ஸ்பெய்ன் நாட்டின் தென்பகுதி குறிப்பாக அண்டாலூஸியா (Andalousie) வரலாறு, இயற்கை, மரபு, பண்பாடு அனைத்திலும் ஒரு பன்முகத் தன்மையைத் தெரிவிக்கும் பிரதேசம். இப்பிரதேசத்தில் கொர்டாபோ, செவில்லா இரண்டும் முக்கிய நகரங்கள். மாட்ரீட்டிலிருந்து புறப்பட்டு கொர்தோபாவை அடைந்தபோது மாலை நான் கரை மணி. வழக்கமாக இன்று எல்லா பெரு நகரங்களிலமுள்ள இரயில் நிலையங்களின் அலங்காரங்களுடன் எங்களை வரவேற்றன. பிராஸ்ஸரியொன்றில் காப்பிக் குடித்துவிட்டு வெளியில் வந்தபோது காவி நிறத்தில்கண்ணுக்கெட்டியவரை காரைபூசிய கம்பளம் ஒரு பெருவெளிபோல விரிந்து நீண்டது. தகுந்த இடைவெளியில் நீருற்றுகள், நவீனமும் கலை நயமும் பின்னிப்பிணைந்த மின் விளக்குக் கம்பங்கள். ஸ்பெய்ன் ஆண்களும் சரி பெண்களும் சரி தனி அழகு, மத்தியதரை கடற்பகுதிகளின் பிரத்தியேக வார்ப்புகள்அவர்கள் : காற்றைபோல நடக்கிறார்கள், ஓதுவார் குரலில் உரத்துப் பேசுகிறார்கள். சோறுபோல சிரிக்கிறார்கள். எங்கே சென்றாலும் « ஓ….லா ! » என வரவேற்கும் ஸ்பானியர்களின் விழிச்சந்தைகளில் செலவின்றிபெற்ற முறுவலும், புன்னகையும் நெஞ்சத்தை மளமளவென்று நிரப்பி நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. அந்தி நேர கொர்டோபாவின் குரல்களை அலட்சியம் செய்யும் துணிச்சல் எனக்கோ, மனைவிக்கோ இல்லை. அலுப்பை இறக்கி ஓட்டல் கட்டிலில் ஓய்வெடுக்கச்செய்துவிட்டு, நாங்கள் கிழே இறங்கினோம்.
கொர்தோபாவின் மேற்குப் பகுதியில் தேடிக்கண்டறிவது எங்கள் நோக்கம். கிறிஸ்த்தோப் கொலம்பஸ் பாதம் பட்ட பூமியில் இயன்றவரை நடந்து பார்ப்பது. நவீனத்தில் தலை நனைத்துக்கொண்டிருக்கிற உலகின் பெரு நகரங்களை ஒத்திருந்த பகுதிகளைக் கடந்து, Tapas,, Croquettes போன்ற மோகினிப்பிசாசுகளின் சூட்சியில் விழாமல், புதிர் விளையாட்டுப்போன்ற தொரு புதர் மண்டிக் கிடந்த துபோல வீடுகளும் குறுகிய தெருக்களாற் கோலமிடப்பட்டுமிருந்த பழைய நகருக்குள் நுழைந்தோம். இரு சக்கர வாகனங்களுக்கும் பாதசாரிகளுக்கும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதைப் போன்றதொரு நகர அமைப்பு. சுற்றியுள்ள மனிதர்களை மறந்தோமென்றால் பத்து பன்னிரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணித்த உணர்வு. யூதர்களும், கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் இன்றளவும் இணக்கத்துடன் வாழும் பகுதி. 7ம் நூற்றாண்டில் தொடங்குகிறது « La Juderia » என்ற இப்பகுதியின் வரலாறு. காலாற இப்பகுதியில் நடந்துவிட்டு, இரவு உணவை முடித்துப் படுத்தபோது இரவு பத்து மணி.
கொர்தோபா இரண்டாம் நாள்
இன்று Sight seeing பேருந்து எடுப்பதெனத் தீர்மானித்திருந்தோம். காலை ஒன்பது மணிக்கு சுற்றுலா அலுவலகத்தில் விசாரித்தபோது சுற்றுலா பேருந்தொன்றிர்க்கு நபர் ஒன்றுக்கு 18 யரோவென பயணச் சீட்டு வாங்க்கியாயிற்று. கொஞ்சம் பொறுப்பான ஊழியை, பேருந்து நிற்கும் சுற்றுலா இடங்க்கள், அவற்றில் எவை மிகவும் முக்கியமானவை, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து என்ற தகவல் அன அனைத்தையும் விளக்கிக் கூறிவிட்டு இருபது மீட்டர் தூரத்தில் இருந்த பேருந்து நிறுத்தத் தில் விட்டுவிட்டுச் சென்றார். எல்லா பெரு நகரங்களிலும் தற்போது கிடைக்கின்ற சேவை. முதலில் ஒரு சுற்று எங்கும் இறங்காமல் பேருந்தின் மேற்தளத்தில் அமர்ந்து சுற்றுலா இடங்கள் பற்றிய விளக்கங்களைக் காதில் வாங்க்கிக்கொண்டு, அவற்றில் முக்கியமானவை எவைஎவையெனக் குறித்துகொண்டு மறு சுற்றில் இருந்து பார்க்கவேண்டிய இடங்களில் இறங்க்குவதும், பார்த்து முடித்தபின் அடுத்த பேருந்து பிடித்து பிற இடங்க்களூக்குச் செல்வன்ற முடிவுடன் பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு தங்கியிருந்த ஒட்டல் அருகே இருந்த உணவுவிடுதியில் னல்ல ஸ்பானிஷ் உணவு. அதிகமில்லை நபர் ஒன்றுக்கு !2யூரோவில் முடிந்தது.
அ. கத்தீடரல் மசூதி
தற்போது தேவாலயம் உள்ள இடத்தில் 6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Baslic San Vincente இருந்துள்ளது. நகரில் இஸ்லாமியர் என்னிக்க்கை அதிகரித் தும், அப்போதைய கொர்தோபா மன்னர்அப்துல் ரெஹ்மான் ஒரு மசூதியைக் கட்ட நினைத்தார். தனது கற்பனையில் கண்ட மசூதியை எழுப்ப இடம்போதாதென நினைத்ததால் பஸ்லிக்கை இடிக்க வேண்டியிருந்தது. இடித்த இட த்தையும் உள்ள்டக்கி, உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவில் பிரம்மாண்டமானதொரு மசூதி எட்டாம் நூற்றாண்டில் உருவாயிற்று. 13ம் நூற்றாண்டில் நகரம் கிறுஸ்த்துவ மன்னர்களின் கைக்குத் திரும்பவும் வருகிறது. அவர்கள் மசூதியை தேவாலயமாக மாற்றுகிறார்கள். ஆக ஒரு மசூதிக்குரிய இசுலாமிய கலை நுணுக்கங்களுடன் தேவாலயத்தைக் காணமுடிகிறது. கிருஸ்துவர்களும் தங்கள் பங்கிற்குக் கலை நுட்பத்தை தேவாலயத்தில் சேர்த்துள்ளார்கள். Mezquita de Cordoba என்றும் Catedral de Nuestra Señora de la Asunción என்றும் இன்று அழைக்கப்படுகிறது.
இது தவிர Algazer de les Reyes, Christines, Medina Azahara, Pont Roman, Plaza de potro, Palais vienne என நாங்க்கள் பார்த்தவை. அவை பற்றிய தகவல்கள் இணைய தளத்தில் கிடைக்கின்றன.
கொர்டோபா முற்றங்கள்
அண்டாலூஸியா பிரதேசங்க்களைப் பற்றிச்சொல்கிறபோது நகர்ப்பகுதிகளில் முற்றங்கள் பற்றிக் குறிப்பிடவேண்டும். அக்காலத்தில் கிராமங்களில் வாசலை நடுவில் வைத்து சுற்றிலும் கூடம் அறைகள் என்றிருக்கும் முற்றத்தைப் போலத்தான் இவைகளும் உள்ளன. எனினும் இங்கு அந்த முற்றம் பூஞ்செடிகள் அடர்ந்த தாவரங்கள் என அலங்காரமாய் உள்ளன. தரைகளைக் கூழாங்கற்களைப் பதித்து அழகுபடுத்தி இருக்கிறார்கள்.
(தொடரும்)