அ.சிறகின் கீழ் வானம் – கு.அ. தமிழ்மொழி
நான்கைந்து ஆண்டுகளுக்கு முனபு புதுவையில் நண்பர் சீனு. தமிழ்மணி நட த் திய நிகழ்ச்சியொன்றிற்குச் சென்றிருந்தபோது இக்கவிதை ஆசிரியைக் கண்டிருக்கிறேன். கவிதைத்தொகுப்பு வந்தபோது , நூலாசிரியருக்குப் பன்னிரண்டு வயது என்ற குறிப்பு உள்ளது. இத்தொகுப்பினை அண்மையில் தான் நண்பர் தமிழ்மணியிடமிருந்து பெற்றேன். தொகுப்பைப் போகிற போக்கிலே நம்பிக்கையின்றிதான் புரட்டிப்பார்த்தேன் எனினும், பிற்காலத்தில் சாதனையாளர்காகப் பிரம்மிப்பூட்டுகிற மனிதர்களின் இளம்பிராராயத்திய வியப்பூட்டும் அபாரத் திறன் இவரிடமும் தெரிந்த து.
விளையும் பயிர் முளையில் தெரியும் என்றொரு பழமொழி தமிழிலுண்டு. தமது போராட்ட குணத்திற்கரிய தொனியைச் சொற்களுக்கு அளித்து, உணர்வுகளுக்குரிய வண்ணத்தைக் குழைத்து ஹைக்கூ எழுதியுள்ளார், கு.அ. தமிழ்மொழி. எங்கோ சிலருக்குத்தான் பெயர்பொருத்தம் அமையும், பெயர் சூட்டிய பெற்றோர்களுக்கு நன்றி. ஓவியத்தையொத்த அவருடைய ஹைக்கூ சித்திரங்கள் நமது புருவங்க்களை உயர்த்தி பிரம்மிக்க வைக்கின்றன.
« யார் போட்ட து
ஓசோனில் ஓட்டை
சூழல் கேடு »
« ஆபத்தான வளைவு
மெதுவாகச் செல்லவும்
விரைவுப் பேருந்து »
« ஆங்க்கிலேயன் அன்று
ஆங்க்கிலம் இன்று
அடிமைத் தமிழர்கள் »
போன்ற கவிதைகளிற் தெறிக்கும் எள்ளலும், கோபமும் சூடு சுரணையுள்ள சமூகத்திற்கு உலக்கை இடி, குறிப்பாக ஹைக்கூவை முடித்துவைக்கும் வார்த்தைள் சாட்டையைச் சொடுக்குவதுபோல இருக்கின்றன.
வாசிக்கின்றவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க க் கூடியக் கவிதைகளுக்கும் பஞ்ச்சமில்லை.
« சிரிக்கிறார்
காந்தி
கள்ள நோட்டு »
« நேரம் தெரியாமல்
ஓடிக்கொண்டிருக்கிறது
கடிகாரம் »
« விடுதலை நாளில்
வாங்கினார்
கூண்டுக்கிளி «
« புத்தரிடம்
கேட்கிறான்
ஆசைய நிறைவேற்று »
« வாடிப் போனாள்
வெயிலில்
பூவிற்பவள் »
இது போன்ற நூற்றுக்கு மேற்பட்ட நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய கவிதைள் தொகுப்பில் உள்ளன. தமிழ் நாட்டில் பொது இடங்க்களில் இவற்றைத் தட்டிகளில் எழுதிவைத்து, இந்தக் ஹைக்கூ தீக்குண்ட த்தில் இறங்க்கிச்செல்லுமாறு தமிழர்களைப் பணிக்கவேண்டும். மகாமகத் தமிழன் மரமண்டைக்கு இதெல்லாம் புரியவேண்டுமே.
கு.அ. தமிழ்மொழி விளைந்த நிலம் அப்படி. தாத்தா சுதந்திர போராட்ட வீர ர். கவிஞரின் தந்தையுடன் அதிகம் நெருக்கமில்லை என்கிறபோதும் அவரது பெரிய தந்தை சீனு தமிழ்மணியை பல ஆண்டுகளாகவே அறிவேன். மொழிப்பற்று, தமிழ்தேசியம், பகுத்தறிவுக் கொள்கையென்று வாழ்க்கையை அமைத்துக்கொண்ட குடும்பம் அவர்களுடையது. இதுபோன்ற குடும்பங்கள், வீதிக்கொன்று இருந்தால் கூட தமிழினம் கடைத்தேறும் என நினைப்பவன் அப்படியொரு பின்புலத்தில் வந்த பெண்புலி என்பதால் , கவிதைகளும் பாயும் புலிகளாக இருக்கின்றன.
செல்வி கு.அ. தமிழ்மொழிக்கு பல முகங்கள், ஒரு வேளை வயதுக்கொன்று என பல முனைகளில் தமது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கக்கூடும். நூலின் பிற்சேர்க்கையாக இடம்பெற்றிருக்கிற புகைப் படங்கள், அவரின் சாதனைச் சாட்சியங்கள். வரைந்த ஒவியத்திற்குப் பரிசு, ஆடிய நடனத்திற்குப் பரிசு, பேசிய பேச்சுக்குப் பரிசு, எழுதியப் பாட்டிற்குப் பரிசு, வகுப்பில் முதல் மாணவி என்பதற்காகப் பரிசு என பங்கெடுத்த அனைத்திலும் பரிசுகள் இவரைத் தேடிவந்து அவை பெருமைப் பெற்றிருக்கின்றன. இளம் வயதிலேயே மாணவர் தொண்டியக்கத்தின் செயலாளர், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டம், தமிழ் நலக் காப்பணி சார்பில் போராட்டம் என களத்திலும் துணிச்சலைக் காட்டியிருக்கிறார். இதழொன்றிற்கு அளித்திருந்த பேட்டியையும் வாசித்தேன். இளம்வயதென்றாலும், ஆரோக்கியமான சிந்தனைக்குச் சொந்தக் கார ராகவும் இருக்கிறார்., தான் எடுக்கும் முடிவில் நியாயத் தை உணர்வதால் அதில் அவர் உறுதியுடன் இருப்பதையும் அறிய முடிகிறது. இவையெல்லாம் அவரது ஹைக்கூக்களை திரும்பவும் வாசிக்க வைத்தன.
செல்வி கு. அ. தமிழ்மொழியிடம் வேலு நாச்சியாரையும், மூவலூர் இராமாமிர்த த்தையும் சேர்த்துப் பார்க்கிறேன். ஒரு போராளிக்குரிய அத்துணை குணங்க்களும் பொருந்துகின்றன. இந்த ஐந்தாண்டுகால இடைவெளியில் வேறு பல தொகுப்புகளையும் அவர் கொண்டுவந்திருக்கலாம்,, கவிதையிலும் முதிர்ச்சிக் கண்டிருக்கலாம். கவிஞர் மாலதி மைத்ரி தலமையில் சிறுமியாக இருந்தபோதே கவிதை வாசித்திருக்கிறவர் ஆயிற்றே, எனவே எதிர்பார்ப்புகள் ஏராளம்.
———————————-
ஆ. Sept Vies
Netflix வசதி இருப்பதால் கட,ந்த சில மாதங்களாக நல்ல திரைப்படங்களைப் பார்க் க முடிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ‘Sept Vies’ என்ற பட த் தைப் பார்த் தேன். தமிழில் 7 ஜீவன் கள் என மொழிபெயர்க்கலாம்.. இதொரு அமெரிக்கத் திரைப்படம் என்பதால் அதன் அசல் பெயர் ஆங்க்கிலத்தில் Seven Pounds’ எனக்குக் கதைப்படி பிரெஞ்சுப் பெயர் சரி. ஆங்கிலப் பெயரும் காரணமில்லாமல் வைத்திருக்கமாட்டார்கள், அவர்களுக்கான காரணம் எனக்கு விளங்க்காதிருக்கலாம். . அண்மையில் தாகூர் கவிதையொன்றை சீனர் ஒரு வர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்க அவரது அபத்தமான மொழிபெயர்ப்பு குறித்த கண்டனம் பிரெஞ்ச்சு தினசரிகளில் இடம்பெற்றிருந்தது. அது குறித்து சற்று விளக்கமாக அடுத்த மொழிவதும் சுகத்தில் எழுதுகிறேன்.
படத்தின் கதை நம்பும்படியாக இல்லை, திரைக்கதையும் மக்டொனாலில் அவசரகதியில் விழுங்க நேரும் உணவை நினைவூட்டுகிறது. என்றேனும் ஒரு நாள் உலக நாயகன் உல்டாப் பண்ணி தமிழ் இரசிகர்களின் தலையில் கட்டும் அபாயமும் நிறையவே இருக்கிறது.
கதைவாயகன் எதிர்கால மனைவியுடன் காரில் திரும்பும் போது, (அம்மாவுடனோ அப்பாவுடனோ காரில் வாயகன் திரும்பினால் சுவாரசியம் இருக்காதென்று அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஹாலிவுட்டோ கோலிவுட்டோ வாஸ்து சாஸ்த்திரம் சினிமாவிற்கும் இருக்கிறது. காரில் திரும்பும் நாயகன் தனது கவனத்தை SMS செய்தியிற் செலுத்த ஏற்படும் விபத்தில் எதிர்கால மனைவி, இன்ன பிற ஜீவங்களென்று போன உயிர்கள் 7. குற்றம் உறுத்துகிறது. பிராயச்சித்தமாக பல்வேறு உடற் பிரச்சினைகளை முன்னிட்டு உயிருக்கு மன்றாடும் 7 ஜீவங்களுக்குத் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்து காப்பாற்ற நினைக்கிறான், விபத்துக்குக் காரணமான கதா நாயகன்.. சிபிச் சக்கரவர்த்திபோல அல்ல, தன்னைச் சாகடித்து. உதவிப்பெறப் போகும் உயிர்கள் செப்பு கலவாதத் தங்கமாவென உரசிப்பார்த்து தேர்வு செய்கிறான், இதற்கிடையில் கொஞ்சூண்டு காதலும் உண்டு.
வில் ஸ்மித் நடித்திருக்கிறார் என்பதைவிட நன்றாகவே நடித்திருக்கிறார் எனலாம். இருந்தாலும் அவரை அழுமூஞ்சியாகப் பார்க்க மனம் ஒப்பவில்லை
—————————————-