பிள்ளை வரத்திற்கா?
இல்லை, இல்லை!
பெண்ணுக்காகவா?
சீச்சி….!
அம்மா, அப்பா…
தம்பி, அண்ணன்
அக்காள், தங்கை, நண்பர்கள்?
ஒருவரும் வேண்டாம்!
வாசத்தைப் பிரித்துணரும்,
ஓசையின் ருசி அறியும்
வாழ்க்கையின் தூரம் காணும்
சூட்சமங்கள்?
வேண்டவே வேண்டாம்!
எதற்காகப் பின்
கொலைவாளும்,
கண்களில் தீயுமாக
கடவுளைக் குறித்து தவம்?
என்னையும் என் சகமனிதர்களையும்
கொன்றபின் -இனி நீ
எதற்கு ?
பரந்து கெடுக!