தமிழின் மூத்த எழுத்தாளரும், படைப்பிலக்கிய ஆளுமைகளுள் முதல் வரிசையில் இருப்பவருமான வணக்கதிற்குரிய நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எனது தளத்தை தமது தளத்தில் அறிமுகபடுத்தியிருக்கிறார். ஏற்கனவே மாத்தா ஹரி நூலை 2008ல் தமிழில் வெளிவந்த முக்கிய நூல்களுல் ஒன்றாக அவரது விருப்பத் தேர்வில் இடமளித்திருந்தார். அந்தச் செய்தி காலம்தாழ்ந்தே கிடைத்திருந்தது. உரியகாலத்தில் எனது நன்றியை தெரிவிக்கமுடியாமல் போய்விட்டதே என்று வருந்தினேன். மனதில் எவ்வித இடரலுமின்றி அன்போடு எனது தளத்தை தமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி தமது உயர்பண்பை மறுபடியும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
பணிவுடன்
நா.கிருஷ்ணா