எப்போதோ எழுதியது -2 (1973)

 ஆத்தோரமாயிருக்கும்….

 

ஆத்தோரமாயிருக்கும்

காத்தாடித் தோப்புக்குள்ள

ஆத்தா நீ சின்னப்பொண்ணு

கண்ணிவச்ச- அதைப்

பாரத்தா இந்தப் புய

சொக்கிப் போனான்!

 

சேத்தோரமாயிருக்கும்

சிறு நண்டு குறுகுறுப்ப

சித்தாட சின்னப்பொண்ணு

கண்ணுக்குள்ள- நீ

சிலுசிலுன்னு பாத்துவைக்க

வேத்து போனான்!

 

நாட்டாமை கருப்பஞ்சோல

நடுச்சாம இரவு வேள

சீட்டாட்டம் முடிச்சுப்புட்டு

காத்திருந்தான்

காத்திருந்து காத்திருந்து

நீத்துப்போனான்

 

வேட்டவலம் சந்தையிலே

வேட்டிய மடிச்சுக் கட்டி

காட்டாறா வலம் வந்து

நோட்டமிட்டான் -மனச

கருப்பஞ் சக்கையாக்கிப்புட்டு

மறைஞ்சுப்போன!

 

அம்மாவாசை கருக்கலிலெ

அயிரைமீனு சுட்டுத் தின்ன

கம்மாகரையில் காத்திருப்பான்

சின்னப்பொண்ணு – நீ அவன்

கன்னம் சேர்த்து சொல்லவேணும்

பாட்டு ஒண்ணு!

  • நா.கிருஷ்ணா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s