ஒரு பிரெஞ்சுப் புதினம். ஆசிரியர் மார்க்கெரித் யூர்செனார். எழுதபட்ட ஆண்டு 1952.
தமிழில் நல்லபடைப்புகளை வரிசைபடுத்துகிறேன் என ஒருசிலர் முன் வருவதை பார்க்கிறோம், அத் தேவ இரகசியம் ஊரறிந்தது, மேற்குலக எழுத்தாளர்கள் இம்மாதியான வம்பு தும்புகளுக்குப் போவதில்லை. அவர்களுக்கு பிற எழுத்துக்களை விமர்சிப்பது வேண்டாத வேலை, காரணம் இங்கே அதற்கென மனிதர்கள் இருக்கின்றனர். படைப்பிலிருந்து விலகி, ஒரு நல்ல படைபினை 99 விழுக்காடு நடுநிலையோடு உள்வாங்கி கனியெது, காயெது என்பதில் தேர்ந்த பத்திரிகையாளர்கள், இலக்கிய அபிமானிகள் அடங்கிய கூட்டம் அது. நார்வே இலக்கியவட்டம் அப்படிபட்ட ஓர் அமைப்பு.
எந்நாளும் உலகில் வாசிக்கபடவேண்டிவையென 100 நூல்களை இந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இந்திய நூல்களில் ராமாயணம், மகாபாரதம், சாகுந்தலம் பட்டியலில் இருக்கிறது. நோபெல் பரிசு பெற்ற தாகூர் பெயரில்லை, ஆனால் சாலமன் ருஷ்டியின் The Midnight children இடம் பெற்றுள்ளது.
பிரெஞ்சு மொழி படைப்புகள் 12 இடம் பெற்றுள்ளன. அவற்றில் தமிழறிந்த ‘அந்நியன்’ -அல்பெர் கமுய் -நாவலும் அடக்கம். எஞ்சியுள்ள 11 நாவல்களில் அதிரியன் நினைவுகள்’ நாவலுமொன்று.
இந்நாவல் ஒரு வரலாற்று நாவல், ஒரு வரலாற்று நாவலை இப்படியும் எழுதமுடியுமாவென எனக்கு பிரம்பிப்பை இன்றைக்கும் தரும் நாவல். அண்மையில் நோபெல் பரிசுபெற்ற அன்னி எர்னோ, மார்கெரித் யூர்செனார் பெயரால் பெற்ற பரிசுக்குப் பின்பே இலக்கிய உலகிற்கு நன்கு அறியப்பட்டார்.
இந்நாவலை கடந்த இரண்டு மாதமாக சொல்வனம் இலக்கிய இதழுக்கென மொழிபெயர்த்து தொடராக வருகிறது. விருப்பமுள்ளவர்கள் வாசிக்கலாம்.