இட்லரின் பிணம்
-1. 1945ம் ஆண்டு நேசநாடுகளின் படைத் தளபதிகள் பெர்லினின் கூடினார்கள். இச்சம்பவத்திற்கு 28 மணிநேரத்திற்கு முன்பாக ஹிட்லர்வசமிருந்த ஜெர்மன் எவ்வித முன்நிபந்தனைமின்றி சரணடைந்திருந்தது. ஏறக்குறைய இதற்கெல்லாம் முன்பாக ஒரு பாதாள அறையில் உலகனைத்தும் ஜெர்மனால் ஆளப்படவேண்டும் எனக் கனவுகண்ட ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டிவிட்டாரென்று பேச்சு. உலக அரசியலில் ஹிட்லர் மரணமென்ற வதந்தி ஒரு பூம்பத்தையே நிகழ்த்தியதெனலாம். வெற்றியின் களிப்பில் நேசநாடுகள் திளைத்திருந்தாலும் அதைக்காட்டிலும் உலக நாடுகளுக்கிடையான உறவில் பரஸ்பர நல்லெண்ணத்தையும், சுமுகமான நட்பையும் வளர்த்து அமைதியை நிலைநாட்டுவது அவர்களுக்கு முதற்பணியாக இருந்தது. பத்திரிகையாளர்களும், இதழியிலாளர்களும் முக்கியத்துவமறிந்து பெருந்திரளாக நேசநாடுகளில் ராணுவ தலைவர்களின் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். குறிப்பாக ரஷ்ய படையின் தளபதி ஜூக்கோவ் அங்கே பத்திரிரிகையாளர்களின் கவனத்திற்குள்ளானார். காரணம் இவர்தான் ஹிட்லரின் இறுதி நாட்கள் குறித்து விளக்குவதற்கென பத்திரிகையாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். நடிகை ஏவாவுடனான ஹிட்லரின் திருமணத்தை வெளி உலகிற்கு அறிவித்தவரும் இவரே. ஆனால் அன்றையதினம் ஒரு நடிகையையுடனான ஹிட்லரின் திருமணத்தைக் காட்டிலும் பத்ரிகையாளர்களுக்கு ஈர்ப்பினை தந்த தகவல், அவரது மரணம் சம்பந்தமானது.
” நடந்ததனைத்தும் புதிராக உள்ளது. ஹிட்லரில் உடலை எங்களால் அடையாளப்படுத்தவியலாததால், அவருக்கு நேர்ந்த முடிவை உறுதிப்படுத்த முடியாவர்களாகவிருக்கிறோம். பெர்லினிலிருந்து கடைசி நிமிடத்தில் எங்கேயாவது இட்லர் தப்பித்திருக்கவும் சாத்தியமுண்டு” என்ற ஜூர்க்கோவின் வார்த்தைகள் முக்கியமானவை.
பெர்சாரின் என்ற மற்றொரு ராணுவ அதிகாரியின் குறுக்கீட்டிலும் இச்சந்தேகம் உறுதிப்பட்டது:
“முக்கியமான ஜெர்மன் அதிகார வட்டத்தைச் சேர்ந்தவர்களின் பிணங்களைக் கண்டோம். ஆனால் அப்பிணங்களில் ஹிட்லர் பிணமென்று எதனையும் குறிப்பிட்டு சொல்ல எங்களால் முடியாது. எனவே அவர் மரணத்தை சந்தேகிக்க வேடியிருக்கிறது. ஐரோப்பாவில் எங்கோ ஒரிடத்தில் இன்னமும் பதுங்கியிருக்கலாமோவென சந்தேகிக்கிறோம். எங்கள் சந்தேகம் ஸ்பெயின் சர்வாதிகாரியான பிரான்க்கோ அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாமென்பது, அது அபத்தமாகக் கூட இருக்கலாம். இப்போதைக்கு எங்கள் நிலை இதுதான்.”
இச்செய்தி ஐரோப்பிய அரசியல் சூழலைக் கலவரப்படுத்தியது. நேசநாடுகளின் படைகளிடம் பிடிபட்டால் அவருடைய தலைவிதி எப்படி முடியும் என்றறியாதவரல்ல இட்லர். எனவே அவர் தப்பியிருக்கக்கூடுமென சோவியத் ராணுவத்தினர் அறிவித்தபோது பலரும் நம்பவே செய்தனர். ஆனாலும் யுத்தத்தின்ப்போது அமெரிக்க ராணுவத்தின் தலைமையை ஏற்றிருந்த ஜெனரல் ஐசனோவர் அத்தனை சுலபமாக ரஷ்யர்களின் பேச்சை நம்ப மறுத்தார். கூன் 9ந்தேதிவரை அவரைபொறுத்தவரை இட்லர் உயிரோடிருக்கிறார் என்பதை நம்பத் தயாரில்லை. ஜூன் பத்தாம் தேதி நேரிடையாகவே ரஷ்யர்களிடம் கேட்டார். ‘ ரஷ்யர்களான உங்களுக்கு இட்லர் இறப்பு பற்றிய திடீர் சந்தேகங்கள் தோன்ற காரணமென்ன? என கேட்ட ஐசனோவினவினார்.
முதல் நாள் தாம் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்த தகவலை ஜூக்கோவ் மீண்டும் உறுதிபடுத்தினார்
– கிடைத்த பிணங்களில் இட்லரின் உடலைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதுதான் காரணம்– வேறென்ன சொல்ல, எனக்கூறிவிட்டு, இட்லர் ஸ்பெயின் நாட்டிற்கோ அல்லது அர்ஜெண்டைனாவிற்கோ தப்பித்து சென்றிருப்பாரென நினைக்கவும் சாத்தியங்கள் நிறைய உண்டென்றார். இக்கூற்றை ஏற்கின்றவகையிலிருந்தது பின்னர் ‘டைம்ஸ்‘ இதழுக்கு ஐசனோவர் அளித்திருந்த பேட்டி. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஜாலந்து நாட்டிற்குச்சென்றிருந்த அவர் தமது பேட்டியில், உண்மையில் இட்லர் இறந்ததாக ஆரம்பத்தில் நம்பியது உண்மை, அவர் இப்போது உயிரோடிருக்கவேண்டுமென நம்புவதும் உண்மை, அதற்கான காரணங்களுமுண்டென தெரிவித்தார்.
2. ரஷ்யர்களைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே அவர் உயிரோடிருக்கவேண்டுமென என்பதில் உறுதியாகவிருந்தார்கள். செப்டம்பரில் அவர்களின் இந்த சந்தேகம் ஆங்கிலேயர்களுடனான அவர்களின் உறவையே சீர்குலைக்கும் வகையில் வளர்ந்தது. “இட்லரும் ஏவாவும் உங்கள் வசமிருக்கும் ஜெர்மனிலேயே ஒளிந்திருக்கவேண்டும்‘ என ஆங்கிலேயர்களைக், குற்றம் சாட்டினார்கள். இக்குற்றச்சாட்டை மறுதலிபதற்கான நடவடிக்கையாக ஆங்கிலேயர்கள் ஒரு பேராசிரியை நியமித்து இட்லரின் இறப்பு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டுமாறு வேண்டிக்கொண்டார்கள். இப்பேராசிரியர், பிராங்பர்ட்டிற்கு வந்திருந்த ஐசனோவரிடம், இட்லர் இறந்துவிட்டாரென உறுதிபடுத்த இயலாதெனினும் அவர் உயிரோடிருப்பதாக நம்புவதும் அபத்தமானதென்று, கூறியிருக்கிறார். மாறாக ஸ்டாலின் அமெரிக்க அதிபரின் பிரதிநிதியிடம், இடலரும் அவரது சகாக்களான போர்மன் (Bormann), கோயபல்ஸ், (Goebells) கிரெப்ஸ் (Krebs) ஆகியோரும் தப்பித்து எங்கோ ஒளிந்திருக்கவேண்டுமென, கூறியிருக்கிறார், காரணம் சோவியத் தரப்பில் நுணுக்கமாக ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் அவர் இறந்திருப்பாரென சொல்வதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லையெனவும் மீண்டும் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டது. இதை படித்துக்கொண்டிருக்கும்போதே உலகில் எங்கேனுமொரு வரலாற்றாசிரியர் தோன்றி இரண்டாம் உலகபோருக்குப்பின்னும் இடலர் உயிர்வாழ்ந்தார் என்று எழுதிக்கொண்டிருக்கலாம். ஏற்கனவே நேதாஜியைக்கொண்டு எழுதப்பட்ட வரலாற்று புனைவுகளுண்டு, நாளை தமிழீழ தலைவர் பிரபாகரனைச் சுற்றியும் வரலாறு கதைகள் எழுதலாம். ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும் வரலாறு அறிவியலல்ல, கலைப்பிரிவைச் சார்ந்தது எனவே புனைவுகளுக்கு அங்கே பஞ்சமில்லை. ஜூக்கோவ் என்கிற ரஷ்ய ராணுவ தளபதியும், ஸ்டாலினும் இட்லர் உயிரோடிருக்கிறாரென திரும்பத் திரும்பச் சொல்லிகொண்டிருந்தபோது இடலர் இறந்துவிட்டாரென்பதும் உண்மை அதனை ரஷ்யர்கள் அறிவார்களென்பதும் உண்மை என்கிறது மற்றொரு வரலாறு.
(தொடரும்)