மொழிவது சுகம் மே 1 -2015

உறக்கம் வருமா ?

தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் தெரியும் வரை  தமிழ் மக்களுக்கு உறக்கம் வருமா என்று தெரியவில்லை. உறங்கினாலும் பாதி ராத்திரில் எழுப்பி பணம் கொடுப்பதாக க்  கேள்வி.. ஓட்டுபோடுபவர்களுக்கு  இத்தகைய  அமளிக்கிடையில் உறக்கம் வந்தாலும்  தலைவர்களுக்கு :  நம்பி கண்ட்டெய்னர்களில் ஏற்றி அனுப்பினோமே ஒழுங்காய்  பட்டுவாடா ஆகுமா என்ற கவலை,  தமிழர்கள் கடலில்  மீண்டும் தூக்கி எறிந்து விடுவார்களோ என்ற கவலை, அடுத்த கூட்டணிக்கு என்னபெயர் வைக்கலாம் என்ற கவலை, இப்படி  வகைப் பிரிக்கபட்ட கவலைகளில்  தமிழினம் தவித்துக்கொண்டிருக்க பிரெஞ்சு மக்களுக்கு  வேறுகவலைகள் .

 

La Nuit Debout  எனக்கூறி  உறங்காமல்  கடந்த மார்ச் மாதம் தேதியிலிருந்து பாரீஸிலுள்ள புகழ்பெற்ற  La Place de la République  என்ற இடத்தில் நள்ளிரவு வரை ஒன்று திரண்டு ஆளும் சோஷலிஸ்டு அரசாங்க்கத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். ஒரு ஜன நாயக நாட்டில் தங்கள் கலக க் குரலை வெளிப்படுத்த La Place de la République   என்ற பெயர்கொண்ட திடலைத் symbolic ஆகப் போராட்டக் கார்கள்  தேர்வு செய்ததது காரணத்தோடுதான் .  எனவேதான் வலது சாரிகள் வற்புறுத்தினாலுங்கூட  இயக்கத்தைத் தடை செய்ய  ஆளும் சோஷலிஸ்டுகள் அரசாங்கம்அஞ்சுகிறது. Debout என்ற பிரெஞ்சு சொல்லுக்கு நின்றுகொண்டிருத்தல், தாக்குப் பிடித்தல், விழித்துக் கொண்டிருத்தல் என்றெல்லாம் பொருளுண்டு. ‘Nuit’  என்றால் இரவு. எங்க்களுக்கு உறக்கம் எப்படி வரும் ? எனக் கேட்கின்ற வகையில்தான் தங்கள் போராட்டத்திற்கு  la nuit Debout எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்.  அவர்களை உறக்கத்திற்குத் தடையாய் இருப்பது. இன்றைக்கு பிரான்சு நாட்டின் தொழிலாளர்கள், தொழிற் சங்க்கங்கள், இளம் தகைமுறையினர், பணி ஓய்வு பெற்றவர்கள்,  இட து சாரிகள் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதி த்துள்ள புதிய தொழிற் சட்டம்,  மிரியம் என் கொம்ரி என்ற பிரான்சு நாட்டுத் தொழில் அமைச்சரால்  அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. முதலாளிமார்களால்   சில முணுமுணுப்புகளுடன்  வரவேற்கும் இச்சட்டம், பிரெஞ்சுத் தொழிலாளர்கள் போராடிபெற்ற பல சலுகை களைக் கேள்விக்குள்ளாக்குகிறது.  இதன் படி நாளை பெரும் நிறுவன ங்கள், தங்கள்  உற்பத்தியை, இலாப நட்டத்தைக் காரணமாக முன் வைத்து  தங்கள்  நலனுக்கேற்ப  விதிமுறைகளைக் கடைபிடிக்கலாம்., வேலை நேரம், பணி நீக்கம் என்பது  இனி சம்பந்தப் பட்ட நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. அண்டையிலிருக்கிற ஐரோப்பிய நாடுகள் இதனால் கூடுதல்  வேலை வாய்ப்பை எற்படுத்தித் தந்திருக்கிறார்கள்,  என்பது அரசுசொல்லும் காரணம்.

அதை எதிர்ப்பவர்கள், போராட்டக் கார ர் கள்  உருவாக்குகிற சட்டம் ஒழுங்கு பிரச்சினை. அரசாங்க்கத்திற்குப் பெரும் தலைவலி. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும்போதெல்லாம்  எதிர்ப்படுகிற கடைகளையும்,  அரசாங்கச் சொத்துகளையும் அழிக்கிறார்கள். சூறையாடுகிறார்கள் என்பதுக் குற்றச்சாட்டு. குறிக்கோளை அடைய  கடந்த காலத்தில் இடையூறாக இருப்பவற்றை அழித்தல் ஒரு கோட்பாடாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த நூற்றாண்டு வேறுவிதமான காட்சிகளை நமக்குச் சித்தரிக்கிறது. தற்போது இடது சாரிகள் எனக் கூறிகொள்கிறவர்கள் தொழிலாளருக்கு விரோதப் போக்கைக் கடைபிடிக்கிறார்கள். இன்றைக்குக் காம்பேட்டுகளையும் முதலாளித்துவம் தந்திரமாக வளைத்துப் போட்டுவிட்டதை இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். முதலாளித்துவம் பொதுவுடமை என்ற பேதம் இன்றில்லை, தனக்கு மிஞ்சினால் தானமும் தருமமும் என்பதை உலக அரசியல் விளங்கிக் கொண்டுள்ளது. உள்ளத்தில் மாக்கியவெல்லியாகவும் உடற்தோற்றத்தில் எளிமையான இயேசு சபையினரை நினைவூட்டும் வகையிலும் தேர்ந்தவர்களாக பிரெஞ்சு சோஷலிஸ்டுகள் இருந்தும், la Nuit Debout போராட்டக் கார ர்களைபோலவே குறைந்த பட்சம் அடுத்த அதிபர் தேர்தல்வரை உறக்கம் கெடுவதற்கான வாய்ப்பு பிரெஞ்சு ஷோஷலிஸ்டுகளுக்கும் நிறையவே இருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக