இடையனும் இடைச்சியும்

எதிர்த்த கிடைக்காரி

இவரைப் பார்த்து சிரித்தாள்

எரிச்சலுடன். இரண்டாவது முறையாக

பட்டியில் இட்ட ஆடுகளை எண்ணினார்

முன்னூற்றுச்  சொச்சம் !

சொச்சம் வேறு கிடைக்குச் சொந்தமானது !

மூதாதையர் சொத்தாக  முப்பது

பேனைப் பெருமாளாக்கியதில் முன்னூறு !

என்ண்ணிக்கைத் தவறோ ?

மறுபடியும்

பங்காளி இடைச்சியின் நமட்டுச் சிரிப்பு !

ஐயத்துடன்

எதிராளியின் கிடையைப் பார்த்தார்

ஆடுகளுக்குப் பதில்

அடக்கமான மாடுகள் !

‘புல்’லுக்கும் தண்ணிக்கும்

புழுக்கைக்குப் பதிலாகச் சாணம் !

ஆடுகளை என்ன செய்திருப்பாள் ?

என்ற கேள்வி

எலும்புகளுடன்  எறியப்பட்ட

இலைகளைப் பார்க்கும்வரை

நீடித்த து !

கண்ணீரைப் பொலபொலவென்று

சிந்தினார் !

ஆடுகளுக்காக அல்ல- தமது

காவல் நாய்கள்

வேலிதாண்டிவிடுமோ  என்ற அச்சத்தில் !

–             நாகரத்தினம் கிருஷ்ணா

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s