தற்காத்துத் தற்கொண்டார் தள்ளி தகைசார்ந்த
சொல்லேற்று சோர்விலார் கண் » – எதிர்கால மானுடம்
.
மனிதரைவிட இயற்கை சக்திவய்ந்தது.
நாட்டாமைகள் அவசரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
முகவரி அற்ற கிருமியுடனான மூன்றாம் உலகயுத்தம், ஆயுதங்களைக் குவித்த நாடுகளைக்கூட திடுக்கிட வைத்துள்ளது.
எதைக்கொண்டு எதிரி கொரோனாவை களம் காண்பது என்பதில் குழப்பம் ? சமாதானமாகப் போய்விடலாமென்றால், கைகுலுக்கவும் அனுமதிக்கமாட்டேன் என்கிற வம்பனிடம் என்ன செய்யமுடியும்.
ஒரே ஆறுதல் கொரோனா கழுகு, பசி க்கென அலையும் பாம்புகளை மட்டுமல்ல பரமசிவன் கழுத்தைச் சுசற்றியுள்ள பாம்புகளையும் கொத்தவல்லது என்கி்ற உண்மை.
என்ன செய்வது, நீதிக்குத் தப்ப முடிந்த நிர்பயா குற்றவாளிகளில் பலர், பரமசிவன் பாம்புகளாகத்தான் உள்ளனர்.
இயற்கைப் புல்லுக்கு இறைக்கின்ற கொரோனா, நெல்லுக்குப் பொசிவதைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இடுக்கண் வந்திருக்கிறது நகுவோம்` !