இந்தியா : மக்கட்தொகையும் வெளியும் இந்தியப் பாலின ஏற்றத் தாழ்வுகள் -2 கமலா மரியுஸ்

கட்டுரை ஆசிரியர்  –  கமலா மரியூஸ், வருகைப் பேராசிரியர் பொர்தொ பல்கலைகழகம், பிரான்சு; பிரெஞ்சு அரசின் மொழி நிறுவனம், புதுச்சேரி.

  1. வாய்ப்புகளில் சமத்துவமின்மை

 

2011ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்புடன்   ஒப்பிடுடுகையில்  கல்விபயின்றவர்  விகிதாச்சாரம் 2001 ஆம் ஆண்டில்  64.83  சதவீதமாக இருந்தது, இவ்வெண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 74.4 சதவீதமாக உயர்ந்துள்ளது தெரிய வந்தது. எனினும் பெண்கள் நிலமையில் காண்கிற சமத்துவமின்மை  அவர்களுடைய கல்விவாய்ப்பிலும் பிரதிபலிக்கிறது என்பதுதான் உண்மை நிலை. தமிழ்நாடு மாநிலத்தில்  கவனிக்கத்தக்க வகையிற் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக  1982 ஆம் ஆண்டில்  இலவச மதிய உணவுத் திட்டத்தை அனைவருக்குமென நடைமுறை படுத்தியது, ஆரம்பக் கல்வி மட்ட த்திலேயே  பள்ளிக் கல்வியைத் தொடராமல் வெளியேறும் மாணவர்களைத் தடுக்கும் வகையில்  கட்டாயக் கல்வியைச் சட்டமாக்கியது போன்றவை  அன்றையத் தமிழ்நாடு அரசின் முயற்சிகள். அடுத்ததாக  நாட்டின் 2010 ஆண்டு ஏப்ரல்  முதல் தேதியிட்ட சிறுவர்க்கான கட்டாய இலவசக் கல்வி அரசு ஆணை (Right of children to free and compulsory education act  2009) கடைசியில்  6லிருந்து 14 வயதுவரையிலான  அனைத்து சிறுவர் சிறுஅனைவருக்கும் தொடக்கக் கல்வியைப்  பெறுவதற்கான உரிமையை முதன் முதலாக வழங்கியது. 80 சதவீத மாணவர்க்குக் கிடைத்த மதிய உணவுத் திட்டமும், 70 சதவீத மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டப் பாடப் புத்தகங்களும் கூடுதற் பலனை அளித்தன.

tx-alphab-inde-par-caste-par-age

எனினும் கல்விவாய்ப்பில்  பாலின அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் தொடரவே செய்கின்றன. உதாரணத்திற்கு இருபாலினத்திரிடை கல்வி அறிவை,  2011ஆம் ஆண்டில்  ஆண்களில் 82.1 விழுக்காட்டினரும், பெண்களில் 65.5 விழுக்காட்டினரும் பெற்றிருந்தனர். அதாவது பாலின அடிப்படையில் பார்க்கிறபொழுது 2001 ஆம் ஆண்டில் வேறுபாட்டின் சதவீதம் 21.6 விழுக்காடு  என்றிருந்தது, 2011 ஆம் ஆண்டில் 16, 7 விழுக்காடு குறைந்துள்ளது  தெரிய வந்தது.  எனினும் எழுத்தறிவு பெற்றவரெனத் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையினரில் கணிசமான ஒரு பகுதியினர் அரசின் கல்வித் திட்டம் வகுத்துள்ள கல்வி அறிவை நிறைவு செய்யாதவர்கள், தவிர இந்தக் கல்வி அறிவு பெற்றவர்களென மக்கள் கணக்கெடுப்பு கையாளும் சொல்லாடலின் பொருளேகூட ஒரு குடும்பத் தலைவர் அளிக்கிற தகவலை அடிப்படையாக க் கொண்டது. தவிர  எழுதப்படிக்கத் தெரிந்தவர்  என்பவர் ஒரு குறிப்பிட்ட மொழியை ஓரளவு வாசிக்கவும் எழுதவும் கூடியவர்  என்று விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.  இந்த எழுதப்படிக்கத் தெரிந்தோர் வீதாச்சாரம் வயதின் அடிப்படையில்  இருபாலினரிடையே வேறுபாட்டைக் கொண்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்  ஆண்கள் 54 சதவீத த்தினரும் பெண்கள் 19 சதவீத த்தினரும் கல்வி அறிவு உடையவர்கள். 10 வயதிலிருந்து 14 வயதுகுட்பட்ட பிரிவினரில்  பையன்கள் 82 சதவீதமும், பெண்கள் 78 சதவீதமும் கல்வி கற்றவர்கள். 14 வயதிற்கும் 17 வயதிற்கும் உட்பட்ட பிரிவினரிடை எழுதப் படிக்கத் தெரிந்தவர் சதவீதம் பெண்களித்தில்  32 சதவீத த்திலிருந்து  54 சதவீத த்தை இன்று எட்டியுள்ளது.

2-2012-09-27-11-32 7-img_3162_dxo

ஆயினும் இந்திய தேசத்தில் சராசரியாக எழுதப் படிக்கத்  தெரிந்தவர்களின்   விகிதாச்சாரத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள்  வெறுமனே வயது, சாதிகள், வாழ்விடத்தின் நகரத் தன்மை ஆகியவற்றைப் பொருத்தவை மட்டுமே  அல்ல. உயர்சாதியினர் வசிக்கும் நகரப்பகுதிகளில் கல்விஅறிவுபெற்றொர் விகிதாச்சாரம் அதிகம். இம்மாதிரியான இடங்களில் இந்துக்கள் கிறித்துவர்கள் என்ற பேதங்கள் கல்வியறிவு ஏற்றத்தாழ்வில் தெரிவதில்லை. அவ்வாறே குடும்ப வருவாய் அதிகரிக்கிறபொழுது, அதற்கிணையாக  அக்குடும்பத்தில்  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணும் எழுத்தறிவு சமத்துவமின்மை வீதாச்சாரம்  குறையவும் செய்கிறது (fig 5 ).

5-abandon-scolarite-table

6-carte-alphab-femmes

பள்ளிபடிப்பைத் தொடராமல்  வெளியேறும் விழுக்காடும்  பெண்களிடத்தில் அதிகம். அதிலும் குறிப்பாக  தலித் , பழங்குடி மக்கள்  மற்றும்  இசுலாமியர் ஆகியோரிடை  மிகவும் அதிகம். அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, நகரத்தில் வாழும் வாய்ப்புள்ள இசுலாமியர்   போன்ற சாதமாகனச் சூழ்நிலைகளுக்குப் பின்னரும் தொடரவே செய்கிறது. பள்ளிக் கல்வியை முடிக்காத  உயர்சாதி இந்துப் பிள்ளைகள்  8 சதவீதம் ஆனால் அதேவேளை , இசுலாமியடரித்தில் 26 சதவீதமும், தலித் மற்றும் பழங்குடிகளிடத்தில்  31 சதவீதம் என்றிருக்கிறது. உழைக்கும் வயதுடைய உயர் சாதி இந்துக்கள், ஜெயின்கள், கிறித்துவர்களிடை  ஆண்களில் 16லிருந்து 17 சதவீத த்தினர் பட்டமோ , டிபளாமோவோ பெற்றிருக்கிறபோது; தலித், பழங்குடியினர், இசுலாமியர்கள் ஆகியோரிடை 4லிருந்து 6 சதவீத த்தினரும் அதிலும் பெண்கள் என்றுவருகிறபோது  இப்பிரிவினரில் 2 சதவீத த்தினரே அத்தகுதியைப் பெற்றுள்ளனர்.

 

கல்வி அறிவில் காணும் இந்த ஏற்றத் தாழ்விற்கு கல்வி நிறுவனங்களில் நிலவும் சூழல்களுங்கூட காரணம். உபகரங்கரண ங்கள், பாடப்புத்தகங்கள் ஆகியவை தேவைக்கேற்ப அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாதாதது, அல்லது பணிக்கு ஒழுங்காக வராதது,  அவர்கள் கல்வி அறிவிலுள்ள குறைபாடுகள், கல்விநிறுவன செயல்பாடுகளில் காணும் குறைபாடுகள் போன்றவை இன்னொருபக்கத்தில் முறைசாரா கல்விமுறைக்கு வழிவகுக்கின்றன ( மாலைக் கல்வி, பிரத்தியேகமான கல்வி ஏற்பாடுகள் ..). அடுத்துப்  பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி ஸ்தாபனங்கள் என்றாலே மேல்தட்டு மக்களுக்கு என்பதுபோல இவ்விடயத்தில் அரசு காட்டும் மெத்தனமும்  சமூகத்தில் கல்வி அறிவில் காணும் ஏற்றதாழ்வுகளுக்குக் காரணம். எனினும் 2008க்கும் 2013க்கும் இடைபட்டக் காலத்தில் 58000 அரசுப் பள்ளிகளும் 70000 தனியார் பள்ளிகளும்  கட்டப் பட்டுள்ளன.

 

மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறபோதும் மாநில அரசுகளில் சொந்தத் திட்டங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும் இத்துறை உள்ளதாலும் மாநிலங்களிடை சீரற்ற ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட காரணம்(fig 8). இதன் விளைவாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்,இமாசலப்பிரதேசம், மேற்குவங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர் விகிதாச்சாரம்  70 சதவீத த்திற்கு அதிகம்: மாறாக ஜர்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, பீகார், ராஜஸ்த்தான் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலைமை, குறிப்பாக கடைசி இரண்டு மாநிலங்களிலும் கல்வி அறிவு 53 சதவீதம்(fig 7 ).இருந்தபோதிலும் கடந்த பத்து ஆண்டுகளில் பாலின அடிப்படையிலான கல்வி அறிவிலுள்ள  ஏற்றத் தாழ்வு வெகுவாக க் குறைந்துள்ளதென்பதையும் மறுப்பதற்கில்லை,

 

என்னதான் கல்வி அறிவில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் பாலின அடிப்படையில் காணும் சமத்துவமின்மைக்கு மக்களின் சமூகம் மற்றும் பண்பாடுகள் காரணம் என்பதும் தெளிவு. பெண்பாலின எண்ணிக்கையை வரம்பிற்குட்படுத்துதல், சமயத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் பொதுவிடத்திற்கெனப்  பின்பற்றும் ஒழுங்கு போன்றவையும் இப்பிரச்சினையில் முக்கிய ப்பங்கினை வகிக்கின்றன.

 

3          பொதுவெளிப் பயன்பாட்டில் பாலின அடிப்படையிலான நிர்ப்பந்தங்கள்

 

ஆண்கள் பெண்கள் இருபாலினருமே பொதுவெளிகளில் காணக்கிடைத்தாலும், உடலளவில் பெண்களின் அண்டைவெளி புழக்கத்தை   சமூகத்தின் அடிப்படையில் கட்டுப்படுத்துகிற  பண்பாட்டு நெறிமுறைகள் அனேகம்.  கூட்டுக்குடும்பம் அல்லது  சார்ந்திருக்கும் சமுதாயம் காரணமாக, ஒருவித க் கட்டுப்பாடு  ஒருவித சமூகக் கெடுபிடி  இயல்பாக செயல்பட்டு ஆண்களிடமிருந்து பெண்களை விலக்கிவைப்பதில் சறுக்கல்களை தவிர்க்கும் முனைப்புத் தெரிகிறது. அன்றாடப் புழங்கும் இடங்களிலிருந்து வெளியில் வருகிறபோது  ஒருவித அநாமதேயத்தையோ, பிறர் பார்வைக்குத் தப்பிக்கும் உருவத்தையோ தேடிப்பெறவேண்டிய நெருக்கடி பெண்களுக்கு. உள்ளது. இஸ்லாமியப்பெண்களுக்கு பர்தா, சில வடமாநிலப்பெண்களுக்கு (உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்த்தான்)  குங்காட் (Ghunghat)  போன்றவை பொதுவிடங்களின்

உபயோகத்திற்கென்று நிர்ப்பந்திக்கப் பட்டவை. ஆக பொதுவிடங்களில் பெண்கள் புழங்கப் பொழுதுபோக்கு காரணிகளினும் பார்க்க (பூங்கா, காப்பி பார்கள், அழகு நிலையங்கள்  ..) குடும்பம்  அல்லது சமுதாய சார்ந்த காரணிகளே( சந்தை, பள்ளி, குழந்தைகள் பூங்கா, வேலை செய்யும் அலுவலகம், சமய வழிபாட்டு இடங்கள், பண்டிகைகள்) முக்கியத்துவம் பெறுகின்றன. நகரங்களின் பொதுவாக  எங்கும் காண்கிற பூங்காக்கள், திரைப்படக் கூடங்கள் காப்பி பார்கள், பேரங்காடிகள் போன்ற பொதுவிடங்களில் புழங்குகிற உரிமை கூடுதலாகப் பெண்களுக்குக் கிடைக்கிறது, இம்மாதிரியான பொதுவிடங்கள்  ஒருவகையில் சிலவரம்புகளுடன் நெறிமுறையைக் க்டக்கவும்  ஆண்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முகத்திரையிட்ட பெண்களை அனுமதிக்கின்றன. அதேவேளை  வீதிகளில் கடைவிரித்துள்ள துரித உணவகங்கள், மதுக்கடைகள், மதுவருந்தும் விடுதிகள் ஆண்களுக்கு மட்டுமே புழங்குவதற்குரியவை.

 

எனினும் பொதுவிடங்களில் பெண்களின் நடமாட்டம் என்ற உரிமைக்கான விலை  இப்பிரச்சினையை கையாளுதல், அதனை உணர்வு பூர்வமாக எதிர்கொள்ளுதல்  ஆகிய விடயங்களில் பேரத்திற்கு  உட்பட்டதாக தொடர்ந்து இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டுஇந்திய மனித வளர்ச்சி  கணக்கெடுப்பின்படி பெரும்பான்மையான பெண்கள் அதாவது மொத்த பெண்கள் எண்ணிக்கையில் 73 விழுக்காட்டினர் மருத்துவ மனைகளுக்குச் செல்வதென்றாலுங்கூட தனியே போவதெனில் ஆண்களின் குறிப்பாக தங்கள் கணவர்களின் அனுமதியை பெறாமல் செல்லமுடியாதென்றும் , அவ்வாறான அனுமதியும் 34 விழுக்காட்டினருக்கு மறுக்கப்பட்டிருக்கிறதென்றும் தெரிவிக்கிறது.(fig 8)

8-autonomie-table

வடமாநிலங்களைப்  பொறுத்தவரை கல்வி, வயது, ஏன் பெருநகரங்களில் வசிபதுகூட மருத்துவமனைகளுக்கு செல்லும் வாய்ப்பில் குறுக்கிடுபவையாக உள்ளன. புர்க்கா மற்றும் குன்காட் வழக்கிலுள்ள இந்த வடமாநிலங்களில் பொதுவிடங்களில் பெண்களுக்கான  சமத்துவமின்மை மிக க் கடுமையாக உள்ளது (fig 9 ). ஆனால் இப்பிரச்சினை அதிகம் நகரவாழ்க்கையைக்கொண்ட மாநிலங்களில் (கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்) இப்பிரச்சினை அதிகமில்லை. அரசு ஆவணங்களில் பெண்கள் தங்கள் பெயரை இடம்பெறசெய்வதேகூட பெண்களின் சுய அதிகாரத்தை வெளிப்படுத்துவதாக  தொழில் அபிவிருத்திபெற்ற குஜராத், கர்னாடகா மாநிலங்களில் கருதப்படுகிறது

9-cartes-autonomie-femmes

தவிர கூட்டுக்குடும்பம் (la famille indivise)அல்லது விரிந்தக் குடும்பம் (la famille élargie)என்கிற அமைப்புமுறை பெண்ணை அடிமை நிலையில் வைத்துள்ளது. விளைவாக இந்தியக் குடும்ப அமைப்பில்  அதிகம் வன்முறையில் பாதிக்கப்படுபவளாக அவள் இருக்கிறாள். மாமியாரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிற பெண் அவ்வாறில்லாத பெண்ணைக்காட்டிலும் அதிகம் குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவதாக இது குறித்த பல ஆய்வு முடிவுகள் ( Jejeebhoy, 1998 ) தெரிவிக்கின்றன. எனினும் இக்கருத்தை ஒரு குடும்பத்தில்  மாமியார்  என்பவர் தன் குடும்பத்தின் நன்மதிப்பில் அக்கறைகொண்டு கணவன் – மனைவிப் பிணக்கைக் குறைக்க முயற்சிக்கிறார் என்பது தெரியவந்த கணத்தில் , பொதுமைப் படுத்தக்கூடியதல்ல என்பதாகிறது.

.

.(தொடரும்)

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s