கதையல்ல வரலாறு -2-3

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

பதவி இறக்கப்பட்ட முன்னாள் கவர்னர் கியோம் எபேர் தாய் நாடு திரும்புகிறார்.  போனவர் எத்தனை நாளைக்குதான் மதுபாட்டில்களை திறந்து வைத்துகொண்டு உட்கார்ந்திருப்பது, உணவுண்ண உட்கார்ந்தால் சமையல்காரன் ம்ஸியே முதலில் மதாமை கவனித்து விட்டு வருகிறேன் என்கிறான்; ஒப்பேராவுக்கு போகும் மதாம் எபேரா சாரட்டில் நாய்க்கும் தனக்கும் மட்டுமே இடமிருக்கிறது நீங்கள் இருந்து வீட்டைபார்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள்; மாளிகைப் பணிப்பெண்கள்கூட தொட்டு பேசாதே என்கிறார்கள். ஆக ஏதாவது செய்தாக வேண்டும்; கொடுக்க வேண்டியதை கொடுத்து பிடிக்கவேண்டியவர்களை பிடித்து திரும்பவும் புதுசேரிக்குப் கவர்னராய் பொறுபேற்பதென்று கங்கணம் கட்டிக்கொண்டார். அன்று முதல் தினந்தோறும் புதுச்சேரி திரும்புவதற்கான முயற்சிகளில் இறங்கினார். மன்னரின் அமைச்சர்களை சென்று சந்தித்தார். மன்னரின் மனைவி துணைவிக¨ளை போய் பார்த்தார், அவரின் மகளைப் பார்த்தார், மகனைபார்த்தார். மன்னரின் வளர்ப்பு பூனையையும் நாயையும் தவிர வாய் திறந்து இவருக்கு யார் யாரெல்லாம் சிபாரிசு செய்ய முடியுமோ அவர்களிடமெல்லாம் முறையிட்டார். தம்மை கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமுமில்லை என்றார். தான் மாசற்றவரென்றும் தன் பேரில் கொண்டுவரப்பட குற்றசாட்டுகள் ஆதாரமற்றவையென்றும் ஓலமிட்டார்.

மன்னருக்கு எபேர் பிரச்சினை பெரும் பிரச்சினையாகிவிட்டது. எங்கே போனாலும் எதை தொட்டாலும் எபேர் பேசுவதுபோல இருக்கிறது. மனைவி கூட எபேர் பிரச்சினையை தீர்த்துவிட்டு என்னைத் தொடுங்கள் என்கிறாள் -மன்னர் மனைவி எபேருக்கு உறவு முறையாக வேண்டும். எபேருக்கு மக்கள் காவலர் என்ற புதுபட்டத்தைக்கொடுத்து புதுச்சேரிக்கு அனுப்பி வைத்த பிரெஞ்சு முடியாட்சி அவர் மகனையும் புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் மேல்ஆலோசனை கூட்டத்தின் அங்கத்தினராக நியமித்தது. செத்த பிணம் பிழைத்தெழுந்தால் காலை எட்டிவைத்து நடக்குமாம் அப்படித்தான் அமைந்தது தந்தைக்கும் மகனுக்கும் வந்த வாழ்வு.

தந்தையும் மகனும் புதுச்சேரிக்கு வந்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்தன. தந்தை எபேரைக் காட்டிலும் மகன் எபேருக்கு கூடுதலாகவே புதுச்சேரியின் நிலமை புரிந்தது. முத்தியப்ப முதலியார், தம்மைத் தரகர் பதவியிலிருந்து எபேர் துரத்தினார் என்பதைக்காட்டிலும் நைநியப்பிள்ளை தமது உத்தியோகத்தைப் பறித்துக்கொண்டு நன்கு சம்பாதிக்கிறார் என்பது உறுத்தலாக இருந்தது. பிரான்சிலிருந்து வந்திறங்கிய எபேர் மகனை முத்தியப்ப முதலியார் சதித்தித்தார்.

– துரை உங்கள் தந்தையார் முதலில் நைநியப்பிள்ளை நன்கு கொழுத்துவிட்டான். உங்கள் தயவால் முன்னுக்கு வந்தவன், கேட்பதை கேளுங்கள் அவன் கொடுத்தாக வேண்டும்- என்றார்.

இரவுமுழுக்க உறக்கமில்லாமல் தவித்த எபேர் மகன் மறுநாள் காலை நைநியப்பிள்ளையைக் கூப்பிட்டனுப்பினார். அவரும் வந்தார்.

– என்ன நைநியப்பிள்ளை சௌக்கியமா?

– ஏதோ எஜமான்கள் தயவுலே குடிகள் நாங்கள் பிழைக்கிறோம்.

– நான் கேள்விபட்டது அப்படி இல்லையே. உம்மைப் பற்றி நிறைய பிராது வந்திருக்கிறது. என் தகப்பனார் உமக்குக்கொடுத்த சகல சுதந்திரங்களையும் நீர் தவறாக பயன்படுத்தி சம்பாதித்ததாகப் புதுச்சேரி முழுக்க பேச்சாமே.

– துரையின் காதுக்கு யாரோ தவறான செய்தியைக் கூறியிருக்கிறார்கள்..

– நான் சொல்வதைக்கேளும். என் தகப்பனார் உமக்குக்கொடுத்த தரகு வேலையில் 40000 வராகன் சம்பாதித்திருக்கிறீர் என்று கேள்வி, அதில் 10000 வராகன்களை என் தகப்பனாருக்குக் கொடுக்கவேண்டும்

– 10000 வராகனுக்கு நான் எங்குபோவேன்.

– சரி 5000 மாவது கொடுங்கள்.

– துரை மன்னிக்கவேண்டும். நீங்கள் கேட்கும் தொகையை நான் கொடுக்க சம்மதித்தால் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன் என்று பொருள். உங்கள் பணத்தில் நீங்கள் நினைப்பதுபோல இலாபமொன்றும் பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

– பரவாயில்லை 3000 மாவது கொடுங்கள், உங்களை மன்னிக்கிறேன்.

– ஏற்கனவே கூறிய பதில்தான். உங்கள் தகப்பனாரை நான் ஏமாற்றவில்லை. எனவே என்னால் எதுவும் கொடுப்பதற்கில்லை.

மகன் எபேர் ¨நியப்பிள்ளைக்கு எதிரிகள் இருக்கிறார்களா என்று தேடினார். நைநியப்பிள்ளைமேல் புகார்தர அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். அவர்களுடைய புகார்களின் அடிப்படையில் நைநியப்பிள்ளை கைது செய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டார். குற்றவாளி நைநியப்பிள்ள வழக்கு நடந்தது. அவர் குற்றங்களை முழுவதுமாக மறுத்தார்.

1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பபடவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.

அது தவிர நைநியப்பிள்ளைக்குப் பதிலாக, தரகர் முத்தியப்ப முதலியார் மகன் கனகராயமுதலியார் தரகராய் நியமிக்கப்பட்டார்.

1717ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் நைநியப்பிள்ளை சிறையிலேயே இறந்தார். நைநியபிள்ளைக்கு மூன்று மகன்கள்குருவப்பா, முத்தப்பா, வேங்கடாசலம். இவர்களில் மூத்தவர் குருவப்பாபிள்ளை. தமது தந்தைக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அரசாங்கம் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறதென நினைத்தார்.

“தம் தகப்பனார் மாசற்றவரென்றும், அநியாயமாய் தண்டிக்கப்பட்டாரென்றும், அவருக்கு விரோதமாய் வாக்கு மூலம் கொடுத்த சாட்சிகாரர்களெல்லாம் பலவந்தத்தாலும், பயத்தினாலும் அப்படி செய்தார்களென்றும், ஆகையால் நைநியப்பிள்ளை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டுமென்றும்” பிரான்சு மன்னருக்கு எழுதினார். எழுதியதோடு அல்லாமல் அரசர் ஆலோசனை சபையிடம் நேரில் சென்று முறையிடுவது, தமது வழக்கை எடுத்துக்கூற பிரான்சில் ஒரு பிரதிநிதியை ஏற்பாடு செய்வதென்று முடிவு செய்து அதன்படி பாரீஸ¤க்கு நேரில் செல்கிறார்.

(தொடரும்)

கதையல்ல வரலாறு -2-2

 நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

புதிய பொறுப்பினை ஏற்ற நைநியப்பிள்ளைக்குத் தரகர் வேலையின் சாமர்த்தியமென்பது வாங்குபவர் விற்பவர் ஆகிய இருதரப்பினரினரின் நம்பிக்கையைபெறுவதென்ற பால பாடத்தை நன்கறிந்தவர். தரகர் நமக்காக பேசுகிறார் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்திதருதல் கட்டாயமென்பதில் தெளிவாக இருந்தார். மறுநாள் உள்ளூர் தரகர்களின் கோபத்தை குறைக்க நினைத்து அழைத்திருந்தார். அவர்களும் வந்திருந்தார்கள்.

– முத்தியப்ப முதலியார் கேட்டுக்கொண்டதன்பேரில் நீங்கள் 110 வராகனுக்கு சம்மதித்திருந்தீர்கள். பிறகு என்ன நடந்தது. ஒரு விலைக்கு இணங்கிய பிறகு அதை ஏற்றுக்கொள்வதுதானே முறை. எதற்காக கவர்னர் மாளிகையில் தேவையின்றி கூச்சலிடவேண்டும். உங்களுக்கு மனக்குறை இருப்பின் தரகரிடமே அதைத் தெரிவித்திருக்கலாமே, என்றார்.

அப்போது தரகர் கூட்டத்தில் ஓரளவு துணிச்சலுடன் பேசக்கூடிய ஆசாமி கொஞ்சம் முன்னால் வந்து தரகரை வணங்கிவிட்டு நிலமையை எடுத்துக்கூறினார்:

– உன்மையைச் சொல்லுகிறோம். முத்தியப்ப முதலியார் மணங்குக்கு 110 வராகன் என்று எடுத்த முடிவு தன்னிச்சையானது.  மணங்குக்கு 110 வராகனைக் கொட்டிக்கொடுத்துவிட்டு நாங்களென்ன வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக்கொண்டு போவதா? நாங்கள் கேட்டதொகைக்கு குவர்னரை சம்மதி பண்ணால் எங்களுக்கு லகுவாயிருக்கும், அதுவன்றி இத்தொழிலில் தொடர்ந்து எங்களால் ஜீவிதம் செய்யமுடியாது. தாங்கள் கிருபை பண்ண வேணும்.

அடுத்து ஆளாளுக்கு கூச்சலிட்டார்கள். முத்தியாலு முதலியாருக்கேற்பட்ட அனுபவம் நைநியப்பிள்ளைக்கும் ஏற்பட்டது. அவருக்கு நிலமை தெள்ளத் தெளிவாக விளங்கிற்று. நடந்து முடிந்த வியாபாரத்தில் உள்ளூர் தரகர்களுக்கு உண்டான இழப்பை புரிந்துகொண்டார். ஆனால் பணி நீக்கம் செய்யபட்ட முத்தியப்ப முதலியார் மணங்குக்கு 110 வராகனுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இப்போது நான்கு வராகனை மணங்குக்குக் குறைத்தால் கவர்னர் எப்படி எடுத்துக்கொள்வானோவென்ற சந்தேகம். எனினும் உள்ளூர் வியாபாரிகளின் மனதை வருத்தி வியாபாரத்தை நடத்தமுடியாதென்று புரிந்துகொண்ட நைநியப்பிள்ளை குவர்னரை மீண்டும் சந்தித்து, தமது கருத்தைப் பக்குவமாக எடுத்துக்கூறி மணங்குக்கு இருதரப்பிற்கும் பொதுவாக 108 வராகனென்று முடித்தார்.

முத்தியப்ப முதலியார் தரகு வேலையிலிருந்து நீக்கப்பட்ட தகவல் பாரீஸ¤க்குத் தாமதமாகப் போய்சேர்ந்தது. அக்காலங்களில் தகவல் தொடர்புதுறை எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதை ஓரளவு நம்மால் ஊகிக்க முடியும். கிழக்கிந்தியா பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகளுக்குக் கோபம் வந்தது. கியோம் எபெர் கும்பெனியின் நலனைக்காட்டிலும் தமது சொந்த நலனில் அக்கறை காட்டுகிறாரோ என சந்தேகித்தவர்கள் அரசரின் முக்கிய ஆலோசகர்களிடம் இப்பிரச்சினையை கொண்டு செல்கிறார்கள். மன்னரும், மூத்த ஆலோசகர்களும், கிழக்கிந்தியா பிரெஞ்சு கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் கூடி விவாதித்தார்கள். விவாதத்தின் முடிவில் புதுச்சேரி கவர்னர் குற்றவாளியென ஏகமனதாகத் தீர்மானிக்கிறார்கள். எபேர் செய்தக்குற்றம் மணங்குக்கு நான்கு வராகன் ஆசைப்பட்டதோ, மேலிடத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக முத்தியப்ப முதலியார் பதவியைப் பறித்து வேறொருவரை தரகராக நியமித்ததோ அல்ல மாறாக அவர் தரகராக நியமித்திருந்தது ஒர் இந்து. முத்தியப்ப முதலியார் என்ற கிறிஸ்துவர் இடத்தில் ஓர் இந்துவை நியமனம் செய்தது மன்னரின் ஆலோசர்கள் அவையில் இடம் பெற்றிருந்த சேசுசபையினருக்குக் குற்றமாகப் படுகிறது. அதன் விளைவாக 1711ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந்தேதி புதுச்சேரியின் கவர்னருக்குக்குப் புதிய உத்தரவு ஒன்றை  பிறப்பித்தார்கள், அதன்படி:

கியோம் ஆந்தரே எபேர் உடனடியாக தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டியதாயிற்று. அவருக்குப்பதில் பியேர் துலிவியே(Pierre Dulivier) கவர்னர் பொறுப்பேற்கிறார். புதிய கவர்னர் உடனடியாக நைநியப்பிள்ளை பதவிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் முத்தியப்ப முதலியாரையோ அல்லது ஒரு கிறிஸ்துவரையோ இடைத்தரகராக நியமனம் செய்யவும் அந்த அரசாணையில் கண்டிருந்தது.

புதுச்சேரியில் வந்திறங்கிய பியேர் துலிவியே அரச கட்டளையை எப்படி நிறைவேற்றுவதென்று யோசித்திருக்கவேண்டும்.   மேல் ஆலோசனைச் சபையை உடனடியாகக் கூடும்படி கேட்டுக்கொள்ளபட்டது அரசாணையை நிறைவேற்றுவதிலுள்ள சாத பாதகங்கள் குறித்து சமை அங்கத்தினர்கள் தீவிரமாக ஆலோசித்தார்கள். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு இருந்தது:

“நைநியப்பிள்ளை தரகராய் நியமிக்கப்பட்ட காலமுதல், பிராஞ்சுகாரருடைய தரணி என்கிற மேரையில், மொகாலியரிடத்திலும் (மொகலாயரிடத்திலும்) இந்தியா மற்றப் பிரஜைகளிடத்திலும் செல்வாக்கு பெற்றுவிட்டார். இந்த உண்மையை அநேக சந்தர்ப்பங்களிலும், சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தாலும் அறிந்துகொண்டோம். நபாப் புதுச்சேரி மேல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் பிராஞ்சுகாரருக்குச் சுதேசமன்னர்களால், இந்தியாவில் கொடுக்கப்பட்ட சகல இடங்களையும், கிராமங்களையும் திருப்பிக்கொடுத்துவிடவேண்டுமென்றும், அவற்றின் வரும்படிக்காக 8000 ஷக்கார் கொடுக்கவேண்டுமென்று தாகீது அனுப்பினார். கிராமங்களை வசப்படுத்திக்கொள்ளவும், பணத்தை வசூலிக்கவும் குதிரைவீரர்களை அனுப்பிவைத்தார். சமாதானம் செய்யும்படி அனுப்பப்பட்ட நைநியப்பிள்ளை, ஒரு காசுகூட செலவில்லாமல் குதிரை வீரர்களைத் திருப்பிப்போகும்படி செய்தார். அவர் தரகராய் அமர்ந்தது முதல், மொகாலியர் களால் ஏற்பட்ட சகல சங்கடங்களிலிருந்து புதுச்சேரியை நிவர்த்தி செய்திருக்கிறார்.”

“பிராஞ்சு சங்கத்தின், உள் விஷயங்களையும் வெளிவிஷயங்களையும் நன்கறிந்தவரானபடியால், அவர் வேலையைப் பிடுங்கிவிட்டால், உடனே மொகாலியர் ஆளும் பிராந்தியத்தில் குடியேறி, தலைமறைவாய் உள்ளுக்குள் பழிவாங்கும் சிந்தனையுடன், மொகாலியர்களைத் தூண்டிவிட்டு புதுச்சேரியின் நாசத்தைத் தேடிவிடுவார்.

“இதுவுமன்னியில், கிராமங்களின் குத்தகைகாரர்களுக்கும், புகையிலை வெற்றிலை காசுக்கடை குத்தகைகாரர்களுக்கும், அவரே புனையானபடியால் மொகாலியர் செய்யப்போகும் முதல் அசைவுக்கே குத்தகைகாரர்களும் பெரிய சுதேசி வியாபாரிகளும் ஓடிவிடுவார்கள். கூட்டுறவு சங்கத்திற்குப் பெருத்த நஷ்டம் உண்டாகும். சோழமண்டலகரையில் அவரை ஒத்த சாமர்த்தியசாலி வேறு ஒருவருமில்லையென்கிற கியாதியையும் பெற்றிருக்கிறார்.”

“ஐரோப்பிய ஜனங்களுக்குச் சுதேசமன்னர்களால் கொடுக்கப்பட்டிருக்கும், சகல இடங்களையும், கிராமங்களையும் பிடுங்கிவிடவேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் மொகாலியர்களிடத்தில் சமாதானஞ்செய்ய கிரிஸ்துவர்களில் தற்சமயம் ஒருவருமில்லை. சவரிமுதலியார் ஒருவரே, கிரிஸ்துவர்களுக்குள் ஐரோப்பியரிடத்தில் உண்மையான விசுவாசி, அன்புள்ளவர். அவருடைய நேர்மையில் தடையின்றி நாம் நம்பிக்கை வைக்கலாம். நைநியப்பிள்ளையோடு அவர் வேலைசெய்தால்  கொஞ்சத்துக்குள் சகல விஷயங்களையும் அறிந்துகொண்டு, பிரஜைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரவானாகலாம். அப்போது தனியாய் தரகுவேலையைத் திறமையாய்ச் செய்வார். கிருஸ்துவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களை வியாபாரத் துரையில் ஈடுபடுத்துவார்.”

“ஆனதை முன்னிட்டு, நைநியப்பிள்ளையும் சவரிமுதலியாரையும் சங்கத் தரகர்களாக நியமிக்கிறோம். தங்களுக்குள் முதலவர், இரண்டாமவர் என்கிற வித்தியாசமில்லாமல் அந்நியோன்னியமாய் சகல சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் அவர்கள் தரகு வேலையைக் கவனிக்க வேண்டியது.”(1)

பியேர் துலிவியே தலமையின்கீழ் வந்த கிழக்கிந்திய பிரெஞ்சு கம்பெனி அரசாங்கம் நைநியப்பிள்ளையை தரகர் பொறுப்பில் மேலும் சிறிதுகாலம் வைத்திருக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்ததை மேற்கண்ட மேல் ஆலோசனை சபை முடிவு விளக்குகிறது. அதே நேரத்தில் பிரெஞ்சு முடியாட்சியின் கட்டளையையும் குறிப்பாக சேசுசபையினரின் அவாவையும் பூர்த்திசெய்யவேண்டும், எனவே கிருஸ்துவரான சவரி முதலியாரை நைநியப்பிள்ளைக்குத் துணையாக நியமித்தார்கள். மேல் சபையின் தீர்மானத்தினை திரும்பவும் ஒருமுறை வாசித்தால் நைநியப்பிள்ளையின் பதவிக்காலம் சவரிமுதலியார் தரகர் பணியின் நெளிவுசுளிவுகளை அறிகின்ற வரையில் என்பதை புரிந்துகொள்ளலாம். இங்கே எபேர் கவர்னராக இருந்தபோது பணிபுரிந்த முத்தியப்ப முதலியாரின் மருகர் சவுரி முதலியார் என்ற கொசுறுச் செய்தியையும் சொல்லிவிடவேண்டும்.

நைநியப்பிள்ளையின் விதி வேறாக எழுதப்பட்டிருந்தது. அவ்விதி சவரி முதலியார் என்ற பெயரில் அவருடைய இடைத் தரகர் பிழைப்பைக் கெடுத்ததுடன், அவர் உயிர் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது.

(தொடரும்)

—————————————————————————————-

1.1714ம் ஆண்டு மார்ச் 9ந்தேதி மேல் ஆலோசனைசபை விவாதத்திற்குப்பின் எடுத்துக்கொண்ட முடிவுகளின் தொகுதி 1வது புத்தகம் பக்கம் 139 cd.ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பு தொகுதி ஒன்று  பக்கம் 8

 

அண்மையில் வாசித்த பதிவுகள் Déc.6:

பேரிசையின் பின்னணி: சொல்வனம்

சொல்வனம் இணைய இதழில் பேரிசையின் பின்னணி-தவில் கண்ட மாற்ரங்கள் என்ற தலைப்பில் ப. கோலப்பன் என்பவர் எழுதியுள்ள கட்டுரை கவனத்தைப்பெற்றது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மகள் திருமணத்தில் கலந்துகொண்ட கட்டுரையாளர் லயசுத்தமான ஒரு தவில் புராணமே படித்திருக்கிறார். நவீன தவில் ஓசையில் ஏற்பட்ட மாறுதலுக்கு வேணுகோபாலென்ற கலைஞர் காரணமென்பது என்னைப்போன்றவர்களுக்குப் புதிய செய்தி. ‘தவிலுக்கு வார் பிடிப்பது’ குறித்த தகவலும் சுவாரஸ்யமனாது. கட்டுரையாளர் குறிப்பிடும் தில்லானா மோகனாம்பாள் வாத்ய கோஷ்டியும் அவர்கள் எதிரே வைத்தியும் கண்முன்னே நிற்கிறார்கள்.  காதலியை அல்லது மனைவியை ஆரத் தழுவுபவர்கள் தயவு செய்து கட்டுரையாளர் சிபாரிசு செய்திருக்கிறாரென தவிலை நினைத்துக்கொள்ள வேண்டாம். தவிலுக்கு நல்லதோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நல்லது.

கணையாழி -மீண்டும் பாரதி

கணையாழியில்  இந்திரா பார்த்தசாரதியின் ‘மீண்டும் பாரதி’ தொடரை வாசித்தேன். பாரதியின் கவிதையில் தங்களுக்குள்ள ஈடுபாட்டைப் பலரும் சொல்லக்கேட்டிருக்கிறோம். ஆனால் அதை இ.பா. சொல்கிறபோது கூடுதலாக காதுகொடுக்க நேரிடுகிறது. மொழிபெயர்ப்பு பற்றிய அவரது கருத்தை மனமார வழிமொழிகிறேன். ஆயிரம் சொல்லுங்கள் மூலமொழியில் ஒரு படைப்புக்குள்ள முழுபாய்ச்சலையும் அம்மூல மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள் வாசித்துப் பெறும் இன்பத்தையும் அதன் மொழிபெயர்ப்பு வாசகர்களால் ஒருபோதும் பெறமுடியாதென்பது சத்தியம் சத்தியம். தமக்கு தமிழால் அறியவந்த பாரதி, ஆங்கிலத்தால் அறியப்பட்ட தாகூரைக்காட்டிலும் மேலானவர் என்பதற்கு பாரதியாரைத் தாம் தாய்மொழியில் வாசிக்க நேர்ந்தது காரணமெனச் சொல்லும் இ.பா., பாரதியின் கவிதை ஆற்றலைக் கொண்டாடவும் தயங்கவில்லை. ‘புல்லை நகையுறுக்கி பூவை வியப்பாக்கி’ என்பதற்கு ஈடான வரிகளை கம்ப சித்திரத்தில் மட்டுமே காணமுடியும் என்கிறார்.  குயில் பாட்டைப்பற்றிய ஒரு விரிவான ரசனை நூல் எழுதத் திட்டமிட்டிருப்பதாக இ.பா தெரிவிக்கிறார். காத்திருக்கிறோம் ஐயா!.

இதம் தரும் வங்கக் கதைகள்:

வணக்கத்திற்குரிய வே. சபாநாயகம் தமது வலைப்பூவில் அம்ருதா பதிப்பகத்தின் அண்மைக்கால வங்கச் சிறுகதைகள் என்ற நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். ஆரவாரமின்றி மென்மையாய் சிலுசிலுத்து ஓடும் சிற்றோடையின் நளினமும் அழகும் வங்கத்கதைகளில் பொதுத்தன்மை  என்கிறார் வே.சபாநாயகம். தொகுப்பிலுள்ள 15 சிறுகதைகளை அவருக்கே உரித்தான் மொழியில் கதைப்பொருளை பகிர்ந்துகொள்கிறார். அலுப்புத் தட்டாமல் வாசிக்கவும் ரசிக்கவும் முடிகிற கதைகளென்ற உத்தரவாதம் தரப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் வங்காளம் தமிழ் இருமொழிகளிலும் தேர்ச்சிபெற்றவரென்பதால், வங்கமொழிக்கேற்ப தமிழ்படுத்தியிருக்கும் நேர்த்தி தடையற்ற வாசிப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆர். அபிலாஷ்

நண்பரது வலைத்தலத்தில் வந்துள்ள தமிழ் இலக்கியம் ஏன் பன்னாட்டுத் தளத்தை அடையவில்லை? என்ற கட்டுரை பற்றியும் குறிப்பிடவேண்டும். பிறமொழி படைப்புகள் சிலவற்றை ஒப்பிட்டு தமிழ் ஏன் அந்நிலையை எட்டவில்லையென கட்டுரையாளர் ஆதங்கப்படுகிறார். தமிழ் இலக்கியவாதிகள் வெகு சனங்கள் எனப்படுகிற பெருவாரியான மக்களிடமிருந்து விலகி நிற்பதும், வெகு சனப்பிரச்சினைகளில் கவனங்கொள்ளாததும் அவர் சொல்லும் காரணங்கள். அதை மறுக்கமுடியாது. அதற்காக புலம்பெயர்ந்த இந்திய இலக்கியவாதிகள் -அபிலாஷைபொறுத்தவரையில் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்- எடுத்துள்ள நிலைபாட்டை இந்தியாவில் மாநில மொழிகளில் எழுதுகிறவர்களும் எடுக்கவேண்டுமென்பது அபத்தம். புலம்பெயர்ந்தவர்கள் எந்த மொழியில் எழுதினாலும் அவர்கள் சூழலைவத்துத்தான் எழுதமுடியும். அபிலாஷே சொல்வதுபோல அது வேரறுந்தநிலையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவை ஆங்கிலத்தில் எழுதப்படுவதால்தான் பலரும் அறிய நேர்ந்ததே தவிர அபிலாஷ் சொல்கிற அவர்களுடைய பண்பாட்டைத் துண்டித்துக்கொண்டது காரணமல்ல. சொல்லபோனால் அவர்களுடைய நூலிலும் இந்தியாவில் இன்றளவுமுள்ள சில சூட்சமங்களை சொல்லியே விலைபோகவேண்டியிருக்கிறது. மேலை நாடுகளில் பிரபலமான இந்திய எழுத்தாளர்களைத் தவிர்த்து காமா சோமாவென்று ஆங்கிலத்தில் வரும் நாவல்கள் விற்பனையாவது உள்ளே இருக்கும் சரக்கும் தரமானது என்பதாலல்ல நாவலின் அட்டைகளில் இன்றளவும் ஒரு ரிக்ஷாவோ, பத்து தலை நாகமோ, கையில் இரத்தம் சொட்டும் தலையுடன்கூடிய காளியோ இடம்பெற்றிருப்பதால் இருக்கலாம். அபிலாஷ் சொல்லும் ஸ்பானிய, துருக்கி நாவல்களைப்படித்தால் அங்கேயும் எழுத்தாளனின் மண் சார்ந்த கலாச்சாரமும் பண்பாடும் இருக்கத்தான் செய்கின்றன. பிறமொழிகளுக்குக் கொண்டு செல்கிறபோது பண்பாட்டளவில் வேற்று மொழிகாரர்களுக்கு புரியவைப்பது கடினமே. The Name of the Rose நூலில் பக்கத்திற்கு பக்கம் கிரேக்க மொழியோ லத்தீன் மொழியோ ஏராளமாக இருக்கும், ஆங்கில நாவல்களில் பிரெஞ்சு வாசகங்களோ, பிரெஞ்சு நாவலில் ஹீப்ரு மொழியோ நாவல் தன்மைகருதி சேர்க்கத்தான் செய்கிறார்கள். மேற்கத்தியர்கள் பண்பாடில் – காலனி ஆதிக்கம் -கலாச்சார ஆதிக்கம்- உலகாலவிய மயக்கமிருப்பதால் இக்குறைகளை சகித்துக்கொள்கிறோம். நாவலின் ஓட்டத்தில் வாசகன் அக்குறைகளை பொருட்படுத்துவதில்லை. நமக்கு நல்ல மொழி பெயர்ப்பாளர்கள் அமைவதில்லை என்பது உண்மையில் ஒரு குறை. தமிழ் படைப்புகளை இந்தியாவில் அவர் ஆங்கில இலக்கியத்தில் கரைத்துக் குடித்தவராகக்கூட இருக்கட்டும் அவர் ஆங்கிலம் பண்டித ஆங்கிலமாக இருக்குமே ஒழிய ஒரு படைப்புக்குரிய ஆங்கிலமாக இருக்கமுடியாதென்பது உண்மை. இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ இருக்கும் ஆங்கிலம் வேறு இந்திய ஆங்கிலம் வேறு. தமிழ் நாவலை தமிழறிந்த ஆங்கிலேயரோ அமெரிக்கரோ மொழிபெயர்த்தாலன்றி நமது படைப்புகளுக்கு விமோசனங்களில்லை. அப்படி அமைந்தால் பண்பாட்டளவில் மற்றவர்களுக்கு கடினமாக இருக்குமென்று நம்பக்கூடியவைகளைகூட கொண்டுபோகமுடியும். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாக இருந்தால் நாவலின் கடைசிபக்கங்களில் கள்ளருக்கும் பிள்ளைமாருக்கும் சில விளக்கங்கள் கிடைக்குமானால் கண்டிப்பாக வாசகர்கள் கிடைப்பார்கள்.
———————————-

மொழிவது சுகம்- டிசம்பர் -2

இந்தியாவிற்குப் போகிறோம்

இப்போதெல்லாம் பிரெஞ்சு நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கிறபோது இந்தியா என்ற வார்த்தையை மரியாதையோடு உச்சரிக்கிறார்கள். என்னைப்போன்ற வெளிநாடுவாழ் இந்தியர்களை ஏதோ காமா சோமாவென்று பார்ப்பதில்லை. மரியாதை உயர்ந்திருக்கிறதென்றே சொல்லவேண்டும். நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியர்கள் கூலிகளாக வெளிநாடுகளுக்குப் போனார்கள் காலம் மாறியது, பொருள்தேடி, பெற்ற கல்விக்கு உரிய ஊதியத்தைத் தேடி வெளிநாடுசெல்வதென்பது அண்மைக் காலம்வரை நடபெற்றது இப்போதும் தொடருகின்றது. முற்றாக நின்றுவிட்டதென்று சொல்வதற்கில்லை. ஆனால் வேறொரு திருப்பத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக சந்திக்கிறோம்.

வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வேலை தேடுகிற அதிசயத்தை ஒரு தினசரியில் வாசிக்க நேர்ந்தது.  பல்வேறு இந்திய நிறுவனங்களில் வேலை தேடி விண்ணப்பிக்கிறார்கள், வேலையிலும் அமர்த்தப்படுகிறார்கள். அண்மையில் கிடைத்த ஆய்வுத் தகவலின் படி தற்போது  சுமார் 40000 வெளிநாட்டினர் இந்தியாவில் பணிபுரிவதாக அறிகிறோம். இது கடந்த ஆண்டைவிட 20 விழுக்காடுகள் அதிகமென்றும் அதே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து ஏறுமுகத்திலிருப்பதால் உத்தரவாதமான பணிகளை முன்வைத்து இந்தியா வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் இனி மேலும் அதிகரிக்கலாம். அந்நியர்களின் 20 விழுக்காடு அதிகரிப்புக்கான நேர் காரணம் அந்நாடுகளுடன் ஒப்பீட்டளவில்  எப்போதும் கண்டிராத அளவில் இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் வளர்ச்சி.

இந்தியாவை நோக்கி அறிவுபுலம் சார்ந்தவகையில் நிகழும் இப்படையெடுப்பிற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு ஐரோப்பியநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவும் அதன் தொடர்ச்சியாக விளைந்துள்ள வேலையின்மை நெருக்கடியும் தலையாய காரணங்கள். பல காரனங்களை முன்னிட்டு மேற்குலகம் இந்தியாவில் முதலீடு செய்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி பொருட்களுக்கான செலவினங்கள் பலமடங்கு அதிகம் இந்தியாவில் மூளைஉழைப்பும் உடலுழைப்பும் மலிவாகக்கிடைக்கிறது- உபரிமதிப்பு கூடுதலாக முதலாளிகளுக்குக் கிடைக்கிறது. ஆக பெரும் நிறுவனங்கள் இந்தியாபோன்ற நாடுகளைத் தேடிவர அவர்களோடு மூளைஉழைப்புக்கான வேலைகளைத்தேடி மேற்கத்தியரும் இந்தியா வருகின்றனர். இந்தியருக்குப் போட்டியாக தங்கள் உழைப்பை இந்தியச்சந்தையில் விற்கவும் செய்கிறார்கள்.

2008லிருந்து இந்தியாவில் வங்கிகள் நிதி நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலைகள், சுகாதாரம், சுற்றுலா, கல்வியென பலதுறைகளில் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நிறுவ
ங்கள் இந்தியாவில் மேற்குலக நாடுகளுக்கு ஈடான ஊதியத்தையும் இப்போது வழங்கத் தயாராக உள்ளநவாம். வெளிநாடுவாழ் இந்தியர்கள்மீதான மரியாதையும் இப்புதிய சூழ்நிலையால் கூடியுள்ளதென சொல்லவேண்டும்.

மின்னஞ்சல்களும் மின் புத்தகங்களும்

சுற்றுபுறசூழல் என்ற பெயரில் காகிதங்களின் உபயோகத்தை குறைப்பதென்று முடிவெடுத்து வங்கிகள், அரசுத்துறைகள், போக்குவரத்து துறைகளென பலவும் கணினிமயமாக்கப்பட்டுவிட்டது. அனைத்து பிரச்சினைகளுக்கும் காகிதமின்றி மையின்றி தீர்வுகள் கிடைக்கின்றன. ஏமாறும் மனிதர்களை அதிகம் ஏய்ப்பதற்கும் கணினி மயமாக்கப்பட்ட உலகம் உதவுகின்றதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இளம்வயதில் காதல் கடிதத்தைமுடித்து சம்பந்தப்பெண்ணிடம் கொண்டு சேர்ப்பதென்பது பெரிய கலை. நிறைய சாமர்த்தியம் வேண்டும், கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தால் போயே போச்சு. இந்த அனுபவங்களை சொல்லும் திறமையிருந்தால் சிறுகதையாகவோ, நாவல் வடிவமாகவோ சுலபமாகக் கொண்டுவரமுடியும். கடிதத்தைச் சேர்ப்பிப்பது ஒருபக்கமெனில் சம்பந்தப்பட்ட பெண்ணை ஓடைபக்கமோ, விளைந்தகம்புகளுக்கிடையிலோ, அந்தி சாய்ந்ததும் வைக்கோல் போருக்குப்பின்புறம் கிராமங்களில் சந்திப்பதென்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் மெரினாவிலும், எழும்பூர் மியூசியத்திலும், மகாபலிபுரத்திலும் காத்திருப்பதும் சந்திப்பதும். இப்போதெல்லாம் காதலன் இந்தியாவிலிருக்கிறான், காதலி இஸ்ரேலில் இருக்கிறாள். அவள் கருப்பா சிவப்பா, பாட்டியா குமரியா என்பது இவனுக்கும் தெரியாது. இவன் எப்படி யென்று அவளுக்கும் தெரியாது. இனி வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

மைகொண்டு தாளில் அன்புள்ள மான்விழியே ஆசையில் ஒரு கடிதம், என்றெல்லாம் எழுதிக்கொண்டிருந்தகாலத்தில் கைக்குக் கடிதம் கிடைத்தால், சில பெண்கள் கிழித்துப்போடுவார்கள், வேறுசிலர் உறவுகளிடம் சொல்ல, அவர்களும் அதிகபட்சமாக வீடுதேடிவந்து மிரட்டிவிட்டுப்போவார்கள். அமெரிக்க இளைஞன் ஒருவன் என்ன தைரியத்தில் SMS அனுப்பினானோ அதையும் ஆபாசமின்றி அனுப்பித் தொலைத்திருந்தால் ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் மன்னித்திருக்கலாம், இந்தியாவிற்கு வந்த பையனை ஏர்போர்ட்டில் வைத்து அமுக்கிக்கொண்டுபோயிருக்கிறார்கள்.

அண்மையில் சோனி வெளியிட்டிருக்கும் மின்புத்தகம் கையளவு உள்ளது எடைகூட 200 கிராம் என்றார்கள். சட்டைப்பயில் போட்டுக்கொள்ளலாமாம். 1200 புத்தகங்களை அதில் வாசிக்கமுடியுமென்றார் விற்பனையாளர். கண்களை உறுத்தாத ஒளியில் படிக்க இதமாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு மின்புத்தகத்தை வாங்க ஆசைபட்டு தள்ளிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு வருடமும் இதைவிட நல்லதாக அறிமுகப்படுத்துவார்களா? விலை குறையுமா என்றெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது. இவ்வருடம்?
————————————————-

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

Strasbourg

 

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம். அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

 

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது  ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில்  எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள்.  அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும்  இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

 

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

 

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை  விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு  அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.

 

 

———————————————–

கதையல்ல வரலாறு -2-1

நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்லை) மான நஷ்டமாகக் கொடுக்க வேண்டுமென்றும், 4000 வராகன் அபராதம் கட்டவேண்டுமென்றும், மூன்று வருடம் சிறைதண்டனையை அனுபவித்த பிறகு பிள்ளை பிராஞ்சு எல்லையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால் மூன்று வருஷ சிறைவாசத்துக்குப்பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பப்படவேண்டுமென்பதும்” தீர்ப்பின் சுருக்கம்.

நைநியப்பிள்ளை செய்திருந்த குற்றமென்ன? தண்டனையின் தீவிரத்தைப் பார்க்கிறபொழுது குற்றம் அசாதாரதனமானதென்கிற முடிவுக்கு எவரும் வரமுடியும். இழைக்கப்படும் குற்றமும் வழங்கப்படும் தண்டனையும் எப்போதுமே சமன் செய்யப்பட்டதாக வரலாறில்லை. வல்லான் வகுத்ததே வாய்க்கால் மட்டுமல்ல நீதியுங்கூட.  இங்கே நைநியப்பிள்ளை குற்றம் சாட்டப்படவர் என்றால், அவரை விசாரனை செய்யும் அதிகாரத்திலும் நீதி வழங்குமிடத்திலும் இருந்தவர்கள் அவர் மீது குற்றம் சுமத்தியவர்கள்: ஒருவர் கியோம் ஆந்தரே எபெர், மற்றவர் அவருடைய மகன்: குளோது ஆந்தரே எபேர்.

புதுச்சேரி காலனி அரசாங்கத்தின் முதல் கவர்னராக  இருந்தவர் பிரான்சுவா மர்த்தேன். திருச்சிராப்பள்ளியின் அப்போதைய நிர்வாகியாக இருந்த ஷெர்க்கான் லோடி, பிரெஞ்சு கூட்டுறவு சங்கம் புதுச்சேரியில் நிரந்தரமாய்த் தங்கி வியாபாரம் செய்யவும், சரக்குக்கிடங்குகள் கட்டிக்கொள்ளவும் 1673ம் வருடம் ஜனவரி மாதம் 2ந்தே அனுமதி வழங்குகிறார். பிரான்சுவா மர்த்தேனுக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடைத்தரகராகயிருந்து செயல்பட்டவர் சென்னையிலிருந்து பிரான்சுவா மர்த்தேனால் அழைத்து வர்ப்பட்டிருந்த தானப்ப முதலியார். பின்னாளில் தரகு தானப்ப முதலியார் என்றழைக்கபட்ட இம்மனிதரின் உழைப்பும், திட்டமிடலும் புதுச்சேரியை மட்டும் கட்டி எழுப்ப உதவவில்லை. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் இந்தியாவில் நிலைபெற்று தங்கள் பங்காளிகளைப்போலவே காலனி ஆதிக்கத்தை பிரெஞ்சுக் காரர்கள் கட்டி எழுப்பவும் அவை உதவின.. 1691ம் ஆண்டு தானப்ப முதலியார் இறக்கிறார். எல்லாக் காலங்களையும் போலவே  அப்போதும் தந்தைக்குப்பிறகு மகனுக்கு உத்தியோகத்தை வழங்குவதென்பது ஒரு சம்பிரதாயமாக இருந்துவந்திருக்கிறது. எனவே பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் தரகராக தானப்ப முதலியார் மகன் முத்தியப்ப முதலியார் நியமிக்கப்படுகிறார்.

33 ஆண்டுகள் புதுச்சேரிகவர்னராக இருந்த மர்த்தேன் – இடையில் ஆறாண்டுகாலம் (1693-1699)புதுச்சேரி ஆலந்து நாட்டினர் வசமிருந்தது – 1706ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ந்தே தேதி இறக்கிறார். அவருக்குப் பின் புதுச்சேரி கவர்னராக பதினான்காவது லூயியினால் நியமனம் செய்யப்பட்டவர் கியோம் ஆந்தரே எபேர் (Guillaume Andre Hebert).

இவரைபற்றி ஆனந்த ரங்கப்பிள்ளை நாட்குறிப்பு தொகுதி ஒன்றின் முன்னுரையில் அறிஞர் ஞானு தியாகு, “அந்த மனிதன் ஒரே முழுக்கில் கூடை மண் வாரவேண்டுமென்கிற எண்ணமுடையவர். எவ்வளவு சுருங்கின கால அளவில் திரண்ட ஆஸ்தியைச் சம்பாதிக்கமுடியுமோ, அவ்வளவையும் சம்பாதிக்கிற எண்ணத்துடன் புதுச்சேரிக்கு வந்தார்”, என்றெழுதுகிறார்.

ஆகவே வந்தவர், கூட்டுறவு சங்க நிர்வாகத்தில் பணம் காய்க்கும் மரங்கள் எவையெவையென பட்டியலிட்டார். அதில் மாட்சிமைமிகுந்த மன்னராட்சிக்கு என்ன இலாபமென பார்ப்பதற்கு முன்னால் தம் பங்கிற்கு எவ்வளவு சம்பாதிக்கமுடியுமெனவும் கணக்கிட்டார். அதனை அதிகரிப்பதற்கு செய்யவேண்டிய வழிமுறைகளும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளும் பற்றி நன்கு யோசித்து வரையறுத்தவர் செயலில் இறங்கவும் தயங்கவில்லை. வந்தவர் கவனத்திற்கு முதலில் தெரிய வந்த தகவல், கூட்டுறவு சங்க வர்த்தகத்தில் முத்தியப்ப முதலியாருக்கிருந்த செல்வாக்கும் முக்கியத்துவமும்.

*     *

– உள்ளூர் வியாபாரிகள் வந்தார்களா?

– முத்தியப்ப முதலியார் ஊரில் இல்லையாம்.

*     *

– விலை எப்படி? குறைத்து கேட்டிருக்கலாமே?

– அப்படித்தான் நினைத்திருந்தோம், ஆனால் முத்தியப்ப முதலியார்தான் நியாயமான விலை, கொடுக்கலாம் என்கிறார்.

*     *

– தவக்கமில்லாமல் சரக்கு நாளை கப்பலில் ஏற்றப்பட சாத்தியமுண்டா

– தோணி செலுத்தும் செம்படவர் முத்தியப்ப முதலியார் வந்தால்தான் கடலில் இறங்குவார்களாம்

*     *

முத்தியப்ப முதலியார்மீது தேவயின்றி கோபம் வந்தது. முன்பிருந்த கவர்னர் இந்த மனிதரைத் தேவையின்றி வளர்த்துவிட்டாரோ என்ற சந்தேகம். காப்ரிகளை எப்படி வைத்திருக்கவேண்டுமென ஆந்த ஆளுக்கு ஏன் விளங்காமல் போயிற்று எனக் கோபப்பட்டார். இதை இப்படியே விடக்கூடதெனத் தீர்மானித்தவராய், முத்தியப்ப முதலியாருக்கு துணையாக இருக்கும் கணக்கனைக் கூப்பிட்டு அனுப்பினார். அவரும் தலையை சிலுப்பிக்கொண்டு வந்து நின்றார்.

– சிப்பாய் ஒருவனை உடனடியாக அனுப்பி முத்தியப்ப முதலியாரை என்னை வந்து பார்க்கசொல், என்றார்.

போன கணக்குப்பிள்ளை இரண்டு மணி நேரத்தில் குடுமியை முடிந்துகொண்டே திரும்பவும் வந்தார். இன்றைக்கு அவரது தாயாருக்கு திதியாம். வீட்டில் அவசியம் இருந்தாகவேண்டுமாம். நாளை வந்து பார்க்கிறேன், என்று முதலியார் கூறியதாகத் தெரிவித்தார். அவர் வேறொன்றையும் தெரிவித்திருக்கவேண்டும். எதற்காக வீண் வம்பென நிறுத்திக்கொண்டார். வரமாட்டேனென்று கூறிய முதலியார், “ஏண்டா மாடு பன்றிகளை தின்கிறவனுக்குத்தான் புத்தியில்லை, உங்க கணக்கனுக்கு எங்க போச்சு புத்தி. எங்க வீட்டிலே விசேஷம்ணு அவனுக்குத் தெரியுமே, எப்படி சொல்ல மறந்தான்? என இடக்குத்தனமாக முதலியார் கேள்வியெழுப்பியதையும் சிப்பாய் சொல்லியிருந்தான், கணக்குப்பிள்ளை அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களை உணர்ந்திருக்கவேண்டும், கவர்னரிடம் கூறாமல் தவிர்த்தார்.

– சரி சரி நீ போ, என்ற கவர்னர் ஆந்தரே எபெருக்குக் கோபம். உடனே முத்தியப்ப முதலியாரை கட்டி இழுத்துவந்து சந்தியில் தூக்கில் போடலாமா என்று கூட நினைத்தார். அவர் மூளை வேறுவிதமாக யோசித்திருந்தது. இந்தக் காட்டுமிராண்டிகளை மேய்த்துவிட்டு தாய் நாட்டுக்குத் திரும்பும்போது முடிந்த அளவு செல்வத்தை அள்ளிபோகவேண்டும், அதற்கு வேண்டிய தந்திரங்களை கையாளவேண்டும் என்பதை புரிந்துகொண்டவுடன் கவர்னரின் கோபம் அன்றைக்குத் தணிந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கவர்னர் எபெர் தரகர் முத்திய முதலியாரை அழைத்திருந்தார். முத்திய முதலியாரும் கவர்னரின் உத்தரவை மதித்து கவர்னர் சமூகங்காண உடனடியாக வந்திருந்தார். வந்த முத்திய முதலியாரிடம் கவர்னர் ஐம்பது பேழைகளைக் கொடுத்தார். பேழைகள் ஒவ்வொன்றிலும் நன்கு சிவந்த பவழங்கள் இருந்தன.

– என்ன பார்த்தீரா?

– பார்த்தேன்.

– அவ்வளவும் ஜாதி பவழங்கள் எனக்குப் பரிசாக வந்தவை. அவற்றை விற்கலாமென தீர்மானித்திருக்கிறேன்.

– நல்லது.

– மணங்கு ஒன்றுக்கு 120 வராகன் போகுமென்று சொல்கிறார்கள். விற்க ஏற்பாடு செய்யுங்கள்.

சரக்கினைப் பெற்றுக்கொண்ட உள்ளூர், வெளியூர் வியாபாரிகளை வரவழைத்து பவழங்களைக் காட்டியபோது, அவர்கள் சரக்குகளை பரிசோதனை செய்து சரக்குகள் நல்ல ஜாதியில்லை என்றார்கள். மணங்குக்கு 106 வராகனுக்குமேல் ஒரு குண்டுமணிகூட பெறுமதி இல்லையென தெரிவிக்கின்றனர். கவர்னர் எபெர் குறைந்தது 110 வராகனாவது வேண்டுமென பிடிவாதமாக இருந்தார். முத்தியப்ப முதலியார் வியாபாரிகளை சமாதானம் செய்து மணங்கிற்கு 110 வராகன் என முடித்துவைத்தார். சம்மதித்த வியாபாரிகள் போகிறபோது சண்டையிட்டுக்கொண்டுப் போனது கவர்னரின் காதிற்கு எட்டியது. கவர்னர் பிரச்சினைகள் அனைத்திற்கு தரகர் முத்தியப்ப முதலியாரே காரணமென நினைத்தார். முதலியார் நினைத்திருந்தால் மணங்கொன்றிர்க்கு தமக்கு 120 வராகன் விற்றுத் தந்திருக்கலாம், தவிர வியாபாரிகளை எப்படி வழி நடத்துவதென்பதைக்கூட அவர் அறியாமலிருக்கிறார் என்றெண்ணி தரகர் பதவிக்கு அவர் சரியான ஆளல்ல என்ற முடிவெடுத்து தமக்கு விசுவாசமாக இருக்கிற நைநியப்பிள்ளையை அன்றுமுதல் தரகராக நியமிக்கிறார்.

(தொடரும்)

 

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம். அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது  ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில்  எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள்.  அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும்  இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை  விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு  அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.
Strasbourg Christmas market:
http://www.google.fr/search?q=strasbourg+march%C3%A9+de+noel&hl=fr&client=firefox-a&hs=DUy&rls=org.mozilla:fr:official&channel=s&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=MFPTTqGyBYSUsgaN9vDJDA&ved=0CGAQsAQ&biw=1143&bih=676
———————————————–

 

 

 

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-11

ஸ்ட்ராஸ்பூர்

Strasbourg (ஸ்ட்ராஸ்பூர் என்று உச்சரிக்கவேண்டும்)நான் வசிக்கின்ற நகரம அல்ஸாஸ் என்ற பிரதேசத்தின் முதலாவது முக்கிய நகரம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைநகரமுங்கூட. பிரான்சுநாட்டின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்நகரம் மக்கட்தொகையில் ஏழாவது மிகப்பெரிய நகரம். 1949லிருந்தே ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமைகேந்திரமாக இருப்பதோடு 1992லிருந்து ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றப் பீடமாகவுமுள்ளது. அதுபோலவே ஐரோப்பிய மனித உரிமை ஆணையத்தின் தலமையகம் மற்றும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஆகியவைகளும் இங்கு அமைந்துள்ளன.

ஐரோப்பாவின் அல்லது ஐரோப்பியர்களின் தலைநகரம் என்றபெருமைக்கு நகரத்தின் பூகோள இருப்பு காரணம். அல்ஸாஸ் பிரதேசம் ஜெர்மன், ஸ்விஸ் நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது, குறிப்பாக வடகிழக்கிலும், கிழக்கிலும். ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து ஜெர்மன் நாட்டின் கேல் (Khel)நகரை பிரிப்பது ரைன்(Rhin) நதி. பாலத்தை நடந்தே கடந்துவிடலாம். பிரபஞ்சன், கி.அ. சச்சிதானந்தன், இந்திரன், காலச்சுவடு கண்ணனென தமிழ் படைப்புலகமறிந்த ஒரு சிலர் பாலத்தைக் கடந்திருக்கிறார்கள். சுவிஸ் நாட்டின் பாசல் (Basale) நகரமும் அல்ஸாஸ் பிரதேசத்தின் எல்லையில்தானுள்ளது. ஸ்ட்ராஸ்பூரிலிருந்து 120 கி.மீ அல்லது அதிகபட்சமாக ஒரு மணிநேர பயணத்தில் சுவிஸ் நாடு அதுபோலவே இரண்டரை மணி நேர பயணத்தில் பிராங்பர்ட் அல்லது லக்ஸம்பர்க், நான்கு மணி நேர பயனத்தில் பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் நேரத்தில் பாதியை ஒதுக்கினால் இத்தாலியிலோ? கூடுதலாக ஒருமணிநேரத்தை ஒதுக்கினால் லண்டனிலோ இருக்கலாம். அல்சாஸ் மக்கள் அல்சாசியர்கள் எனப்படுவர். பேசும் மொழி ஜெர்மன் வாடைகொண்டது, பெயர் அல்ஸாஸியன். பிரெஞ்சு மொழி ஆதிக்கத்தால் தனது செல்வாக்கை இழந்திருந்த அல்ஸாஸ் மொழியை உயிர்ப்பிக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகின்றன. நாடகங்கள், சினிமாக்கள், இலக்கியங்களென அல்ஸாஸ் மொழியில் எல்லாமுண்டு.. அல்ஸாஸ் மக்கள் தங்களுக்குள் அல்ஸாஸ் மொழியை மட்டுமே பேசுவார்கள். அல்ஸாஸ் மொழியை அறியாத பிரான்சு நாட்டின் பிறபகுதி மக்கள் அல்ஸாஸ் கிராமங்களில் மருத்துவர்களாகவோ, கிராம ஊழியர்களாவோ பணியாற்றுவது கடினம். ஆனால் நகரமக்களும் இன்றைய தலைமுறையினரும் இரண்டு மொழியிலும் தேர்ச்சிபெற்றிருப்பார்கள்.

அல்ஸாஸ் புராணத்தைவிட்டுவிட்டு மீண்டும் Strasbourg நகரத்திற்குவருகிறேன். My name is Rose நாவலின் கதைசொல்லி உலகின் கம்பீரமான தேவாலயங்களென நான்கு தேவாலாயங்களின் பெயர்களை குறிப்பிடுவான். அவற்றுள் முதலாவது Strasbourg, மற்ற மூன்று உள்ள நகரங்கள் Chartres, Bamberg, Paris.

Cathளூdrale Notre-Dame de Strasbourg ஒரு கத்தோலிக்க தேவாலயம், கோத்திக் (gothique)வகை கட்டிடக்கலை சார்ந்தது. உலகில் இரண்டாவது மிக உயரமான (147 மீட்டர்கள்) தேவாலயம். பிரான்சு நாட்டின் நொர்மாண்டி பிரதேசத்தைச்சேர்ந்த ரூவன் (Rouen) நகர் தேவாலயம் (உயரம் 157 மீட்டர்) முதலாவது. ஸ்ட்ராஸ்பூர் தேவாலயம் 1647ல் ஆரம்பித்து 1874ல் கட்டி முடிக்கப்பட்டது. பிற ஐரோப்பிய நகரங்களைப்போலவே ஸ்ட்ராஸ்பூர் நகரமும் கிருஸ்துமஸ் காலங்களில் கோலாகலமாக இருக்குமென்றாலும் கிருஸ்துமஸை முன்னிட்டு பங்குபெறும் கடைகள் விசேடமானவை. பண்டிகை நாட்களில் நாங்களும் ஒரு விற்பனை பிரிவை அங்கே செயல்படுத்துவதுண்டு. கடந்த இருபது ஆண்டுகளாக ஒவ்வொடு வருடமும் எங்களுடைய விற்பனை அகத்தில் இந்தியக் கைவினைபொருட்கள், புதுச்சேரி ஆரோவில் பிரதேசத்திலிருந்து இறக்குமதிசெய்யப்படும் ஊதுபத்திகள் ஆகியவற்றை விற்பனைசெய்கிறோம். எனவே நவம்பர் மாதமும் டிசம்பர் மாதமும் எனக்கு மிகவும் நெருக்கடியான மாதங்களென சொல்லவேண்டும். இரவு வீடுதிரும்ப பத்துமணி ஆகும். வருடத்தின் பிற நாட்களில் எனது மற்ற கடைக்கு அதிக பட்சமாக நான்கு அல்லது மணிநேரத்தை மட்டுமே ஒதுக்குகிறேன். கடையின் அக்கவுண்ட், பொருட்களை வாங்குவது, விலையைத் தீர்மானிப்பது போன்ற நிர்வாகப்பணிகளை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். எனது மனைவி, மைத்துனர் இருவரும் பிறவற்றைப்பார்த்துக்கொள்கிறார்கள்.வாசிப்பதை நேரம் கிடக்கும்போதும், முன்னிரவுகளுக்கென்றும் ஒதுக்கிவிட்டு எழுதுவதை அதிகாலையில் வைத்திருக்கிறேன். இரவில் விழித்திருப்பது குறைவு. பத்துமணிக்கெல்லாம் உறங்கிவிடவேண்டும், அர்த்தராத்திரியில் மனைவிமீதான பிரேமை எழாமலிருக்கவேண்டும், வராமலிருந்தால் உறங்கப்பிரச்சினையில்லை.

Strasbourg Christmas market: http://www.google.fr/search?q=strasbourg+march%C3%A9+de+noel&hl=fr&client=firefox-a&hs=DUy&rls=org.mozilla:fr:official&channel=s&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=MFPTTqGyBYSUsgaN9vDJDA&ved=0CGAQsAQ&biw=1143&bih=676

—————

———————————————–

மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்

இதற்கு முன்பும் தோல்விகளை மகா சன்னிதானம் சந்தித்திருக்கிறார். விழுந்த வேகத்தில் எழுந்துமிருக்கிறார். இம்முறை மனமல்லவோ விழுந்திருக்கிறது. இனி கற்பதற்கு எதுவுமில்லையென இறுமாந்திருந்தபோது, மிகப்பெரிய பாடத்தை வாழ்க்கை போதித்திருக்கிறது. குடும்ப வாழ்க்கையிலும் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, நுகத்தடியில் எருதுகளை வலம் இடம் அறிந்து பூட்டியவர்  இப்பொழுது சாட்டையை கையிலெடுக்க பயம். சாட்டையைக் கையிலெடுத்து பழகிய கைக்குச் சோர்வு ஒருபக்கமெனில், ஓங்கிய கையைத் தடுத்து ஓரிரு வார்த்தைகளை இவருக்கு எதிராக உதிர்ந்தாலும் போதும், உடல் கூசிப்போகும். குருபீடத்திலிருத்து இவர் இறக்கப்பட்டது குறித்த கவலைகளோடு வாரிசுகளின் பார்வையில் தெறிக்கிற கோபமும், துச்சமும் வேறு கழுத்தை அன்றாடம் நெறிக்கின்றன.

எல்லாம் நேற்று நடந்ததுபோல இருக்கிறது. பூஜ்யத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சாதுர்யமும் சவடாலும் இருபதாம் நூற்றாண்டிற்குத் தோதான ஆசாமியென்ற பெயரை வாங்கித்தந்திருந்தது. தொட்டதெல்லாம் துலங்கிற்று. ஆடுபுலி ஆட்டத்தில், இவர் மட்டுமே புலி – பசித்த புலி. எத்தனை ஆடுகளை குரல்வளையைக் கடித்து உயிரை வாங்கியிருப்பார், இரத்தம் தோய காடு கரம்பைகளிலும், முட்புதர்களிடையேயும் இழுத்துச்சென்று வாய்கொள்ள கவ்வியும், பற்களால் கிழித்தும் மென்றும் விழுங்கியும் பசியாறியிருப்பார். கடைவாய்ப்பற்களில் நிணச்சாறு வழிய முகவாயை அடிமரத்தில் துடைத்திருப்பார், நிதானமாக அசைபோட்டிருப்பார். சோர்வுகளில்லை, கண் துஞ்சலில்லை. திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்,  வெற்றியின் களிப்பு உதட்டோரங்களில் ஆரம்பித்து பிடறி மயிர்க்கால்கள்வரை சிலுசிலுவென்று உணரப்பட்டிருக்கிறது. மலமிருக்க புதருக்குப்பின்னால் ஒதுங்கியது போக, கழிவறைக்குக்கூட தொண்டர்கள் பொன்வேய்ந்து அழகுபார்த்தார்கள். படகைச் செலுத்துவதில் சாமர்த்தியம் அதிகமென்று ஊர்மெச்சியது. எதிர் நீரோட்டத்திற்கும் சுழலுக்கும் வெகு எளிதாக தப்பித்ததுண்டு. காலம் பொல்லாதது. வழக்கம்போல இந்த ஆனையின் அடிசறுக்கவேண்டுமென்பதற்காக காரணங்களுக்கென காத்திருந்திருக்கிறது. ஆகப் படகு கரைதட்டிவிட்டது. காரணங்கள்: ஒன்றா இரண்டா? திசைகள்தோறும் இருக்கின்றன. இங்கே கொலையாளியும் கொலையுண்டவரும் ஒருவரே என்றால் நம்பவா முடியும்.

அழைப்பு மணி பொத்தானை நான்கு அழுத்தினார். தலையை படியவாரி, சந்தனப்பொட்டும் சாம்பல் வண்ண சபாரியுமாக எட்டிப்பார்த்த காரியதரிசி ‘கூப்பிட்டிங்களா! என்றார். சில நொடிகள் தம்மை ஏறிட்டுப்பார்ப்பதை காரியதரிசி சிலிர்ப்புடன் ஏற்றுக்கொண்டார். அச்சு அசலாக தாம் செல்லமாய் வளர்க்கும் நாயின் முகவாயைப் போலவே காரியதரிசியின் முகவாயும் இருப்பதாக ஒருமுறை கூறியிருந்தார். அவர் தலையை உயர்த்திய மாத்திரத்தில் அழைப்பின் காரணத்தை ஊகிந்திருந்த காரியதரிசி, ‘எதுவும் வரலீங்க. அம்மாவையும் கேட்டேன், இல்லைண்ணு சொன்னாங்க’, என்றார். ‘சரி நீ போ’ என்றதும்” காரியதரிசி தலையைத் தாழ்த்தி விடைபெற்றார். வெளியேறி கதவை மூடும் வேளை, ‘நில்லுய்யா! என்றார். காரியதரிசி நின்றார். ‘வா!’, என்றார். வந்தார். தனக்கும் அவருக்குமான இடைவெளி சாசுவதமானதென்பதைப்போல பாதங்களை யோசித்து எண்ணி நான்கடிகள் வைத்த காரியதரிசி, தோராயமாக தமது மனதிற்குள் கிழித்திருந்த எல்லைக்கோட்டுக்குள் நின்றார். “நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கா?, அதட்டல்போல பிறந்த குரலுக்கு “ம்” என்ற முனகலைத் தொடர்ந்து காரியதரிசியின் தலை காற்றுக்கு ஆடும் கிளைபோல இரண்டொருமுறை அசைந்து கொடுத்தது. தொடர்ந்து, “பார்சலை நீதான் வாங்கணும். நேரே இங்கே கொண்டுவரணும், ஒருத்தர் கிட்டேயும் இதுபற்றி மூச்சுவிடக்கூடாது”, என்று கோர்வையாக வாக்கியங்களைக்கூறி அமைதியானதும், மறுபடியும் காரியதரிசியிடமிருந்து தலையாட்டல்கள். அடுத்து ‘நான் போகலாமா?’ என்ற கேள்வியையும், ‘நீ போகலாம்’ என்ற பதிலையும் இருவர் பார்வைகளும் நடத்தி முடித்தன. இவருடைய கட்டளையை மனதில் எழுதிக்கொண்டவராக கால்களை பின்வைத்து பவ்யமாக வணங்கி காரியதரிசி வெளியேற, கதவு மூடிக்கொண்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. எதிரியிடம் பீடத்தை தொலைத்திருந்த தினம்.  அக்கறையுடன் அனுதாபம் தெரிவிக்கவந்தவர்களைக் காட்டிலும், மீசையில் மண் ஒட்டியிருக்கிறதா என்று பார்க்கவந்தவர்கள் அதிகம். எல்லோரும் புறப்பட்டுப்போனதும், இவரது பிரத்தியேக தொலைபேசிகளையெல்லாம் துண்டிக்கும் படி ஆணைபிறப்பித்துவிட்டு இவரது நெருங்கிய சகாவோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான், காரியதரிசி தன்னுடைய செல்லிடபேசியை தூக்கிக்கொண்டுவந்தார். அமெரிக்காவிலிருந்து போன் என்றார். காரியதரிசியை வெளியிற் போகச்சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த நண்பரிடம், ‘என்னவென்று கேளேன்’- என்றார். வாங்கிய நண்பர் ஓரிரு நொடிகளுக்குப்பிறகு, ‘கடைசியா ஒரு லைசென்ஸ¤க்கு அரசாங்கத்திடம் சொல்லி ஏற்பாடு செஞ்சு கொடுத்தோமில்லையா, அந்த ஆள். உங்கக்கிட்ட மட்டும்தான் பேசுவாராம்.

‘உனக்குத் தெரியாத ரகசியமா? என்னன்னு நீயே விசாரிச்சுட்டு சொல்லு..”

தொலைபேசி உரையாடல்  உதடுகளில் ஏற்ற இறக்கங்களும், இடைக்கிடை சன்னமான வார்த்தைகளுமாக  நான்கைந்து நிமிடங்கள் நீடித்திருக்கக்கூடும். இவர் ஓரளவிற்கு யூகித்திருந்தார். இருந்தபோதிலும் நண்பர் சொல்லட்டுமென காத்திருந்தார். தொடர்பு துண்டிக்கப்படவும், நண்பர் இவரது திசைக்காய் திரும்பினார்.

– ‘ஏதோ அன்பளிப்பொன்று சென்னைக்கு வந்து சேர்ந்துட்டுதாம், வீட்டுக்கு எப்ப அனுப்பிவைக்கட்டுமென்று கேட்கிறார்கள்..

 

– எந்த எழவும் இப்போது வேண்டாமென்று சொல், ஏற்கனவே தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.

– என்ன செய்வது நேற்றே அனுப்பியாச்சாம். உங்கள் துணைவியார் பெயருக்கு, வீட்டு முகவரிக்கு..

– போய்யா, போய் உன்வேலையைபாரு. போனைக்கூட ஒழுங்காக கையாளத் துப்பில்ல.

– அனுப்பிட்டேன்னு சொல்லும் போது என்ன பண்ணமுடியும்.

– இப்படி சொல்லி சொல்லியே, நீங்க.. போய்டுவீங்க.

 

– ஏதோ இந்த நிலமைக்கு நாங்கதான் காரணங்கிற மாதிரி பேசறீங்க

– நேற்றுவரை நீ இப்படி பேசினவனில்லை, இப்போ எங்கிருந்து ஒனக்கு தைரியம் வந்திருக்கு? சுண்டல் விற்றவனையெல்லாம் பக்கத்துலே உட்காரவெச்சன்பாரு.

– இப்படி எடுத்தெரிஞ்சு பேசறது நல்லா இல்லை.  நம்ம பிரச்சினைகள் சந்திக்கு வந்தா நாளைக்கு எல்லோருக்குந்தான் கேடு.

– இன்னும் என்ன நடக்கனும்னு எதிர்பார்க்கறே.

– நேரம் சரியில்லைன்னா, வார்த்தைகள் கூடவா யோசிக்காம வரணும். எங்களையெல்லாம் பகைச்சுகுகிட்டா உங்களுக்கு நல்லதில்லைன்னு சொல்லவந்தேன்.

– என்ன மிரட்டறியா? குரல்வளையை அறுத்து இங்கேயே புதைச்சுடுவேன், நாயே வெளியிலே போ

நண்பர் போய்விட்டார். போனாலும் வருவாரென்று இவருக்குத் தெரியும்.

அண்ணாந்து உட்தளத்தைப் பார்த்தார். உத்திரங்களையும் பிறவற்றையும் பலமுறை எண்ணியாயிற்று. இப்பொழுதெல்லாம் மேலே அண்ணாந்து பார்த்தாலே எண்ணத் தொடங்கிவிடுகிறார். விசாலானமான அறை, தரையில் கடப்பைக்கற்கள், இரத்தின கம்பளம். மெருகுக்குலையாமல் பாதுகாக்கப்படும் பொன்வேய்ந்த கட்டில்கள், செதுக்கு வேலைபாடுமிக்க நாற்காலிகள், அலங்கார மேசைகள் அவற்றின் வண்ணப் பூச்சில் தீப்பறியதுபோல வெள்ளித் தகடுகளாய் மினுங்குகிற குழாய் விளக்கின் ஒளி. அலங்காரமான கண்ணாடி அலமாரி,  உள்ளே வெள்ளியும் பொன்னுமாய் இழைத்து இழைத்து உருவாக்கியிருந்த விருதுகள் கேடயங்கள், ஒருகளித்த நிலையில் புத்தகங்கள். அலங்காரப் பொருட்கள், தவிட்டு நிறத்தில் சுவர், சுவரில் பூர்வாசிரமத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட முதல் நிழற்படம். அவ்வளவும் அலுத்திருந்தன.

கண்களில் பணிவும், ஈறுகடித்த பற்கள் தெரிய முக தரிசனத்திற்காக பரிதவிப்புடன் காத்திருக்கும் மனிதர்களை இரண்டு நாட்களுக்கு முன்புவரை சுமந்த வீடு. நடைவாசல் திறக்காதா, மகா சன்னிதானத்தின் பார்வை படாதா என்று பயபக்தியுடன் காத்திருந்த பக்தர்களில்லை. சலவை மணம் கிஞ்சித்தும் குறையாத ஆடைகளின் சலசலப்புகூட நிசப்தத்தைக் கு¨லைத்துவிடலாம் என்பதுபோல அச்சத்துடன் நிற்பார்கள். இவர் விழிப்பைக்கூட கலைத்து விடக்கூடாதென்பதுபோலவும் இவர் கால்களை நலன் விசாரிக்க வந்தவர்கள்போலவும் தரையையில் பாதியும் அவர் கால்களில் பாதியுமாக பார்வையை பங்கிட்டிருப்பார்கள். எழுந்தவர் தடுமாறி மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார். இந்த வயதிலும் பிறர் துணையின்றி அவரால் எல்லாம் செய்ய முடியும். ‘சோ’வென்று மழைபெய்து முடித்த நிலத்தில் இறுக்கமும், ஈரக்கசிவும் உடலில் இருக்கிறது, ஆனால் மனம் தான் நூலறுந்த பட்டம்போல நீரில் அமிழ்வதும் நிலத்தில் மோதுவதுமாக, இவர் துரத்தலுக்கு பிடிகொடுக்காமல் நழுவிச்செல்கிறது.

எப்பொழுதும் தலையை நாற்காலியில் அணைத்து சாய்ந்து உட்கார அவருக்குப் பிடிக்கும். பகல் நேரத்திலுங்கூட  அங்குள்ள அத்தனை மின்சார விளக்குகளும் பழுதின்றி முதல்நாள் ஜ்வலிப்புடன் எரியவேண்டும். பிரகாசத்தில் தொய்வு கூடாது, ஒளிநாக்குகள் விறைத்து நிற்கவேண்டும். அதைச் செவ்வனே செய்து முடிக்க திரும்பும் திசையெல்லாம் ஏவலாட்கள், சீடர்கள், நண்பர்கள், பிள்ளைகள். இனி ஒருவரும் வேண்டாம், விளக்குகள் உமிழும் ஒளியின் நிழலுட்பட. ஒளிகள் கடந்த கால அகங்காரங்களை, பெருமைகளை நினைவிற் கிளறி பெருமூச்சிடவைக்கின்றன.

கதவு மெள்ள திறப்பட்டிருக்கவேண்டும், முனகியது. மீண்டும் காரியதரிசி. தலைமட்டும் கதவிடுக்கில் சிக்கிக்கொண்டதுபோல நிற்கிறது. “ஐயா மணி அடிச்சீங்களா?’ காரியதரிசி.

– என்னய்யா வந்துச்சா?

– இல்லைங்க, வந்ததும் சொல்றேன். வேற ஏதாச்சும்?

– நீ கூட என்னை மறந்துட்டியா? இந்த நேரத்துலே நவதானிய கஞ்சிண்ணு ஒண்ணைக்கொடுப்பியெ இரண்டு நாளா என்ன ஆச்சு?

– நான் மறக்கலை. என்னாச்சுண்ணு வீட்டுலே கேட்கறேன்.

– கேட்கவேண்டாம் நீ போ.

தனிமை வேண்டியிருந்தது. தனிமையைச் கடைசியாக எப்போது சந்தித்தது? நினைவில்லை.  அந்திமாலையிலும், புலரும் காலையிலும் காணக்கூடிய பஞ்சுபோல காற்றில் அலைகிற இளம் இருள் யாருமற்ற அவரது தனிமைக்குப் பொருந்துகிறது. இந்த ஒற்றை இருப்பு இவராகத் தேர்வு செய்ததுதான். பாதகுறடுகளை கையிலேந்திநிற்கிற சேவகர்களையும், பல்லக்குப் பயணமும், பேரிகையின் அதிர்வும், முழவின் தும்..தும்மும் கசந்துவிட்டது. நான்கு சுவர்களுடனும் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. கணக்கின்றி அவர் வாழ்நாளில் இந்த அறையையும் நாற்காலியையும் மேசையையும் உபயோகித்திருக்கின்றார், குறைந்தது நாளொன்றுக்கு ஐந்து மணிநேரமாவது அவைகளுடன் கழித்திருக்க வேண்டுமென மனதிற்குள் கணக்கைப்போட்டார். எஞ்சியிருக்கிற நாட்களையாவது அவைகளுடன் கழிக்கவேண்டும்.

அவ்வப்போது தலையை நிமிர்த்தி எதிரிலிருந்த சுவரைப் பார்க்கிறார், இவர் எதிரே சுவர் பவ்யமாக நிற்பதுபோலவும், இவர் பேசுவதைக்கேட்க தயார் என்பதுபோலவும் காதுகள் விடைக்க நிற்கிறது. பேசவும் செய்கிறார். கோர்வையாக இல்லையென்கிறபோதும் சொல்லவந்ததை இரண்டொரு சொற்களில் தெளிவு படுத்தமுடிகிறது. சுவர்களும் இவரது  பழம்பெருமைகளை அவற்றின் இழப்புகளைக் கேட்டு சோர்வின்றி தலையாட்டுகின்றன. சிற்சில நேரங்களில் அவரது ஒருதலை உரையாடல் முனகலாகவும் பின்னர் விசும்பலாகவும் தேங்கி நிற்கிறபோது, அத்தடையை உடைப்பதோ அல்லது குறைந்த பட்சம் சீண்டும் வழக்கமோ சுவர்களுக்கில்லையென்பது கூடுதல் சௌகரியம். பிறகு இருவரும் கருத்தொருமித்தவர்களாய் உரையாடலை துண்டித்துக்கொண்டு அவ்விடத்தில் நிசப்தத்தை இட்டு நிரப்பி விடுவார்கள்.

சிலவேளைகளில் இத்தனிமையை அநியாயமாக அவரற்ற பிறர் தன்மீது சுமத்தியதாகவும் உணர்வதுண்டு.  அதுபோன்ற தருணங்களில் அகத்தில் மார்பில் அறைந்துகொள்வார். அதன் விளைவாக புறத்தில் விழிகளில் நீர் தளும்புவதும் – ஒன்றிரண்டு நீர்முத்துகள் இரப்பை விளிம்பில் மயிற்கால்களை சுற்றிவந்து பின்னர் விழிமூலையில் தயங்கி தயங்கி இறங்கவும் செய்யும். இப்போதும் அது நிகழ்ந்தது. துண்டை எடுக்க கைமுனையவில்லை. மனதை சமாதானபடுத்த உயிர்ப்பின் தன்னிச்சையான இயக்கம் செய்யும் உதவி. அழுவதற்கும் கொடுப்பினை வேண்டும். மனம் வெக்கையில் அவிய விம்மி அழுவது அவர் வாழ்க்கையில் அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது.  ஏதோ நினைத்தவராய் நாற்காலியைவிட்டு எழுந்து அறைக்கதவு வரை மெல்ல மெல்ல நடந்து வந்துவிட்டார். கதவின் தாழ்ப்பாளை திறக்கப்போனவேளை, வேண்டாம் என்பதுபோல மீண்டும் நிதானமாக நாற்காலிபக்கம் திரும்பிவந்தார். வியப்பு. சரீரமும் ஆன்மாவும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லையோ? கடந்த இரண்டு நாட்களாக ஓர் அந்நியனைப்போல தனது செயல்பாடுகளை வேடிக்கைப் பார்க்கின்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. சிறுவர் கை பொம்மைபோல சில நேரங்களில் சீராட்டப்படுகிறார், பல நேரங்களில் கேட்பாரற்று கிடக்கிறார். காலத்திற்குக்கூட இவரிடம் வன்மமிருக்கவேண்டும், அதுகூட எஞ்சிய வாழ்நாளை கனவுகளிலும் நம்பிக்கைகளிலும் தோய்த்து அசைபோட பணித்துவிட்டு ஒளிந்துகொண்டது. எங்கேயாவது தொலைந்து போ என்று விட்டுவிட்டார். அதைக் கண்டுபிடித்து பரணி பாடவெல்லாம் இப்போதைக்கு இயலாது, சரீரத்தில் அதற்கான தெம்புமில்லை. இவர் வாழ்ந்ததுதான் வாழ்க்கை என பிறர் கற்பிதத்தில் ஜீவித்திருக்கிற கடந்தகால வாழ்க்கையின்  ஒவ்வொரு கணத்தையும் நினைவூட்டுகிற நிலவையும், நட்சத்திரங்களையும், ஆற்றின் பாய்ச்சலையும், பெருவெடிப்பையும், பெருநதியின் சுழலையும் மறக்க எத்தனிக்கிறார். இயலாதபோது அத்துவானக் காட்டில் தன்னைக் கொண்டுவந்த சக்திக்கு பெயரிடத் தெரியாமல் குழம்பினார். இக்கொடுங்கனவிலிருந்து விடுவிக்கும் சூட்சமங்கொண்ட திறப்பு யாரிடத்தில் இருக்கும்? அவரது எதிர்கால இருப்பின் தலைவிதியை எழுதும் ஆற்றல் கிடைக்கவிருக்கும் திறப்பையும், அது கையில் கிடைக்கிற கால அலகினையும் பொறுத்தது. சுவரிலிருந்த சிங்கப்பூர் கடிகாரம் மணி பதினொன்றென அறிவித்தது. இரண்டு மணி நேரத்திற்குமேல் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூடிக்கிடக்கும் சன்னலை திறக்கலாமா? ஏசியை நிறுத்தி, கொஞ்சம் இயற்கை காற்றை சுவாசிக்கலாமென்ற எண்ணம் போயிற்று. ஒற்றை மனிதராக இவரது சுவாசத்தையே திரும்பவும் சுவாசிப்பதும், உள்ளிருக்கும் ஒவ்வொரு பொருளும் தத்தமக்கொரு வாசத்தை வாயிலடக்கி இவர்மீது துப்புவதும் எரிச்சலையும் அலுப்பையும் உடல் கொள்ள திணித்திருந்தது.

கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த காரியதரிசி தயங்கி நின்றார்.

– என்ன விஷயம்?

– டாக்டர் வந்திருக்கிறார்

– உள்ளே அனுப்பு.

– வாங்க டாக்டர், காலையிலே ஒன்பதுமணிக்கெல்லாம் வந்துடுவீங்களே இன்றைக்கு என்ன ஆச்சு?

– எதிர்பாராம ஒரு பிரச்சினை, வீட்டுக்குப் போன்பண்ணியிருந்தேனே?

– அப்படியா? இதற்கு முன்னாலே இப்படி பிரச்சினைகள் உங்களுக்கு வந்தததா ஞாபகமில்லை.

– மன்னிக்கணும், எனக்கு எப்போதும் நீங்கள் ஒரேமாதிரிதான், என்னை சந்தேகிக்கவேண்டாம். அப்படி எனக்கு சிக்கல்களென்றால் அவசரத்திற்கென இன்னும் இரண்டு டாக்டர்களை வச்சிருக்கீங்க. அப்படி இருக்கச்சே உங்களுக்கு  நான் தான் வரணுமென்று அடம்பிடிச்சா எப்படி? எல்லா நாட்களிலும் அது சாத்தியமா சொல்லுங்க. வாங்க வந்து இப்படி படுங்க. உடம்பைப் பற்றி சொல்லுங்க.

இவர் மௌனமாக இருந்தார். நாடி, இரத்தம் அழுத்தம் என்று ஆரம்பித்து வழக்கமான சோதனைகள் நடந்து முடிந்தன.

– உடம்பிலே எந்தக் குறையுமில்லை. வயதுக்குத் தகுந்த உடல்நிலைதான். ஆரோக்கியமென்றுதான் சொல்லணும்.

– டாக்டர் பக்கத்திலே வாங்க. எத்தனை வருடமா எனக்கு டாக்டரா  இருக்கீங்க, ஞாபகபடுத்தி சொல்ல முடியுமா?

– இதிலென்ன கஷ்டம் போன ஏப்ரலோட முப்பத்தெட்டு வருடங்கள் ஆகபோகுது.

– ஆமாம். முப்பத்தெட்டு வருடங்கள் ஆகுது. நீங்கள் டாக்டர் இல்லை. குடும்ப நண்பர் அதனாலே சொல்றேன். எங்கிட்டே இன்னொரு நோயிருக்கு, மருத்துவ பரிசோதனைகளோ, ஆய்வுக்கூட சோதனைகளோ கண்டறிவதற்கு சாத்தியமற்ற நோய். அந்த மலைப்பாம்பு என்னை கொஞ்சகொஞ்சமா விழுங்கி வருது. நேற்று ராத்திரி தலைமட்டும் தான் என்பதுபோல கனவு கண்டேன்.

– எனக்குப் புரியலை?

– புரியாது. அதற்கெல்லாம் மருத்துவபடிப்பு உதவவும் உதவாது. வாழ்க்கைதான் புரியவவைக்கணும். எனக்கே இப்பதான் புரிஞ்சுது, புரிஞ்சு என்ன புண்ணியம், ரொம்ப லேட்.

காரியதரிசி உள்ளேவந்தார்.

-என்னய்யா? டாக்டர் இருக்கும்போது உள்ளேவரக்கூடாதுண்ணு தெரியுமில்லையா?

– பார்சலொண்ணை எதிர்பார்த்திருந்தீங்களே வந்துட்டுது, அம்மா பேர்லேதான் இருக்குது, இப்போதான் கொடுத்துட்டுப் போனாங்க கையில் பிடித்துக் காட்டினான்.

– தூக்கி குப்பையிலே போடு.

– பிரிக்கவேண்டாமா?

– வேண்டாம்.

– சித்தே முன்னே ஏதோ நோயொண்ணு ரொம்பகாலமா இருக்குதுண்ணு சொன்னீங்களே, அதற்கான ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிச்சுட்டீங்கண்ணு சொல்லுங்க.

மருத்துவர் இங்கிதமற்று சிரித்தார். மகா சன்னிதானம் அமைதியானார். எதிரே சுவர் தமது காதுகளை விடைத்துக்கொண்டு, உமது புலம்பல்களை கேட்க தயாராக இருக்கிறேன் என்கிறது

மருத்துவரும் காரியதரிசியும் ஒருவர் பின்னொருவராக புறப்பட்டு போனதன் அடையாளமாக கதவு விசுக் விசுக்கென்று அசைந்து பின்னர் இறுக மூடிக்கொண்டது. சாய்வு நாற்காலியில் சென்று உட்கார்ந்தார். சுவரை மீண்டும் பார்த்தார், ‘எனது பிறவி நோயை குணப்படுத்திட்டேன் தெரியுமா? என்றார்.  சுவர் சிரித்தது.

அன்றிரவு மறுபடியும் இவரது அந்தரங்க எண்ணிற்குப் போன் வந்தது. தொலைபேசியின் மறுமுனையில் கரகரவென்று ஒரு குரல். ஐயா பார்சலை பிரிச்சீங்களா? உள்ளே என்ன இருந்ததுண்ணு தெரியுமா? மர்லின்மன்றோவின் ஸ்கர்ட். ஒன்றரை மில்லியன் டாலருக்கு ஏலத்துக்கு எடுத்தோம். நீங்கள் செஞ்ச உதவிக்கு  ஏதோ எங்களாலான சின்ன அன்பளிப்பு..  மகா சன்னிதானத்தின் கையியிலிருந்து தொலைபேசி நழுவியிருந்தது.

நன்றி: காலச்சுவடு நவம்பர் 2011

——————————–

 

மொழிவது சுகம் நவம்பர் 21:

எஸ் ராமகிருஷ்ணன்:

வழங்கும் இலக்கிய தொடர் பேருரைகள் நவம்பர் 21லிருந்து 27 தேதிவரை ஒரு வாரகாலம் தினமும் மாலை 6 மணிக்கு ஆழ்வார் பேட்டையிலுள்ள ரஷ்ய அறிவியல் மற்றிம் கலாச்சார மையத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திங்கள் தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை நாளுக்கொன்றென ஏழு இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார். நண்பர் எஸ்.ரா. நிகழ்த்தும் இவ்வுரைகள் ஏற்பாட்டாளர்கள் சொல்வதுபோல இளம்வாசகர்கள், கல்விப்புலம் சார்ந்து இலக்கியம் பயில்வோரன்றி இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டோர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற சொற்பொழிவுகளை அடிக்கடி நிகழ்த்துகின்றனர். தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கியத்தினை முன் வைத்து தொடர் சொற்பொழிவுகள் இதற்கு முன்பு நடந்திருக்கிறதாவென்று தெரியாது. நண்பர் எஸ்.ரா.விற்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தமிழ் படைப்புலகு கடமைப்பட்டிருக்கிறது.

நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் தளத்தில் அவரது மகளின் திருமண விழா படங்கள். காணக் கண்கொள்ளா காட்சி. பார்த்து மகிழ்ந்தேன். திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர் ஜெயமோகனின் வர்ணனையை வாசித்தால் திருமணத்தில் கலந்துகொண்ட அனுபவத்திற்கு உள்ளாவோம். அவருக்கே உரிய நடையில் மிக ழகாக நிகழ்ச்சியைச் சித்தரித்திருக்கிறார். புதுச்சேரியில் இருந்திருந்தால் நாஞ்சிலார் அழைக்காவிட்டாலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பேன். மணமக்களை வாழ்த்த அல்ல, வாழ்த்த அவருக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்குக்கிடைப்பார்கள். அவர் தயவில் நல்ல நாஞ்சில் நாட்டு சமையலை ஒரு பிடி பிடித்திருக்கலாம்.

வித்தியாசமான புத்தகவிழா

வருடம் தோறும் நவம்பர் மாதத்தில் 17-19 தேதிகளில் ஒரு வித்தியாசமான புத்தகவிழா ஒன்றை பிரான்சு நாட்டில் கொண்டாடுவார்கள். படைப்பிலக்கியத்தில் வாசகனை நகைப்பில் ஆழ்த்துகிற சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற பகுதிகளை உரத்து வாசிப்பதென்பது நிகழ்ச்சியின் கருப்பொருள். இம்மையக்கருத்துக்கு உகந்தவை என்பது உடல்மொழியால் சொல்லகூடியவையாக இருத்தல்வேண்டும். படைப்பிலக்கிய பொது மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக இருக்கவேண்டும். தனது வாசகனை மகிழ்விக்கவும் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கும் வல்லமை அவ்வெழுத்துக்களுக்கு இருக்கவேண்டும். கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும்  எனது சொந்தத் தொழில் சம்பந்தமாக பாரீஸ¤க்குச் சென்றவன் பாரீஸ் சொர்போன் பலகலைகழகத்தின் கலை பண்பாட்டுத்துறை சேவை ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் நிகழ்ச்சியில், 19ந்தேதி நிகழ்ச்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பியர் ழூர்து(Pierre Jourde) என்ற எழுத்தாளர் வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்திருந்ததாகக் கூறினார்கள். நன்கு அறியப்பட்ட மற்றும் அறியப்படாத எழுத்தாளர்களென இரு தரப்பினரின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. வாசிக்கப்பட்டவைகளில் அல்போன்ஸ் அல்லேஸ், மிகெல் தெ செவாந்த், இடாலோ கல்வினோ, டனியல் பென்ஸெக் போன்ற எழுத்தாள்ர்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. வாசித்த இருவரும் ஏற்கனவே, குறுந்தகடுகளில் ஒலிவடிவம் பெற்ற படைப்புகளுக்குக் குரல் கொடுத்தவர்கள். முன் வரிசையில் னric Chevillard. எதையும் நையாண்டிசெய்தே பபழக்கப்பட்டவர் Anti -novelist வகையறா என்கிறார்கள் (எனக்கு Anti -novel, New Roman, Modern novel, Post modern novel -விவாதத்திகுரியவை அனைத்துமே பழைய மொந்தையல்ல என்கிறார்கள்) இது பற்றி ஒரு தொடரை எழுதவேண்டும்.

தற்போதைய தமிழ் படைப்புகளில் நகைச்சுவை தேடவேண்டியிருக்கிறது. நகைசுவையாக எழுதுவதற்கு தனி ஆற்றல் வேண்டும். கல்கி எழுத்துக்களை நான் விரும்பிவாசிக்க நேர்ந்தது நகைச்சுவக்காகவே. கலைமணியின் எழுத்துகளில் தில்லானா மோகனாம்பாள், ராவ் பகதூர் சிங்காரம் இன்றளவும் எனக்கு தமிழில் விரும்பி வாசித்தவை. கடுகு என்கிற அகஸ்தியன், தேவன், துமிலன் போன்றோர் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். பாக்கியம் ராமசாமியைக்கூட கொண்டாடடலாம். அவரது அப்புசாமியும் சீதாபாட்டியும் சில கணங்கள் மகிச்சியாக வைத்திருக்க உதவுபவை. புதுமைபித்தன் சிறுகதைகளில் சமூகத்தையும் நடைமுறை வாழ்க்கையையும் போகிறபோக்கில் ஏளனம் செய்து நம்மைக் கடந்து செல்வார். நாம்தான் ஓடிச்சென்று அவரை பிடிக்கவேண்டும்.

Les neiges du Kilimanjaro (The snow of Kilimanjaro):

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் இச்சிறுகதையை (http://xroads.virginia.edu/~drbr/heming.html)  நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். ஆப்ரிக்காவுக்கு தமது மனைவியுடன் சபாரிக்கு வந்த இடத்தில் வலது காலில் முள்குத்தி புரையோடிப்போக படுக்கையில் கிடக்கும் எழுத்தாளன் தமது கடந்தகால நினைவுகளில் மூழ்கிறான். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமென்று நம்மவர்கள் சொல்வார்கள். அறுபது வயதுக்குமேல் அமர்நாத் பனிலிங்க தரிசினத்திற்குச்செல்கிறவர்கள் தங்கள் கடந்தகாலத்தை அசைபோட்டுபார்ப்பார்களாவென்று தெரியவில்லை. எழுத்தாளனுக்குள்ள சாபக்கேடு எல்லாவற்றையும் கேள்விக்குடுப்படுத்துவது? இங்கே கூடாரத்தில் கால் கட்டுடன் இருக்கும் எழுத்தாளன் முன்னே அவனுடைய பழைய உன்னதமான நினைவுகளைக் கிளறும் வகையில் பனிமூடிய கிளிமாஞ்சாரோ, நெருங்கும் அவனது மரணத்தை ஞாபகப்படுத்த வெளியே வட்டமிடும் கழுகுகள். தன்னைத்தானே சபித்துக்கொள்கிறான். கங்குல்போல அவனுள் உறையும் பழைய நினைவுகள், பின்னோக்கி அழைக்கின்றன.  எழுத்தில் கனியிருப்ப காயைமுன்னிருத்தியதற்காக வருந்துகிறான். ‘அரசியல், பெண்கள்,மது, பணம், கனவுகள்’ என்ற சுழலில் திக்கித் தவிக்கும் எழுத்தாளர்களின் ஒருவராக இக்கதையில் ஹெமிங்வே தம்மை அடையாளப்படுத்திக்கொள்வார். இச்சிறுகதை 1952ல் கிரிகிரிபெக்கும் ஏவா கார்டனரும் நடித்து திரைக்கு வந்திருக்கிறது. இப்போது இணைய தளங்களில் பார்க்ககிடைக்கிறது. கதையை சிதைக்காமல் படமாக்கிருக்கிறார்கள். கிரிகிரி பெக்கும் ஏவா கார்டனரும் நல்ல இளமைக் காலத்தில் இருந்தபோது எடுத்தபடம். இருவரும் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சிறுகதை தொடங்குவதுபோலவே திரைப்படமும் தொடங்குகிறது. பிற்காலத்தில் ஒரு பூர்ஷ்வாவாக மாறிபோன குற்றவுணர்வு ஹெமிங்வேக்கு இருந்திருக்கவேண்டும் இக்கதையில் அதற்கு கூடுதலாகவே வருந்துகிறார். இதேபெயரில் தற்பொழுது ஒரு பிரெஞ்சுப்படம் வந்துள்ளது. இப்படத்தில் கணவனும் மனைவியும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்க்கையைக்குறித்து அலுத்துகொள்கிறார்கள். முதல் படத்திற்கும் இப்படத்திற்குமுள்ள பந்தம் அத்துடன் முடிந்தது. முதல் படத்தைபோன்றே கணவனும் மனைவியும் விஸ்கியை உறிஞ்சுகொண்டு தங்கள் நடந்துகொண்டது சரியா, தங்கள் வாழ்ந்தவிதம் சரியா என்று உரையாடுவதோடு சரி இவ்விரண்டு படங்களுக்கும் வேறு பந்தங்களில்லை. இங்கே கணவனும் மனைவியும் ஒரு கடற்கரை நகரில் படகு, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளர்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியில் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். தொழிற்சங்கத்தில்  கனவனும் மனைவியும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள், தாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட போதிலும் தங்கள் நண்பர்கள் உறவினர்களைக் காப்பாற்றி வேறு சிலரை வேலை நீக்கம் செய்ய காரணமாகிறார்கள். இவர்களுக்கு கிடைத்த பணத்தில் கிளிமாஞ்சாரோ செல்லலாமென்ற கனவு, இவர்கள் தந்திரத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் தாக்குதல்களால் முடிவுக்கு வருகிறது. இளைஞர்கள் இருவரையும் காவல்துறையிடம் காட்டிக்கொடுத்துவிட்டு பின்னர் தங்கள் செய்கைக்காக வருந்துகின்றனர். ஆனால் அவசியம் பார்க்க வேண்டியது The snow of Kilimanjaro (1952) திரைப்படம்.

—————————————