மலேசியாவிலிருந்து ஓயாமல் எழுதிக்கொண்டிருக்கும் ரெ.கா என அழைக்கப்படும் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவை அனைவரும் அறிவோம். எளிய மொழியில், நீர்பரவல்போன்ற நடையில் மனித உறவின் நடைமுறை சிக்கல்களை எழுத்தில் கொண்டுவருவதில் தேர்ந்தவர். வளர்ந்து வரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார். எனது வளர்ச்சியில் பலரும் பங்கு வகுத்திருக்கிறார்கள், சில விழுக்காடுகளுக்கு ரெ.காவும் சொந்தக்காரர்.
ரெ.கா வுக்குள்ள அறிவியல் ஞானமும், அறிவியல் புனைகதைகளில் ஈடுபாடும் பலரும் அறிந்தது. அவரது வலைதளத்தில் அண்மையில் இட்டுள்ள பதிவுகள் எதிர்காலத்தில் மனித இனம் எங்கே வாழக்கூடும் என்பது பற்றிய சிந்தனைகளை விவாதிக்கிறது, உலக நாடுகள் இத்துறையில் மேற்கொண்டுள்ள ஆய்வுகளையும் முயற்சிகளையுங்கூட பகிர்ந்துகொள்கின்றன. மிகவும் சுவாரஸ்மாக சொல்லப்பட்டிருக்கிற இப்பதிவை அவசியம் வாசிக்கவேண்டும்.
அவரது தள முகவரி:http://reka.anjal.net/?p=198