எதிர்த்த கிடைக்காரி
இவரைப் பார்த்து சிரித்தாள்
எரிச்சலுடன். இரண்டாவது முறையாக
பட்டியில் இட்ட ஆடுகளை எண்ணினார்
முன்னூற்றுச் சொச்சம் !
சொச்சம் வேறு கிடைக்குச் சொந்தமானது !
மூதாதையர் சொத்தாக முப்பது
பேனைப் பெருமாளாக்கியதில் முன்னூறு !
என்ண்ணிக்கைத் தவறோ ?
மறுபடியும்
பங்காளி இடைச்சியின் நமட்டுச் சிரிப்பு !
ஐயத்துடன்
எதிராளியின் கிடையைப் பார்த்தார்
ஆடுகளுக்குப் பதில்
அடக்கமான மாடுகள் !
‘புல்’லுக்கும் தண்ணிக்கும்
புழுக்கைக்குப் பதிலாகச் சாணம் !
ஆடுகளை என்ன செய்திருப்பாள் ?
என்ற கேள்வி
எலும்புகளுடன் எறியப்பட்ட
இலைகளைப் பார்க்கும்வரை
நீடித்த து !
கண்ணீரைப் பொலபொலவென்று
சிந்தினார் !
ஆடுகளுக்காக அல்ல- தமது
காவல் நாய்கள்
வேலிதாண்டிவிடுமோ என்ற அச்சத்தில் !
– நாகரத்தினம் கிருஷ்ணா