கவனத்தைப்பெற்ற அண்மைக்கால பதிவுகள் செப்.1 2012

 1. அகம் கொள் பொருள்

– முபீன் சாதிகா

 வண்ணத்தி நீள்பறந்து துடித்து

அமரும் ஆங்கே. சேதியும்

மறைத்து. எவ்வகை திறக்கும்

மறைபொருள் அறிய. திறம்

கொள் புலனும் கையறு காட்டி.

தவம் தரு ஞானம் ஒரு வழிகாட்டி

பாறை இடுக்கில்

புலர்ந்த மொட்டை

பறித்து தேனும்

சொறிந்த அகமாய்

செறிந்த குருவிடத்து

சேவித்த தருணம்

வண்ணத்தி நிறம் புரிந்தது: மண்ணென்று

வடிவம் தரித்தது: ரௌத்ரமாய்

நிலைத்தது: நீரின் இடத்து

இணைக்கும் பொருளின் சேர்க்கை:

மண்பெறும் ரௌத்ரம் நீராய் மாறுமோ…

மாறியது நிலமும் ஆடி

கொண்டது பேரலையாய்…

இவரது பிறகவிதைகளை வாசிக்க:

 http://mubeensadhika.blogspot.fr/

 

———————–

2. என்னை வழி நடத்துபவர்கள்

புதிய தலைமுறை இதழுக்கென எழுதிய பிரபஞ்சன் கட்டுரை மறு பிரசுரம் செய்திருக்கிறார்கள். என் குருநாதர் என விளித்து தனது வாழ்க்கையை அவர்களிடம் கற்றதாக மூவரை எழுத்தாளர் பிரபஞ்சன் கைகாட்டுகிறார்: பெருமாள், மிட்டாய் தாத்தா, எம்.வி.வி.

பிரபஞ்சனை அறிந்த நமக்கு அம்மூவரும் அந்நியர்களல்ல

http://prapanchan.in/

————————————-

 3. சூ·பியும் காபியும்

மணக்க மணக்க ரமீஸ் பிலாலி என்பவர் எழுதியுள்ள காப்பி பற்றிய கட்டுரையை, காப்பி பிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டும். காப்பியின் நதிமூலம் இவ்வளவு நீளமாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை. என் மனைவி அடிக்கடி காப்பிகுடித்து உடம்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்கிறாள். இனி காரணம் கேட்டால் தியானத்திற்காக காப்பிகுடிக்கிறேன் எனக் கூறி தப்பித்துக் கொள்ளலாம். கட்டுரையாளருக்கு மனமார்ந்த நன்றிகள்.

http://pirapanjakkudil.blogspot.fr/

————————————————–

 4.. சுயாதீனச் சினிமா

சுயாதீன சினிமாக் குறித்தும் தமிழ்ச் சூழலில் அதன் செயல்பாடு குறித்தும் பேசுகிற லீனா மணிமேகலை தமது ‘செங்கடல்’ உருவாக்கத்தின்போதும், பின்னரும் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் விரிவாக மனக்குமுறலுடன் பகிர்ந்துகொள்கிறார்.

வாசிக்க வேண்டிய கட்டுரை:

http://ulaginazhagiyamuthalpenn.blogspot.fr/

—————————————

 

.

 

 

 

***************************

பின்னூட்டமொன்றை இடுக