மனிதப் பண்புகள் நூலில் மணிகோர்ப்பதுபோல சிறுகச்சிறுக அநத நூலின் சம்மதமின்றியே, அதன் உணர்வுக்குக் கொண்டுபோகாமலேயே நடைபெறுகிறது, கோர்க்கும் கைகளில் ஒன்று நாம் சார்ந்த சமூகம், மற்றது நித்தம் நித்தம் குளித்து, பருவகாலத்திற்கேற்ப உடைகள் தரித்து, போதிய அலங்காரத்துடனும், சௌகரியத்துடனும் இயற்கையை மீற முயலும் மானுடத்தின் பொதுப்பண்புக்குரியது. இப்பொதுப்பண்பின் கை கொஞ்சமல்ல கூடுதலாகவே நீளமானது, நீ அப்படியிரு அல்லது இப்படியிருவென கண்காணாத தேசத்திலிருந்தும் கட்டளையிடலாம். இதுதான் நாம் வாழும் காலத்தின் மனித வாழ்க்கை.
தனிமனிதன் யார்? அல்லது ஒரு பெண் என்பவள் யார்? எல்லா உயிர்களையும் போலவே மனித உயிர் படைக்கப்படுகிறது. Mémoire d’Hadrien என்கிற பிரெஞ்சு நூலை மொழிபெயர்க்கத் தொடங்கியதில் பல இலத்தீன் சொற்களின் அறிமுகம் கிடைத்தது அதில் ஒன்று “individus” கிரேக்க மொழியின் “atomon”என்கிறச் சொல்லுக்குப் பங்காளி அதன் பொருள் பொருள் தனித்தது, பிரித்தறிய முடியாதது. பெற்றோர் மரபணுக்களின் கூட்டுத்தொகையில் 1+1=2 என அறியபட்டாலும், இந்த இரண்டு ஒன்றுக்ககளின் (1+1) அல்லாத பண்பு இந்த 2 – இரண்டில் இருக்கிறது, இங்கேதான் அந்த இரண்டாவது கையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மூலக்கதை எழுத்தாளர் வேண்டாம் சிவசங்கரிஎன்றே குறிப்பிட்டுவிடலாம், எழுத்து வாசிப்பு என்றிருப்பவர்களுக்கு எழுத்தாளர் என்கிற பட்டபெயர் தேவையில்லை, தெருவில் போகிறவர்களோடு அறிமுகம் என்கிறபோதுதான் இது தேவையாகிறது. ரிக்ஷா ஓட்டும் நடிகர் திடீரென ஆங்கிலம்பேசி பாமர இரசிகனை மெய்சிலிர்க்கவைக்கும் அறிமுகம் சிவசங்கரிக்கு தேவையல்ல. ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ கவிஞர் எழுத்தாளர் எனக் கூறி அறிமுகப்படுத்துவதில்லை. சிவசங்கரியின் “ஒரு சிங்கம் முலாகிறது ” என்கிற கதையின் சினிமா வடிவம் “அவன் அவள் அது ” . இயக்கம் முக்தா சீனிவாசன். சராசரி தமிழ்ப்பட வெகுசன இரசனையிலிருந்து விலகி எடுத்திருக்கும் திரைப்படம். சிவக்குமார், இலட்சுமி, ஸ்ரீபிரியா வழ்க்கம்போல , முன்னணி நட்சத்திரங்கள் என்கிற வார்த்தைப் பிரயோகம் தமிழில் இருக்கிறதில்லையா அதைத் தெரிவிப்பதற்காக சில நடிகர்கள். அவர்கள் வந்துபோகிறார்கள், மனோரமா உட்பட. படம் என்னவோ ஸ்ரீப்பிரியா, இலட்சுமி, சிவக்குமார் இவர்களுக்கான படம். திரைப்படத்தில் இவர்கள் பங்களிப்பை இப்படித்தான் வரிசைப் படுத்த வேண்டியுள்ளது. சிவக்குமார் ஒரு கதாநாயகன் வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
சிவக்குமார் – இலட்சுமி கண்வன் மனைவி, இருவருக்கும் தமிழ்வழக்கில் உச்சுகொட்டி சொல்வதுபோல குழந்தை பாக்கியமில்லை. காளையில்லாமல் பசு கருத்தரிக்கும் அறிவியல் வழிமுறை மனிதர்க்கு ஒத்துவருமோ? லாவன்யா(லட்சுமி) கருப்பையில் கட்டி, விளைவாக அவள் வயிற்றில் குழந்தையுண்டாகச் சாத்தியமில்லை. மாமனாரின் வாரரிசு ஆசையை நிராசையாக மருமகளுக்கு விருப்பமில்லை, “வழி வழியாக காலம் காலமாக நம்பிக்கை என்கிற பெயரில் அரசமரத்தை சுத்திட்டு, அடிவயிற்றைத் தொட்டுப்பார்காமல்” அறிவியல் தீர்வைத் தேடும் இந்த நகரத் தம்பதிகளுக்கு , கதாநாயகனுடைய தந்தையின் ஆரூட நம்பிக்கையை மெய்யாகவேண்டிய கடமை இருக்கிறது. கருப்பை நலிவுற்ற லாவன்யா தனது கணவனின் ஜீவ அணுக்களைக்கொண்டு குழந்தையை பெற்றுத்தரக்கூடிய ஒரு பெண்ணைத் தேடுகிறாள். அப்படிக் கிடைத்தவளே துணை நடிகையான மேனகா. தன்னுடைய காதலையும் அன்பையும் உறுதிசெய்ய ஒரு குழந்தை வேண்டி லாவண்யா தேடும் முயற்சியில் கணவனை பறிக்கொடுத்துவிடுவோமோ என்கிற அச்சம், மனைவிக்கு; கருப்பையை வாடகைக்குவிட்ட மேனகா, அக்கருவிற்கு சொந்தக்காரனிடத்தில் மனதையும் கொடுக்கிறாள். மனம் வாடகைக்கு விடப்பட்டதில்லை, இயற்கையின் ஆற்றலை எதிர்க்க சக்தியற்ற மனித மரம் அவள், வேரோடு சாய்கிறாள். இலட்சுமியும் ஸ்ரீபிரியாவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறாகள், என்னுடைய வாக்கு மேனகாவிற்கு. இயல்பாக மனித மனங்களின் குணாதிசயங்களை படம் பிடித்து இருக்கிறார்கள், தமிழ் சினிமாவின் சில பிரத்தியேக அம்சங்களுடன்.
( பாக்கியம் ராமசுவாமி, அப்புசாமி சீதாப்பட்டி கதைகளை குமுத த்தில் எழுதி புகழ்பெற்றவர். அக்கதைகளுக்கு நானும் ரசிகன், ஆப்புசாமி சீதாப்பாட்டி நினைவு சிறுகதைபோட்டியை ஒன்றை நடத்தினார்கள் வருடம் நினைவில்லை,, அதில்கலந்துகொண்டு பரிசு பெற்ற கதை. 2006ல் வெளிவந்த நந்தகுமாரா நந்தகுமாரா சிறுகதை தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.)
ருக்குமணியின் ஆராவமுதுக்கும், சீதாபாட்டியின் அப்புசாமிக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களில் ஒன்று கொடுவா மீசை யார் கண் பட்டதோ அதற்கு ஆபத்து நெட் சாட் மூலம் வந்திருந்தது.
அருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆசை ஆசையாய் கிராமத்து நாவிதனிடம் கெஞ்சி கூத்தாடி முதல் மீசையை ஒதுக்கிக்கொண்டு ஆராவமுது வீட்டிற்குள் நுழைந்தபோது இவரது தகப்பனார் வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதிக்க, வலது கால் சுளுக்கியதில் மந்திதோப்பு மணிக்கட்டு தைலத்திற்கு மாத்திரம் அயன் நஞ்சை நிலத்தில் இரண்டு குழியை விற்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு தகப்பனாரின் அந்திமக் காலம் வரை மீசையை வைத்து நடந்த இரணியன் பிரகலாதன் யுத்தத்தில் தகப்பனாருக்கு இருமலும் இவருக்கு ஜெயமும் ஆசீர்வதிக்கப்பட்டது. தகப்பனார் இருமலுக்கு பயந்து ஊரிலிருந்த கிழங்களில் பாதி வைகுண்டத்திற்கும் மறு பாதி கைலாயத்திற்குமாக புறப்பட்டு போக நம்ம ஆராவமுது இல்லறம் மேற்கொண்டு மயிலாப்பூர் வந்து சேர்ந்தார்.
ஆராவ்முது மீசையை எடுத்தே தீருவேன் என்று புறப்பட்ட பேர்வழிகளில் இந்தியாவில் இருக்கின்ற வரை பிளேடும் கையுமாககத் திரிந்த இவரது மைத்துனன் வெங்கட்ராகவன் என்கிற வெங்கட்டும் சிங்கப்பெருமாள் கோயில் பாஷ்யம் ஐயங்கார் சீமந்தபுத்திரியும் இவரது பிட்டர் ஹாஃப் ஆகிய ருக்குமணியும் இங்கு முக்கியமானவர்கள்.
ஆராவமுதுடைய மீசை முகத்தின் வேரைத் தேடிப் போனால் முதலிற் தட்டுப்படுவது சின்ன வயசுல அவரது கிராமத்தில் கண்ட குதிரை சவாரி செய்யும் மதுரை வீரன் சிலையும், சிவப்புச் சாயத்துடன் விகாரமான முகத்திலிருந்த பெரிய கண்களை காட்டிலும் சும்மா கருகருவென்று காதுவரை நீண்ட மீசைக்கிருந்த மரியாதையை படையில் வைத்த ஆடு கோழிகளும் சாராயமும் தெரிவிக்கும், அதுபோல மீசை பண்டாரம் என்று ஒருத்தர் இருந்தாகவும் மீசையை வெச்சே பல காரியங்களை சாதித்துக் கொண்டதாகவும் ஊர் முழுக்க பேச்சு.
இராணுவத்தில் இருக்கும் போது, இவரிடமிருந்து துப்பாக்கியை விட மீசையே எதிரிகளை பயமுறுத்தியதென ஆராவமுது நம்புவார். மீசை வைக்காத காந்திஜி ராஜாஜி தொந்தி கணபதிஜியை விட, மீசை வைத்த காமராஜர் ஜி மா போ சி ஜி முனீஸ்வரன் ஜி போன்றவர்கள் இவரை ரொம்பவே கவர்ந்தனர். இந்த லிஸ்டில் ஸ்டாலின் ஜி ஹிட்லர் ஜி, ஹீரோக்குளையும் இதை சேர்த்துக் கொள்ள, ஆவேசம் கொண்ட ருக்குமணி, இவரது மீசையை எடுக்காமல் சோற்றில் கை வைப்பதில்லையென சபதம் எடுத்து ஸ்பூனால் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். “மீசைக்கும் வீரத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை” என அடிக்கடி புலம்புவாள் ; ருக்மணியை பெண் பார்க்க வந்த போது அவர் ‘பிடித்திருந்தது’ என்று சொன்னது அவளது மேலுதட்டில் படர்ந்திருந்த பூனை மீசைக்காக, அதனை மற்றவர்கள் தவறாக விளங்கிக் கொண்டதற்கு அவர் என்ன செய்வார், பாவம். ஆனால் நிஜத்தில் நம்ம ஆரவமுது மூஞ்சுறுக்குக் கூட பயப்படும் சுபாவம் உள்ளவரென்பது சாந்தி முகூர்த்தம் அன்றே தெரியவந்ததில் ஆரம்பித்து வீட்டில் என்னவோ அல்லி ராஜ்ஜியம் தான்.
ஆராவமுதுக்கு அடுத்த வைகாசி பொறந்தால் வயது அருபது, மிலிட்டரி ரிட்டயர்டு ஆசாமி என்பதால், வேணுமானா ஒரு பத்துவயசைக் குறைச்சுக்கலாம், பல்லி மாதிரி குறுக்கும் நடுக்குமாக ஓடிக் கொண்டிருப்பார். ராணுவத்தில் ரிட்டயர்ட் ஆகி வந்த அன்றைக்கே ‘மயிலாப்பூர் மீசை வளர்ப்போர் சங்கத்தினை’ ஏற்படுத்தி இருந்தார் இன்றைக்கு அதற்கு நாடு முழுவதும் கிளைகள். உறுப்பினர்களுக்கு மீசையின் மகாத்மியத்தை குறித்து வகுப்பு எடுப்பதற்காக உபியில் கஞ்சா அடித்து கிடந்து கிடக்கும் கின்னஸ் புகழ் சாமியாரிலிருந்து கொருக்குப்பேட்டை பஸ்த்தாதுகள் வரை வந்து போனார்கள். மீசை இருந்தால் எதிரிகளை குறிப்பாக பெண்களை வீட்டில் அடக்கி ஆளலாம் என்பது குறித்து, “அப்பாவி கணவன்மார்கள் சங்கத்தின்” ஆதரவில் பிரத்தியேக வகுப்புகள் நடந்தன. சங்க உறுப்பினர்களுக்கு ‘மீசை பார்லர்கள்’ உருவாக்கப்பட்டன, ‘மீசை இணையதளம் உருவானது. ‘தேசத்திற்கு பெரிதும் அவசியம் அரும்பு மீசை ஆண்களா முறுக்கு மீசை ஆண்களா” என பட்டிமன்றங்களில் விவாதிக்கப்பட, மீசைமான் பாப்பையா தலைமை தாங்கினார். விவாதங்களில் மீசை முளைத்த அத்தைகளும் சந்தோஷமாக கலந்து கொண்டார்கள் என்பது கொசுறு செய்தி. சங்க உறுப்பினர்களுக்கு மீசை முளைத்த பூனை எலி மூஞ்சூறு கரப்பான் பூச்சிகளை செல்ல பிராணிகளாக வீட்டில் வளர்க்க உலக வங்கியிடமிருந்து கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்படி மீசை மீசைன்னு, தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணித்துக் கொண்ட மனுஷர் கொஞ்ச நாளா அநியாயத்துக்கு மாறி இருந்தார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், இவரது பிரியமான மீசையை மழித்திருந்தார். முட்டிக்கால் வரை இறங்கிய பெர்முடா டவுசர், மேலே லொடலொடவென்று ஒரு பூ போட்ட காட்டன் டீ ஷர்ட், ஃபங்க் தலை, கால்களில் நைக்ஷூ, கண்களில் போஸ் சன் கிளாஸ், அதனை அர்த்தராத்திரியில் மின்சார தடை வந்தால் கூட கழற்றாமல், நேற்று வரை “கொடுவா மீசை அருவா பார்வை” என்று பாடிக் கொண்டிருந்தவர் “ஏ கில்லி…. கில்லி” என்கிற ரேஞ்சில் துள்ளி விளையாடுகிறார்; இந்த கூத்துக்கெல்லாம் சாட்சாத் நெட்-சாட் தான் காரணம்.
நேற்றும் அப்படித்தான், ” சாமியை மீசையோடு பார்க்க அப்படியே எங்க ஊரு மதுரை வீரன் தான்” என்று பிரியப்பட்டு சிலாகிக்கிற காய்கறிக் கூடைக்காரி வந்திருந்தாள். ஆராவமுதை பார்க்க மீசை போன கரப்பான் பூச்சி மாதிரி இருக்க, ரொம்பத்தான் உருகிப் போனாள். “பாட்டிம்மா! அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கொண்டு வந்திருக்கன் கொஞ்சம் சீக்கிரம் வரியேளா!” என்று குரல் கொடுத்தவள், முந்தானையை பிரித்து “காலங்காத்தாலே வெயில் என்னமா கொளுத்துது”, என்று முகத்தில் ஒத்திக் கொண்டாள்.
கூடத்தில் தினசரியை வாசித்துக் கொண்டு ஜாடையாக அதனை ரவுசு விட்ட ஆராவமுதிர்க்கு குப்பை மேட்டில் வாக்காளர் அட்டைகளை கண்ட சுகம். பரவை முனியம்மா கெட்டப்பிலிருந்த கமலத்திற்கு டூ பீஸை அணிவித்து பமிலா ஆண்டர்சன் மாதிரி நடக்க விட்டு ரசித்தார். கூடைக்காரி கமலத்துக்கு வயசானாலும் இது மாதிரியான சங்கதிகளை உடனே மோப்பம் பிடிச்சிடுவாள்.
“சாமிக்கு வேப்பிலை அடிக்கணும்னு நினைக்கிறேன், காத்து கருப்பு ஓட்டுறதுல, என் கொழுந்தியா புருஷன் கில்லாடி, அனுப்பி வைக்கணுமா?”, முந்தானையை மார்பில் பரத்திக்கொண்டு, அவள் கேட்டதில் கிழவருக்கு நாடி தவிர சர்வமும் அடங்கிப் போனது.
காய்கறிக்காரியிடம் வந்த ருக்குமணி, “வேணாண்டியம்மா! நான் பார்த்துக்கிறேன், தேவைப்பட்டால் உன்கிட்ட சொல்லி அனுப்புறேன், நீ புறப்படு!” என்று முன் ஜாக்கிரதையுடன் அவளை அனுப்பி வைத்தவள், மீசை இழந்த இவர் முகத்தைப் பார்த்து, ஒரு நமட்டு சிரிப்பினை உதிர்த்து விட்டு உள்ளே போகிறாள்.
“போடி நான் மீசை எடுத்தது உனக்காக அல்ல” என்று சொல்ல நினைத்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார். அவள் அடுக்களைக்குள் மறைந்த வேகத்தில் சட்டசபையில் ஆளுங்கட்சித் தலைவரை காணப் பிடிக்காமல் வெளியேறுகிற எதிர்க்கட்சித் தலைவரைப் போல நழுவினார். எங்கே போனார்? ஆராவமுது கெட்டால், ” தெப்பக்குளம் – கபாலீஸ்வரர் கோவில் -கொழுப்பு கோவாலு “;
கொழுப்பு கோவாலை சாதாரணமா நினைச்சிடப்படாது. அமெரிக்காவில் இருக்க வேண்டியவன் நம் ஆராவமுது செய்திருந்த பூர்ண பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பிச்சை எடுக்கிறான்; செல்ஃ போன், பேங்கில் அக்கவுண்ட், கிரெடிட் கார்ட், காரில் ஏறிச் சென்று கலெக்ஷன் பார்ப்பது என அவனது கீர்த்தி மயிலாப்பூரில் நான்கு மாட வீதிகளிலும் பிரசித்தம். பாத்திர கடை நாடார் கூட, “அவன் பைனான்ஸ் தொழில் செய்துவிட்டு இத்தொழிலுக்கு வந்திருக்க வேண்டும்” என்று சத்தியம் செய்கிறார்.
ஆரா வமுதுக்கு அவனோடு ஏற்பட்ட சிநேகிதம் கூட ஒருவகையில் பைனான்ஸ் விவகாரன்தான். கிழவரும் ருக்குவும் ஒருமுறை சாமி தரிசனம் பண்ணிட்டு வெளியே வருகிறார்கள். ” ஐயா… தர்மதுரை! என்று கூப்பிட்ட குரல்கள், தர்ம சங்கடமான குரல்கள். பெரியவர் ஏதாச்சும் போடணும்னு தீர்மானிச்சு பாக்கெட்டைத் துழாவியதில் கிடைத்தது என்னவோ இரண்டு ஐந்து பைசாக்கள். இரண்டையும் விரல் நுனியில் பிடித்து அலுமினிய தட்டில் எல்லோருக்கும் கேட்கட்டும் என்ற வகையில் கொஞ்சம் உயர்த்திப் போட்டிருக்கக் ககூடாது, போட்டுட்டார், வந்தது ஆபத்து. சற்று முன்னால் “தர்மதுரை தர்மதுரை” என்று கூப்பிட்டவன், “யோவ் கசமாலம்”னு ஆரம்பிச்சு வசை மாறி பொழிந்தான். கபாலீஸ்வரர் சபையில் போகவிருந்த கிழவர் ஆராவமுதின் மானத்தை காக்க கொழுப்பு கோபாலு உதவி கரம் நீட்டுகிறான்: “இந்தாதொரை! நம்மாணடகிற துட்டை வச்சுக்க, அப்பாலே கொடு!” என்று காங்கிரசுக்கு ஒத்தாசை பண்ண வந்த கம்யூனிஸ்ட் போல, அவன் விட்ட டயலாக்கில் மனிதர் தயிரில் போட்ட உளுந்து வடை மாதிரி குளிர்ந்து போனார். போதாதற்கு அவன் மேல் உதட்டில் உட்கார்ந்திருந்த வஸ்துவும் இவருக்கு பிடித்திருந்தது. அன்றைக்கு தொடங்கிய சினேகிதம், அதற்குப் பிறகும் ‘விஜயகாந்தும் தமிலும்’ போல ஒருபோதும் பிரிக்க முடியாததாக உருமாறியது.
ஒரு நாள் தெப்பக்குளத்துல வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாக இறங்கி வேடிக்கை பார்க்கிறார்கள் அவர்கள் பிரமித்து நிற்பதை நம்ம கொடுவாள் மீசை ஆராவமுது, நாடார் கடையிலிருந்து பார்க்கிறார். வந்தவர்கள் பிரெஞ்சு பேசுகின்றார்கள். அவர்களில் ஒருத்தி ஒவ்வொரு படியாக இறங்கி வந்து சலசலக்கும் தண்ணீரில் கால்கள் நனைத்த குதூகலத்தில் ஆழ்கிறாள். அந்த நேரம் பார்த்து ஓர் ஆசாமி ஒருவன் எழுந்து நிற்கிறான். கால்களை நனைத்திருந்த பெண், அச்சத்துடன் பிரெஞ்சு மொழியில் « கடவுளே ! ஒரு எருமை மாடு ! » என்று கூச்சலிட்டுக்கொண்டு மூச்சிறைக்க படிகளில் இரண்டிரண்டாக ஏறுகிறாள். அவளைத் தொடர்ந்து மொத்தக்கூட்டமும் மேலே ஓடிவருகிறது.
நடந்த தைப் பார்த்த ஆராவமுது, நாடார்கடையிலிருந்து ஓடி வருகிறார். « மதாம் அது எருமை மாடல்ல , மனுஷந்தான் . அங்க பாருங்க », எப்போதோ படித்த பிரெஞ்சைக்கொண்டு இவர் பதில் சொல்ல, கூட்டம் மொத்தமும் தண்ணீரிலிருந்து எழுந்த மனிதனை கேமராவில் அதிசயமாக கிளிக்கிட்டுகொண்டு இவருக்குத் திரும்ப திரும்ப நன்றி என்றது. ஆனாலும் எலிசபெத் ஜாடையிலிருந்த அப்பெண்மணியிடம் இவர் மனம் தடம் புரண்ட இரயிலாயிட்டுது.
கல்யானத்துக்கு முன்னே எப்படியோ ருக்குமணியைக் கைப்பிடிச்ச நாள்முதல் கிழவர் ஆராவமுதன் ஏகப்பத்தினி விரதனாகத் தான் இருந்தார். அந்நிய நாட்டுப் பெண்டுகள் வாடை கூடவே கூடாதுண்ணு மூக்கை பிடிச்சுக்கிட்டு நடந்த மனுஷன். ஐம்பதுகளின் கனவுக்கன்னி டி. ஆர் ராஜகுமாரியோ, அறுபதுகளில் பிரகாசித்த நாட்டியப் பேரொளியோ, கன்னடத்துப் பைங்கிளியோ ஏற்படுத்தாத ‘லப் டப்’ஐ அந்த பிரெஞ்சு பெண்மணி ஏற்படுத்தியிருந்தாள்.
மறுநாள் தெப்பக்குளம் பக்கமிருக்கிற நாடார் பாத்திரக்கடை இரவல் கொடுத்த தினத்தந்தியில் வெள்ளித் திரையும், குருவியார் பதில்களையும் படிக்க ஆரம்பிச்சவர் கவர்ச்சிப் படங்களைப் பார்த்து கடலை போட ஆரம்பித்தார், விட்ட ஜொள்ளில் தெப்பகுளம் வழிஞ்சிஓடுது, கோவில் வாசலில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த கொழுப்பு கோவாலு, பதறிபோய் வடையைபார்த்த எலிபோல ஓடிவந்தான்.
« இன்னா நைனா ! இளமை திரும்புதா,. நம்ம பசங்க நெட்-சாட் சொல்லிட்டு கம்ப்யூட்டர்ல்ல டாவு அடிக்கிறானுவ, படா படா புஇகருங்களெல்லாம் சுலபத்துல கவுத்திடுதாம், சேந்துகிறியா ? », என்று சொன்னவன் மாறு நாள் நல்லநேரமாகப் பார்த்து மீசைவைத்த ஒருவர் நடத்துகிற சைபர் டீஸ்டாலில் கொண்டு விட்டான்.
சுற்றிலும் நெட் சாட்டில் டயலாக் விடும் பையன்களையும் பெண்களையும் பார்க்க பெரியவருக்கு ஏதோ குட்டிச் சாமியார் அந்தஸ்து கிடைச்ச சந்தோஷம். கட கடவென்று தட்டுகிறார். கம்ப்யூட்டர் திரையில் « ஹாய்l » என்றழைத்துக்கொண்டு ஒரு குரல் எழுத்துகளாய் வந்து விழ இவரது கனவு சொய்ங் என்று மேலே போகிறது.. « ஹாய்.. » எனப் பதிலுக்குத் த்ட்டுகிறார்.
ஐ..ம் ரெய்ன், நீ ?
இவருக்கு டக்கென்று என்ன தட்டுவதென புரியவில்லை.
ஐ..ம் தண்டர், என்று தட்டிவிட்டு, ரெய்ன் எங்கிருந்து ? என்று கேட்டார்.
நிலாவிலிருந்து…
உண்மையைச்சொல்லு ? -இவர்.
அமெரிக்காவிலிருந்து-நீ ?
நான் சென்னை, இந்தியா.
ஆணா பெண்ணா ?
ஆண், நீ ?
பெண், எனக்கு இருபது, உனக்கு ?
பதினெட்டு
பொய்சொல்லாதடா பையா, ஒரு ஐம்பதைக் கூட்டிக்கிலாமா ?
இரண்டு பேருக்குமேயா ? கொழுப்புக் கோவாலைக் கேட்டுச் சொல்றன்.
எனக்கு மீசைபிடிக்காதுண்ணு சொல்லவ்ந்தேன் … பைதிபை உனக்கொரு சர்ப்பிரைசிங் நியூஸ்..
என்னது ?
டாலிங்.. அடுத்த மாதம் இந்தியாவுக்கு டூர் வரேன், உன்னை பார்க்கணும், கேன் ஐ ?
ஆராவமுது மனசுக்குள் பட்டாம்பூச்சி பிடித்து விளையாடுகிறார். ருக்குமணிக்குத் தெரியாமல் மெரினாவில் அவளோடு ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல கற்பனை செய்து பார்த்தார். தப்பில்லை, காட்சி நன்றாக வந்தது. ஆனால் மெரினாவிற்கு போவதற்கு முன்னால் மறக்காமல் ருக்குமணியிடம் துட்டு கேட்டு வாங்கி போகணும்.
என்ன பதிலையே காணோம் இந்தியாவிற்கு வந்தால் உங்களை பார்க்கலாமா இல்லையா ?
உன்னை விட எனக்குத்தான் அதில் சந்தோஷம் ஹனி !
ஆனால் ஒரு கண்டிஷன்
என்ன பிளைட் டிக்கெட்டை நான் எடுத்துக் கொடுக்கணுமா ?
அவசரப்படாதே டார்லிங் !… எனக்கு மீசைன்னா அலர்ஜி இந்தியா வரும்போது உன் முகத்தில் நான் மீசையை பார்க்கக் கூடாது. இதற்கு சம்மதம்னா அடுத்த மாதமே புறப்பட்டு வந்துடுவேன். என்ன சொல்ற ?
அவள் டார்லிங்னு சொல்லிட்டு மீசை எடுத்துச் சொன்னது, எம்பி சீட்டை விட்டுக் கொடுத்தா, ராஜ்யசபா சீட்டை கொடுப்போம் என கட்சி மேலிடங்கள் சொல்வது போல இருந்தது.
நீ இந்தியா வருவது உண்மைன்னா மீசை எடுத்திடறேன்.
ஷ்யூர்.. ஷ்யூர்.. !
எப்போ வற ?
அடுத்த மாதம் 12ஆம் தேதி. சென்னை ஏர்போர்ட்டில் இரவு 2 மனிக்கு காத்திருங்க. லூப்தான்சவுல வறேன்.
எப்படி உன்னை அடையாளம் வச்சிகிறது ?
பயப்படாதீங்க அதை நான் பார்த்துப்பேன், பை.., அடுத்த வினாடி செய்ங் என காணாமல் போய்விட்டாள்.
ஆராவமுதுக்கு குழப்பமாக இருந்த து. ச்சே…ருக்குமணியிடம் காட்டிய பாச்சா இந்த அமெரிக்க பெண்மணியிடம் நீட்சாவாகி போனதில் மனிதர் நொந்து போனார். கொழுப்பு கோபாலிடம் கலந்து ஆலோசித்தார் அவன் இடியாப்பமும் பாயாவும் வாங்கிக் கொடுத்து புஷ் முஷ்ரஃப் ஸ்டைலில் தாஜா செய்தான்.
இன்னா தொரை உனுக்குப் பொய்க்கத் தெரியலையே, ஒரே கல்லிலே ரெண்டு மாங்கா. அதாம்பா லெஃப்ட்ல அமெரிக்கா ரைட்ல இந்தியா, கலக்கீடீம்மா. இந்த காலத்துல தமிழனுக்கு அடையாளமே ரெண்டு பொண்டாட்டிங்கிறதை மறந்துட்டியே நைனா ! ஜாம்… ஜாம்னு மீசையை எடுத்துட்டு வா, அல்லாத்தையும் நான் பார்த்துக்கிறன்.
நெட் சாட் பெண்ணை வரவேற்க ஆராவமுது ஏர்போர்ட்டிற்கு வந்தபோது இவரது தர்மபத்தினி ருக்குமணியும் அங்கே வந்திருந்தாள். இவள் எங்கே வந்தாளென யோசித்தார். கொஞ்சம் ஒதுங்கி நின்று கவனித்தார். லூஃப்தான்சா பயணிகள் வெளியில் வந்தனர். பயணிகளிடையே இவர் மைத்துனன் ருக்குவின் தம்பி வெங்கட்ராகவன். கடன் காரன், இவனெப்படி இங்கே ? போதாக்குறைக்கு இப்போது சாதாம் உசேன் மாதிரி வேற.
தமக்கையும் தம்பியமாக இவரை நோக்கி வருகிறார்கள் அவர்களோடு கொழுப்பு கோபால் வேறு.
என்ன அத்திம்பேர் அப்படி பார்க்கிறேள், மீசையோடு என்னை அடையாளம் தெரியலையா ?