அறிமுகம்

Na.krishnaநாகரத்தினம் கிருஷ்ணா – பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வங்கொண்டவர்.

சொந்தப் படைப்புகள்: மூன்று கவிதை தொகுப்புகள், ஒரு அறிவியல் சிறுகதை தொகுப்பு உட்பட ஆறு சிறுகதை தொகுப்புகள்,  ஏழு நாவல்கள், பதினோரு கட்டுரை தொகுப்புகள். பத்துமொழிபெயர்ப்புகள்: பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மூன்று நாவல்கள், நான்கு  சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரை நூல்கள் ;  தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைத் தொகுப்பு.

முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது, புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின்கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும்  கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 சிறப்பு பரிசை வென்றுள்ளது.  கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.  ஆயர் விருதையும் பெற்றுள்ளார். சிற்றிதழ்கள் இணைய இதழ்கள் ஆகியவற்றில் தொடர்ந்து எழுதிவருபவர். மாத்தா ஹரி, இறந்த காலம்  நாவல்கள் பிரெஞ்சு மொழியிலும், இறந்தகாலம் ஆங்கிலத்திலும் வந்துள்ளன. Corona chat சிற்கதை தொகுப்பு பிரெஞ்சு மொழியில் வந்துள்ளது.

2 responses to “அறிமுகம்

nagarathinamkrishna -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி