ஆத்தோரமாயிருக்கும்….
ஆத்தோரமாயிருக்கும்
காத்தாடித் தோப்புக்குள்ள
ஆத்தா நீ சின்னப்பொண்ணு
கண்ணிவச்ச- அதைப்
பாரத்தா இந்தப் புய
சொக்கிப் போனான்!
சேத்தோரமாயிருக்கும்
சிறு நண்டு குறுகுறுப்ப
சித்தாட சின்னப்பொண்ணு
கண்ணுக்குள்ள- நீ
சிலுசிலுன்னு பாத்துவைக்க
வேத்து போனான்!
நாட்டாமை கருப்பஞ்சோல
நடுச்சாம இரவு வேள
சீட்டாட்டம் முடிச்சுப்புட்டு
காத்திருந்தான்
காத்திருந்து காத்திருந்து
நீத்துப்போனான்
வேட்டவலம் சந்தையிலே
வேட்டிய மடிச்சுக் கட்டி
காட்டாறா வலம் வந்து
நோட்டமிட்டான் -மனச
கருப்பஞ் சக்கையாக்கிப்புட்டு
மறைஞ்சுப்போன!
அம்மாவாசை கருக்கலிலெ
அயிரைமீனு சுட்டுத் தின்ன
கம்மாகரையில் காத்திருப்பான்
சின்னப்பொண்ணு – நீ அவன்
கன்னம் சேர்த்து சொல்லவேணும்
பாட்டு ஒண்ணு!
- நா.கிருஷ்ணா