சிறந்த திறனாய்வாளரும், எழுத்தாளரும், கவி ஞருமான முனைவர்.க பஞ்சாங்கம் எனது அழைப்பை ஏற்று பிரான்சுக்கு வருகிறார். பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம் தமது பத்தாவது ஆண்டு விழாவை திருவள்ளுவர் விழாவாக கொண்டாடும் நிகழ்வில் – (ஏப்ரல் 12) சிறப்புரை ஆற்றவிருக்கிறார். தலைப்பு: “திருக்குறளும் தமிழ் மறுமலர்ச்சியும்”. நண்பர் ஏப்ரல் 11லிருந்து 22 வரை பிரான்சில் இருக்கிறார். பாரீஸில் அநேகமாக ஏப்ரல் 13 அல்லது 14வரை தங்கிவிட்டு ஸ்ட்ராஸ்பூர் வர இருக்கிறார் ஐந்து அல்லது ஆறு நாட்கள் இருந்தபின்பு பாரீஸ் வந்து அங்கிருந்து 22ந்தேதி இந்தியா திரும்பத் திட்டம். இலக்கிய நண்பர்கள் விரும்பினால் பாரீஸிலோ அல்லது ஸ்ட்ராஸ்பூரிலோ வாய்க்கும் நேரத்தை பொறுத்து அவரைச் சந்திக்கலாம். இது ஒரு குறுகிய பயணத் திட்டம் என்பதால் நண்பர்கள் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளசொல்லி வற்புறுத்தவேண்டாம். பன்னிரண்டாம் தேதி நிகழ்வு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
முனைவர் க. பஞ்சாங்கம் பற்றிய ஒரு காணொளி:
தொடர்புகட்கு.
நா.கிருஷ்ணா: 07 63 22 15 64
———————————————————
“பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம் ஏப்ரல் 12 பிற்பகல் 2 மணி அளவில் பாரீஸில் (Salle des Fêtes, Avenue du Générale De Gaulle, 93360 -Montmagny) ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி விபரம்: