சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை ! நமக்கெல்லாம் உயிரின்வாதை ! – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )

சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை ! நமக்கெல்லாம் உயிரின்வாதை !
– ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )

ஒன்றிரண்டு அல்ல பத்து உயிர்கள் ! சுனாமியால் அல்ல, விபத்துக்களால் அல்ல அரசு பயங்கரவாத த்தால். உலகில் எங்கென்றாலும் ஒரு சனநாயக நாட்டில் போராட்ட த்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு என்பது ஏற்கமுடியாத ஒன்று.

– ஏங்க எங்க கிளம்பிட்டீங்க !
– வேறெங்க பொதுப்பிரச்சினைன்னு எல்ளொரும் கலந்துகிறப்ப நாம போகலைன்னா எப்படி ?
– ஸ்னோலின் எங்கடி கிளம்பிட்ட ?
– வேறெங்க ஃபிரண்டு வீட்டுக்குத்தான், நாளைக்கு ரிஸல்ட் வருதில்லை அது விஷயமா பேசத்தான்.
– சரி சரி போனோம் வந்தோம்னு வந்து சேரு !
– தொண தொணன்னு உனக்கு இதே வேலையா போச்சு. நான் என்ன சின்ன குழந்தையா ? அப்பா கிட்ட சொல்ல மறந்திடாத ! நாளைக்கு ரிசல்ட்டை நல்லா செலிபரேட் பண்ணனும் !
*****
இப்படி மனைவிடம் சொல்லிவிட்டு வந்த கணவன், அம்மாவிடம் சொல்லிக்கொண்டு போன பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற பெண் என பத்து உயிர்களை மட்டும் பலியாகவில்லை, அவர்கள் மீது வளர்த்துக்கொண்ட நம்பிக்கைகளை, கனவுகளையும் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக்கி என்ன சாதிக்க இருக்கிறது இந்த அரசு.

அரசு உடமைகளை எரித்தவர்களைத் தண்டிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா ?

கி.பி 2000 பிப்ரவரி 2 மூன்று வேளாண் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மாணவிகளை பேருந்தோடு உயிரோடு எரித்த கொலைகார ர்களை எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை ஒட்டி விடுதலை செய்யவிரும்புவதாகச் செய்தி. அதே அரசுதான் போராட்டக் கார ர்கள். வன்முறையில் இறங்கியதாகச் சொல்லி சுடச்சொல்லி இருக்கிறது, வெட்கக் கேடு !

வழக்கம்போல ஒரு நபர் விசாரணைக் கமிஷன், ஒரு உயிருக்குப் பத்து இலட்சம், இதற்கென்றே பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி இருப்பார்கள் போல.

எதிர்க் கட்சித் தலைவர் ஒரு கோடி கொடுத்தால் சரியாகிவிடும் என நினைக்கிறார். மக்களை புரிந்துவைத்திருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் தமிழ் நாட்டில் குறைந்த து 50 கட்சிகள் இருக்கின்றன. இவர்கள் அனைவருக்குமே மக்களின் பிரச்சினைகளை காட்டிலும் அடுத்து வரும் தேர்தலில் தங்கள் இருத்தலை எப்படிக் கட்டிக் காப்பதென்பது பிரச்சினை.
மக்கள் பிரச்சினைக்காக இவர்கள் என்றால் ஒன்று சேர்ந்து போராடமாட்டார்களா?

நாம் எப்போதும் ஒன்று சேராதவர்கள் என்பதால்தான் ஈழப்பிரச்சினையிலிருந்து ஸ்டெர்லைட் வரை இழப்புகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியே போராட்டத்தை அறவழியில் நடத்துங்கள், அப்பாவி உயிர்கள் பலியாக களம் அமைத்துக் கொடுக்காதீர்கள்.

———————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s