ஈரோடு பல்லவி பதிப்பகம் மற்றும் Kongunadu Publications Pvt.Ltd. இணைந்து தேசிய ஆசிரியர் தின நூல் வெளியீட்டுத் திட்டம் – 2017 என்ற பொருளின் கீழ் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்த இருப்பதாக ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அக்கருத்தரங்கத் தலைமைக் குழுவில் எனது பெயரும் இடம்பெற்றிருந்தது. இதில் பிரச்சினை என்னவெனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னதாக இப்படியொரு கருத்தரங்கம் குறித்தோ, இதில் கலந்துகொள்ள இயலுமாவென்றோ என்னைக் கேட்டவர்களில்லை.
2015ல் நடந்த ஒரு நிகழ்ச்சி : திருச்சியில் பேராசிரியர்களும் நண்பர்களுமான பசும்பொன், விஜயராணி இருவரும் உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் . அவ்விழாவில் பேராசிரிய நண்பர் உதயசூரியன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ள பொங்கல் விழாவில் கலந்துகொள்ள இயலுமா எனக்கேட்டார், பிறகு தொலைபேசியிலும் தொடர்புகொண்டு வற்புறுத்த சம்மதித்துச் சென்றேன். நடந்த நிகழ்ச்சி ஆளும் கட்சியின் மாவட்ட மாநாடு போலவிருக்க, எனது பெயரை குறிப்பிட்டு அழைத்தபோது, மேடையில் ஏறாமல் பக்கத்திலிருந்த ஒருவரிடம் பேராசியர் நண்பர் உதயசூரியனிடம் மன்னித்துக்கொள்ளச் சொல்லும்படி கூறிவிட்டு அரங்கத்தை விட்டுவெளியேறினேன். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல வெளி நாட்டுச் சாதனையாளர்களை இக்கூட்டத்திலும் பார்க்கிறேன், அவர்கள் சாதித்தது என்ன என்பதுதான் புரியாத புதிர் ? நாம் சாதித்தவர்கள் அல்லது சாதிக்கின்றவர்கள் என்று நினைக்கிற அசலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சாதனையாளர்கள் பெயர்கள் ஏதேனும் இருக்கின்றனவா எனப்பார்த்தேன். மருந்துக்குக் கூட ஒரு பெயருமில்லை ஏமாற்றமே மிஞ்சியது. எனவே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமில்லையென ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐயோ தமிழினமே !
நா.கிருஷ்ணா