1. Ap. JC
வஸிலிஸ் அலெக்ஸாக்கிஸ் (Vassilis Alexakis ) என்ற நாவலாசிரியரின் நாவல் ஒன்றை கடந்த ஒருமாதமாக படித்து நேற்றுதான் முடித்தேன், பெயர் Ap. JC. – அதாவது இயேசுவுக்குப் பிறகு. இந்த நாவலைப் பிரெஞ்சு விமர்ச்கர்கள் என்ன சொல்லியிருக்கிரார்கள் என்பதைப் படிக்கவில்லை. புத்தகத்தைச் சுற்றியிருந்த ஒரு துண்டு ரேப்பர் பிரெஞ்சு அகாடெமியின் பரிசுபெற்ற நூல் என்று தெரிவித்தது. ஆர்வ்சத்துடன் படித்தேன். தொடக்கவரிகள் கொடுத்த ஆர்வம் அடுத்திருந்த பக்கங்கள் தரவில்லை. இரண்டு நாட்களிலேயே கசந்துவிட்டது. தொடர்ந்து படித்திருக்க கூடாதுதான். பிரெஞ்சு அகாடெமியின் மீதிருந்த மரியாதை நூலுக்குப் பங்கிட்டு, படித்தேன். அவர்களே பரிசு கொடுத்திருக்கிறார்களே, ஏதேனும் இருக்கும் இருக்குமென்று கடைசிப்பக்கம்வரை இடையில் சில பக்களத் தாண்டிக் குதித்து – (ஒருவேளை அப்பகங்களில்தான் பிரெஞ்சு மொழி அகாடமியின் பரிசுக்கான தகுதி மொத்தமும் இருக்கிரதோ என்னவோ?) படித்துமுடித்தேன். ஒரு மாதம் பிடித்தது. என் வாழ்நாளில் 30 நாட்களை ஒரு புத்தகத்திற்காகாக – சாண்டில்யனில் ஆரம்பித்து ஜெயமோகன் வரை -ஒதுக்கியதில்லை. எதற்காக பிரெஞ்சு அகாடாமெ இதற்குப் பரிசிகொடுத்திருப்பார்கள் என பலமுறை யோசித்தும் விடைகிடைக்கவில்லை. 380 பக்க நாவலில் ஆசிரியரின், புனைவுக்காக ஒதுக்கிய பக்கங்கள் அதிகப்பட்சம் 50 பக்கங்களை ஒதுக்கலாம். மற்றவை பிறநூல்கள் பற்றிய தகவல்களும், அந்நூல்களில் தமது நாவலுக்கு எடுத்துக்கொண்ட கருவின் அடிப்படையில் சொல்லபட்டத் தகவல்களும். பரிசுக்கு வர் எடுத்துக்கொண்ட கருதான் காரணமாக இருக்கக்கூடும். கதை நாயகன் பல்கலைகழக ஆய்வு மாணவன். தந்தையின் நண்பர் சிபாரிசினால், பார்வை குறைந்த மூதாட்டி (Nausicaa Nicollaidis) வீட்டில் தங்கிப் பல்கலைகழகத்திற்கு போய்வருகிறான். கிழவிக்கு அவ்வப்போது நூல்களை வசித்து, தங்கும் செலவை சரிகட்டுகிறான். மிகப்பெரிய செல்வந்தரான கிழவிக்கு வாரிசுகளில்லை. 50 வருடங்களுக்கு முன்பு, தங்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து அதோஸ் (Le Mont Athos ) மலையில் மரபார்ந்த கிறித்துவ நெறிமுறையினர் மடாலயங்கள் ஒன்றில் துறவுவாழ்க்கை மேற்கொண்டிருக்கிற சகோதரனை கண்டுபிடிக்குமாறு பணிக்கிறார். சீதையைத் தேடிய அனுமானைப்போல கதைநாயகனும் பயணத்தை மேற்கொள்கிறார். கதை தன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லா தேடலிலும் நிலழ்வதுபோலவே, இந்த இளைஞனும் பேராசிரியர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நூலகர், பத்திரிகையாளர், இறுதியாக அதோஸ் மலை துறவி எனப் பலரைச் சந்திக்கிறான். எல்லோருக்கும் அத்தோஸ் மலைவாசிகள் – அதாவது மரபுசார்ந்த கிறித்துவத்தில் நம்பிக்கைவைத்து இயங்கும் மடாலயத்தினரைக் குறித்து குறைசொல்ல நிறைய இருக்கின்றன:
பேராசைப் பிடித்தவர்கள்; வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள், அதிகாரத்திற்காகவும், பொருளுக்காவும் கிரேக்கத்தில் எந்த அரசியல் தலையீட்டையும், ஆட்சியையும் ஏற்பதற்குத் தயாராக இருந்தவர்கள், பெண்களுக்கு எதிரானவ்ர்கள்; யூதர்களைக்கொல்ல காரணமாக இருந்தவர்கள், கொன்றவர்களுக்கு விசுவாசியாக நடந்துகொண்டவர்கள்; கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக இயங்கினார்கள்..என நீளுகிறது அவர்களின் குற்றப்பதிவு. பொதுவாக மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபை கூட்டத்திற்கு அதன் வழிவந்தவர்களுக்கு மரபுசார்ந்த தன்னதிகாரமிக்க கிழக்கு ஐரோப்பிய கிறித்துவர்களை அவ்வளாவாகப் பிடிக்காது. ஐரோப்பாவின் மேற்கு கிழக்கு அரசியல் விருப்பு வெறுப்புகள் ஏதோ பாட்டாளி வர்க்கம் முதலாளிவர்க்க அரசியலைமட்டும் சார்ந்ததல்ல. இதுபோன்ற நூற்றாண்டு பிரச்சினகளெல்லாம் அதற்குண்டு. அதுவும் தவிர அண்மைக்காலத்தில், Auto-fiction எனப்படுகிற சுபுனைவுகள் அதிகமாக வெளிவந்து பிரெஞ்சு வாசகர்களைக் களைபடையச்செய்திருப்பதும் உண்மை. மரபுசார்ந்த கிறித்துவர்களை ஆசிரியர் தமது படைப்பு(?) ஊடாக சில வதந்திகளையும் அதிற் சேர்த்துக்கொண்டு கொடுத்துகிழிகிழியென்று கிழித்திருப்பது பிரெஞ்சு அகாடெமிக்குச் சந்தோஷத்தை தந்திருக்கக்கூடும். அதனைத் தவிர 2007ல் இந்நூலை அகாடெமி பரிசுக்குத் தேர்வுசெய்ய வேறு காரணங்கள் இருக்க முடியாது. இந்த நூல முடித்தபோதுதான் நண்பர் பஞ்சாங்கம் ஒரு தகவல் நினைவுக்கு வந்தது. நாவல் மிக நன்றாக வந்திருந்ததாகக் குறிப்பிட்ட நண்பர் குன்னிமுத்து நாவலில் இந்தியாவில் எப்படி கிறித்துவ அமைப்புகள் செயல்படுகின்றன என்பதை ஆசிரியர் விமர்சித்திருந்ததாக எழுதியிருந்தார். இந்தியாவிலிருந்து வாங்கிவந்த நாவலை படிக்கவேண்டுமென்று எடுத்துவைத்திருக்கிறேன். ஆனால் இதனை ஒரு வாரத்தில் முடித்துவிடுவேன் தொடக்கத்திலே நாவலின் மொழி நடை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.