இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த « Tu connais la nouvelle ? » என்கிற இலக்கிய அமைப்பு குறித்து எனக்கு நவம்பர் 2020 முன் பாக தெரியாது. பிரெஞ்சு தெரிந்த நண்பர்கள் இருப்பின் அவர்கள் அனுப்பிவைத்த கடிதத்தை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் என்னை அணுக இரண்டு காரணங்கள் ஒன்று அம்பை சிறுகதைகள் மொழி பெயர்ப்பில் எனது பங்களிப்பு, Short Edition ல் வெளிவந்த எனது சிறுகதைகள்.
நிகழ்ச்சி என்னை மையமாக வைத்து என்பதை மாற்றி தமிழை முன்வைத்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தேன். எனகுக் கிடைத்த விலாசம் தமிழுக்கும், பிரெஞ்சு மொழிக்கும் சொந்தம், என்பதால். இது விஷயத்தில் யாரை கலந்தாலோசிக்கலாம் என யாரை பங்கு பெறச் செய்யலாம் எனது நினைத்தபோது பேராசிரியர் பஞ்சாங்கம், திருவாளர்கள் மாலன், கண்ணன என்கிற பெயர்கள் நினைவுக்கு வந்தன.
அ. பேராசிரியர் க. பஞ்சாங்கம் தி. சு நடராஜன், அ.க.பெருமாள், தொ.மு பரமசிவம், நலங்கிள்ளி, லெனின் தங்கப்பா.பக்தவச்சல பாரதி வரிசையில் என் கவனத்தைபெற்ற தமிழறிஞர் அவர் எனக்கு நண்பர் என்பது அடுத்த கட்டம், இன்றுள்ள தமிழ் அறிஞர்களில் அவர், போற்றப்படவேண்டியவர்.தமிழ் தமிழினம் என பேசினால் மட்டும் போதாது எனவும், தன்னை பின் நிறுத்தி தமிழை முன் நிறுத்தும் அரிதான தமிழர்களில் ஒருவர். அவர் நூல்களை பட்டியலிட்டால் அல்லது தமிழைக் கேட்டால அடுக்கடுக்காக காரணங்களைச் சொல்லும்
ஆ. மாலன் என்கிற எழுத்தாளரை பத்திரிகையாளரை பல ஆண்டுகளாக அறிவேன். எனது கதை சொல்லலை மட்டுமே விரும்பி என்னை அணைத்துக்கோண்ட நண்பர். சிற்பி கோவையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் கடந்த தமிழர்களை அழைத்து ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தபோது நண்பர் மலேசிய பேர்சிரியர் ஊடக வியலாளர மறைந்த திரு ரெ. கார்த்திகேசு – எழுத்தாளருடன் இணைந்து அம்மாநாட்டில் நானும் ஒரு சகவிருந்தாளியாக அழைக்கபடக் காரணமாக இருந்தவர், எனது சிறுகதையையும், கவிதைகளையும் சாகித்ய அகாதமி வெளியீடுகளில் இடம்பெறச் செய்தார். என் அனுபவத்தில் பதிலுக்கு இதுநாள்வரை எந்தவொரு புத்தக வெளியீட்டு விழாவிற்காகவேனும் ஆழைத்திருப்பேனா என்றால் இல்லை, அதை நேர் செய்யவேண்டுமென்கிற நன்றிக் கடனோடு அவரைக் கலந்தேன்.
இ. கண்ணன் பதிப்பாளர், நண்பர் என்பதைக் கடந்து பல நல்ல பிரெஞ்சு மொழி படைப்புகளை நியதிகளுக்கு உட்பட்டு பொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருக்கிறார் என்பது பிரதான காரணம். அடுத்து அம்பையின் மொழிபெயர்ப்பு பிரெஞ்சில் வருவதற்கு காலச்சுவடு முக்கியம் என்கிற நியாயமும் இருந்தது. எனவே இந்நிகழ்வில் இம்மூவரின் துணையோடு தமிழை முன்னிலைப்படுத்த என்ன செய்யலாம எனத் தொடர்பு கொண்டேன், எழுத்தாளர் நண்பர் நாஞ்சில் நாடனிடமும் இது குறித்து பேசினேன். விழா ஏற்பாட்டாளர்களுக்கு கொரோனா காலத்தில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. கொரோனா பிரச்சனை, மார்ச் மாத விழா ஏப்ரல், என தள்ளிக்கொண்டே போயிற்று. ஒரு கட்டத்தில் விழா நடத்துவதே கூட சந்தேகம் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு திடீரென மே இறுதியில் என்றார்கள். வெளிப் பிரமுகர்வர்கள் கலந்துகொள்வதற்குப் பதிலாக மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி என்றார்கள். எனக்கு அதில் பழக்கமில்லை என்றதும் ஒரு புதுச்சேரியை அறிந்த பிரெஞ்சுப் பெண்மணியை Yanne Dimay என்பவரை ஏற்பாடு செய்தார்கள். தவிர தமிழ் இலக்கிய விழா பிரெஞ்சு மொழியில் நடைபெற்றது என்கிற அதிசயத்தையும் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
இரண்டு கிழமை, ஒவ்வொரு கிழமையும் ஐந்து நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் முதல் நாள் என்னையும் என்னுடன் கந்துகொண்ட பிரெஞ்சு எழுத்தாளரை பற்றிய அறிமுகம், இரண்டாம் நாள் எழுத்து ப்பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் பெயர்கள், ஊர்கள், தமிழ்ச் சொற்களைக்கொண்டு சுருக்கமாக கதை சொல்லும் பயிற்சி, . மூன்றாம் தமிழ் நாட்டின் கலை, பண்பாடு, முக்கிய ஊர்கள் பற்றிய ஓளிப்படம் Dadier Sandman என்பவர் இதனை செய்தார். நான்காம நாள் La Compagnie Triloka வின் பரத நாட்டியம் ஐந்தாம் நாள் எனது நாவல்கள் Bavâni, l’avatar de Mata Hari (மாதா ஹரி) , Je vis dans le passé (இறந்த காலம்) நாவல்களிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டன. வாசித்தவர் நாடக நடிகை Mlle Tamari என்பவர். இவர் நண்பர் வெ.சு நாயக்கர் மொழி பெயர்த்திருந்த முத்தொள்ளாயிரம், பேராசிரியர் மொழிபெயர்த்திருந்த பேராசிரியர் பஞ்சாங்கம், திரு தேவமைந்தன் ஆகியோரின் கவிதைகளையும் வாசித்தார். தமிழ் இலக்கியம் குறித்த எனது அரை சிறிய உரைக்குப் பிறகு சிறு கலந்துரையாடல், பின்னர் நமது சிறுகதைகளையும், பெண்படைப்பாளிகள் கவிதைகளையும் நாடக நடிகர்கள் வாசித்தார்கள். வாசித்தவர்களின் படங்கள் கீழே உள்ளன.




