மொழிவது சுகம் ஜனவரி 10, 2017:ஜல்லிக்கட்டு பூம் பூம்……

நமக்கென்று மெல்வதற்கு அவ்வப்போது சில பிரச்சினைகள் கிடைக்கின்றன. ஜெயல லிதா மர்மச்சாவு  போய் ஜல்லிக்கட்டு வந்திருக்கிறது ….

தமிழ்நாட்டில் தென் மாவட்ட த்தில் காலம் காலமாய் ஜல்லிக் கட்டு நிகழ்ந்து வருகிறது இதைத் தடுப்பதற்குச் சொல்லப்படும் காரணங்கள் வலுவானவை அல்ல. ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினில் ‘corrida de toros’ , என்ற பெயரிலும் பிரான்சின் சில பகுதிகளில் ‘la Corrida’ என்ற பெயரிலும், போர்ச்சுகல், பெரு, கொலம்பியா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இக்காளைச்சண்டைகள் ஜாம் ஜாமென்று எதிர்ப்பையெல்லாம் மீறி நடந்துவருகின்றன. இங்கும் விலங்குப் பாதுகாப்பாளர்களின் (la Société Protectrice des animaux (SPA)கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி நீதிமன்றங்கள் வரை(குறிப்பாக பிரான்சுநாட்டில்) பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது.  எனினும் காலம் காலமாய் கடைபிடிக்கப்பட்டுவரும் மரபு என்ற வகையில் நீதிமன்றம் அனுமதித்ததால் அவை நடைபெற்று வருகின்றன. Corrida வீரர்களை காளயைக் கொல்பவர் என்ற பொருளில் Matador என அழைக்கிறார்கள். அதாவது தமிழர் மரபுக்கு மாறாக இவர்கள் காளையைக் கொல்பவர்கள். நமது மரபு காளையை அடக்குவது தான். இதனைத் தடுப்பதில்  எவ்வித நியாமும். இருப்பதாக த் தெரியவில்லை. நடிகர் கமலஹாசன் சொல்வதைபோல உணவுக்காக கொல்லப்படும் விலங்கு கள் வதையின்றிக் கொல்லப்படுகின்றனவா எனப்பார்க்கவேண்டும். இங்கே காளைகள் துன்புறுவது மிகமிக க்குறைவு. தார்க்குச்சி பாய்ச்சி பாரவண்டிகளை இழுக்கும் மாடுகள் நாடெங்கும் இன்றைக்கும் இருக்கவே செய்கின்றன. கிராமங்களில் சுமையை இழுக்கமுடியாமல் படுத்து அடம் பிடிக்கும் மாடுகளை வாலச்சுருட்டுவதும், மிலாறுகளால் கைவலிக்க அடிப்பதும், கண்களில் மிளகாய்த் தூளைத் தூவுவதையும் சிறுவயதில் பார்த்துப் பதறியதுண்டு.  இப்பிரசினைகள் எல்லாம் இக்காளைகளுக்கில்லை. தவிர சொல்லபோனால் சபரிமலைகளுக்குப் போகும் மனிதர்களைப்போல குடும்பத்தின் மற்றவர்களை பட்டினிபோட்டு பிரத்தியேக கவனிப்பு.

 

இருந்தும் சில கேள்விகள் ஐயங்கள்  எனக்கு வருகின்றன.

 

மேற்குலகில் விருபுகின்றவரெல்லாம் காளையுடன் சண்டை யிட முடியாது. Matador ஆக விரும்புவர்கள் கடுமையானத் தேர்வுக்குப் பிறகு உரிய பயிற்சியைப் பெற்று களத்தில் இறக்கிவிடப்படுபவர்கள். அந்த நிலை தமிழ் நாட்டில் இல்லை. தவிர இச்சண்டைக்கென உரிய வகையில் பாதுகாக்கப் பட்டத் ‘திடலும்’, இத்துறைக்கென சிறப்பு பயிற்சிபெற்ற மருத்துவக் குழுவும், வீர ர் காயம்பட்டாலோ, உயிர் இழந்தாலோ கணிசமானத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களும்,  உதவித்தொகையை அரசும், காளைச்சண்டை ஏற்ப்பாட்டாளர்களும்  அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும்இசெய்து தருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு உத்தரவாதங்கள் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டு வீர ர் களுக்கு உண்டா ?

 

இது தவிர எனக்கு வேறு சில சந்தேகங்கள்….

 

  1. தமிழ் நாட்டில் காளைகள் பலசலியாக இருக்கின்றன, காளையை அடக்குகிறேன் என கள மிறங்கும் வீர ர் கள் அந்த அளவிற்கு இல்லையே ஏன்

 

  1. தமிழ்நாட்டில் பேய் பிடி த்த து என்று சொல்லி ஆடுகின்றவர்களைப் பார்த்திருக்கிறேன், உயர் சாதி இந்துக்கள் பெண்களுக்கோ பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களோ இப்படியெல்லாம் தெருவில் இறங்கி ஆடுவதில்லை. அதுபோல காளையைப் பிடிக்கிறேன் என களத்தில் இறங்கும் இளைஞர்களெல்லாம் பின் தங்கிய மக்களாகவே ஏன் இருக்கிறார்கள் ? இந்த வீரம் மார் தட்டும் மற்ற தமிழர்களிடம் எப்படி இல்லாமல் போயிற்று ?

 

3. இந்த அப்பாவி இளைஞர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் அரசு தரும்                 பாதுகாப்புகள் என்ன ?  அவர்களின் இழப்பினை ஈடு செய்ய அரசின்                                      உத்தரவாதம் என்ன ?

 

  1. தமிழக முதலமைச்சரோ, ஸ்டாலினோ, வைகோவோ, திருமாவளவனோ, அன்புமணியோ இம்மாதிரியான சிக்கலான நேரத்தில் பொங்கல் நிமித்தமாக ஆளுக்கொரு களத்தில் இறங்கி காளையை  அடக்கித் தமிழர் பெருமையை  ஏன் நிலை  நிறுத்தக்கூடாது ?

 

——————————–

 

 

பின்னூட்டமொன்றை இடுக