பிரான்சுநாட்டு உயர்நிலைப்பள்ளிப்பொதுத் தேர்வும் த த்துவமும்
பிரெஞ்சுக் கல்விமுறை இந்தியாவினும் பார்க்க சற்றுக் கடுமையானதென்பது , எனதுக் கருத்து. இக்கல்விமுறைகுறித்து பிரான்சு நாடு பற்றிய இரண்டாவது தொடரை ஆரம்பிக்கும் பொழுது விரிவாக எழுத ஆசை. இங்கே உயர்நிலைப்பளி என்பட்து(Lycée ). . சிறப்புப் பாடமாக எதை எடுத்திருந்தாலும் , மொழிப்பாடத்தைப் போல தத்துவமும் கட்டாயம். பள்ளி இறுதிவகுப்பு மாணவர்கள் பக்கலோரெயா (Baccalauréat) என்ற பொது த் தேவுக்கு தயாராகிறவர்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பின் முடிவில், வருகிற தேர்வுக்கு ஈடானது. இதனைச் சுருக்கமாக Bac என குறிப்பிடுவதுண்டு. கடந்த வாரம் நடந்து முடிந்த தத்துவத் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் :
1‘Bac’ இலக்கிய பிரிவினருக்கு
அ. நமது அறநெறி நம்பிக்கைகள், அனுபவத்தின் அடிப்படையில் உருவானவையா ?
– « Nos convictions morales sont-elles fondées sur l’expérience »
ஆ. ஆசை இயல்பிலேயே அளவில்லாததா ?
– « Le désir est-il par nature illimité ? »
2. ‘Bac’ பொருளியல் மற்றும் சமூகவியல்
அ ஆசைகள் பற்றிய தெளிவு எல்லாநேரங்களிலும் நம்மிடத்தில் உண்டா ?
– « Savons-nous toujours, ce que nous désirons ? »
ஆ. வரலாற்றை அறிவதால் கிடைக்கும் நன்மை என்ன ?
– « Pourquoi avons-nous intérêt à étudier l’histoire ? »
3 . Bac அறிவியல்
அ. குறைவான வேலை என்பதற்கு நன்றாக வாழ்வதென்று பொருளா ?
– « Travaillons moins, est-ce vivre mieux ? »
ஆ. ஒன்றைப்பற்றிய அறிதலுக்கு நிரூபணம் அல்லது காரண காரியம் விளக்கம்
அவசியமா ?
– « Faut-il démontrer, pour savoir ? »
- Bac தொழில் நுட்பம்
அ. சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் மட்டுமே நேர்மையாகுமா ?
– « Pour être juste, suffit-il d’obéir aux lois ? »
ஆ. நம்பிக்கைகளை எப்பொழுதுமே நம்மால் நியாயப்படுத்த முடிகிறதா ?
– « Pouvons-nous toujours justifier nos croyances ?
ஒவ்வொரு தலைப்பைக் குறித்தும் எனக்குப் பட்ட தை எழுதலாமென நினைக்கிறேன், நீங்களும் உங்கள் கருத்தை நேரமிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
———————————