும்பிவாசிக்க நேர்ந்தது நகைச்சுவக்காகவே. கலைமணியின் எழுத்துகளில் தில்லானா மோகனாம்பாள், ராவ் பகதூர் சிங்காரம் இன்றளவும் எனக்கு தமிழில் விரும்பி வாசித்தவை. கடுகு என்கிற அகஸ்தியன், தேவன், துமிலன் போன்றோர் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். பாக்கியம் ராமசாமியைக்கூட கொண்டாடடலாம். அவரது அப்புசாமியும் சீதாபாட்டியும் சில கணங்கள் மகிச்சியாக வைத்திருக்க உதவுபவை. புதுமைபித்தன் சிறுகதைகளில் சமூகத்தையும் நடைமுறை வாழ்க்கையையும் போகிறபோக்கில் ஏளனம் செய்து நம்மைக் கடந்து செல்வார். நாம்தான் ஓடிச்சென்று அவரை பிடிக்கவேண்டும்.

Les neiges du Kilimanjaro (The snow of Kilimanjaro):

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் இச்சிறுகதையை (http://xroads.virginia.edu/~drbr/heming.html)  நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். ஆப்ரிக்காவுக்கு தமது மனைவியுடன் சபாரிக்கு வந்த இடத்தில் வலது காலில் முள்குத்தி புரையோடிப்போக படுக்கையில் கிடக்கும் எழுத்தாளன் தமது கடந்தகால நினைவுகளில் மூழ்கிறான். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமென்று நம்மவர்கள் சொல்வார்கள். அறுபது வயதுக்குமேல் அமர்நாத் பனிலிங்க தரிசினத்திற்குச்செல்கிறவர்கள் தங்கள் கடந்தகாலத்தை அசைபோட்டுபார்ப்பார்களாவென்று தெரியவில்லை. எழுத்தாளனுக்குள்ள சாபக்கேடு எல்லாவற்றையும் கேள்விக்குடுப்படுத்துவது? இங்கே கூடாரத்தில் கால் கட்டுடன் இருக்கும் எழுத்தாளன் முன்னே அவனுடைய பழைய உன்னதமான நினைவுகளைக் கிளறும் வகையில் பனிமூடிய கிளிமாஞ்சாரோ, நெருங்கும் அவனது மரணத்தை ஞாபகப்படுத்த வெளியே வட்டமிடும் கழுகுகள். தன்னைத்தானே சபித்துக்கொள்கிறான். கங்குல்போல அவனுள் உறையும் பழைய நினைவுகள், பின்னோக்கி அழைக்கின்றன.  எழுத்தில் கனியிருப்ப காயைமுன்னிருத்தியதற்காக வருந்துகிறான். ‘அரசியல், பெண்கள்,மது, பணம், கனவுகள்’ என்ற சுழலில் திக்கித் தவிக்கும் எழுத்தாளர்களின் ஒருவராக இக்கதையில் ஹெமிங்வே தம்மை அடையாளப்படுத்திக்கொள்வார். இச்சிறுகதை 1952ல் கிரிகிரிபெக்கும் ஏவா கார்டனரும் நடித்து திரைக்கு வந்திருக்கிறது. இப்போது இணைய தளங்களில் பார்க்ககிடைக்கிறது. கதையை சிதைக்காமல் படமாக்கிருக்கிறார்கள். கிரிகிரி பெக்கும் ஏவா கார்டனரும் நல்ல இளமைக் காலத்தில் இருந்தபோது எடுத்தபடம். இருவரும் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சிறுகதை தொடங்குவதுபோலவே திரைப்படமும் தொடங்குகிறது. பிற்காலத்தில் ஒரு பூர்ஷ்வாவாக மாறிபோன குற்றவுணர்வு ஹெமிங்வேக்கு இருந்திருக்கவேண்டும் இக்கதையில் அதற்கு கூடுதலாகவே வருந்துகிறார். இதேபெயரில் தற்பொழுது ஒரு பிரெஞ்சுப்படம் வந்துள்ளது. இப்படத்தில் கணவனும் மனைவியும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்க்கையைக்குறித்து அலுத்துகொள்கிறார்கள். முதல் படத்திற்கும் இப்படத்திற்குமுள்ள பந்தம் அத்துடன் முடிந்தது. முதல் படத்தைபோன்றே கணவனும் மனைவியும் விஸ்கியை உறிஞ்சுகொண்டு தங்கள் நடந்துகொண்டது சரியா, தங்கள் வாழ்ந்தவிதம் சரியா என்று உரையாடுவதோடு சரி இவ்விரண்டு படங்களுக்கும் வேறு பந்தங்களில்லை. இங்கே கணவனும் மனைவியும் ஒரு கடற்கரை நகரில் படகு, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளர்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியில் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். தொழிற்சங்கத்தில்  கனவனும் மனைவியும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள், தாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட போதிலும் தங்கள் நண்பர்கள் உறவினர்களைக் காப்பாற்றி வேறு சிலரை வேலை நீக்கம் செய்ய காரணமாகிறார்கள். இவர்களுக்கு கிடைத்த பணத்தில் கிளிமாஞ்சாரோ செல்லலாமென்ற கனவு, இவர்கள் தந்திரத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் தாக்குதல்களால் முடிவுக்கு வருகிறது. இளைஞர்கள் இருவரையும் காவல்துறையிடம் காட்டிக்கொடுத்துவிட்டு பின்னர் தங்கள் செய்கைக்காக வருந்துகின்றனர். ஆனால் அவசியம் பார்க்க வேண்டியது The snow of Kilimanjaro (1952) திரைப்படம்.

—————————————

கதையல்ல வரலாறு1-6

 ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள்  மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான ‘ஹெஸ்’ பிரிட்டனுக்குள் பிரவேசித்து, நான்கு மாதங்கள் கழிந்திருந்தன. இருபத்து நான்கு மணிநேரமும் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வைத்திருந்த நேரம். தமது பயணம் தாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதில் ஹெஸ்ஸ¤க்கு மிகவும் வருத்தம், இந்த வருத்தத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தியவிதமும் அவரை எரிச்சல் கொள்ள செய்தன. தமது கோபத்தை சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் வெளிப்படுத்தினார். பிரிட்டிஷ் யூதர்கள் அவரை கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறி,  வழங்கப்பட்ட உணவுகளையும் பானங்களையுங்கூட பிடிவாதமாக மறுத்தார். தமது நாட்டு எல்லைக்குள் ‘ஹெஸ்’ திடீரென்று பிரவேசித்ததுகுறித்து பலரும் சந்தேகித்ததுபோலவே சர்ச்சிலும் சந்தேகிக்கிறார். ஹெஸ்ஸின் சொந்த யோசனையா? அல்லது இட்லரின் யோசனையில்பேரில் நமது எல்லைக்குள் பிரவேசித்துவிட்டு இவர் நாடகமாடுகிறாரா என்பதுபோன்ற கேள்விகள் அவரிடமிருந்தன. 1959ம் ஆண்டு  இங்கிலாந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், ஹெஸ் விடுத்த எச்சரிக்கைகளென பீவர் ப்ரூக் மூன்றை குறிப்பிடுகிறார், அதன்படி:

” யுத்தத்தில் ஆங்கிலேயருடைய வெற்றி என்பது போக்ஷ்விக்குகள் வெற்றியென்றும் அவ்வெற்றியே பின்னாளில் எஞ்சியிருக்கிற ஐரோப்பாவை ஜெர்மன் ஆக்ரமிக்க காரணமாகுமென்றும், வரலாற்றின் இந்நிகழ்வினை உலகில் பிற நாடுளைப்போலவே பிரிட்டன் முயன்றாலும் தடுத்து நிறுத்தவியலாதென்பது”, முதலாவது.

“ஐரோப்பாவிற்கு குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு இனி ஆபத்துகளேதுமில்லை என்பது உறுதிபட்டால் ஜெர்மனுக்கும் போல்ஷ்விக்குகளுக்குமிடையே நிலவும் பகை முடிவுக்கு வந்துவிடுமென பிரிட்டன் நினைப்பது தவறென்பது”, இரண்டாவது”

“சோவியத் யூனியனின் பலத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், தவறினால் உலகமே சோவியத் யூனியனின் காலடியில் நாளை கிடக்க வேண்டிவருமென்றும், அதன் விளைவாக கிரேட் பிரிட்டனின் ஏகாபத்திய வலிமையும் இனியில்லையென்றாகுமென எச்சரித்தது மூன்றாவது.

பீவர் ப்ரூக் இலண்டன் திரும்பியதும் அன்றிரவே சர்ச்சிலை சந்தித்து மேற்கண்டவற்றை கூறினார். சர்ச்சிடமிருந்து வந்த பதில்:

– அந்த ஆளுக்கென்ன பைத்தியமா?

– அதுதான் இல்லை. ஆள் தெளிவா இருக்கிறார். வார்த்தைகளெல்லாம் தெள்ளத்தெளிவாக வருகின்றன. அவரது செயல்பாடுகள் முட்டாள்தனமாக இருந்திருக்கலாம், ஆனால் மனிதர் பேசுவதைக்கேட்கிறபொழுது, அப்படியொரு முடிவுக்கு நம்மால் வரசாத்தியமே இல்லை.

பீவர் புரூக் கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. 1941ம் ஆண்டு மே மாதம் பத்தாம்தேதி உலக வரலாற்றை உலுக்கிய அக்காட்சியை அரங்கேற்றியது பலரும் நினைப்பதுபோல ஒரு பைத்தியத்தின் செயல்பாடல்ல. ஒரு கதைபோல இச்சம்பவத்தை எழுத்தில் சொல்லியிருந்த ஜேம்ஸ் லீசர் (James Leasor)1 என்பவர், இத்திட்டம் மிக நுணுக்கமாக தீட்டப்பட்டதென்றும் அதற்கான ஒத்திகை பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தாயிற்றென்றும் கூறுகிறார்

பீவர் புரூக் ஹெஸ்ஸை சந்தித்துபோனபிறகு நடந்தெதுவும் ஹெஸ்ஸ¤க்கு சாதகமாக இல்லை. இதுவரை உங்களோடு நடத்தியதெல்லாம் நாடகம், உங்கள் கூற்றையெல்லாம் நம்பி, உங்களோடு பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தமுடியாது. எங்களைப் (பிரிட்டனை) பொறுத்தவரை நீங்கள் ஒரு யுத்த கைதி அவ்வளவுதான், என தங்கள் நிலையை இங்கிலாந்து அரசு அவருக்குத் தெளிவிபடுத்திவிட்டது. இப்படியொரு முடிவைச் தமது திட்டம் சந்திக்குமென்பதை ஹெஸ் எதிர்பார்க்கவில்லை. ஹெஸ்ஸின் நிலமையில் மிகப்பெரிய மாற்றம், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். இம்முறை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மன உளைச்சலில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். விளைவு தற்கொலைக்கு ஒரு முறை ஹெஸ் முயற்சியெய்ய தக்க சமயத்தில் காப்பாற்றப்படுகிறார். பிறகு நடந்தவற்றை நூரெம்பர்க் வழக்கின் முடிவினை அறிந்தவர்கள் அறிவார்கள். நாஜிக்குற்றவாளிகள் அவரும் ஒருவராக குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டார். மறதி நோயில் அவதிப்படுவதாகவும் நடந்தெதுவும் தமக்கு ஞாபகத்தில் இல்லையெனவும் சாதித்தார். அவருடைய முன்னாள் நண்பர்கள் பலருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டபோதும் இவர் சுலபமாக தப்ப முடிந்தது. எனினும்  நீதிபதிகள் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பெழுதினார்கள்.

இப்பிரச்சினையில் சர்ச்சிலுக்கு மட்டுமல்ல மேற்கண்ட சம்பவத்தை பின்னர் அறியவந்த வரலாற்றறிஞர்களில் பெரும்பாலானோர் பிரிட்டனுடன் சமாதானம் பேசுவதற்காக ஹெஸ் மேற்கொண்ட திடீர்ப்பயணம் இட்லருக்குத் தெரியாமல் நடந்திருக்காதென சந்தேகிக்கிறார்கள்.

ஹெஸ் இலண்டனுக்கு திடீரென்று புறப்பட்டுப் பறந்துபோன செய்தியை இட்லர் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைக்குறித்து இன்றுவரை அபிப்ராய பேதங்கள் உள்ளன.  முகத்தில் எவ்வித பாவத்தையும் காட்டாமல் இட்லர் உள்வாங்கிக்கொண்டார் என்பதைத்தான் அன்றைய சாட்சியங்கள் வலுப்படுத்துகின்றன. இட்லரின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் வியந்தோதவோ, விமர்சிக்கவோ ஒன்றுமில்லை. கார்ல் போடென்ஷாட்ஸ் என்ற ஜெர்மன் படைத் தளபதி,” இட்லரின் முகம் வியப்பு, கசப்பு இரண்டையும் நன்றாகவே வெளிப்படுத்தியதென்கிறார்.  அரசியலிலும் ராணுவத்திலும் மிக முக்கிய பொறுப்பிலிருந்த கோரிங் (Goering) இட்லரின் உத்தியோக பூர்வ இருப்பிடமான பெர்கா·வ்(Berghof)விலிருந்து மற்றொரு ராணுவ தளபதியுடன் வெளியேறியபோது, ‘நல்ல வேடிக்கை!’ என அலுத்துக்கொண்டிருக்கிறார்.

நாஜிப்படையின் மூத்த தளபதி கோரிங்கிற்கு, ‘இட்லரும் ஹெஸ்ஸ¤ம் சேர்ந்தே இத்திட்டத்தை ரகசியமாக பரிசீலித்திருக்கவேண்டும்’ என்கிற சந்தேகமிருக்கிறது. கோரிங்கின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை பேசும் நூலொன்றில்,” மிக மிக முக்கியமான பல யோசனைகளை, அவ்யோசனைகளை செயல்படுத்துகிறவர்களன்றி பிறருடன் இட்லர் கலந்தாலோசிப்பதில்லை. தவிர ருடோல்ப் ஹெஸ்ஸ¤ம் ஏதோ நாஜி நிர்வாகத்தில் பத்தோடு பதினொன்றல்ல, மூளையாக செயல்பட்டவர்களில் அவரும் ஒருவர், பிறகு பலரும் அறிந்ததுபோல இட்லருக்கு நண்பர்”, எனச்சொல்லப்பட்டிருக்கிறது. ரஷ்யா சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஹெஸ் முன்வைத்த ஜெர்மன் யுத்த தந்திரத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டிருப்பின் ஒருவேளை மேற்கு ஐரோப்பாவில் அமைதி நிலவியிருக்கக்கூடும். இப்பிரச்சினையில் கோரிங்குடைய ராஜ தந்திரமும், விமானப் படையும் ஏற்கனவே தோற்றிருந்தது என்பதைப் பலரும் இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள். கோரிங் மட்டுமல்ல கோரிங்கை சுற்றியிருந்த நெருங்கிய சகாக்களும், அதிகாரிகளும் “இட்லருக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்தோடு, யூனியன் சோவியத்தின் மீதான ஜெர்மன் தாக்குதலுக்கு பிரிட்டனும் ஒத்துழைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் நிறைய இருந்தது”, என்றனர்.

இச்சம்பவத்தைப் பற்றிய வேறு சில சாட்சிகளின் பதிவுகளும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. ரேடியோ-பெர்லின் பத்திரிகையாளர் ஒருவர் கூற்றின்படி, ஹெஸ் இங்கிலாந்துக்கு பயணப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக இடலரும் ஹெஸ்ஸ்ஸ¤ம் ம்யூனிச் நகரில், நாஜிகட்சியின் தலமை அலுவலகமான பிரவுன் ஹௌஸ்(Brown House)ஐ விட்டு சந்தோஷமாக உரையாடிக்கொண்டு வெளியில் வந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். அவ்வாறே தகவல் மற்றும் செய்தி தொடர்பின் தலமை கேந்திரத்திலும் ஹெஸ் பயணித்த அன்று பணியிலிருந்த அதிகாரிகள், “ஏதாவது செய்தி கிடைத்ததா?” விமானம் நல்லவிதமாக தரையிறங்கியதா?”, என்பதுபோன்ற உரையாடல்களை நடத்தியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

1943ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டோ ஸ்கோர்செனி(Otto Skorzeny) என்ற தற்கொலைப்படை தளபதியிடம் கிரான் சஸ்ஸோ (Gran Sasso) மலையுச்சியில் சிறைவைக்கபட்டிருந்த முஸோலினியை விடுவிக்கின்ற பொறுப்பை இட்லர் ஒப்படைத்தபோது, “உங்கள் முயற்சிக்கு தோல்வி ஏற்படுமெனில் ஹெஸ்ஸ¤க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்குமென”,  எச்சரிக்கை விடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கார்ல் ஹௌஸ்ஷோபெர், திட்டத்தின் தோல்விக்கு  ஹெஸ்ஸை இட்லர் பலிகொண்டுவிட்டார்’, என்று திடமாக நம்பினார். இப்பிரச்சினையில் மிகவும் குழப்பத்தை தருவது: இட்லர் எடுத்திருந்த நடவடிக்கையும் ஹெஸ் அதனை எதிர்கொண்டவிதமும். ஏற்கனவே இக்கட்டுரையின் குறிப்பிட்டதுபோன்று, ·பூயூரெர் தம் நண்பர்கள் கோரிங்கையும், ஹெஸ்ஸையும் அனுமதியின்றி விமானங்களைத் தொடக்கூடாது என்றனுப்பியிருந்த புதிரான சுற்றறிக்கை. அச்சுற்றறிக்கையாவது சம்பந்தப்பட்ட  ஹெஸ் மதித்தாரா என்றால் அதுவுமில்லை. பயனத்திற்கு விமானத்தை பயன்படுத்திக்கொண்டது ஒருபுறமெனில், சம்பவத்திற்கு முன்பாக இட்லரின் தனிப்பட்ட விமானியான ஹன்ஸ் போயெர் என்பவரை அழைத்து, ஜெர்மன் அரசால் எந்தெந்த பகுதிகள் மேல் பறக்கக்கூடாதென தடைவிதிக்கப்பட்டிருக்கிறதென்று கேட்டு அதற்குண்டான வரைபடத்தைக் கொண்டுவரசொல்லி பார்த்திருக்கிறார். இட்லரின் விமானிக்கு தமது எஜமான் கோரிங்கிற்கும், ஹெஸ்ஸிற்கும் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை தெரியும், இருந்தும் ஹெஸ்ஸ¤க்கு கேள்விகளின்றி கேட்ட வரைபடத்தை தயக்கமின்றி கொடுத்தாரென்ற சந்தேகம் எழுகிறது. இட்லரின் விமானியைப்போலவே, ஹெஸ் பயன்படுத்திய யுத்தவிமானத்தின் தயாரிப்பாளரான மெஸ்ஸெர்ஷ்மிட்டிற்கும், இத்தடையுத்தரவின் முழுவிபரங்களும் தெரியும். முறைப்படி அவருக்கும் அரசாங்கத்தின் உத்தரவு நகல் அனுப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஹெஸ் அவரை அணுகியபோது மறுப்பின்றி கதவுகள் திறக்கப்பட்டன. ஹெஸ் கேட்ட விமானத்தைக் கொடுத்ததோடு, விமானத்தின் அப்போதையை எரிசக்தி கொள்கலனின் அளவை ஹெஸ்ஸின் வேண்டுகோளுக்கிணங்க அதிக அளவு பிடிக்குமாறு மாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார், அது தவிர திசைகாட்டி ஒன்றையும், தகவல் பெறுல் கருவியொன்றையும் கொடுத்து உதவியிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக விமானம் 1500 கி. மீ பறப்பதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அவர் செய்திருந்தார். தவிர மே பத்தாம் தேதிக்கு முன்பாக அவ்வப்போது அங்குள்ள விமானதளத்திற்கு வருவதும் பறப்பதற்கான ஒத்திகை முயற்சிகளை மேற்கொள்வதுமாக இருந்திருக்கிறார். ஒத்திகையின் போது இங்கிலாந்துக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இருமுறை அமைந்திருந்தது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தட்பவெப்பம், கால நிலை ஆகியவற்றைபற்றிய முழுவிபரங்களையும் கேட்டுப்பெற்றிருக்கிறார். இதுதவிர இங்கிலாந்தில் பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகளிடம் அவர் நடத்திய உரையாடல்கள் ஏதோ வழி தவறி இங்கிலாந்து எல்லைக்குள் பிரவேசித்த ஒருவரின் பேச்சுபோலவே இல்லை, ஏற்கனவே பலமுறை விவாதித்துத் தெளிவுபடுத்திக்கொண்ட யோசனைகளை முன்வைப்பதாகவே இருந்திருக்கின்றன. ஆக ஹெஸ் தமக்கிட்ட பணியை நிறைவேற்றவந்தவர், தவறி வந்தவரல்ல. இட்லருக்கு நெருக்கமான நண்பராகவும், நாஜி தலமையின் மூத்தஆசாமிகளுள் ஒருவருமாக இருந்த மனிதர், எடுத்தமுடிவில் இட்லர் தனக்குப் பங்கில்லையென்று தமது உடன்பிறப்புகளை ஏமாற்றலாம், சொந்த மனிதர்களை ஏமாற்றலாம் ஊர் உலகத்தைக்கூட அதிகாரத்தில் இருக்கிறபோது ஏமாற்றலாம் ஆனால் உண்மையென்று ஒன்றிருக்கிறதே. சில வாரலாற்றாசிரியர்கள் இட்லர் இங்கிலாந்துடன் எடுத்த சமாதான முயற்சி நம்பக்கூடியதுதான் ஆனால் ரஷ்யாவின் மீதான தாக்குதலுக்கு தேதிகுறித்துவிட்டு  சமாதானத்திற்கு அழைத்தவிதந்தான் யோசிக்க வைக்கிறதென்கிறார்கள். ஒருவேளை ஒருபக்கம் இங்கிலாந்து, இன்னொருபக்கம் ரஷ்யா என இரு யுத்தமுனைகளை எதற்காக ஏற்பபடுத்திக்கொள்ளவேண்டும், ஒன்றை தற்போதைக்கு தவிர்க்கலாமேயென்ற யுத்த தந்திரமாக இருக்கலாமோ, என சந்தேகிக்கிறவர்களுமுண்டு.

சம்பவம் நடந்து சிறிது காலம் கழிந்திருந்தது. ம்யூனிச்சைச் சேர்ந்த பத்திரிகையாளர் இறந்திருந்தார். அவருடைய துணைவியாரைச் சந்தித்து ஆறுதல் வழங்கிய இட்லர், “எந்த இரண்டுபேரை எனக்கு மிகவும் நெருக்கமான  நண்பர்கள் என்று நினைத்து வாழ்ந்துவந்தேனோ அவர்களை இழந்திருக்கிறேன் எனக்கூறி வருந்தியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த இருவரில் ஒருவர் ·ப்ரிட்ச்  டோட்'(Fritz Tod), மற்றவர் ஹெஸ். முன்னவர் பொறியாளர், நாஜி தலைவர்களுள் ஒருவர். பத்திரிகையாளரின் துணைவி இட்லர் குடுபத்திடம் நெருக்கமாக இருந்தவர். அந்த உரிமையில், “அதனால்தான் ஹெஸ்ஸ¤க்கு பைத்தியக்காரனென்ற பட்டத்தை கொடுத்தீர்களோ?” என்று கேட்க, இட்லர் பெண்மணியைச் சமாதானப்படுத்தும் வகையில், எனது துயரத்தைத்தான் சற்று முன்பு வெளிபடுத்தினேனே அதுபோதாதா?, என்றாராம்.

நூரெம்பெர்க் வழக்கு விசாரணை முடிவில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்களை பெர்லினுக்கருகிலுள்ள ஸ்பாண்டௌ (Spandau) சிறைக்குக் கொண்டுபோனார்கள்.  1947ம் ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 9ஆக இருந்தது. ஒருவர்பின் ஒருவராக அனைவரும் விடுதலை பெற்றனர், எஞ்சியவர் ஹெஸ் மட்டுமே. அவர் மிகவும் நேசித்த மனைவியையும், மகனையும்ங்கூட பார்க்க மறுத்து 1987ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் பதினேழாம் தேதி தற்கொலை செய்துகொள்ளும்வரை 30 ஆண்டுகள் சிறையிலிருந்தார். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் உடைந்துபோவேன், நான் ஓர் அசாதாரனப்பிறவி எனவே பார்க்கவிருப்பமில்லை என்றிருக்கிறார்.

ருடோல்·ப் ஹெஸ் இறக்கையில் வயது 93. அவரது இறப்பு தற்கொலையென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன் Wolf Rudiger Hess இதனை ஒரு திட்டமிட்டகொலை என்கிறார், மகனின் கருத்துப்படி பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த SAS (Special Air Service அல்லது அமெரிக்காவின் CIA கொலைகாரர்கள். ஹெஸ் நிறையிலிருந்தபோது 1984ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகாலம் அதாவது 1987 வரை அவருடைய மருத்துவ பராமரிப்புகளை கவனித்துவந்த அப்துல்லா மெலவியென்ற துனீசியர் எழுதிய I looked into the Murderer’s Eyes என்ற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் M16 என்ற உளவுபடை காரணம் என்கிறார். The Murder of Rudolf Hess (1979) என்ற நூலை எழுதிய Dr. Hugh Thomas நூரெம்பர்க் வழக்கில் விசாரிக்கப்பட்டவரும் பின்னர் ஸ்பாண்டௌ சிறைவாசத்தை அனுபவித்தவரும் ஒரு போலி ஆசாமியென்றும் அசலான மனிதரை எப்போதோ கொன்றுவிட்டார்களென்றும் சத்தியம் செய்கிறார். உலகில் எதுவும் நடக்கலாம்.

இச்சம்பவத்தின் பின்னால் இட்லர் இருந்தாரா இல்லையா? ஹெஸ் எனக்கூறப்பட்டு நூரெம்பர்க் சிறையில் அடைக்கபட்டவர் அசலா போலியா? அவர் இறப்பு தற்கொலையா? கொலையா?

நம்மால் சொல்ல முடிந்த பதில் வரலாறென்பது எப்போதும் உண்மையைப் பேசுவதல்ல. நாஜிகளில் சமாதானத்திற்கு முயன்றவர்  அல்லது அந்த யோசனைக்காக உயிரைப் பணயம் வைத்து எதிரி நாட்டுக்குள் நுழை,ந்தவர் இவர் மட்டுமே, என்ற காரணத்தைக்காட்டிலும் இந்த வரலாற்றுக் கதையில் நமக்கு நெருடலாகப்படுவது: தெருச்சண்டையை விலக்கப்போனாலும், யுத்தத்தை நிறுத்த யோசனைகளென்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் கவனமாக இருக்கவேண்டுமென்ற உண்மை. சர்ச்சில் தமது Memoires என்ற சுய சரிதையில், ஹெஸ்ஸின் முடிவுக்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்கிறார். இட்லருக்கு மிக நெருக்கமாகவிருந்த ஹெஸ்ஸின் தண்டனைக்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படினும் அவற்றில் சிலவற்றை முட்டாள்தனாமான காரியங்களால் அவரே சம்பாதித்துக்கொண்டவைதானென்ற சர்ச்சில் வார்த்தைகளையும் மறுப்பதற்கில்லை.

– முற்றும் –

———————————————————-

 

1. Leasor, J. (1962). Rudolf Hess : the uninvited envoy. London: Allen & Unwin [©1962]

மொழிவது சுகம் நவம்பர் – 15

The Artist – ஒருகனவுலகத்தின்கதை

கோடம்பாக்க கனவுகளுடன் ஊரைவிட்டு ஓடிவந்து சென்னையில் தஞ்சம் புகும் மனிதர்களை உண்மைக் கதைகளை அறிவோம். சினிமா இருக்கும்வரை இக்கதைகள் தொடரலாம். இன்றோ நாளையோ நாலைமறுநாளோ லாரியிலோ, பஸ்ஸிலோ, ரயிலேறியோ வருவதும் தெருவில் அலைவதும், சினிமா அலுவலகங்களுக்கு கால் கடுக்க நடப்பதும், காத்திருப்பதும், உள்ளே நுழையும் திருமுகங்களின் கடைக்கண்பார்வைக்காக ஏங்குவதும், கிடைத்த தருணங்களில் வேர்வையைத் துடைத்தபடி சவரம் செய்யாத முகத்தின் திணவுகளை சகித்துக்கொண்டு விண்ணப்பமிடுவதும், அவர்களின் பொய்யான உறுதிமொழியை  நடிப்பென தெரிந்தும் (?) நம்பிக்கைவைப்பதும், மீண்டும் மீண்டும் நெய்விளக்கு ஏற்றுவதும் தொடரும்.  இலட்சத்தில் ஒருவர்க்கு கோடம்பாக்கதேவதை அருள் பாலிக்கலாம். மிச்சமுள்ள 99999பேர்கள் எங்கே போனார்கள் என்னவானார்கள் யாருக்குத் தெரியும்? நாம் தெரிந்துகொள்ளவேண்டியது வழக்கம்போல வெற்றிபெற்றர்களின் கதை. மனித இனம் எப்போதும் வெற்றி பெற்றவர்களின் மீது அக்கறை கொள்கிறது, அவர்களின்புறக்கதை ஊடாக அகக்கதையை தேடுகிறது. வெற்றி பெற்றவனின் சஞ்சலத்தில் நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. ச்சீ ச்சீ.. அதெப்படி என்கிறீர்களா? ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதிலுள்ள உண்மை என்ன? கம்பீரமாக அடியெடுத்துவைக்கும் ஆனைக்கு நிகழும் சறுக்கலில் நமது தோல்வியை நிவர்த்திசெய்து கொள்கிறோம். ‘தெருவில் அடிக்கடி உர் உர்ரென்று யமஹாவில் போகும் பையன், விபத்தில் செத்தானாமே’ ‘அந்த ஆள் ஆடிய ஆட்டத்துக்கு இது போதாது’. இதுபோன்ற நல்ல வாசகங்கங்களை நாமும் உதிர்த்திருப்போம்.

ஒரு நடிகை பிறக்கிறாள் (A Star is born) 1937ல் வெளிவந்த அமெரிக்க திரைப்படம். இத்திரைப்படத்தின் வெற்றியும் கதையிலுள்ள உண்மையும் மீண்டும் இரண்டு பதிப்புகளைக் காண உதவியிருக்கிறது. திருட்டு டிவிடியைக் கண்டிக்கும் நமது திரையுலகமும் அன்றுதொட்டு இன்றுவரை கூச்சமில்லாமல் பலகதைகளையும் திரைக்கதைகளையும் திருடியிருக்கிறது. அப்படி திருடிய கதை கோடம்பாக்கத்தில் எடுத்திருந்தால் வித்தியாசமான தமிழ்ப்படம், மும்பையில் எடுத்திருந்தால் மாறுபட்ட இந்திப்படம்.

விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தமது பெற்றோர்கள் விருப்பத்திற்கு மாறாக தனது பாட்டியின் சேமிப்பைக் கைச்செலவுக்குபெற்று நடிகையாக புகழ்பெறவேண்டுமென்ற கனவுடன் ஹாலிவுட் வருகிறாள், அவ நம்பிக்கைகளுக்கிடையில்  புகழின் உச்சத்திலிருக்கும் நடிகரின் எதிர்பாராதச் சந்திப்பு வாய்க்கிறது, கனவு நனவாகிறது. அவள் வாழ்க்கைக்குத் தங்கப்பூச்சு கிடைக்கிறது. நடிகருக்கும் நடிகைக்கும் இடையில் பிறக்கும் காதலும் காதல்சார்ந்த தளமும் உபகதை. இந்த உபகதைதான், ஒரு நடிகை பிறக்கிறாள்’ திரைப்படத்தை உச்சத்தில் நிறுத்திய கதை. இந்த உபகதையை உயிரோட்டத்துடன் நெஞ்சம் நெகிழ சொல்லியிருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வெற்றிபெற்ற படத்தின் தங்க சூத்திரம் மறந்துபோகாதென்பதை நினைவூட்டும் இன்றைய திரைப்படமே The Artist என்கிற பிரெஞ்சு திரைப்படம்.

The Artist படத்தின் கதை நடக்கும் காலம் 1927 அதாவது ஊமைபட உலகத்தின் காலம். ஊமைபட உலகம் பேசும்பட உலகமாக மாற,  ஊமைபடங்களில் கொடிகட்டி பறந்த நடிகனும் நடிகையும் எப்படி கவனிப்பாரற்றுபோகிறார்கள் என்பதுதான் கதை. இக்கதையிலும் காதலும் அதன் மாய்மாலங்களும் உபகதையாக வருகிறது.  படத்தின் நாயகன் Jean Dujardin (ழான் துழார்தென்) இப்படத்தில் நடிப்புக்காக 2011ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் 2011ல் வெளிவந்திருக்கும் 1927 ம் ஆண்டு ஊமைப்படவுலகைப் பற்றிய இத்திரைப்படம் கருப்பு வெள்ளை படம் என்பதோடு  முழுக்க முழுக்க ஓர் ஊமைப்படமாகவும் கொண்டுவந்திருக்கிறார்கள். இக்கதையின் இயக்குனர் A star is born திரைப்படமே தமது படத்திற்க்கு ஆதாரமென்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

——-

கராச்சி நீர்முழ்கி கப்பல் விவகாரம்

அண்மைக்காலமாக பிரெஞ்சு அரசியலில் நாறும் பிரச்சினை கராச்சி விவகாரம் என்றபெயரில் சூடுபிடித்துள்ள ஆளுங்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகளை மையப்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான ஊழல்.

எண்பதுகளில் ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த · போ·பர்ஸ் நிறுவனம் Haubits FH77 என்கிற பீரங்கிகள் விற்பனையில் இந்திய அரசின் உடன்பாட்டினைப்பெற அவர்கள் அப்போதைய ஆளுங்கட்சிக்கு பேரத்தை சாதகத்தை முடித்தவகையில் தரகுப்பணம் அளித்ததாக குற்றசாட்டு எழுந்ததும் வழக்கம்போல இந்திய சி.பி.ஐ வழக்குப் பதிவுசெய்வதும், குதிரை செத்ததுமல்லாமல் குழிதோண்ட பத்துபணம் என்பதுபோல எய்தவனை மறந்து இடைத் தரகராக செயல்பட்ட  ஒட்டாவியோ குட்ரோச்சியை தேடி அலைந்ததும், நாம் மறந்துபோனதும் நேற்றைய கதை. இன்று வேறுகதைகள் படிக்க இருக்கின்றன. இந்த கராச்சிகதை பிரான்சு அரசியல்வாதிகள் எழுதிய கதை. எந்த நாடாக இருந்தாலென்ன அரசியல்வாதிகளென்றிருந்தால் ஊழல் இல்லாமலா?

2002ம் ஆண்டில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் அடுத்தடுத்து  தாக்குதல்கள் நடந்தன. முதல் பலி ஓர் அமெரிக்க பத்திரிகையாளர், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழைச் சேர்ந்தவர் பெயர் டேனியல் பெர்ல்,  கொலைசெய்யப்படுகிறார். மார்ச் மாதம் 17ந்தேதி நடந்த இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கர்களும் மூன்று ஐரோப்பியர்களும் கொல்லப்படுகின்றனர். மே மாதம் 8ந்தேதி கராச்சியில் நடந்த குண்டு வெடிப்பில் பதினான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் 11 பேர் பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமான தொழிலுக்கு தொழில் நுட்பத்தை வழங்கியவர்கள் என்ற வகையில் அங்கே பணியாற்றிய பிரெஞ்சு பொறியாளர்கள், மற்ற மூவரும் பாகிஸ்தானியர்கள். தொடர்ந்து மற்றொரு தாக்குதல் இம்முறை அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் நடந்தது. இத்தாக்குதலில் இறந்தவர் எண்ணிக்கை 11 பேர், காயமடைந்தவர்கள் 46பேர். இந்த அனைத்தும் தாக்குதலும் ‘கராச்சி விவகாரம்’ (Affaire Karachi) என அழைக்கப்படுகிறது. அப்போதைய பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கண்ட தாக்குதல்  அனைத்திற்கும் தலிபான்கள் காரணமென்றது. ஐரோப்பிய அரசாங்கங்கள் சிலவும் தலிபான்களைக் குற்றம் சாட்டின. ஆனால் உண்மை வேறாக இருந்தது.

 

1994ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கமும், அந்நாட்டைச்சேர்ந்த DCNS கப்பல் கட்டுமான நிறுவனமும் இணைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கடற்படை அமைப்புடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தத்தின் படி Agosta 90B ரக அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பல்களை பாகிஸ்தானுக்கு கட்டித் தரவேண்டும். நமது போபர்ஸ் சாயலில் பேரங்கள் முடிந்திருந்தன. அதாவது ஆளுகின்ற பாகிஸ்தான் அரசின் (பெனாசிர் பூட்டோ) நிர்வாகிகளுக்கும் முன்னின்று பேரத்தை நடத்திய பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் ஒப்பந்தத் தொகையில் அதாவது பிரான்சு விற்றவகையில் பெறுகின்ற தொகையில் பத்து சதவீதத்தை தரகாக தரவேண்டும். அதாவது பொருளின் விலையை 110 என தீர்மானித்து, அதை வாங்குகிற பாகிஸ்தானியரிடம் 110யும் வசூலித்து 10ஐ கையூட்டாக பாகிஸ்தான் நிர்வாகிகளிடம் திருப்பித் தரவேண்டும். இந்த நிலையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் தரப்பில் பேரத்தை நடத்தியவர்கள் தங்கள் தரப்பில் ஒரு பேரத்தை முன்வைத்தனர். அதன்படி பொருளின்விலையை 120 ஆக நிர்ணயித்து கூடுதலாக வரும் பத்து சதவீதத்தை தங்களிடத்தில் தரவேண்டுமென்றனர். பாகிஸ்தானிய அரசாங்கம் இதற்கு சம்மதித்தது அதாவது 100 பெறுமதியான பொருளை 120 கொடுத்து வாங்க சம்பதிக்கின்றனர். ஒப்பந்த திகையின் மதிப்பு 826 மில்லியன் யூரோ. அவ்வகையில் அத்தரகு தொகை மூன்றுதவணையாக செலுத்தப்பட்டது. முதல் இரண்டு தவணையாக செலுத்தப்பட்ட தரகுத் தொகையினால்  பிரச்சினைகள் எழவில்லை. பெனாஸிர் பூட்டோவுக்கும் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் தரகுத் தொகை செலுத்தப்பட அவர்களும் பிரெஞ்சுகாரர்களுக்குக் கொடுக்கவேண்டிய தரகுத் தொகையை திருப்பி அளித்தனர். ஒப்பந்தப்படி பாகிஸ்தானியருக்கு 32 மில்லியன் யூரோ பாக்கியிருந்தது. அப்போது திடீரென பிரெஞ்சு ஆளும் கட்சியின் நிர்வாகத்தில் மாற்றம் நிகழ்ந்தது. 1997ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அவர்களுடைய  சட்டம் இதுபோன்ற தரகுகளை பிரெஞ்சு அரசு ஏற்பதில்லை என்று முடிவுசெய்தது. விளைவு பாகிஸ்தானிய மக்களுக்கு அல்ல ஆளும்வர்க்கத்தின் ஊழல் பேர்வழிகளுக்கு 32 மில்லியன் யூரோ இல்லையென்றானது அதன் விளைவுதான் பாகிஸ்தானின் கடற்படையும் ஒப்பந்தத்தின் முக்கிய புள்ளிகளும் இணைந்து பிரான்சுநாட்டை எச்சரிக்கும் விதமாக மேற்கண்ட தாக்குதலை நடத்தி பழியை தலிபான்கள்மீது சுமத்தியது.  தாக்குதலில் பலியானவர்களின் உறவுகள் கடந்த கால பிரெஞ்சு அரசாங்கத்தின் வலதுசாரிகள் சிலரின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்போதைய பிரெஞ்சு பிரதமரும் இன்றைய ஜனாதிபதியின் நண்பருமான எதுவார் பலாதூர் என்பவர் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் நின்றபோது தேர்தல் செலவுக்கு இந்த மாற்றுத் தரகுப் பணம் உதவியிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இப்போதைய பிரான்சு அதிபர் சர்க்கோசி    எதுவார் பலாதூர் தேர்தலின்போது அவரது வலக்கரமாக இருந்து செயல்பட்டவர் என்றவகையில், அவரையும் இவ்விவகாரம் பாதித்துள்ளது. போபர்ஸ் புகழ் ராஜிவ் காந்தியும் இன்றில்லை, கராச்சி நீர்மூகிக் கப்பல் விவகாரப்புகழ் பெனாசீரும் இன்றில்லை.

 

 

கதையல்ல வரலாறு 1-5

ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

மறுநாள் ஒரு திங்கட்கிழமை, ஜெர்மன் அரசாங்கத்தின் வானொலிச் செய்தியைத் தவறாமல் கேட்கின்றவர்களுகென்றே ஓர் அறிவிப்பு, அரசாங்கத்தின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவலாக வாசிக்கப்பட்டது. ஜெர்மனியரை திகைப்பில் ஆழ்த்திய அறிக்கையின் சாரம் இதுதான்:

“தேசிய சோஷலிஸ்டு கட்சி அதிகாரபூர்வமாக வெளியிடும் செய்தி: தோழர் ருடோல்ப் ஹெஸ் கடந்த சிலவருடங்களாகவே இனம் காணவியலாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தார், எனவே அவர் வானில் பறப்பது முறைப்படி தடை செய்யப்பட்டிருந்தது, இத்தடையை மீறிய வகையில் ஒரு யுத்த விமானத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.”

“ருடோல்ப் ஹெஸ், ஆக்ஸ்பூர்க் யுத்த விமான தளத்திலிருந்து மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமையன்று புறப்பட்டுப் போனவர் திரும்பவில்லை.”

“போனவர் ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கிறார், அக்கடிதத்திலிருந்து அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறாரென்பது உறுதிபடுகின்றது, பிரமை பீடித்திருப்பதாக அஞ்சுகிறோம். ”

“·ப்யூரெர் இப்பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தியதன் விளைவாக தோழர் ‘ஹெஸ்’ ஸின் பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தோழர் ஹெஸ்ஸின் விமான பயணம் பற்றிய முழுத் தகவல்களை தெரிந்திருந்த அவர்கள்  ·ப்யூரெர் ஆணைப்படி அதனை தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும், அல்லது உரிய நேரத்தில் அரசுக்கு சம்பவம் நடப்பதற்கு முன்பாக தெரிவித்திருக்கவேண்டும், இரண்டும் இல்லையென்றானதால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”

தமது நெருங்கிய நண்பர் ஹெஸ்ஸின் திடீர் பயணத்தை உலகுக்கு இட்லர் எவ்வாறு அறிவித்திருந்தார் என்பதைத்தான் நீங்கள் மேலே வாசித்தீர்கள்.

ஒரு குற்றத்தில், குற்றவாளியை உடனடியாக கைது செய்யமுடியாத நிலையில் யாரை அரசாங்கம் சந்தேகிக்கவேண்டுமோ அவர்கள் எவரையும் குற்ற வளையத்துக்குள் இட்லர் அரசு கொண்டுவரவில்லை.’ஹௌஸ் ஷோபெரையோ, யுத்த விமான தயாரிப்பாளரும், அவரது நெருங்கிய மற்றொரு சகாவான மெஸ்ஸெர்ஷ்மிட்டையோ, ஹெஸ்ஸின் மனைவியையோ.. மூவரில் ஒருவரைக்கூட அரசு தொடவில்லை. ஹௌஸ் ஷோபெருடைய மகனை, விசாரணை என்ற பேரில் மூன்று மாதம் சிறை வைத்தார்கள். மூன்றாவது மாதம் விடுதலைசெய்யப்பட்டு வெளியில் வந்தவர் வழக்கம்போல தமது பணியினைத் தொடர அனுமதிக்கபட்டார். அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’. இவர் மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார். விடுதலைக்குப்பிறகு 1944ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பிய போர்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவர் ரஷ்யர்களிடம் சிக்கவே மீண்டும் சிறைவாசம்.

ஹெஸ்ஸின் பாதுகாவலர் ‘பின்ஷ்’ ஐ சிறைபிடித்த ரஷ்யர்கள், அவரது எஜமானருடைய பிரிட்டிஷ் பயணத்தின் உண்மையை அறிய பலவகைகளிலும் வதைசெய்தார்கள்: விரல்கள் உடைக்கப்பட்டன, உணவு மறுக்கப்பட்டது; உறங்க விடவில்லை. எவ்வளவு வதை செய்துமென்ன? அவருக்கு என்ன தெரியுமோ அதைத்தானே சொல்லமுடியும். அவர்களிடத்திலும் அதைத்தான் கூறினார். பதினோறு ஆண்டுகள் அவர் ரஷ்ய சிறையிலிருந்த பின்னர் விடுதலைப்பெற்று 1955ம் ஆண்டு ஜெர்மன் திரும்பினார்.

இனியும் ஹெஸ்ஸின் பயணத்தையும் அவருடைய திட்டத்தையும் மர்மப் பயணம் என்றோ, ரகசியப் பயணமென்றோ சொல்லிக்கொண்டிருக்க இயலாது. வெளியுலகம் அறிந்த ரகசியமாயிற்று. 1941ம் ஆண்டு மே 17ந்தேதி பிரிட்டிஷ் பிரதமர் வின்சன் சர்ச்சில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு விளக்கமாக மே 11, 12, 14, 15 தேதிகளில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதி நடத்திய உரையாடலின் முழுவிபரத்தையும் ஓர் அவசரசெய்தியாக பாவித்து தகவல் அனுப்பியிருந்தார். இதற்கு முந்தைய தொடரில் நீங்கள் வாசித்தவைதான் அத்தகவல்கள் என்றபோதிலும் மீண்டும் ஒருமுறை உங்களுக்குச் சுருக்கமாக நினைவுபடுத்துவது நல்லது..

மே 11 மற்றும் 12 தேதிகளில் இரவில் நடந்த உரையாடலில் ஹெஸ் குறிப்புகளை வைத்துக்கொண்டு வளவளவென்று நிறைய பேசினாரென்றும். அன்றையப் பேச்சில் மூன்று விடயங்கள் அவரிடம் பிரதானமாக இருந்தனவென்றும் சொல்லப்பட்டிருந்தது. முதலாவது இங்கிலாந்து ஜெர்மன் நாடுகளிடையேயான கடந்த 30 ஆண்டுகால உறவுபற்றியப் பேச்சு. அதன் நோக்கம் ஜெர்மன் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதும், பிரிட்டன் செயல்பாடுகளில் குற்றம் கண்டுபிடிப்பதும்.  இரண்டாவது எப்படியும் இட்லர் ஜெர்மன் மக்களின் முழு ஆதரவுடன்,  விமானப்படை மற்றும் அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் துணைகொண்டு கூட்டுபடைகளை வெல்லப்போகிறாரென்ற ஹெஸ்ஸின் கர்வப் பேச்சு. இங்கிலாந்துடன் சமாதானமாக போகவேண்டுமென்பதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஹெஸ்ஸின் பேச்சு பற்றியது, மூன்றாவது. ·ப்யூரெருக்கு பிரிட்டனைப் பற்றி வெகுகாலந்தொட்டு உயரிய கருத்துக்கள் இருப்பதாகவும், அவை இனியும் தொடருமென்றும், அந்நம்பிக்கைக்கு இடையூறின்றி பிரிட்டன் ஜெர்மனுக்குச் சொந்தமான காலனிநாடுகளை திருப்பி அளித்து, ஐரோப்பிய விவகாரத்தில் ஜெர்மனியின் நடவடிக்கைகளில் பிரிட்டன் குறுக்கிடக்கூடாதென்று ஹெஸ் கூறியதும் முதல் நாள் ஹெஸ்ஸின் பேச்சில் குறிப்பிடத்தக்க விஷயம். ‘இங்கிலாந்துடன் சமாதானமாகப்போவதற்கு இப்போதுள்ள தலமைக்குப் பதிலாக வேறொரு அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்’ என்று ஹெஸ் தெரிவித்த இட்லர் விருப்பத்தையும் சர்ச்சில் மறக்காமல் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

மே 14ம் நாள் ‘ஹெஸ்” ஸ¤டன் நடந்த உரையாடலென்று:

1. சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள் எதுவாயினும் ஜெர்மன் ஈராக்கின் ரஷீத் அலி குழுவினரை ஆதரிக்கும், அடுத்து ஈராக்கிலிருந்து பிரிட்டன் வெளியேறியே ஆகவேண்டும்.

2. நீர்மூழ்கி கப்பல்களின் துணையுடன் இங்கிலாந்தின் உணவுப்பொருட்களின் வரத்தை தடைசெய்யும் வகையில் முற்றுகையை நீட்டித்து கடைசி இங்கிலீஷ்காரன் பசியால் துடிப்பதை ஜெர்மன் காணவேண்டும். என தந்தி தெரிவித்தது.

மே15ம்நாள் ஹெஸ்ஸ¤டனான பேட்டி என்ற வகையில் தந்தியில் அமெரிக்கா நட்புக்குகந்த நாடல்ல என்பதாகவும்; அமெரிக்காவின் ஆயுதங்கள், யுத்த விமானங்கள் ஆகியவைக்குறித்து ‘ஹெஸ்’ ஸ¤க்கு பெரிய அபிப்ராங்கள் ஏதும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

‘ஹெஸ்’ஸ¤டன் நடந்த உரையாடலென்று மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்திருந்த சர்ச்சில் ‘ஹெஸ்’ஸின் ஆரோக்கியம் பற்றி குறிப்பிட்டிருந்த தகவலும் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பிரச்சினை பின்னர் தெரியவந்தற்கு இங்கிலாந்து அரசாங்கமும் ஜெர்மன் அரசாங்கமும் ஹெஸ் உடல்நிலைகுறித்த அறிக்கையில் முரண்பட்டிருந்தைக் காரணமாகச் சொல்லலாம். ஹெஸ் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், மன நிலை பாதித்ததன் அறிகுறி அவரிடம் சுத்தமாக இல்லையென்றும் சர்ச்சில் தந்தி தெரிவிக்கிறது. அதுவன்றி ஹெஸ்ஸின் முயற்சிகள் பற்றி இட்லர் அறிந்திருக்கமாட்டாரென தாம் நம்புவதாகவும், இங்கிலாந்தில் சண்டையின்றி சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்துடன் ஒரு குழுவினர் இருப்பதாகவும், அவர்கள் இப்போதுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து விரட்டிவிடுவார்களென்று அந்த’ ஆள் (ஹெஸ்) கூறுவதை நம்பாமல் இருக்கமுடியவில்லை என்கிறார் சர்ச்சில்.

வணக்கத்திற்குரிய அதிபருக்கு, மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உங்கள் கவனத்திற்கு மட்டும் உரியது. எங்கள் தரப்பில் நாங்கள் விரும்புவதெல்லாம், இதுகுறித்த எத் தகவலையும் பத்திரிகையாளர்களுக்கு மூச்சு விடகூடாது. அதன் மூலம் ஜெர்மன் தலைவர்கள் குழப்பத்தில் நிறுத்தவேண்டும். நம்மிடம் கைதிகளாகவுள்ள எதிரிகளின் ராணுவ அதிகாரிகளுக்கும் அதுதான் நிலமை. நிச்சயமாக இப்பிரச்சினை ஜெர்மன் ராணுவத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்குமென நம்புகிறேன், என எழுதி சர்ச்சில் முடித்திருந்தார்.

இதற்கிடையில் ‘ஹெஸ்’-ஐ ·பார்ன் பரோவுக்கருகிலிருந்த மாளிகைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தார்கள். ஹெஸ் தொடர்ந்து சர்ச்சில் அரசாங்கத்தில் ஓர் அமைச்சரையேனும் தாம் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்று நிப்பந்தம் கொடுத்தார். கிர்க் பட்ரிக், பிரிட்டிஷ் பிரதமரிடம் இதுபற்றி எடுத்துரைத்து  கைதுசெய்யப்படுள்ள ஹெஸ்ஸ¤க்கு உதவ முன்வந்தார். சர்ச்சிலுக்கு உடன்பாடில்லை. தாம் இணங்கினால் சர்ச்சில் ஜெர்மனுடன் சமாதானம் பேச குறுக்குவழியில் இறங்கினாரென அரசியல் விமர்சர்கள் எழுதுவார்களென்று தவிர்த்தார். ஆனாலும் கிர்க் பட்ரிக் சளைக்கவில்லை. அதன் மூலம் ஹெஸ்சிடமிருந்து வேறு உண்மைகளை பெறமுடியுமென்பதுபோல பேசினார். இறுதியில் சர்ச்சில் அவர் யோசனைக்கு சம்மதிக்க சர் ஜான் சைமன் என்ற வெளிவிவகாரத்துறை முதன்மைச் செயலரை அனுப்பினார்கள். இப்படியொரு சந்திப்பு நிகழ்ந்ததாகவே காட்டிக்கொள்ளகூடாது என்று பிரதமர் அலுவலகம் தீர்மானித்தது. இச்சந்திப்பு பற்றிய முழு விபரமும் பின்னர் நூரம்பெர்க் விசாரனையின்போது வெளிவந்தது. இம்முறை உரையாடல் மூன்றுமணி நேரம் நீடித்தது. ஹெஸ், சர் ஜான் சைமனிடம் பிரான்சு நாட்டிலிருந்து 1940ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வரவேண்டுமென்று தமக்கு திட்டம் இருந்ததென்பதை உறுதி செய்தார். தொடர்ந்து

– எப்படியும் இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் போரில் நாம்தான் ஜெயிக்கபோகிறோம், அப்படி இருக்கையில் சமாதான ஒப்பத்தத்திற்கு முன்பாக வெர்சாய் ஒப்பந்தத்தின்படி நம்மிடம் கைப்பற்றியவற்றை திரும்பவும் ஒப்படைக்கவேண்டுமென்று உங்களை ஏன் வற்புறுத்தக்கூடாதெனக் கேட்டதற்கு ·ப்யூரெரிடமிருந்து வந்த பதிலென்ன தெரியுமா, ‘அப்படியே போரில் நாம் ஜெயித்தாலும், நல்லுறவை பேணவேண்டும் என நினைக்கிறபோது இதுபோன்ற நிர்பந்தங்களை விதிக்கக்கூடாது’, என்றார். எங்கள் தலைவரின் நல்லெண்ணம் மட்டும் உங்களுக்குத் தெரியவருமெனில், சமாதானத்திற்கு நீங்கள் உடன்படுவீர்கள் என்று நினைத்தேன். தவிர மிக மோசமான உங்கள் நிலமையும் இப்படியொரு பயணத்தை மேற்கொள்ள எனக்குக் காரணமாயிற்று, -என்றார் ஹெஸ்.

– எங்கள் மீது நீங்கள் பரிதாபப் படுவதைவைத்து, மிகமோசமானதொரு தாக்குதலை நடத்த நீங்கள் திட்டமிட்டிருக்கிறீர்கள் எனக் கருதலாமா?

தலையாட்டிய ஹெஸ் மீண்டும் தமது நாட்டின் யுத்ததளவாடங்களின் எண்ணிக்கை, நீர்மூழ்கிக்கப்பல்களின் ஆற்றலென பேச ஆரம்பித்துவிட்டார். இடையில் குறுக்கிட்ட சர் ஜான் சைமன்:

– வந்தது எப்படி ·ப்யூரெர் அனுமதியுடனா? அல்லது அனுமதி இன்றியா?

– அவரது சம்மதத்துடன் வந்தேனென்றா சொல்லமுடியும்? என்று பதில் கேள்விகேட்ட ஹெஸ், கடகடவென்று சிரிக்கிறார். சிரித்துமுடித்ததும் ஒரு சிறிய தாளை எடுத்து அவர் முன் பரப்பினார்.

‘ஒப்பந்தத்திற்கான அடிப்படை நிபந்தனைகள்’ என்று அதில் எழுதியிருந்தது. அதனைத் தொடர்ந்து ஹெஸ்:

– இவைகளெல்லாம் அவ்வப்போது எங்கள் தலைவர் முன்வைத்த நிபந்தனைகள், என்றார்.

சர் ஜான சைமன் அதனைப் படித்துபார்த்தார் புதிதாக எதுவுமில்லை, ஏற்கனவே இவோன் கிர்க் பட்ரிக்கிடம் ஹெஸ் கூறியிருந்தவைதான் அதிலிருந்தன.

(தொடரும்)

 

 

பாரீஸில் இருவிழாக்கள்

பாரீஸில் காந்தி சிலை:

கடந்த மாதம்(அக்டோபர்2) நான் குடியிருக்கும் Strasbourg நகரில் காந்தி சிலையை முதன்முதலாகத் திறந்தார்கள். நாளை அதாவது 11-11-2011 அன்று பாரீஸ் நகர புறநகரொன்றில் மற்றொன்றை திறக்கவிருக்கிறார்கள். வொரெயால் தமிழ்சங்க தலைவர் இலங்கைவேந்தன் என்பவரை கடந்த சில வருடங்களாக அறிவேன் அயராத உழைப்பாளி. வருடந்தோறும் விழாக்களை நடத்தி அப்பகுதிவாழ் தமிழ்மக்களை ஒருங்கிணைக்கிறார். தமிழ்ப்பள்ளியொன்றை நிறுவி பிள்ளைகள் தமிழின் விரல் பிடித்து நடப்பதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார். இந்திய அரசியல்வாதிகளுக்கும் காந்திக்குமுள்ள பந்தமென்பது இந்திய ரூபாய் நோட்டுக்களில் அவர் இடம்பெற்றிருக்கிறார் என்பதாக இருக்கலாம், ஆக அவர்களும் காந்தியைப் போற்றுகிறவர்களாகிறார்கள். ஆனால் இன்றைய உலகிற்கு காந்தியின் தேவை தவிர்க்கமுடியாதது. அவரது சாத்வீகமான அரசியல் மட்டுமல்ல, அடிதட்டு மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட வாழ்வாதார பொருளரசியலும் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு தேவையாகிறது. பாரீஸில் முதன் முதலாகக் காந்தி சிலை திறக்க எடுத்துக்கொண்ட நண்பர் இலங்கைவேந்தனின் முயற்சி போற்றுதலுக்குரியது.

நாள்: 11-11-2011, பகல் 2மணி அளவில்; இடம்: Avenue Gandhi, 95490- Vaureal தொடர்புகட்கு: Ilangaivendhan- 06 10 43 22 16

பத்தாவது ஆண்டு கம்பன் விழா:

பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசனை பல ஆண்டுகளாக அறிவேன். அவருக்கு தமிழ்தான் குடும்பம், தமிழர்கள் தான் உறவினர்கள். சந்தத்துடன் மரபுக்கவிதை எழுதுவதில் சமர்த்தர். தமிழ்மொழி மீது தீராத காதல் கொண்டு இயங்குபவர். தமிழர்களென்றாலே பல சங்கங்கள் இருக்கவேண்டுமில்லையா? இங்கேயும் நூறு சங்கங்களாகவது அப்படி இயங்கும். அவற்றுள் உருப்படியாக தமிழுக்கு உழைக்கும் அமைப்புகளில் நானறிந்தவகையில் ஐந்து அல்லது ஆறு அமைப்புகள் இருக்கலாம். அவற்றுள் சட்டென்று அனைவரும் நினைவு கூரும் அமைப்பு பாரீஸ் கம்பன் கழகம். வருடந்தோறும் செப்டம்பர்மாதங்களில் பாரீஸில் கம்பன் விழா களைகட்டும். இவ்வருடம் பத்தாவது ஆண்டுவிழா என்பதால் சிறப்பாக கொண்டாட நினைத்திருக்கவேண்டும். நவம்பரில் வந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து கம்பன் விழா மேடைகளறிந்த பேச்சாளர்கள் கலந்துகொள்கிறார்கள். வழக்கம்போல பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என அமர்க்களபடுத்துகிறார்கள். ஆக இரண்டு நாட்களுக்கு பாரீஸ் வாழ் தமிழர்கள் தமிழ் அமுதைப் பருக நல் வாய்ப்பினை பாரீஸ் கம்பன் கழகம் அருளியிருக்கிறது. சிறப்பு பேச்சாளராக தமிழருவி மணியன் கலந்துகொள்கிறார்.

நாட்கள்: 12 மற்றும் 13-11-2011 (சனி மற்றும் ஞாயிறு) இடம்: La Salle Champ De Foire, Route des Refzniks, 92500- Sarcelles; தொடர்புகட்கு: K. Barathidassan- 01 39 93 17 06